Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே ஒரு 20 ஓவர் போட்டி: இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை

Featured Replies

ஒரே ஒரு 20 ஓவர் போட்டி: இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை

இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை நடக்கிறது. இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் இருக்கிறது.

 
ஒரே ஒரு 20 ஓவர் போட்டி: இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை
 
கொழும்பு:

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

இந்தியா- இலங்கை இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் கொழும்பில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

20 ஓவர் போட்டியிலும் வென்று இந்தியா தனது ஆதிக்கத்தை நீட்டித்து கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் இருக்கிறது.

பேட்டிங்கில் கேப்டன் வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இருவருமே ஒருநாள் தொடரில் இரண்டு சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தனர். இதுதவிர முன்னாள் கேப்டன் டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் பும்ரா மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் ஒருநாள் தொடரில் 15 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்து இருந்தார். இதுதவிர அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி 20 ஓவர் போட்டியிலாவது வென்று ஆறுதல் அடையும் ஆர்வத்துடன் இருக்கிறது. வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் மிகவும் கடுமையாக போராடுவார்கள்.

இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 10 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 6 ஆட்டத்திலும், இலங்கை 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

நாளைய 20 ஓவர் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், டென் 3 டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ரகானே, கேதர்ஜாதவ், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, ராகுல், அக்‌ஷர் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாகல், குல்தீப் யாதவ், ‌ஷர்துல் தாக்கூர்.

இலங்கை: உபுல் தரங்கா (கேப்டன்), மேத்யூஸ், டிக்வெலா, தில்சான் முனவீரா, தாசுன்‌ஷன்கா, மிலின்டா ஸ்ரீவர்த்தனா, ஹசரன்கா, தனஞ்செயா, ஜெப்ரி வான்டர்சே, இசுரு உதனா, பிரசன்னா, திசாரா பெரைரா, மலிங்கா, லக்மல், விகும் சஞ்ஜெயா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/05104204/1106290/India-vs-sri-lanka-t20-match-on-tomorrow.vpf

  • தொடங்கியவர்

இந்தியாவின் ஆதிக்கத்தை தகர்க்குமா இலங்கை.? இருபதுக்கு - 20 போட்டி இன்று

 

 
 

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஒரே ஒரு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் நடை­பெ­ற­வுள்­ளது. 

விராட் கோஹ்லி தலை­மை­யி­ லான இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற் ­கொண்டு விளை­யாடி வரு­கி­றது.

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான டெஸ்ட் தொடரை 3–-0 என்ற கணக்­கிலும், ஒருநாள் தொடரை 5–-0 என்ற கணக்­கிலும் இந்­தியா முழு­மை­யாக கைப்­பற்றி வைட்வொஷ் செய்­தது.

இந்­நி­லையில் இலங்கை – இந்­திய அணிகள் மோதும் ஒரேயொரு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது. 

இரு­ப­துக்கு 20 போட்­டி­யிலும் வென்று இந்­தியா தனது ஆதிக்­கத்தை நீட்­டித்து கொள்ளும் ஆர்­வத்­துடன் உள்­ளது. துடுப்­பாட்டம் மற்றும் பந்­து­வீச்சில் சம­ப­லத்­துடன் இருக்கும் இந்­திய அணி இன்­றைய போட்­டி­யிலும் வெற்றி பெறும் வேட்­கை­யுடன் இருக்­கி­றது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி இரு­ப­துக்கு 20 போட்­டி­யி­லா­வது வென்று ஆறுதல் அடையும் ஆர்­வத்­துடன் இருக்­கி­றது. வெற்­றிக்­காக அந்த அணி வீரர்கள் மிகவும் கடு­மை­யாக போரா­டு­வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணி­களும் இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் இது­வரை 10 முறை மோதி­யுள்­ளன. இதில் 6 போட்­டி­களில் இந்­தி­யாவும், 4 போட்­டி­களில் இலங்­கையும் வெற்­றி­பெற்­றுள்­ளன. 

