Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா?

Featured Replies

இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா?

 
 
  •  

பிரே­சில் நாட்டுக்கான இலங்­கைத்­தூ­து­வர் ஜகத் ஜய­சூ­ரிய தமக்கு எதி­ரா­கப் போர்க் குற்­றச்­சாட்­டுச் சுமத்­தப்பட்­டுள்­ள­தா­கக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்­குக் கூடத் தெரி­யா­மல் திடு­திப்­பென்று இலங்­கைக்­குத் திரும்­பி­யி­ ருந்­தார்.

அவ­ரது அந்­தத் தக­வ­லைக் கேட்டு நாடே குழப்­ப­ முற்­றது. இன்­றைய கூட்டு அர­சைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்­கும் அள­வுக்கு குறிப்­பிட்ட அந்­தச் செய்தி பார­தூ­ர­மான ஒன்­றாக அமைந்­தது.

‘‘உல­கையே வென்று விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. பன்­னாட்­டுச் சமூ­கம் தற்­போது இலங்­கையை நேசிப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால் போர் வீரர்­களை பன்­னாட்டு நீதி­மன்­றத்­தில் நிறுத்த ஆயத்­த­மா­கி­யுள்­ள­னர்.

அந்த வகை­யில் போர் வீரர்­க­ளைப் பாது­காக்க இய­லாத இந்த அரசு துரோக அரசு’’ ஜகத் ஜய­சூ­ரி­யா­வின் கதை­யைப் பற்­றிப் பிடித்த மகிந்த தரப்­பி­னர்­கள் இவ்­வாறு விமர்ச்­சிக்­கத் தலைப்­பட்­ட­னர்.

போர்க்­குற்­றம் தொடர்­பாக முன்­னாள் இரா­ணு­வத்­த­ள­பதி ஜெய­ன­ரல் ஜகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக ஐந்து லத்­தீன் அமெ­ரிக்க நாடு­க­ளது நீதி­மன்­றங்­க­ளில் வழக்­குத் தொடுக்­கப்­ப­ட­வி­ருப்ப­தா­க­வும் அந்த வழக்­கு­க­ளில் முன்னிலையாக தாமும் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்த பா­ய­ ரா­ஜ­பக்­ச­வும் அழைக்­கப்­பட இட­முண்டு என­வும் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

அந்த வகை­யில் நாட்­டைக் காக்­கும் சிப்பாய்களுக்கு இன்­றைய கூட்டு அரசு துரோ­கத்­த­னம் இழைக்­கி­றது. நாட்­டின் முப்­ப­டை­யி­ன­ரை­ யும் காட்­டிக் கொடுக்­கும் தரப்பு இன்­றைய அர­சைப் போன்று வேறு எது­வும் கிடை­யாது. மேற்­கண்ட கருத்­துக்­க­ளைக் கேட்­கும் போது பொங்கி வரும் சிரிப்­பைக் கட்­டுப்­ப­டுத்த இய­லா­துள்­ளது.

மகிந்­த­வைத்  தோற்­க­டிக்க சிப்பாய்களும் முன்­னின்­ற­னர்

இன்­றைய கூட்டு அரசு உரு­வாக அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்ட அரச ஊழி­யர்­கள் மத்­தி­யில் முன்­னிலை வகித்­த­வர்­கள் முப்­ப­டை­க­ளைச் சேர்ந்­த­வர்­களே.

முற்று முழு­தாக படைத்­த­ரப் பி­னர்­கள் மகிந்­த­வைத் தோற்­க­டித்து மைத்­தி­ரி­பா­லவை வெற்­றி­பெற வைக்க ஒன்­றி­ணைந்­தமை தபால் மூலம் வாக்­க­ளிப்பு முடி­வு­கள் வெளியானபோது உறு­தி­யா­கி­யி­ருந்­தது.

போரை முடி­வுக்­குக் கொண்டு வந்த தீர­மிக்க இரா­ணு­வத் த­ரப்பை காய்­க­றி­கள் பயி­ரிட்டு விற்­பனை செய்­ய­வும் குப்பை கூளங்­க­ளைக் கூட்­டிச் சேர்க்­க­வும் புல்லு வெட்­ட­வும் பயன்­ப­டுத்­தி­யது இன்­றைய கூட்டு அர­சல்ல.

