Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரா… தந்தை சுடப்பட்டும் களம் கண்ட பெசிச்... ப்ரீமியர் லீக் அப்டேட்!

Featured Replies

ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரா… தந்தை சுடப்பட்டும் களம் கண்ட பெசிச்... ப்ரீமியர் லீக் அப்டேட்!

 

ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டி, இந்த வாரம் வழக்கமான அதே விறுவிறுப்போடு நடந்து முடிந்தது. செல்சீ, மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் ஆகிய அணிகள் இந்த வாரம் வாகை சூடின. முன்னணி அணிகளில் ஆர்சனல் மட்டும் தோல்வியைத் தழுவியது. விளையாட்டையும் தாண்டி நெகிழ்ச்சியான சில சம்பவங்கள் இந்த வாரம் அரங்கேறின.

ப்ரீமியர் லீக்

ரசிகருக்காக சண்டையிட்ட அகுவேரோ!

2013-14ம் ஆண்டு சீஸனின் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி, கத்துக்குட்டி போர்ன்மவுத் அணியை எதிர்கொண்டது. கடந்த வாரம் எவர்டன் அணியோடு டிரா செய்ததால், இந்த வாரம் அதிக ஆக்ரோஷத்தோடு களம்கண்டது சிட்டி. ஆனால், போர்ன்மவுத் வீரர் சார்லி டேனியல்ஸ் 13-வது நிமிடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அற்புதமாக கோல் அடித்து அசத்தினார். அதற்கு 21-வது நிமிடத்திலேயே இளம் வீரர் ஜீசசின் மூலம் பதிலடி கொடுத்த சிட்டி அணி, அதன் பிறகு கோலடிக்க முடியாமல் திணறியது. தொடர்ந்து இரண்டாவது போட்டியையும் டிரா செய்தால், கோப்பை வேட்டையில் ஆரம்பத்திலேயே பின்தங்கிடநேரும் என்பதால், பயிற்சியாளர் கார்டியாலோ மிகவும் விரக்தியாக இருந்தார். கடைசிகட்டத்தில் நடுவர்களுடனும் போர்ன்மவுத் பயிற்சியாளர் ஹோவுடனும் வாக்குவாதத்தில்கூட ஈடுபட்டார்.  

கடைசிகட்டத்தில் ஆட்டம் சூடுபிடித்தது. கடந்த ஆட்டத்தில் அணி டிரா செய்ய உதவிய ஸ்டெர்லிங் இந்த முறையும் கோலடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். கடைசி நிமிட கோல் என்பதால், வீரர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் அணி ரசிகர்கள் இருந்த இடத்துக்குள் புகுந்தனர். ரசிகர்களும் உற்சாகத்தில் மைதானத்துக்குள் புகுந்து வீரர்களைக் கட்டித்தழுவினர். ரசிகர்களை வெளியேற்ற அங்கு வந்த பாதுகாவலர் ஒருவர், சிட்டி அணியின் ரசிகர் ஒருவரை கீழே தள்ளிக் கடுமையாக நடந்துகொண்டார். அந்த ரசிகரை அவரிடமிருந்து காப்பாற்ற சிட்டி அணி வீரர் அகுவேரோ, அந்தப் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாவலரிடம் தகராறு செய்ததற்காக அகுவேரோ மீது போர்ன்மவுத் அணி நிர்வாகம் குற்றம்சாட்டியது. தங்கள் அணியின் ரசிகருக்காகத்தான் அவர் சண்டையிட்டார் என்பதால் அந்தக் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது.

