Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவுக்கு வரப்போகிறதா தேசிய அரசாங்கம்

Featured Replies

முடிவுக்கு வரப்போகிறதா தேசிய அரசாங்கம்

 

 

முரண்­பா­டுகள் மற்றும் கருத்து மோதல்கள் இரண்டு தரப்­புக்கு மி­டையில் வலுத்­துக்­கொண்­டிருக் கின்­ற­நி­லையில் அவற்றை சம­ நிலைப்­ப­டுத்தி தேசிய அர­சாங்­கத்தை கொண்­டு­செல்­வ­தற்கு இரண்டு கட் சி­க­ளையும் வழி­ந­டத்­த­வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம ருக்கும் காணப்­ப­டு­கின்­றது. தமது எதிர்­காலப் பொறுப்பை உணர்ந்து இரண்டு தலை­வர்­களும் செயற் ப­ட­வேண்டும். நீண்­ட­கால பிரச்­சி னை­களைத் தீர்க்கும் விட­யத்தில் இரண்டு பிர­தான கட்­சி­களும் சுய­நல அர­சி­யலில் ஈடு­பட்­டு­வி­டக் கூ­டாது. மக்கள் தமக்கு எதற்­காக அமோக ஆத­ரவை கடந்த இரண்டு தேர்­தல்­க­ளிலும் வழங்­கி­னார்கள் என்­பதை புரிந்து கொண்டு இரண்டு தலை­வர்­களும் செயற்­ப­ட­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்

 

ர­ப­ரப்­பான அர­சியல் சூழலில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்கம் ஆட்­டம்­காண தொடங்­கி­விட்­டதோ என்ற சந்­தேகம் மக்கள் மத்­தியில் எழு­வ­தற்கு ஆரம்­பித்து விட்­டது. ஆளும் கட்­சியில் இருக்­கின்ற சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் 12 பேர் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக அம­ரப்­போ­கின்­றனர் என்ற செய்­தியே தற்­போது இந்த தேசிய அர­சாங்­கத்தை ஆட்­டம்­காண செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அது­மட்­டு மின்றி ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் உள்ள முரண்­பா­டுகள் வலுப்­பெற்­று­வரும் நிலையில் மக்­க­ளுக்கு தமது எதிர்­பார்ப்­புக்­களை இழக்­க­வேண்­டிய சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. குறிப்­பாக இரண்டு பிர­தான கட்­சி­க­ளுமே அடுத்த 2020 ஆம் ஆண்டு தேர்­தலின் பின்னர் தனித்து ஆட்சி அமைக்­க­வேண்டும் என்ற நோக்­கத்­தி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றன. எந்­த­வொரு கார­ணத்­திற்­கா­கவும் 2020 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு எண்­ண­வில்­லை­யென இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­னதும் முக்­கி­யஸ்­தர்கள் அவ்­வப்­போது தெரி­வித்து வரு­கின்­றனர்.

எனவே இந்த விட­யங்கள் பாரிய பிரச்­சி­னை­களைத் தோற்­று­விப்­ப­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. இந்த நிலை­யி­லேயே திடீ­ரென சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற 12 உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்கு முயற்­சிப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதில் பல சிரேஷ்ட மூத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. விரைவில் உள்­ளூ­ராட்சி மன்றத்தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற நிலையில் இந்த 12 பேரும் சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. அது­மட்­டு­மின்றி தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­வுடன் மேலும் சிலர் சுயா­தீ­ன­மாக செயற்­பட முன்­வ­ரலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக தற்­போது சுயா­தீ­ன­மாக செயற்­ப­டப்­போ­வ­தாக கூறப்­படும் 12 உறுப்­பி­னர்­களும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து கொள்­வ­தாக எந்­த­வொரு கட்­டத்­திலும் அறி­விக்­க­வில்லை. ஆனால் இவ்­வாறு சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வுள்­ள­தாகக் கூறுபவர்களுடன் மஹிந்த ராஜ­பக் ஷ பேச்­சு­வார்த்தை நடத்­தலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும் இவர்கள் எவ்­வா­றான முடிவை எடுப்­பார்கள் என்­பது இது­வரை தெரி­ய­வ­ர­வில்லை. ஆனால் 12எம்.பி.க்கள் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டப்­போ­வது தொடர்­பி­லேலே தக­வல்கள் வெளி­வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. இவர்கள் ஏன் இவ்­வாறு சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர் என்­பது தொடர்பில் பெரும்­பான்மை இன மூத்த ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் இவ்­வாறு கருத்து பகிர்ந்தார்.