கார்ப்­பந்­த­யத்­தில் ஈடு­படுவதற்காக அதற்­குப் பொருத்­த­மான வீதி­களை உரு­வாக்க மண் பர­வித்­த­யார் செய்­வ­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ரைப் பயன்­ப­டுத்­தி­யது இன்­றைய கூட்டு அர­சல்ல. பல ஆண்­டு­கள் கால­மாக சம்­பள ஏற்­றங்­கள் எத­னை­யும் வழங்­காது இரா­ணு­வத்­தி­னர் சிர­ம­மான வாழ்க்கை வாழ வைத்­தது இன்­றைய கூட்டு அர­சல்ல.

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் கிழக்கு மாகா­ணத் தள­பதி கரு­ணாவை அழைத்து வந்து அமைச்­சுப் பதவி வழங்கி வைத்­தது இன்­றைய கூட்டு அர­சல்ல. அந்­தக் கருணா செய்த குற்­றங்­க­ளுக்­காக அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­கள் எங்கு நடத்­தப்­பட்­டன என்­பதை எவ­ரு­ம­றி­யார்.

அத்­தோடு நிறுத்­திக் கொள்­ளா­மல் கரு­ணாவை சுதந்­தி­ரக் கட்­சி­யின் உப தலை­வ­ராக்கி வைத்­தது இன்­றைய கூட்டு அரசோ அல்­லது அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ அல்ல. சுதந்­தி­ரக் கட்­சிக்­காக கடு­மை­யாக உழைத்­த­வர்­களை மூத்த அமைச்­சர்­கள் என்ற பிரி­வுக்­குள் அடக்கி அர­சி­ய­லில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்க வைத்­த­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அல்­லர்.

அவ்­வி­தம் செயற்­பட்ட அதே­வேளை விடு­த­லைப் பு­லி­கள் அமைப்­பி­லி­ருந்து வில­கிய பிள்­ளை­யா­னுக்க கிழக்கு மாகாண முத­ல­மைச்­சர் பதவி வழங்­கி­ய­வர்­கள் மகிந்த தரப்­பி­ன­ரே­யன்றி மைத்­தி­ரி­பால சிறி­சேன அல்­லர்.

தலை­யில் தூக்கி வைத்த  சரத் பொன்­சேகா  துரோகி ஆக்­கப்­பட்­டார்

போர் முடி­வுக்கு வந்து மகிந்த தரப்­பி­னர் போர் வெற்­றி­யைக் கொண்­டா­டிய வேளை முத­லா­வது கேக் துண்டு வழங்­கப்­பட்­டது அவ்­வே­ளைய இரா­ணு­வத்­த­ள­பதி சரத் பொன்­சே­கா­வுக்கே.

ஆனால் அதே வேகத்­தில் அவர்­கள் நடத்திய போர் வெற்றிக் கண்­காட்­சி­யின் போது எந்­த­வொரு இடத்­தி­லும் சரத் பொன்­சே­கா­வின் புகைப்­பட ‘கட்­அ­வுட்­’ டைக் காண முடி­ய­ வில்லை. கண்­காட்­சிக்கு கருணா அம்­மா­னும் சென்­றி­ருந்­தார்.

சரத்­பொன்­சே­கா­வால் செல்ல இய­லாது போயிற்று மகிந்­த­வுக்கு எதி­ராக அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட்­ட­மையே சரத் பொன்­சேகா தமது பத­வியை இழக்­கக் கார­ண­மா­யிற்று. அந்த வகை­யில் போரை வென்­றெ­டுத்­துக் கொடுத்த சரத்­பொன்­சேகா சிறை­வா­சம் அனு­ப­விக்க அரச பிர­தா­னி­கள் வெறி­வி­ழாக் கொண்­டா­டி­னர்.

இது இந்த நாடு நன்­க­றிந்த விட­யம், தமக்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் கொள்­ளத்­தக்க எந்­த­வொரு விட­யத்­தை­யும் தமக்­குச் சாத­க­மான விதத்­தில் ஆக்­கிக் கொள்­வ­தில் மகிந்த தரப்­பி­னர்­கள் பலே கில்­லா­டி­கள்.