இன்­றைய போட்­டியில் இலங்கை அணியின் சக­ல­துறை ஆட்­டக்­காரரான திஸர பெரேரா இணைக்­கப்­பட்­டுள்ளார். அத்­தோடு இந்தப் போட்­டியில் இலங்கை அணி நிச்­சயம் வெற்­றி­பெற வேண்­டிய கட்­டா­யத்­திலும் இருக்­கி­றது.

பொறுத்­தி­ருந்து பார்ப்போம் தொடர் தோல்­வி­களால் துவண்­டு­போ­யுள்ள ரசி­கர்­க­ளுக்கு இலங்கை அணி உற்­சா­கத்தைக் கொடுக்­குமா என்று.

இலங்கை: உபுல் தரங்க (அணித் தலைவர்), அஞ்­சலோ மெத்­தியூஸ், நிரோஷன் திக்­வெல்ல, டில்ஷான் முன­வீர, தஷுன்‌ சானக்க, மிலிந்த சிறிவர்த்­தன, வனிது ஹச­ரங்க, அகில தனஞ்­சய, ஜெப்ரி வெண்­டர்சே, இசுரு உதான, சீகுகே பிர­சன்ன, திஸர பெரேரா, மலிங்க, சுரங்க லக்மால், விகும் சஞ்­சய.

இந்­தியா: விராட் கோஹ்லி (அணித் தலைவர்), ரோஹித் ஷர்மா, ரஹானே, கேதர்­ஜாதவ், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, ராகுல், அக்‌ஷர் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், யசுவேந்திர சாகல், குல்தீப் யாதவ், ‌ஷர்துல் தாக்கூர்.

http://www.virakesari.lk/article/24045

  • தொடங்கியவர்

இந்திய அணிக்கு 171 ரன்கள் இலக்கு!

 

இந்திய அணிக்கெதிரான டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. 

chahal_21567.jpg

இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்று விட்ட நிலையில் இன்று கொழும்புவில் டி-20 போட்டி நடந்தது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்கவீரர் கேப்டன் தரங்கா 5 ரன்னில் வெளியெற, அடுத்து வந்த முனவீரா அதிரடியாக விளையாடினார். அவர் 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இலங்கையின் நடுவரிசையை சஹால் சரிக்க, அந்த அணி மீண்டும் திணறியது. எனினும் இறுதியில் அதிரடியாக ஆடியாதால் 20 ஒவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய அஷான் பிரியஞ்சன் 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2  விக்கெட்டுகளும் எடுத்தனர்.

http://www.vikatan.com/news/sports/101513-target-for-india-is-171-in-t-20-international.html

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான டி-20 போட்டி: கோலி, மணிஷ் பாண்டே அதிரடியில் இந்தியா அசத்தல் வெற்றி

இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
இலங்கைக்கு எதிரான டி-20 போட்டி: கோலி, மணிஷ் பாண்டே அதிரடியில் இந்தியா அசத்தல் வெற்றி
 
கொழும்பு:

இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று நடைபெற்றது. பிரேமதாசா மைதானத்தில் நடந்த இந்த போட்டி மழை காரணமாக சிறிது தாமதமாக தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கே.எல். ராகுல், அக்சார் பட்டேல் ஆகியோர் இடம்பிடித்தனர். ஷர்துல் தாகூர், ரகானே நீக்கப்பட்டனர்.

201709062316026232_1_Copy%20of%20kholi._

டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் இலங்கை அணி 4 ரன்கள் எடுத்தது. அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டிக்வெல்லா தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விளாசினார்.

3-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த தரங்கா, அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். 3-வது வீரராக முனவீரா களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். முதல் 3 ஓவரில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் குவித்தது.

