Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை

Featured Replies

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை

 


2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை
 

2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நான்காவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தமையே இதற்கான காரணம் ஆகும்.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதல் விக்கெட் 06 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

என்றாலும், இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஜோடி 219 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு உயர்த்தியது.

அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி, சர்வதேச ஒருநாள் அரங்கில் தன்னுடைய 29 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

விராட் கோஹ்லி 131 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், லசித் மலிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

விராட் கோஹ்லியின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் ஒருநாள் அரங்கில் 300 விக்கெட்டுக்களை வீழ்த்திய 13 ஆவது வீரராக லசித் மலிங்க வரலாற்றில் இணைந்தார்.

ரோகித் சர்மா ஒருநாள் அரங்கில் தன்னுடைய 13 ஆவது சதத்தை எட்டினார்.

மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய முன்னாள் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனி மற்றும் மனிஷ் பாண்டி ஜோடி 101 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்தது.

மனிஷ் பாண்டி அரைச்சதம் கடக்க மஹேந்திரசிங் தோனி 49 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 375 ஓட்டங்களைப் பெற்றது.

இது இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் வைத்து பிறிதொரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

376 எனும் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 37 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

நிரோஷன் திக்வெல்ல 14 ஓட்டங்களுடனும் தில்ஷான் முனவீர 11 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

தொடர்ந்து வந்த குசல் மென்டிஸ் ஓர் ஓட்டத்துடன் வெளியேறினார்.

இலங்கை அணி மேலதிகமாக 31 ஓட்டங்களைப் பெற்ற போது நான்காவது விக்கெட்டை இழந்தது.

லஹிரு திரிமன்னே 18 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஜந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த அஞ்சலோ மத்யூஸ் மற்றும் மலிந்த சிறிவர்தன ஜோடி 73 ஓட்டங்களைப் பகிர்ந்து சற்று நம்பிக்கையளித்தது.

அஞ்சலோ மத்யூஸ் அரைச்சதம் கடந்தார்.

ஏனைய வீரர்களும் பிரகாசிக்கத் தவற, இலங்கை அணி 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

 

http://newsfirst.lk/tamil/2017/09/110097/

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் வாய்ப்பினை பறிகொடுத்த இலங்கை

Sri Lanka fails to seal direct qualification for World Cup 2019
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியனான இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்ய தற்போது இந்திய அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அந்த இரண்டு வெற்றிகளையும் பெறத் தவறியிருக்கும் இலங்கை அணி, 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் வாய்ப்பினை இழந்துள்ளது.  

2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள (50 ஓவர்களிற்கான) ஐ.சி.சி இன் உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறும் அணிகள் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி திகதியாக செப்டம்பர் 30 உள்ளது. குறிப்பிட்ட அந்த திகதியில் உலகக் கிண்ணத்தினை நடாத்தும் நாடான இங்கிலாந்தோடு சேர்த்து ஒரு நாள் தரவரிசையில் முதல் 7 இடங்களிற்குள் உள்ள அணிகள் நேரடியாக உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதி பெறும்.

ஆனால், தற்போது இந்திய அணி தொடரில் 4-0 என முன்னிலை வகிப்பதால் இலங்கை உலகக் கிண்ண நேரடி தகுதியினைப் பெற, மேற்கிந்திய தீவுகள் அணி தமக்கு வரும் அடுத்த ஆறு போட்டிகளில் ஒன்றில் தோல்வியடையும் வரை பொறுத்திருக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாகியுள்ளது.

அதோடு இந்த நிபந்தனையுடன் இருக்க இலங்கை அணி ஞாயிறு நடைபெறும் இந்திய அணியுடனான இறுதி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெறவும் வேண்டும். அப்போட்டியில் வெற்றி பெற்றவுடன் ஒரு நாள் தரவரிசையில் இலங்கை அணியின் புள்ளிகள் 88 ஆக மாறும். எனினும் இப்புள்ளிகளும் இலங்கை அணி உலக கிண்ணத்தில் நேரடியாக பங்குபெறுவதை உறுதி செய்ய போதுமாக இருக்காது.

ஏனெனில், மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்ததாக அயர்லாந்துடனும் (செப்டம்பர் 13 ஆம் திகதியிலும்), அதற்கடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்துடனும் (செப்டம்பர் 19 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை) விளையாடவுள்ளது. இப்போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஒரு நாள் தரவரிசையில் 88 புள்ளிகளைப் பெறும். இப்புள்ளிகளை தசம தானத்தில் நோக்கும்போது மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையை விட முன்னிலையில் காணப்படும். இதனால் இலங்கை அணியின் நேரடி வாய்ப்பு பறிபோக கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

ஒருவேளை, இலங்கை அணி தொடரினை 5-0 என இந்தியாவிடம் பறிகொடுத்தால், உலகக் கிண்ண நேரடி வாய்ப்பினை மேற்கிந்திய தீவுகள்  பெற இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரை 4-1 என கைப்பற்றினால் மாத்திரம் போதுமாக இருக்கும்.

உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதியினைப் பெறாத நாடுகள் அனைத்தும், 2018 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிகான் தொடரில்  விளையாடி அதன் மூலம் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதியினைப் பெற வேண்டும்.

இந்த தகுதிகாண் தொடரில், ஐ.சி.சி இன் ஒரு நாள் தரவரிசையில் இறுதி நான்கு இடங்களை பெற்ற அணிகளும், ஐ.சி.சி இன் உலக கிரிக்கெட் லீக் சம்பியன்ஷிப் தொடரில் (ICC World Cricket League Championship) முதல் நான்கு இடங்களினை பெற்ற அணிகளும் ஐ.சி.சி இன் உலக கிரிக்கெட் லீக் (ICC World Cricket League) தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகளும் பங்குபெறும்.

இந்த தகுதிகாண் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள், 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் பங்குபெறும் மேலதிக இரண்டு அணிகளாக மாறி, தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறும்.

http://www.thepapare.com/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.