ஆனால் தற்­போது ஜகத் ஜய­சூ­ரிய தொடர்­பான பிரச்­சினை வேறொரு ரூபம் எடுத்­துள்­ளது. இரா­ணு­வச் சீருடை அணிந்­த­வர்­கள் இரா­ணு­வத்­தில் சேவை ஆற்­றி­ய­வர்­கள் என்­ப­தற்­காக தவறு செய்­ப­வ­ரைத் தண்­டனை பெறுவதிலிருந்து காப்­பாற்­று­வது நியா­ய­மா­ன­தல்ல. சகல அர­சி­யல்­வா­தி­க­ளும் சகல அர­ச தலை­வர்­க­ளும் இத­னைப் புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம்.

முன்­னைய கால­கட்­டத்­தில் பாலி­யல் வன்­முறை கொலை என்­ப­வற்றை மேற்­கொண்ட இரா­ணு­வத்­தி­னர் தண்­டிக்­கப்­பட்­ட­னர். முன்­னைய அரச தலை­வர்­கள் பொது மக்­கள் தரப்­பாக நின்று தவ­றி­ழைத்­தோ­ருக்­குத் தண்­டனை வழங்­கி­னர்.

சரத் பொன்­சே­கா­வும் அத­னைத்­தான் கூறி­னார். அவர் ஜகத் ஜய­சூ­ரி­யா­வுக்கு எதி­ரா­கச் காட்­சி­ய­ம­ளிக்க பன்­னாட்டு நீதி­மன்­றுக்­குச் செல்­வா­ரா­னால் அது அவ­ரது வைராக்­கிய செயற்­பாடே.

ஜகத் ஆனா­லென்ன வேறு எந்த அதி­கா­ரி­யா­னா­லென்ன தவ­றி­ழைத்­த­தாக உறு­தி­யா­கத் தெரி­யு­மா­னால் அதனை வெளிப்­ப­டுத்­து­வது எந்­த­வ­கை­யில் தவ­றா­கும்?

புலம் பெயர் அமைப்­புக்­களை நலிவு படுத்­திய கூட்டு அரசு

இலங்­கைக்கு எதி­ராக உலக­ளா­விய ரீதி­யில் செயற்­ப­டும் புலம்­பெ­யர் அமைப்­புக்­க­ளது பலத்தை நலி­வு­ப­டுத்­தி­யது இன்­றைய அரசே. முன்­னெல் லாம் பௌத்த பிக்­கு­மா­ரால் வட பகு­திக்­குச் சுதந்­தி­ர­மா­கச் செல்ல முடிந்­த­ தில்லை.

ஒரு சம­யம் சரத்­பொன்­சேகா அமெ­ரிக்­கா­வுக்­குச் சென்­றி­ருந்த போது அங்கு வைத்து அவ­ரைக் கைது செய்ய முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. மகிந்­த­வால் எந்­த­வொரு வெளி­நாட்­டுக்­கும் செல்ல இய­லா­த­நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

உலக நாடு­கள் பல­வற்­றி­லும் இலங்­கைக்கு எதி­ரான நிலைப்­பாடு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. ஒரு சில வெளி­நா­டு­கள் இலங்­கைக்கு எதி­ரா­கப் பொரு­ளா­தா­ரத் தடை­வி­திப்­பது குறித்­தும் பரி­சீ­லித்­தி­ருந்­தன. மொத்­தத்­தில் உலக நாடு­க­ளால் இலங்கை புற­மொ­துக்­கப்­ப­டும் சூழல் உரு­வாக்­கப்­பட் டி­ருந்­தது.

இலங்­கை­யில் நடத்­தப்­பட்ட சோகம் பன்­னாட்டு ரீதி­யி­லான மாநாட்­டுக்கு வந்த வெளி­நா­டு­க­ளின் அரச தலை­வர்­கள் இலங்­கை­யின் அர­சி­யல் போக்­குக்­கு­றித்து வெளிப்­ப­டை­யாக விமர்­சித்­து­ விட்­டுச் சென்­ற­னர்.