இதனால் 4-வது ஓவரை வீச விராட் கோலி சுழற்பந்து வீச்சாளரான சாஹலை அழைத்தார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் முனவீரா. 5-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் டிக்வெல்லா ஸ்டம்பை பறிகொடுத்தார். டிக்வெல்லா 14 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார். இந்த ஓவரில் பும்ரா 1 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

3-வது விக்கெட்டுக்கு முனவீரா உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். 5-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் இலங்கை மூன்று பவுண்டரிகள் அடித்தது. இதனால் பவர்பிளே ஆன முதல் 6 ஓவரில் 60 ரன்கள் சேர்த்தது. 7-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் மேத்யூஸை அபாரமாக ஸ்டம்பிங் செய்து வெளியே அனுப்பினார் டோனி. 9-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் முனவீரா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விரட்டினார்.

11-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் அடித்து அரைசதம் அடித்தார் முனவீரா. தொடர்ந்து விளையாடிய அவர் குல்தீப் யாதவ் பந்தில் க்ளீன் போல்டானார். முனவீரா 29 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 53 ரன்கள் சேர்த்தார். முனவீரா அவுட்டாகும்போது இலங்கை 11.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் இலங்கையின் ரன் விகிதம் சரிய ஆரம்பித்தது. சாஹல் வீசிய 14-வது ஓவரில் பெரேரா (11), ஷனகா (0) ஆட்டம் இழந்தனர். 17-வது ஓவரில் பிரசன்னா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

பிரியஞ்சன் தாக்குப்பிடித்து விளையாட இலங்கை 18-வது ஓவரில் 8 ரன்னும், 19-வது ஓவரில் 13 ரன்னும், கடைசி ஓவரில்  13 ரன்களும் எடுக்க, இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. பிரயஞ்சன் 40 பந்தில் 41 ரன்கள் எடுத்தும், உதானா 10 பந்தில் 19 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். முதல் 2 ஓவர்களில் அதிரடியாக மூன்று பவுண்டரிகளை இந்த ஜோடி அடித்தது. 2.4 வது ஓவரில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

பின்னர், களமிறங்கிய விராட் கோலி ராகுலுடன் இணைந்து ரன்ரேட் குறையாத வண்ணம் அடித்து ஆடினர். 18 பந்துகளில் 24 ரன்களை எடுத்த லோகேஷ் பிரசன்னா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, களமிறங்கிய மணிஷ் பாண்டேவும், கோலியும் இலங்கை பந்துவீச்சை ஒருவழி செய்தனர்.

இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகியது. சிக்சர்களும், பவுண்டரிகளும் பறக்கவிட்ட இந்த ஜோடியால் வெற்றி இலக்கு எளிதாக மாறியது.

10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்த போது விராட் கோலி 82 ரன்களில் கேட்ச் ஆனார். இதன்பின் தோனி களமிறங்கினார். இறுதி ஓவரில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் மணீஷ் பாண்டே பவுண்டரி அடித்து தனது அரை சதத்தையும் பூர்த்தி செய்து அதே வேளையில் வெற்றி இலக்கையையும் எட்டினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இலங்கையுடனான 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, 1 டி-20 போட்டி என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/06231557/1106605/india-won-by-7-wkts.vpf

  • தொடங்கியவர்

இலங்கையை வழிந்து துடைந்த இந்தியா பல சாதனைகளுடனும் கிண்ணங்களுடனும் நாடு திரும்புகிறது 

Published by Priyatharshan on 2017-09-07 09:59:50

 
 

இலங்கைக்கு எதிரான அனைத்து வகையான போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய இந்திய அணி தொடர் வெற்றிகளைப்பெற்று பல சாதனைகளுடனும் 3 கிண்ணங்களுடனும் நாடு திரும்புகிறது.

india-cricket.jpg

இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற இருபதுக்கு 20 போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி மூன்று வெற்றிக்கிண்ணங்களுடன் நாடு திரும்புகிறது. இலங்கை அணி தோல்விகளைச் சுமந்துகொண்டு அடுத்த பாகிஸ்தான் தொடருக்கு தயாராகவுள்ளது. 

267908.jpg

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த ஒரு மாதங்களாக விளையாடியது.

இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டித் தொடரை 5–0 என்ற கணக்கிலும் இந்திய அணி முழுமையாக இலங்கையை வெள்ளையடிப்புச் செய்தது. 