யுனைடெட் தொடர்ந்து ஆதிக்கம்

முதல் இரு போட்டிகளில் பட்டையைக் கிளப்பிய மான்செஸ்டர் யுனைடட் அணி, இந்த வாரமும் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. லெய்செஸ்டர் அணியோடு மோதிய அந்த அணி 2-0 என வெற்றி கண்டு தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ரேஷ்ஃபோர்டு, ஃபெல்லாய்னி கோல் அடித்து வெற்றிக்கு உதவினர். மூன்று சுற்றுகளின் முடிவில் யுனைடெட் அணி மட்டுமே மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளது. மூன்று போட்டிகளில் 10 கோல்கள் அடித்த யுனைடெட் அணி, இதுவரை ஒரு கோல்கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மான்செஸ்டர் யுனைடெட் அணி விளையாடுவதைப் பார்க்க, அந்த அணியின் தீவிர ரசிகரும் ஓட்டப்பந்த சாம்பியனுமான உசேன் போல்ட் வந்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவர்பூல் –ஆர்சனல் ஆட்டத்தில், லிவர்பூல் 4-0 என அபார வெற்றி பெற்றது. எப்போதும் பெரிய அணிகளைப் பந்தாடிவிட்டு, கத்துக்குட்டிகளிடம் அடிபடுவதை வழக்கமாகக்கொண்ட லிவர்பூல் அணி, ஆர்சனலை தொடக்கத்திலிருந்தே பதம் பார்த்தது. லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆர்சனல் மிகவும் திணறியது. பின்களத்தில் அவர்கள் பல தவறுகள் செய்ய, அது லிவர்பூல் அணிக்கு சாதகமாக மாறியது. ஃபிர்மினோ, சலா, மனே, ஸ்டரிட்ஜ் ஆகியோர் கோலடித்தனர். ஆர்சனல் அணி மூன்று போட்டிகளில் அடைந்த 2-வது தோல்வி இது.

Usain Bolt - ப்ரீமியர் லீக்

தந்தை சுடப்பட்டும் களம் புகுந்த பெசிச்!

ஸ்டாம்ஃபோர்டு பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் செல்சீ அணி, எவர்டனை 2-0 என வீழ்த்தியது. புதிய நட்சத்திரம் அல்வாரோ மொரடா ஃபேப்ரகாஸ் கோலடிக்கக் காரணமாக அமைந்ததோடு, தானும் ஒரு கோலடித்து அசத்தினார். இதன்மூலம் ப்ரீமியர் லீக் வரலாற்றில், தன் அணியின் சொந்த மைதானத்தில் தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு கோலும், அசிஸ்டும் செய்த முதல் வீரர் என்ற பெருமையை மொரடா பெற்றார். இந்தப் போட்டிக்கான எவர்டன் அணியில் போஸ்னிய வீரர் முகமது பெசிச் இடம்பெற்றிருந்தார்.

சனிக்கிழமை அன்று பெசிச்சின் தந்தை மெஹோ பெசிச், ஒருவரால் கையிலும் காலிலும் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்நிலையிலும் அவர் தன் அணிக்காக ஞாயிறு அன்று களமிறங்கினார். ``இதுபோன்ற தருணங்களில் களமிறங்குவது அந்தக் குறிப்பிட்ட வீரரின் முடிவுதான். இந்தச் சூழ்நிலையில் களம் கண்ட பெசிச்சின் அர்ப்பணிப்பு அசாத்தியமானது. அவர் தன் குடும்பத்துடன் தொலைபேசியில் பேசினார். போட்டி முடிந்ததும் அவர் குடும்பத்துடன் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவையானதைச் செய்வோம்'' என்று எவர்டன் அணியின் பயிற்சியாளர் கீமேன் தெரிவித்தார்.  

இந்தப் போட்டியில் எவர்டன் வீரர் ஆரோன் லெனானும் மாற்று வீரராகக் களம்கண்டார். சில மாதங்களுக்கு முன்பு தீவிர மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள 30 வயது லெனான், ஏப்ரல் மாதத்திலிருந்து தீவிர மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் இந்த மாதம் களம் கண்டுள்ளார். அந்த இரு வீரர்களின் அர்ப்பணிப்பையும் அனைத்து கால்பந்து ரசிகர்களும் பாராட்டினர்.

தொடரும் வெம்ப்ளி சோகம்!

