Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சக நாட்டு வீரரின் சாதனைக்கு முட்டுக்கட்டையாக இருந்த பொல்லார்ட்

Featured Replies

ரந்தீவை ஞாபகப்படுத்திய பொலார்ட்
 

image_709a4e64b9.jpg

கரீபியன் பிறீமியர் லீக் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற போட்டியொன்று, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ் ரந்தீவின் செய்கைகளை ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றது.

பிரிட்ஜ்டௌணில் இடம்பெற்ற இந்தப் போட்டி, பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்கும் சென். கிற்ஸ் மற்றும் நெவிஸ் பட்ரியட்ஸ் அணிக்குமிடையில் இடம்பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய, பொலார்ட் தலைமையிலான ட்ரைடென்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் டியோன் வெப்ஸ்டர் 32 (25) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கார்லொஸ் பிறத்வெய்ட் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தப்ராஸ் ஷம்ஸி, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பட்ரியட்ஸ் அணி, அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியது. 7 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 128 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணிக்கு ஓர் ஓட்டமே தேவைப்பட்டதோடு, 31 பந்துகளில் 97 ஓட்டங்களுடன் காணப்பட்ட எவின் லூயிஸுக்கு, சதத்துக்காக 3 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

எனினும், 8ஆவது ஓவரின் முதலாவது பந்தை வீசிய பொலார்ட், அதை முறையற்ற பந்தாக வீசினார். அது, முறையற்ற பந்தாக அறிவிக்கப்பட்டிருக்கா விட்டாலும் கூட, அகலப்பந்து என அறிவிக்கப்படும் அளவுக்கு, அகலமாகவும் வீசப்பட்டது. நடுவர் அதை, முறையற்ற பந்து என அறிவிக்க, சதம் பெறுவதற்கான லூயிஸின் வாய்ப்பு இல்லாது போனது.

2010ஆம் ஆண்டு, இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டியில், இந்திய அணி ஓர் ஓட்டத்தைப் பெற வேண்டியிருந்த போது, விரேந்தர் செவாக்குக்கு, சதத்துக்காக ஓர் ஓட்டம் தேவைப்பட்டது. ஆனால், முறையற்ற பந்தொன்றை வீசிய ரந்தீவ், செவாக், சதம் பெறுவதைத் தடுத்தார்.

அதே நடவடிக்கையையே, தற்போது பொலார்க்கும் மேற்கொண்டுள்ளார் என்று கருதப்படுகிறது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ரந்தீவை-ஞாபகப்படுத்திய-பொலார்ட்/44-203248

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சக நாட்டு வீரரின் சாதனைக்கு முட்டுக்கட்டையாக இருந்த பொல்லார்ட்

K-P-696x464.png
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

கரீபியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எவின் லுவிஸின் சாதனை வெறும் 3 ஓட்டங்களினால் கைநழுவிப் போனமைக்கு முக்கிய காரணியாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிரென் பொல்லார்ட் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

கரீபியன் பிரீமியர் லீக் T-20 போட்டித் தொடரின் இறுதி லீக் போட்டி நேற்று முன்தினம் பார்படோஸின் பிரிட்ஜ்டொவுண் மைதானத்தில் நடைபெற்றது. குறித்த போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ஸ் மற்றும் நெவில் பேட்ரியட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ் ட்ரிடென்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக டியோன் வெப்ஸ்டர் 32 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கார்லொஸ் பிறத்வெய்ட் 4 விக்கெட்டுக்களையும், தப்ரிஸ் ஷம்ஸி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 129 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய பேட்ரியட்ஸ் அணி, எந்தவொரு விக்கெட்டையும் இழக்கமால் போட்டியின் 7 ஓவரில் வெற்றியிலக்கை அடைந்தது.

அவ்வணிக்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லுவிஸ் ஜோடி களமிறங்கியது. 32 பந்துகளுக்கு முகங்கொடுத்த லுவிஸ், நான்கு பௌண்டரிகள் மற்றும் பதினொரு சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பேட்ரியட்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 105 ஓட்டங்களைப் பெற்று கரீபியன் லீக் வரலாற்றில் பவர் ப்ளே ஓவரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற அணியாகவும் இடம்பிடித்தது.  