267906.jpg

இந்த நிலையில் இந்தியா-–இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு இருபதுக்கு 20  கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.

நேற்றைய தினம் காலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்ததால் போட்டி நடக்காதோ என்றுதான் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மாலை 4 மணிக்கு மேல் மழை நின்றுவிட்டதனால் போட்டியை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய போட்டி 40 நிமிடங்கள் தாமதித்து இரவு 7.40 மணிக்கு ஆரம்பமானது.

267900.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். அதன்படி இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக உபுல் தரங்க மற்றும் டிக்வெல்ல ஜோடி களமிறங்கியது.

இந்த ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடியைத் தொடர அடுத்தடுத்து வந்த வீரர்களுக்கும் இந்த அதிரடி ஆட்டம் தொற்றிக் கொண்டது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சமிருக்கவில்லை. சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்க ரசிகர்கள் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். இவ்வளவு நாளும் தோல்வியால் துவண்டு போயிருந்த ரசிகர்களுக்கு நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் ஆட்டம் சரியான தீனிதான்.

போட்டியில் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் இலங்கை அணி 4 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டிக்வெல்ல தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசினார்.

மீண்டும் 3 ஆவது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த தரங்க, அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார்.

267898.jpg

3 ஆவது வீரராக டில்ஷான் முனவீர களமிறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். முதல் 3 ஓவர்களில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 32 ஓட்டங்களைக் குவித்தது.

இதனால் 4 ஆவது ஓவரை வீச விராட் கோலி சுழற்பந்து வீச்சாளரான சாஹலை அழைத்தார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார் டில்ஷான் முனவீர.

இந்நிலையில் டிக்வெல்ல 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் ஓட்ட வேகம் சற்று குறைந்தது. அதன்பிறகு மெத்தியூஸ் களமிறங்கினார். மெத்தியூஸும் தன் பங்கிற்கு அடித்து விளையாடினார். பவர்பிளே ஆன முதல் 6 ஓவர்களில்  60 ஓட்டங்களை சேர்த்தது இலங்கை.

267894.jpg

ஆனாலும் மெத்தியூஸின் அதிரடி நீடிக்கவில்லை. இவர் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் நின்ற டில்ஷான் முனவீர 29 பந்துகளில்  5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 53 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார். முனவீர ஆட்டமிழக்கும் போது இலங்கை 11.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை எடுத்திருந்தது.

அதன்பின் இலங்கையின் ஓட்ட விகிதம் சரிய ஆரம்பித்தது. அதன்பிறகு வந்த திஸர பெரேரா (11), சானக்க (0), சீகுகே பிரசன்ன(11)ஆட்டமிழந்தனர்.  

பிரியஞ்சன் தாக்குப்பிடித்து விளையாட இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை எடுத்தது. பிரியஞ்சன் 41 ஓட்டங்களுடனும், உதான 19 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதனையடுத்து இந்தியா 171 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

ரோஹித் சர்மா 9 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் மலிங்கவின் பந்துவீச்சில் திஸர பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் 27 ஓட்டங்களுடன் சீகுகேவின் பந்தில் வீழ்ந்தார்.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் மணிஷ் பாண்டே ஜோடி இந்திய அணியை கரை சேர்த்தது. இந்த இருவரும் சிறப்பானதொரு இணைப்பாட்டத்தை பெற்று  அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய அணி வெற்றிபெற 10 ஓட்டங்கள்தான் தேவை என்ற நிலையில் விராட் கோலி 82 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு இந்திய அணியின் ஆஸ்தான பினிஷர் டோனி களமிறங்கி மனிஷ் பாண்டேக்கு துணை நின்று போட்டியை முடித்து வைத்தார். இறுதியில் இந்திய அணி 19.1 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டியுடன் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான அனைத்து போட்டிகளும் முடிவுக்கு வந்தன. அடுத்து இலங்கை அணி பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. இந்தத் தொடர் முடிவடைந்தவுடன் இலங்கை இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மீண்டும் ஒரு இதேபோன்ற தொடரில் இவ்வருட இறுதியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24085

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.