ப்ரீமியர் லீக்

கடந்த சீஸனில் இரண்டாவது இடம் பிடித்திருந்த டாட்டன்ஹாம் அணி, பர்ன்லி அணியோடு 1-1 என டிரா செய்தது. தங்கள் சொந்த மைதானமான ‘வைட் ஹார்ட் லேன்’ கட்டுமான வேலையில் இருப்பதால் அந்த அணி வெம்ப்ளி மைதானத்தில் தனது ‘ஹோம் கேம்’களை விளையாடிவருகிறது. அந்த மைதானம் அவர்களுக்கு ராசியற்ற மைதானமாகவே கருதப்படுகிறது. கடந்த சீஸனில் இங்கு விளையாடிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் சொதப்பி, தொடரிலிருந்து வெளியேறியது. கடந்த வாரம் செல்சீ அணியிடம் தோற்றது. இந்நிலையில் இந்த வாரமும் பர்ன்லியிடமும் இரண்டு புள்ளிகளை இழந்துள்ளது. வெஸ்ட் புரோம் – ஸ்டோக் சிட்டி அணிகள் மோதிய போட்டியும் 1-1 என டிரா ஆனது. ஹடர்ஸ்ஃபீல்டு – சவுதாம்ப்டன் போட்டியும், வாட்ஃபோர்டு – பிரிட்டன் போட்டியும் ஒரு கோல்கூட அடிக்காமல் டிராவில் முடிவுற்றன.

 

மற்ற போட்டிகளில் ஸ்வான்சி அணி கிறிஸ்டல் பேலஸை 2-0 எனவும், நியூகாசில் அணி வெஸ்ட்ஹாம் அணியை 3-0 எனவும் வீழ்த்தின. வெஸ்ட் ஹாம், பேலஸ், போர்ன்மவுத் அணிகள் இதுவரை புள்ளிக்கணக்கைத் தொடங்கவில்லை. அதேசமயம் புது வரவான ஹடர்ஸ்ஃபீல்டு அணி ஏழு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் அமர்ந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

http://www.vikatan.com/news/sports/100557-premier-league-update-for-the-week.html

  • தொடங்கியவர்

பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியில் இவ்வாரம் முன்னேறியுள்ள கழகங்கள்

Premier League week-3
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியின் மூன்றாவது வாரத்திற்கான போட்டிகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளதுடன் புள்ளிப்பட்டியலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாரத்திற்கான போட்டிகளில் லிவர்பூல், மென்சஸ்டர் யுனைடட் மற்றும் மென்சஸ்டர் சிடி ஆகிய கழகங்கள் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

2017/18 ஆம் ஆண்டின் பருவகாலத்தின் மூன்றாம் வாரத்திற்கான பீரீமியர் லீக் சுற்றுப்போட்டிகள் கடந்த 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற்று முடிந்தன. புல விறுவிறுப்பான போட்டிகளை உள்ளடக்கியதாகவே கடந்த வாரத்திற்கான போட்டிகள் அமைந்திருந்தன. முதல் இரண்டு வாரங்களில் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கத் தவறிய கழகங்கள் இவ்வாரம் புள்ளிப்பட்டியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை காணக் கூடியதாக உள்ளது. 26ஆம் திகதி ஆறு போட்டிகளும், 27ஆம் திகதி நான்கு போட்டிகளுமாக இவ்வாரம் பத்துப் போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

