Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

20ஆவது திருத்தத்திற்கு நிபந்தனையுடன் ஆதரவு; கூட்டமைப்பு அறிவிப்பு

Featured Replies

20ஆவது திருத்தத்திற்கு நிபந்தனையுடன் ஆதரவு; கூட்டமைப்பு அறிவிப்பு

 
20ஆவது திருத்தத்திற்கு நிபந்தனையுடன் ஆதரவு; கூட்டமைப்பு அறிவிப்பு

மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்த வழிசெய்யும் 20ஆவது திருத்தச்சட்ட வரைபிற்கு நிபந்தனையுடனான ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக ஆங்கில இணையத்தளமான டெய்லி எப்.டி (Daily FT) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பின், போது குழுநிலை விவாதத்தின் போது 20ஆவது திருத்தச் சட்டவரைவில் மேலும் பல திருத்தங்களை முன்வைப்பதாக அரசாங்கம் இணங்கியதை அடுத்து, நிபந்தனையுடனான ஆதரவு வழங்க கூட்டமைப்பு இணங்கியுள்ளது.

நேற்றைய இந்த சந்திப்பின்போது சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவும் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த திருத்தச்சட்ட வரைவு மீதான விவாதம் இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்றில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் இரண்டு மாகாணசபைகளில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அதில் சில திருத்தங்களை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், 20ஆவது திருத்தச்சட்ட வரைவில் முன்வைக்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்றைய சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளனர்.  

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபருடனும் பல கட்சிகளின் தலைவர்களுடனும் நேற்றும் நேற்று முன்தினமும் பேச்சுவார்ததை நேற்றும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்நிலையில், 20ஆவது திருத்தச்சட்ட வரைபிற்கு நிபந்தனையுடனான ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியிருப்பதாக, கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குழுநிலை விவாதத்தின் போது குறிப்பிடத்தக்க திருத்தங்களை செய்தால், 20ஆவது திருத்தச்சட்ட வரைபிற்கு ஆதரவளிக்க தாம் தயாரென எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த திருத்தச்சட்ட வரைவின் பயன்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சரியான முறையில் தகவல்கள் பரிமாறப்படவில்லை என்ற விடயத்தை பிரதமருக்கு தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், மாகாணசபை ஒன்றின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர், நாடாளுமன்றத்தின் ஊடாக, அதனைக் கலைப்பதற்கு அதிகாரமளிக்கும் விடயத்தில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், கட்டுப்பாடு மாகாணத்திற்குள் இருக்க வேண்டுமெனவும் எவ்வாறாயினும் அதிகாரங்கள் ஆளுனரின் கையில் இருக்கக் கூடாது எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குழுநிலை விவாதத்தின் போது, ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் 20ஆவது திருத்தச்சட்ட வரைவில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் சட்டவரைபிற்கு ஆதரவு வழங்கத் தயாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Conditionally-supported-for-the-20th-Amendment

  • தொடங்கியவர்

20ஆவது திருத்தத்தில் மாற்றம் ஏற்படுத்த அரசு முடிவு

 
20ஆவது திருத்தத்தில் மாற்றம் ஏற்படுத்த அரசு முடிவு
 

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில், புதிய திருத்தங்கள் சிலவற்றை முன்வைக்க அரசு தீர்மானித்துள்ளது என்று சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அரசமைப்புத் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட மனுக்கள் சில இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/26260.html

tna-1.jpg

மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.

சிறிலங்கா பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, குழுநிலை விவாதத்தின் போது 20 ஆவது திருத்தச் சட்டவரைவில் திருத்தங்களை முன்வைப்பதாக இணங்கியதை அடுத்து, நிபந்தனையற்ற ஆதரவு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு, இரண்டு மாகாணசபைகளில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, அதில் திருத்தங்களை முன்வைக்க விருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்தக் கலந்துரையாடலில், 20 ஆவது திருத்தச்சட்ட வரைவில், குழு நிலை விவாதத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்படுவது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த திருத்தச்சட்ட வரைவு மீதான விவாதம் செப்ரெம்பர் மூன்றாவது வாரத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபருடனும், கட்சித் தலைவர்களுடனும் நேற்று முன்தினமும், நேற்றும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இதனிடையே 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியிருப்பதாக, சிறிலங்கா பிரதமருடனான கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“குழுநிலை விவாதத்தின் போது குறிப்பிடத்தக்க திருத்தங்களை செய்தால்,, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவளிக்க நாங்கள் இணங்கியுள்ளோம்.

இந்த திருத்த வரைவை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவை.

திருத்தச்சட்ட வரைவில் திருத்தங்களை முன்வைப்பது தொடர்பாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு இன்று அறிவிப்பார்.

இந்த திருத்தச்சட்ட வரைவின் பயன்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சரியான முறையில் தகவல்கள் பரிமாறப்படவில்லை என்ற விடயம் தொடர்பாக நாங்கள் சிறிலங்கா பிரதமருடன் கலந்துரையாடினோம்.

திருத்தச்சட்ட வரைவில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், மாகாணசபை ஒன்றின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர், நாடாளுமன்றத்தின் ஊடாக, அதனைக் கலைப்பதற்கு அதிகாரமளிக்கும் விதியில் திருத்தம் செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மாகாணசபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர்,  மேற்பார்வை அரசு ஒன்றை அமைப்பது குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது,

தற்போதைய வரைவை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டுப்பாடு மாகாணத்துக்குள் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் அது ஆளுனரின் கையில் இருக்கக் கூடாது. எனவே மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் அல்லது எஞ்சிய காலத்துக்காக உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்.

எமது கோரிக்கையை அடுத்து, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மீதான வாக்கெடுப்பு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபையிலும் அவ்வாறு தான் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குழு நிலை விவாதத்தின் போது, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவில், திருத்தங்களைச் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டால், திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம்” என்று கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=78009

 

  • கருத்துக்கள உறவுகள்

வீரமா பேசிக்கொண்டு திரிந்தார்கள் அப்பவே டவுட் உள்ளுக்குள்ளே துண்டபோட்டு பேரம் தொடங்கிட்டாங்கள் இனி என்ன பேரம் படிந்து விட்டது தமிழ் மக்கள் மீண்டும்மீண்டும் அழிவு பாதையில் .

  • தொடங்கியவர்
‘20ஆவது திருத்தம் குறித்து இன்றுதான் தீர்மானிப்போம்’
 

image_5d7fad27b5.jpgஅரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து, கிழக்கு மாகாண சபையில், இன்று (07) இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில், அவர் கருத்து தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண சபையின் முடிவை, சகல மாகாணங்களும் எதிர்பார்த்துள்ளன. அதேபோல, எமது மாகாண மக்களும் எதிர்பார்த்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.  அரசமைப்பின் விவகாரம் தொடர்பில், கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது, ஏற்பட்ட அமளியால், சபையின் நடவடிக்கைகளை தவிசாளர் சந்திரதாச கலப்பதி, செப்டெம்பர் 7ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/20ஆவது-திருத்தம்-குறித்து-இன்றுதான்-தீர்மானிப்போம்/73-203372

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.