Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் 5 சடலங்கள் மீட்பு.

Featured Replies

கொழும்பில் 5 சடலங்கள் மீட்பு.

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு வடக்கின் கந்தானை காவல்துறை பிரிவில் உள்ள முத்துராஜவெல சதுப்புநில காட்டுப்பகுதியில் இருந்து 5 சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை 3 சடலங்களும் சனிக்கிழமை 2 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில சடலங்கள் கண்கள் கட்டப்பட் நிலையிலும் மிகவும் உருக்குலைந்த நிலையிலும் காணப்படுவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இந்த சதுப்பு நிலப் பகுதிகளுக்கு எடுத்து வரப்பட்டு போடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

-Puthinam-

1989 காலப்பகுதியில் ஜே.வீ.பீயும் பிரேமதாசாவும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கொழும்பில் கூட்டாகச் செய்த வேலைகளை கருநாய் தனியாகச் செய்ய வெளிக்கிட்டுள்ளதாக சந்தேகப்பட வேண்டியுள்ளது!

தலைநகரா?? கொலைநகரா???

ஈழத்திலிருந்து

ஜானா

தலைநகரா?? கொலைநகரா???

ஈழத்திலிருந்து

ஜானா

தலை நகரம் தலை நகரம் இது உயிர் வாங்கும் கொலை நகரம்

கொல்லப்பட்டவரின் ஒரு சடலம்

captsgecgc8503030710520km5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

'' கொழும்பில் 5 சடலங்கள் மீட்பு. "

கண்டெடுக்கப்பட்ட சடலங்களும் அவற்றின் எண்ணிக்கைகளும் தான் இவை. ஆனால் கானாமல் போனவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் எணிக்கையின் மர்மங்கள் மர்மங்களாகவே மறையத்தான் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.

இந்த சடலங்கள் சிங்களவர்களின் சடலங்கள் தான் என வவுனியாவில் செய்திகள் அடிபடுகின்றன. இங்கு கடமையாறும் தமிழ், முஸ்லிம் காவல்துறையினர் பகுதியினால் தான் செய்தி வெளியில் கசிந்ததாம். புலிகளுக்கு உதவினார்கள் எனும் சந்தேகத்தில் அதிகாரிகள் உட்பட பலர் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு 4 ம் மாடியில் விசாரணை செய்யப்படுகிற செய்தி ஏற்கவனே நாம் அறிந்ததே. இவ்வாறு சித்திரவதைகளால் இறக்கும் படையினரையே இவர்கள் கொண்டு சென்று சகதிகளுக்குள் வீசுகிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சடலங்கள் சிங்களவர்களின் சடலங்கள் தான் என வவுனியாவில் செய்திகள் அடிபடுகின்றன. இங்கு கடமையாறும் தமிழ், முஸ்லிம் காவல்துறையினர் பகுதியினால் தான் செய்தி வெளியில் கசிந்ததாம். புலிகளுக்கு உதவினார்கள் எனும் சந்தேகத்தில் அதிகாரிகள் உட்பட பலர் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு 4 ம் மாடியில் விசாரணை செய்யப்படுகிற செய்தி ஏற்கவனே நாம் அறிந்ததே. இவ்வாறு சித்திரவதைகளால் இறக்கும் படையினரையே இவர்கள் கொண்டு சென்று சகதிகளுக்குள் வீசுகிறார்களாம்.

அதன் உண்மைகள் உறுதிப்படுத்த முடியாதவை. இராணுவத்தால் சிங்களப் பெண்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால் வேறு இடங்களில் பெண் உடலங்களும் பத்தைகளுக்குள் இருந்து கிடைத்தனவே. மேலும், இராணுவம் கைது செய்யவர்கள் என்று வெளிப்படுத்தப்பட்டால், அதற்கு அவர்கள் நிச்சயம் பதில் சொல்லப்பட வேண்டும்.