26ஆம் திகதி நடைபெற்ற போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பாக அமைந்த போட்டியாக மென்சஸ்டர் சிடி கால்பந்து கழகம் மற்றும் புர்னேமவுத் கழகம் மோதிய போட்டியை குறிப்பிடலாம். புர்னேமவுத் கழகத்தின் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் போட்டியின் ஆரம்பம் முதலே புர்னேமவுத் கழகம் மென்சஸ்டர் சிடி கழகத்திற்கு சவால் கொடுக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக போட்டியின் 13ஆவது நிமிடத்தில் மத்தியகள வீரர் சார்லி டெனியள்ஸ் புர்னேமவுத்திற்கான முதல் கோலை பெற்றுக் கொடுத்தார். விரைவாக செயற்பட்ட மென்சஸ்டர் சிடி கழகத்திற்கு போட்டியின் 21ஆவது நிமிடத்தில் காப்ரியல் ஜீஸஸ் ஒரு கோலை பெற்றுக் கொடுத்து போட்டியை சமப்படுத்தினார். போட்டியின் இறுதிவரை இரு அணிகளும் சிறந்த பந்துப் பரிமாற்றம் மூலம் கோல்களை பெற முயற்சித்தனர். போட்டியின் 97ஆவது நிமிடத்தில் டேனிலோ மூலம் வழங்கப்பட்ட பந்தை கோலை நோக்கி ரஹீம் ஸ்டேர்லீங் செலுத்தியதன் மூலம் அன்றைய போட்டியில் வெற்றிபெற்று 7 புள்ளிகளுடன் மென்சஸ்டர் சிடி கழகம் இவ்வாரம் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நியுகாஸ்ல் மற்றும் வெஸ்ட் ஹாம் கழகங்களிற்கு இடையில் நடைபெற்ற போட்டியில், நியுகாஸ்ல் கால்பந்து கழகம் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இப்பருவகாலத்திற்கான முதல் வெற்றியை பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் கடந்ந மூன்று வாரமாக முதல் இடத்திலுள்ள மென்சஸ்டர் யுனைடட் கழகம் இவ்வாரம் லய்செஸ்டர் சிடி கழகத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

மேலும் ஸ்வன்சி சிடி கால்பந்து கழகம் மற்றும் கிரிஸ்டல் பெலஸ் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், ஸ்வன்சி சிடி கழகம் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வோற்பொர்ட் (Watford) மற்றும் பரய்டன் (Brighton) கழகங்கள் மோதிய போட்டியும், ஹடர்ஸ்பீல்ட் (Huddersfield) மற்றும் ஸவுத்ஹம்ப்டன் கழகங்கள் மோதிய போட்டியும் வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றன. இப்போட்டி முடிவால் ஹடர்ஸ்பீல்ட் கழகமானது புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலருந்து மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

27ஆம் திகதி நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பார்வையாளர்களை கவர்ந்த போட்டியாக ஆர்சனல் கழகம் மற்றும் லிவர்பூல் கழகங்களுக்கு இடையே நடந்த போட்டியை குறிப்பிடலாம். லிவர்பூல் அன்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லிவர்பூல் கழகம் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பாரியதொரு வெற்றியைப் பெற்றது. போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை போட்டியின் ஆக்கிரமிப்பாளர்களாக லிவர்பூல் கழகமே காணப்பட்டது. லிவர்பூல் கழகத்திற்காக ரொபெர்டோ பெர்மினோஹ் 17ஆவது நிமிடத்திலும்,சாடியோ மெனே 40ஆவது நிமிடத்திலும், மொஹமட் ஸலாஹ் 57ஆவது நிமிடத்திலும் மற்றும் மாற்று வீரராக களமிறங்கிய டேனியல் ஸ்டுரிட்ஜ் 77ஆவது நிமிடத்திலும் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

இப்போட்டியின் மூலம் லிவர்பூல் கழகம் புள்ளிப் பட்டியலில் 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலுள்ளது. அதேவேளை ஆர்சனல் கழகம் 16ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மேலும் செல்சி மற்றும் எவர்டன் கழகங்களுக்கு இடையே நடந்த போட்டியில், செல்சி கழகம் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றீயீட்டி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளது. செல்சி கழகத்திற்காக அல்வாரோ மொரோடா மற்றும் பெப்ரீகாஸ் ஆகியோர் கோல்களை பெற்றுக் கொடுத்தனர்.

வெஸ்ட்பூரும் மற்றும் ஸ்டோக் சிடி ஆகிய கழகங்களுக்கும், டொடன்ஹாம் மற்றும் பர்ன்லீ (Burnley) கழகங்களுக்கும் இடையே நடந்த இரண்டு போட்டிகளுமே 1-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

இவ்வாரத்திற்கான போட்டிகள் நிறைவு பெற்றதுடன் உலக கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஆரம்பமாக இருப்பதால் பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியின் நான்காவது வாரத்திற்கான சுற்றுப்போட்டிகள் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.

http://www.thepapare.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.