Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைலோ பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்

Featured Replies

மைலோ பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்

All-Island-Schools-Relay-Championship-69
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை முதற்தடவையாக யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கல்வி அமைச்சும், இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்துகின்ற இம்முறைப் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியிலிருந்து 164 ஆண்கள் பாடசாலைகளும், 138 பெண்கள் பாடசாலைகளும் (302 பாடசாலைகள்) கலந்துகொள்ளவுள்ளன.

பாடசாலைகள் விளையாட்டுத்துறை வரலாற்றில் முக்கிய தொடராக 1984ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வந்த இப்போட்டித் தொடர் தவிர்க்க முடியாத காரணத்தால் 2004ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. எனினும், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் முயற்சியால் கடந்த வருடம் கண்டியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, பாடசாலை மாணவர்களுக்கிடையில் சமத்துவம், அணியாக வேலை செய்தல், சகோதரத்துவம், கூட்டுறவு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கில் இம்முறை யாழ். மண்ணில் இப்போட்டிகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12, 14, 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளின் கீழ் ஆண், பெண் என இரு பாலாருக்கும் நடாத்தப்படவுள்ள இம்முறை போட்டித் தொடரில் 38 அஞ்சலோட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் சுமார் 5,100 மாணவர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  அத்துடன் 4x100, 4x200, 4x400 மற்றும் 4x800 வரையான அஞ்சலோட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், 12 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான 4x50 அஞ்சலோட்டப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.Milo

இந்நிலையில், முதற்தடவையாக கலப்பு பாடசாலைகளுக்கான போட்டிகளை நடாத்துவதற்கும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதில் வெற்றிபெறும் அணிகளின் புள்ளிகளும் ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தொடரின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பாடசாலைகள் மட்ட அஞ்சலோட்ட சாம்பியன்ஷிப் ஆரம்பம்

பாடசாலைகள் மட்ட அஞ்சலோட்ட சாம்பியன்ஷிப், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமானது.

கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள அஞ்சலோட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆடவர் பிரிவில் 164 பாடசாலைகளும், மகளிர் பிரிவில் 138 பாடசாலைகளும் கலந்துகொண்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

4X100 மீற்றர், 4X200 மீற்றர், 4X400 மீற்றர் மற்றும் 4X800 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்தப் போட்டிகள் யாவும் 14, 16, 18, 20 ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளின் கீழ் இடம்பெறுகின்றன.

நாளை மறுதினம் (10) நிறைவடையவுள்ள இந்தப் போட்டிகளில் 12 வயதின் கீழ் 4X50 மீற்றர் அஞ்சலோட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

 

 

http://newsfirst.lk/tamil/2017/09/யாழ்-துரையப்பா-விளையாட்/

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.