Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இளைஞருக்கு 2 பெண்களுடன் திருமணம்

Featured Replies

ஒரே இளைஞருக்கு 2 பெண்களுடன் திருமணம் நிறுத்தப்பட்டது: விருதுநகர் அருகே பரபரப்பு - சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் நிர்பந்தம்

 

02maman-pettitionjpg

ராமமூர்த்திக்கு ஒரு பெண்ணை மட்டும் திருணம் செய்து வைப்பதாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்திடம் விளக்கக் கடிதம் அளித்த மணமகன், மணமகள் குடும்பத்தார்.

02maman-marriage1%20jpg

ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.

02maman-marriagejpg

இரு பெண்களை ராமமூர்த்தி திருமணம் செய்து கொள்வதாக உறவினர்களுக்கு வழங்கப்பட திருமண அழைப்பிதழ்.

02maman-pettitionjpg

ராமமூர்த்திக்கு ஒரு பெண்ணை மட்டும் திருணம் செய்து வைப்பதாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்திடம் விளக்கக் கடிதம் அளித்த மணமகன், மணமகள் குடும்பத்தார்.

02maman-marriage1%20jpg

ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் திருமணம் நடத்துவதாக புதிதாக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்.

விருதுநகர் அருகே இளைஞர் ஒருவர் இரு பெண்களை திருமணம் செய்ய இருந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.

திருச்சுழி அருகே உள்ள ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). இவர் படிக்கவில்லை என்பதால் ஆடு மேய்த்து வருகிறார். இவரது பெற்றோர் இறந்துவிட்டதால் அக்கா கலைச்செல்வி வீட்டிலேயே வளர்ந்துள்ளார்.

இவருக்கு கலைச்செல்வியின் மகள் பி.காம்., பட்டதாரியான ரேணுகாதேவி(21) என்பவரையும், மற்றொரு அக்கா அமுதவள்ளியின் மகள் காயத்திரி(20) என்பவரையும் வரும் 4-ம் தேதி திருமணம் செய்து வைக்க நிச்சயிக்கப்பட்டது.

இதற்காக திருமண பத்திரிகை உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன. இதில், காயத்திரி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், ஒரு இளைஞர் ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் திருமண பத்திரிகையுடன் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ராமமூர்த்திக்கு ரேணுகாதேவியை மட்டும் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ராமூர்த்தியின் மாமாவும், மணமகள் ரேணுகாதேவியின் தந்தையுமான அழகர்சாமி மற்றும் உறவினர்கள் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் ராஜத்தை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ராமமூர்த்தித்துக்கு ரேணுகாதேவியைதான் திருமணம் செய்து வைக்க இருந்தோம். ஆனால் அவருக்கு இருதார தோஷம் இருப்பதாக ஜோசியர் கூறியதால் முதலில் மனநலம் பாதித்த காயத்திரிக்கு தாலி கட்டிய பிறகு ரேணுகாதேவிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்த இருந்ததாகவும், தோஷம் கழிப்பதற்காகவே இருவருக்கு தாலி கட்டி திருமணம் செய்ய இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் மட்டும் திருமணம் நடத்துவது என மற்றொரு பத்திரிகையை அச்சடித்து வந்து விளக்கக் கடிதத்துடன் கொடுத்தனர். அதைப் பெற்ற சமூக நலத் துறை அலுவலர் ராஜம், இரு பெண்களை திருமணம் செய்வது ஏற்புடையது அல்ல. இது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

ராமமூர்த்திக்கு திருமணம் நடைபெறும்போது அங்கு சென்று கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக சமூக நலத் துறை அலுவலர்களும், போலீஸாரும் தெரிவித்தனர்.

இது குறித்து, மத்திய அரசு வழக்கறிஞர் கஜேந்திரன் கூறுகையில், இரு மணப்பெண்களும், குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தாலும் சட்டப்படி இத்திருமணத்தை பதிவு செய்ய முடியாது. இது குறித்து வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19608331.ece

  • தொடங்கியவர்

இரு பெண்களை மணக்கும் திட்டத்தை கைவிட்டார்: பட்டதாரி பெண்ணை கரம்பிடித்தார் ஆடு மேய்க்கும் திருச்சுழி இளைஞர்

 

 
5-MA-MANMarriage%20Photo-2

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.வெள்ளையாபுரத்தில் நடைபெற்ற ராமமூர்த்தி - ரேணுகாதேவி திருமணம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஓர் இளைஞருக்கு இரு பெண்களை திருமண செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள தகவல் வாட்ஸ்அப்பில் பரவியதால் பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே ஒரு பெண்ணை மட்டும் மணந்தார்.

திருச்சுழி அடுத்த ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). ஆடு மேய்க்கும் இவர், பெற்றோர் இறந்துவிட்டதால் அக்கா கலைச்செல்வி வீட்டில் வளர்ந்து வந்தார். இவருக்கும், கலைச்செல்வி மகளான பி.காம். படித்து முடித்த ரேணுகாதேவி(21) என்பவரையும், மற்றொரு அக்கா அமுதவள்ளியின் மகளையும் ஒரே மேடையில் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன.

இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ராமமூர்த்திக்கு ரேணுகாதேவியை மட்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராமமூர்த்தி-ரேணுகாதேவி திருமணம் குடும்பத்தார், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நேற்று காலை நடைபெற்றது.

இத்திருமணத்தை சமூக நலத் துறை களப்பணியாளர்கள் கண்காணித்து மாவட்ட சமூக நலத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பாக பேசப்பட்ட ராமமூர்த்தி திருமணத்தை பார்க்க அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19623722.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு.

அதென்னெ.. பட்டதாரி என்பதற்காக.. அந்தப்  பெண்ணுக்கு இல்லாததுகள் ஏதாவது புதிசா இருக்குமா.. கல்யாணத்திற்கும் பட்டத்திற்கும் என்ன சம்பந்தம்..?! :rolleyes:

மேலும்.. ஆடு மேக்கிறது.. தொழில் இல்லையோ.. எதுஎது மற்றவருக்கு பாதிப்பில்லாமல்.. நமக்கு.. வருமானத்தைக் கொண்டு வருமோ.. அதெல்லாம் நல்ல தொழிலே.

எனக்கு ஆடு மாடு மேக்க சரியான ஆசை.  ஆட்டுக்குட்டி.. கன்றுக்குட்டின்னு.. தூக்கி விளையாட.. அதுங்க..  ஓடி வந்து முதுகில.. ஏறி நின்று கூத்துப் போட.. அதெல்லாம்..  அனுபவிச்சா தான் தெரியும். tw_blush:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.