Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் உறுப்பினர்களும் இராஜினாமா

Featured Replies

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் உறுப்பினர்களும் இராஜினாமா

 

 

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் உறுப்பினர்களும் இராஜினாமா
 

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் குழுவின் உறுப்பினர்களும் தமது பொறுப்புக்களை இராஜினாமா செய்துள்ளனர்.

அவர்களின் இராஜினாமாக் கடிதங்கள் இன்று பிற்பகல் தமக்கு கிடைத்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்

ரஞ்ஜித் மதுரசிங்க, அசங்க குருசிங்க, ரொமேஸ் களுவித்தரன , எரிக் உபசாந்த ஆகியோர் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களது ஒன்றிணைந்த இராஜினமாக் கடிதங்களின் பிரகாரம் செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் அவர்களின் பதவிகள் முடிவுக்கு வருகின்றன.

http://newsfirst.lk/tamil/2017/08/இலங்கை-கிரிக்கெட்-தெரிவ-4/

சனத் எடுத்த அதிரடி முடிவு ; இலங்கை கிரிக்கெட்டில் குழப்பம்

 

 

இலங்கை தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய சற்றுமுன் தனது இராஜிநாமா கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை, சனத் ஜயசூரியவுடன் இணைந்து மேலும் சிலர் தமது இராஜிநாமா கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.

Local_News_copy.jpg

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்வியுற்று வரும் நிலையில் இலங்கை அணியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களின் அழுத்தங்களையடுத்து தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியா உட்பட சில அதிகாரிகள் தமது இராஜிநாமா கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23738

  • தொடங்கியவர்

கண்ணீர் நிறைந்த கண்களுடன் நாம் செல்கிறோம்  ; சனத் ஜெயசூரியா

 

இலங்கை அணியினருக்கு நாம் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். கண்ணீர் நிறைந்த கண்களுடன் நாங்கள் செல்கிறோம் என இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய உட்பட தெரிவுக்குழு உறுப்பினர்கள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எழுதிய இராஜிநாமா தொடர்பான கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

sri-lanka-cricket-sanath-jayasoorya.jpg

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நான் இந்தக் கடித்த்தை பெரும் சோகத்துடனும் மனப்பாரத்துடனும் எழுதுகின்றேன். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் இராஜிநாமா செய்வதாக அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம்.

 

அனைத்து வகையிலும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு வீரராகவும் முன்னாள் அணித் தலைவராகவும் அதேவேளை, தெரிவுக்குழுவின் தற்போதைய தலைவரென்ற முறையிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற சம்பவம் தலைகுனிய வைத்துள்ளது.

 

என் வாழ்நாள் முழுவதும் எப்போதும்  கிரிக்கெட் இருக்கும், எனவே எங்கள் வீரர்களை எமது சொந்த ரசிகர்கள் தாக்கிக் கொள்ளுவது மிகவும் வேதனையாக இருந்தது.

இவ்வாண்டு மிகவும் ஏமாற்றமளிக்கும் ஆண்டாக உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இருப்பினும், அவுஸ்திலேிய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து 3-0 என வெற்றிபெற்றிருந்தோம். அது மறக்கமுடியாததொரு தருணம். 

letter_sanath.jpg

அத்துடன் எமது அணியில் நல்ல திறமையானவர்கள் உள்ளனர். அவர்கள் ஒருநாள் தமது திறமைகளை கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு உதவிகள் தேவைப்படும்போது நாம் உதவிசெய்வதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம்.

குறிப்பாக கடந்த 1996 உலகக்கிண்ணத்தை வென்ற வீரர்கள் எப்பொழுதும் புகழையும் பெருமை வாய்ந்த அந்த நாட்களையும்  நினைப்பவர்கள். 

இறுதியில், இலங்கை அணியினருக்கு நாம் நன்றிகளைத் தெரிவிக்கவிரும்புகிறோம். கண்ணீர் நிறைந்த கண்களுடன் நாங்கள் செல்கிறோம்.

எமது அணி வீரர்களிடத்தில் நம்பிக்கை வைக்குமாறு இலங்கை ரசிகர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அவர்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிப்பார்கள்.

உங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள் அத்துடன் உங்கள் ரசிகர்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் இறுதிவரை உங்களுடன் இருப்பார்கள் என எமது வீரர்களுக்கு தெரிவிக்கின்றோம்.

ஒரு தேசம் ஒரு அணியென்ற தொலைநோக்குடன் வெற்றிபெறுவோமென நம்புகின்றோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சனத் ஜெயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வுக்குழு பதவி விலகியுள்ளது.

தங்களது பதவிவிலகலுக்கான கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மையில் அடைந்துவரும் மோசமான படுதோல்விக்கு அணித் தெரிவும் ஒரு காரணம் என்று அண்மைக்காலங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே சனத் ஜெயசூரியா தலைமையிலான தெரிவுக்கு பதவிவிலகுவதற்கான தீர்மானத்திற்கு வந்துள்ளது.

அதன்படி தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய மற்றும் உறுப்பினர்களான ரஞ்சித் மதுருசிங்க, ரொமேஷ் களுவிதாரண, அசங்க குருசிங்க, எரிக் உபஷாந்த ஆகியோரே பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23768

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.