உண்மையில் சடலங்கள் என்னும் இனம் காணப்படவில்லை. அவிசாவளையில் முண்டமாகக் கிடந்தது பற்றிச் சிங்கள தேசம், அப்போதும் இப்படித் தான் கதை கட்டியது. கடைசியில் பார்த்தால், அனைவரும் தமிழர்கள்.

இச்சடலங்களும் பெரும்பாலும் தமிழர்களுடையதாகவே, இருக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு. இங்கே கிடைத்தவை 5 தான். வேறு இடங்களிலும், இது வரை 10க்கு மேற்பட்ட சடலங்கள் வெவ்வேறான நாட்களில் எடுக்கப்படுகின்றன. தகவல்கள் மறைக்கப்படுகின்றன. சமீபத்தில் கூட குளக்கரை ஒன்றிற்கு அருகே, தமிழ்பெண் ஒருவரின் சடலம் எடுக்கப்பட்டிருந்தது.

இது சிங்கள உடல்கள் என்று அசட்டையீனமாக இருந்து எம்மக்களின் இழப்புக்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. மனோகணேசனின் காணாமல் போனோர் பட்டியலில் 200க்கு மேற்பட்டவர்களின் விபரங்கள் என்னும் கிடைக்கவில்லை. அவை அனைத்தும் தமிழ்மக்களுடைய விபரங்களே! இதை விட வடக்கு கிழக்கில் 1000 பேருக்கு மேற்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

இந்த உடல்களும் தமிழர்களுடையதாவே இருக்கும்.

கொழும்பு தனியார் ஊடகம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கந்தானை காவல்துறையினரின் பிரிவுக்குட்பட்ட பமுனுகம முத்துராஜவெல பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களுடையது என பமுணுகம காவல்துறை உத்தியோகஸ்தர் ஜி.அமரதுங்க அவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளிவந்துள்ளது.

இதேவேளை எம்.ரி.வி , சக்தி செய்திகளிலும் மட்டக்களப்பில் இருந்து வந்த ஒருவரால் அவ் உடலங்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அதே காவல்துறை உத்தியோகஸ்தரை மேற்கோள்காட்டி இரவு 9 மணி செய்தியில் தெரிவித்திருந்தன.

இனம் காணப்பட்ட சடலங்களின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

01) மட்டக்களப்பு மாதாகோயில் வீதியைச் சேர்ந்த அருண்சிங்கம் சுரேஷ்

02) மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த சுப்ரமணியம் பிரபாகரன்

03) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் மதிரூபன்

04) மட்டக்களப்பைச் சேர்ந்த கந்தசாமி வெள்ளையன்

05) மட்டக்களப்பு உன்னிச்சையைச் சேர்ந்த பொன்னையா கமல்கார்த்தி

என சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை திரப்பேன் அநுராதபுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கண்டெடுக்கப்பட்ட உடலங்கள் இன்னமும் இனம்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலை செய்யப்பட்டவர்கள் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கந்தானப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து சடலங்களும் தமிழர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

படுகொலைசெய்யப்பட்டவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியதாக பமுனுகம பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த அதிகாரி G.A அமரதுங்கா தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட ஐந்து உடல்களும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த அருள் சுரேஷ், ஆயித்தியமலையைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிரபாகரன், கொக்கட்டிச்சோலை - சிவப்பிரகாஷ் மதிரூபன், மட்டக்களப்புநகர் - கந்தசாமி வெள்ளையன், உன்னிச்சிமலை - பொன்னையா கமல்கார்த்திக் ஆகியோரது உடல்களே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

-தமிழ்கனேடியன்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்க்கு வருவதற்க்குளெத்தனை போலிஸ், இராணுவா சோதனைச் சாவடிகளைத் தாண்டி வர வேண்டும். அப்போது இவர்கள் என்ன பார்த்திட்டு இருந்தார்கள், காதில பூச்சுத்தவா பாக்குறாங்க. இது அரசாங்கமும் இராணுவமும் சேர்ந்து செயத கொலைகள்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.