எனினும் போட்டியின் 7ஆவது ஓவர் நிறைவில் அவ்வணி 128 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெறுவதற்கு ஓர் ஓட்டம் மாத்திரமே தேவைப்பட்ட நிலையில், 31 பந்தில் 97 ஓட்டங்களைக் குவித்தி லுவிஸுக்கு சதம் பெற 3 ஓட்டங்களே தேவைப்பட்டது.

ஆனால் 8ஆவது ஓவரின் முதலாவது பந்தை வீசிய பொல்லார்ட், அதை வேண்டுமென்றே முறையற்ற பந்தாக (நோபோல்) வீசியதுடன், மறுபுறத்தில் அது அகலப்பந்தாகவும் (வைட்) அமைந்ததது. இதனால் நடுவரால் அது முறையற்ற பந்து என அறிவிக்க லுயிஸின் சதம் பெறும் வாய்ப்பு பொல்லார்ட்டால் வீணடிக்கப்பட்டதுடன் T-20 அரங்கில் 2ஆவது அதிவேக சதம் பெறும் வாய்ப்பையும் தட்டிப் பறித்தார்.

முன்னதாக .பி.எல் போட்டிகளில் பங்குபற்றி கிறிஸ் கெய்ல், 30 பந்துகளில் சதம் குவித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பொல்லார்ட், சக நாட்டு வீரர் எவின் லுவிஸின் சதம் பெறும் வாய்ப்பை தட்டிப் பறித்தமை, கனவான்களின் விளையாட்டாக கருதப்படுகின்ற கிரிக்கெட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதி என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டிகளின் போது பொல்லார்ட் எதிரணி வீரர்களை சீண்டுவதும், ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சம்பவங்கள் அதிகம் உள்ளன. இதில் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென். லூசியாஸ் ஸ்டார்ஸ் அணியின் சகலதுறை வீரர் ரஹ்கீம் கோர்ன்வேலை, பெல்லார்ட் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்த சம்பவமும் அதிகளவில் பேசப்பட்டது.

அப்போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 195 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். லூசியா அணிக்காக அதிரடியாக விளையாடிய ரஹ்கீம், 44 பந்துகளுக்கு முகங்கொடுத்து 78 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் காயம் காரணமாக இடைநடுவில் மைதானத்திலிருந்து வெளியேறிய போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பொல்லார்ட், அவருடைய அருகாமையில் வந்து கைவிரலை நீட்டியவாறு ஆவேசமாக ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார்.

முன்னதாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற .பி.எல் போட்டித் தொடரின் போது அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை நோக்கி கோபத்துடன் பொல்லார்ட் துடுப்பு மட்டையை எறிந்திருந்தமை நினைவுகூறத் தக்கது.

http://www.thepapare.com

 

  • தொடங்கியவர்

கிரன் பொலாட் செய்த காரியத்தால் உலக சாதனையை பறிகொடுத்த வீரர் (வீடியோ இணைப்பு)

 

 

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி சகலதுறை வீரர் கிரன் பொலாட் வீசிய நோபோல் (No ball) பலரது அவதானத்தை திருப்பியுள்ளது.

பார்படோஸ் அணியின் தலைவராக விளையாடிய பொலாட், எதிரணி வீரரான ஏவின் லூயிஸ் சதம் பெறுவதை தடுப்பதற்காக வேண்டுமென்றே நோபோல் பந்தை வீசியதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

பார்படோஸ் அணியிற்கும்  செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பற்றியொட்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றிக்காக ஒரு ஓட்டம் பெறவிருந்த நிலையில், பார்படோஸ் அணியின் தலைவராக விளையாடிய பொலாட் நோபோல் (No ball) வீசியுள்ளார்.

 

 

இந்நிலையில், அதிரடியாக துடுப்பாடி கொண்டிருந்த ஏவின் லூயிஸ்  32 பந்துகளில் 97 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், பொலாட் வீசிய இந்த பந்தில்  4 அல்லது 6 ஓட்டங்களை பெற்றிருந்தால் உலகில் இருபதுக்கு 20 போட்டியில் இரண்டாவது வேகமான சதமாக இது அமைந்திருக்கும்.

எனினும் இதன்போது பொலாட் நோபோல் (No ball) வீசிய காரணத்தால் அவரின் சாதனை பறிபோனது.

இதேவேளை, இருபதுக்கு 20 போட்டியில் வேகமான சதத்தை பெற்ற கிரிஸ் கெய்லும் குறித்த போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது .

 

 

http://www.virakesari.lk/article/24074

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.