அதா­வது நீங்கள் ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுதந்­தி­ரக்­கட்­சிக்குள் போராடி ஜனா­தி­பதி வேட்­பாளர் பத­வியை வெற்­றி­பெற்­றி­ருந்தால் சுதந்­தி­ரக்­கட்­சியின் அனை­வரும் அவ­ரு­ட­னேயே இருந்­தி­ருப்­பார்கள். மஹிந்­தவின் பின்னால் எந்­த­வொரு உறுப்­பி­னர்­களும் போயி­ருக்க மாட்­டார்கள். இந்த விட­யத்தை சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது மஹிந்த செயற்­பட்ட விதத்தை குறிப்­பிட்டு கூற­வேண்­டி­யுள்­ளது. அதா­வது மஹிந்தராஜ­பக் ஷ கட்­சிக்­குள்­ளேயே போராடி ஜனா­தி­பதி பத­வியைப் பெற்றார். அதன்­பின்னர் அனைத்து சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்­களும் சந்­தி­ரி­காவை விட்­டு­விட்டு மஹிந்­த­வுடன் கைகோர்க்க ஆரம்­பித்து விட்­டனர். அந்­த­நி­லையை தற்­போதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எட்­ட­வில்லை. அவர் உள்­ள­க­ரீ­தியில் போரா­டினால் சிக்கல் ஏற்­படும் என்ற கார­ணத்­தினால் வெளி­யேறி எதிர்க்­கட்­சியின் ஆத­ர­வுடன் ஜனா­தி­ப­தி­யா­கினார். அந்­த­நேரம் காணப்­பட்ட அர­சியல் சூழல் அவ­ருக்கு அந்த முடிவை எடுப்­ப­தற்கு கார­ண­மா­கி­யது. அவ்­வப்­போது அர­சியல் சூழலில் சரி­யான முடிவை எடுப்­பதே அர­சி­யல்­வா­தியின் சாமர்த்­தி­ய­மாகும்.

அந்த வகை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்த அர­சியல் சூழலில் முடி­வெ­டுத்தார். ஆனால் அவர் அவ்­வாறு எடுத்த முடிவை சுதந்­தி­ரக்­கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் அல்­லது அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஏற்­றுக்­கொண்­ட­னரா என்­பதே இன்று கேள்­வி­யாகும். அவ்­வாறு மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சியை விட்டு வெளி­யேறி இன்­னொரு கட்­சியின் ஆத­ர­வுடன் ஜனா­தி­ப­தி­யா­கி­யதை சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஏற்­றுக்­கொண்­ட­னரா. என்­பதே இங்கு எழும் பிர­தான கேள்­வி­யாக காணப்­ப­டு­கின்­றது.

அதா­வது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.தே.க.வுடன் இணைந்து போட்­டி­யிட்­டதை அதி­க­ள­வான சுதந்­தி­ரக்­கட்சி எம்.பி.க்கள் விரும்­ப­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது. அத­னால்தான் தற்­போ­து­கூட 52 உறுப்­பி­னர்கள் மஹிந்த ராஜ­பக் ஷ­வுடன் இருக்­கின்­றனர். மைத்­தி­ரி­பால சிறி­சேன அனைத்து இனங்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு சுதந்­தி­ரக்­கட்­சியை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு கடும் அர்ப்­ப­ணிப்பை மேற்­கொள்­கின்றார். ஆனால் அதனை முழு­மை­யாக சுதந்­தி­ரக்­கட்­சியின் எம்.பி.க்கள் எத்தனை பேர் ஏற்­றுக்­கொள்­கின்­றார்களா என்­பதே இங்கு கேள்­வி­யாகும். இவ்­வாறு அந்த மூத்த ஊட­க­வி­ய­லாளர் சுதந்­தி­ரக்­கட்­சியின் தற்­போ­தை­ய­நி­லைமையை விளக்­கினார்.

 எது எப்­ப­டி­யி­ருப்­பினும் அர­சி­யலில் எப்­போது எதுவும் நடக்­கலாம் என்­பதே இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாகும். குறிப்­பாக இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு பல்­வேறு கார­ணங்­களை கூறின. அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கவும், சர்­வ­தே­சத்தை வெற்­றி­கொள்­ளவும் நாட்டை அபி­வி­ருத்தி செய்­யவும் அர­சியல் தீர்வைக் காணவும் தேர்தல் முறையை மாற்­றவும் தேசிய அர­சாங்கம் அமைப்­ப­தாக கூறப்­பட்­டது. இவற்றில் தற்­கா­லி­க­மாக தற்­போது சர்­வ­தேசம் வெற்­றி­கொள்­ளப்­பட்­டுள்­ளதே தவிர ஏனைய எந்­த­வொரு விட­யமும் வெற்­றி­கொள்­ளப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் தற்­போது தேசிய அர­சாங்­கத்தின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாகி நிற்­கின்­றது.

அர­சாங்கம் மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­கவே மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்டு பாரா­ளு­மன்றம் செல்­கின்­றது. ஆனால் பாரா­ளு­மன்றம் சென்­ற­பின்னர் மக்­களின் தேவைகள் மறக்­க­டிக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு அடிக்­கடி வாக்­கா­ளர்கள் கூறு­வ­துண்டு. தற்­போ­தைய நிலை­மையைப் பார்க்­கும்­போது இவ்­வா­றான சூழல் உரு­வா­கின்­றதோ என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யாமல் இருக்­கின்­றது. ஒரு­வேளை தேசிய அர­சாங்கம் ஆட்டம் காணு­மானால் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் அனைத்தும் சித­ற­டிக்­கப்­படும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது. மக்கள் பாரிய எதிர்­பார்ப்­புக்­களின் மத்­தி­யி­லேயே தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கினர். ஆனால் இன்று நிலைமை தலை­கீ­ழாக மாறி­வி­டுமோ என்ற அச்சம் ஏற்­பட்­டுள்­ளது.

அதா­வது நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு தேசிய அர­சாங்­கத்தின் மீது வைத்த அனைத்து எதிர்­பார்ப்­புக்­க­ளையும் சித­ற­டித்­துக்­கொண்டு தற்­போது தேசிய அர­சாங்கம் ஆட்­டம்­கா­ணப்­போ­கின்­றதா என்ற கவ­லையே அனைவர் மத்­தி­யிலும் காணப்­ப­டு­கின்­றது. அதா­வது தீர்க்­கப்­ப­டாத தமது நீண்­ட­காலப் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே இந்­நாட்டு மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அதி­கா­ரத்­திற்கு கொண்­டு­வந்­தனர். அது­மட்­டு­மின்றி மலை­யகம் மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் தமது எதிர்­பார்ப்­புக்­களை நல்­லாட்சி அர­சாங்கம் பூர்த்தி செய்யும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே புதிய அர­சாங்­கத்தை பத­விக்கு கொண்­டு­வந்­தனர். மேலும் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் காணா­மல்­போன தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டிப்­ப­தற்கு அர­சாங்கம் உதவி செய்யும் என்ற நம்­பிக்­கையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தைப் பத­விக்கு கொண்டு வந்­தனர். அதே­போன்று யுத்­த­கா­லத்தில் காணி­களை பாது­காப்பு தரப்­பி­ன­ரிடம் இழந்த மக்கள் தமது காணி­களை மீளப்­பெற்­றுக்­கொள்­வ­தற்கு தேசிய அர­சாங்கம் உதவி செய்யும் என்ற நம்­பிக்­கையில் புதிய அர­சாங்­கத்தை பத­விக்கு கொண்­டு­வந்­தனர்.

அர­சியல் அதி­கா­ரத்­திற்­காக போரா­டிக்­கொண்­டி­ருக்கும் வடக்கு, கிழக்கு மக்கள் தமது அர­சியல் அபி­லா­ஷைகள் பூர்த்தி செய்­யப்­படும் வகையில் தேசிய அர­சாங்கம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என்ற நம்­பிக்­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அரசாங்கத்தை பத­விக்கு கொண்­டு­வந்­தனர். அதே­போன்று யுத்தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமக்கு புதிய அர­சாங்கம் நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்கும் என்ற நம்­பிக்­கையில் தேசிய அர­சாங்­கத்தை பத­விக்கு கொண்­டு­வந்­தனர். ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் இந்த அனைத்து எதிர்­பார்ப்­புக்­க­ளையும் சித­ற­டித்­துக்­கொண்டு தேசிய அர­சாங்கம் எங்கே சித­றி­வி­டுமா என்ற அச்சம் தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் அதி­கா­ரத்தில் இருக்­கின்றோர் சிந்­திக்­க­வேண்டும். அதி­கா­ரத்தில் இருக்­கின்றோர் தாம் ஐந்து வருடம் அதி­கா­ரத்தில் இருப்­ப­தற்­காக தேசிய அர­சாங்­கத்தைப் பயன்­ப­டுத்­து­வதை விடுத்து மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவ­சியம் என்­பதை எப்­போதும் சிந்­தித்­துப்­பார்க்­க­வேண்டும்.

இவ்­வாறு மக்­களின் தேவைகள், முழு­மை­யாக பூர்த்தி செய்­யப்­ப­டாத நிலை­மை­யிலும் நீண்­ட­காலப் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாத சூழ­லிலும் தேசிய அர­சாங்கம் ஆட்டம் காணு­மானால் அது மக்கள் 2015 ஆம் ஆண்டு எடுத்த தீர்­மா­னத்தை சவா­லுக்­குட்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்கி விட்டு ஆட்­சிக்கு வந்தார். அந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு ஜனா­தி­ப­திக்கு தேசிய அர­சாங்கம் தேவை என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. குறிப்­பாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காணும் விட­யத்தில் தேசிய அர­சாங்கம் மிகவும் முக்­கி­ய­மா­னது. நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு ஒரு தீர்வைக் காண்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் அமைந்­துள்­ள­தாக கூறப்­படும் நிலையில் அந்த சந்­தர்ப்பம் இல்­லாமல் போய்­விடும் என்ற அச்சம் ஏற்­பட்­டுள்­ளது. அர­சி­யல்­தீர்வு உள்­ள­டக்­கப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு தற்­போது தேசிய அர­சாங்கம் முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஒரு­வேளை தேசிய அர­சாங்கம் ஆட்­டம்­கா­ணு­மானால் அந்த முயற்­சியும் கைவி­டப்­படும் அபாயம் இருக்­கின்­றது. நீண்­ட­கா­லத்­திற்குப் பின்னர் அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய மக்­களின் பிர­தி­ப­லிப்­புடன் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு கிடைத்த சந்­தர்ப்­பத்தை இழந்­து­வி­டு­வோமோ என்ற அச்சம் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது. நாங்கள் இங்கு கூற­வ­ரு­வது என்­ன­வென்றால் இவ்­வாறு மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அச்சம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் ஆட்­சியில் இருப்­ப­வர்­க­ளுக்கும் ஏற்­ப­ட­வேண்டும். மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­களைத் தீர்க்­காமல் தேசிய அர­சாங்கம் ஆட்­டம்­கண்டால்அது­தொ­டர்­பான குற்ற உணர்வு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு ஏற்­ப­ட­வேண்டும். இந்த நாட்டில் நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு சிறந்த தீர்வைக் காண்­ப­தற்கு இத­னை­விட சிறந்த சந்­தர்ப்பம் அமை­யுமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும். அந்த சந்­தர்ப்­பத்தை சரி­வர பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­வேண்­டி­யது அனை­வ­ரதும் பொறுப்­பாகும். அதற்கு தேசிய அர­சாங்கம் பத­வி­யி­லி­ருக்­க­வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது எங்கே தேசிய அரசாங்கம் ஆட்டம் கண்டுவிடுமா என்ற கேள்வி எழுகின்றது. அதுமட்டுமின்றி தேசிய அரசாங்கம் பதவியில் இருக்கின்ற நிலையில் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் வெறுமனே காலம் மட்டும் இழுத்தடிக்கப்பட்டுக்கொ ண்டிருந்தால் அதிலும் அர்த்தமில்லை என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும். எப்படியாவது பிரச்சினையைத் தீர்த்து நாட்டுக்கு விடிவை ஏற்படுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டியது அவசியமாகும்.

 இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. முரண்பாடுகள் மற்றும் கருத்து மோதல்கள் இரண்டு தரப்புக்குமிடையில் வலுத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அவற்றை சமநிலைப்படுத்தி தேசிய அரசாங்கத்தை கொண்டுசெல்வதற்கு இரண்டு கட்சிகளையும் வழிநடத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் காணப்படுகின்றது. தமது எதிர்காலப் பொறுப்பை உணர்ந்து இரண்டு தலைவர்களும் செயற்படவேண்டும். நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் சுயநல அரசியலில் ஈடுபட்டுவிடக்கூடாது. மக்கள் தமக்கு எதற்காக அமோக ஆதரவை கடந்த இரண்டு தேர்தல்களிலும் வழங்கினார்கள் என்பதை புரிந்து கொண்டு இரண்டு தலைவர்களும் செயற்படவேண்டியது அவசியமாகும். எனவே தேசிய அரசாங்கம் ஆட்டம் கண்டுவிடுமா என்ற மக்களின் ஆதங்கத்தை கவனத்தில் கொண்டு தலைவர்கள் எதிர்காலத்திற்கு ஏற்றவகையிலான சிறந்த தீர்மானம் எடுக்கவேண்டும். எடுப்பார்களா?

ரொபட் அன்டனி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-09#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.