பிரிட்­டன் தலைமை அமைச்சர் கம­ரூன் இலங்கை அர­சைக் கடு­மை­யாக விமர்­சித்­துச் சென் றி­ருந்­தார். இந்­தியத் தலைமை அமைச்சர் தமது இலங்­கைக்­கான பய­ணத்­தின் போது­இ­லங்­கைக்கு இந்­தியா உத­வத் தயா­ரா­க­வுள்­ள­தா­கக் கூறி­ய­போது மகிந்த தரப்­பி­னர் அத­னைத் திரித்­துக் கூறி இந்­தியா இலங்­கை­யைத் தனது கொல­னி­யாக மாற்ற முனை­வ­தாக விமர்­சித்­தி­ருந்­த­னர்.

சுதந்­தி­ரக் கட்சி தனது வரு­டாந்த சம்­மே­ளன விழா­வைக் கொண்­டா­டத் தயா­ரான வேளை­யி­லேயே ஜகத்­ஜ­ய­சூ­ரிய விட­ய­மும் அரங்­குக்கு வந்­துள்­ளது. என்னை பன்­னாட்டு நீதி­மன்­றில் நிறுத்­தத் தயா­ராகி வரு­கின்­ற­னர். இது அர­சின் தவ­றா­லேயே ஏற்­பட்டது எனக் கூறிக் கொண்டு ஜகத் ஜய­சூ­ரிய இலங்­கை­யில் கால்­ப­தித்­தி­ருந்­தார்.

இந்­தச் சம்­ப­வத்­தை­ய­டுத்து முழு நாடுமே குழப் பத்­தில் அமிழ்ந்து போயிற்று.
கட­வுளே! இந்த அரசு கவி­ழப் போகி­றதே என ஒரு தரப்­பி­னர் அச்­சத்­தில் ஆழ்ந்­த­னர். உரு­வாக்­கி­ய­வர்­கள் கூட ஓர­ளவு குழப்­ப­முற்­ற­னர். ஆனால் நினைத்த அள­வுக்­குப் பூதம் கறுப்­பாக இல்லை.

இதற்­கான பதில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் வரு­டாந்த மாநாட்­டில் அரச தலை­
வ­ரால் தெரி­விக்­கப்­பட்­டது.

முன்­னாள் இரா­ணு­வத்­த­ள­பதி ஜகத் ஜ­ய­சூ­ரிய மீதோ இந்த நாட்­டின் வேறெந்த படைத்­த­ரப்­பி­னர் மீதோ கைவைக்க நான் வெளி­நா­டு­கள் மற்­றும் உள்­நாட்­டைச் சேர்ந்த எவ­ரொ­ரு­வ­ருக்­கும் இட­ம­ளிக்­கப் போவ­தில்லை.

சில அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளது விருப்­புக்கு ஏற்­ற­வாறு நட­ன­மாட நான் தயா­ரில்லை. என அவர் ஆக்­ரோ­ச­மா­கத் தெரி­வித்­துள்­ளார். இந்த அர­சின் நிலைப்­பாடு அது.

அதற்கு மேல­தி­க­மாக கேள்வி கேட்க எது­வு­மில்லை. அதனை உறுதி செய்­யும் விதத்­தில் நாட்­டின் தற்­போ­தைய இரா­ணு­வத்­த­ள­ப­தி­யும் கருத்­துத் தெரி­வித்­துள்­ளார்.

தனிப்­பட்ட விருப்பு  வெறுப்­புக்­க­ளுக்­க­மைய  செயற்­ப­டு­தல் நியா­ய­மல்ல

‘‘முன்­பொரு சம­யம் நான் அடித்து விரட்­டப்­பட்ட வேளை­யில் கூட நான் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக எது­வித கருத்­தும் வெளி­யிட்­ட­தில்லை. தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புக்­க­ளு­டன் இரா­ணு­வத்­தைத் தொடர்பு படுத்த வேண்­டா­மென நான் மீண்­டும் மீண்­டும் வேண்­டிக் கொள்­கி­றேன்.

பிரேசில் நாட்­டுக்­கான இலங்­கைத் தூது­வ­ராக ஜென­ரல் ஜெய­சூ­ரிய கட­மை­யாற்­றித் தனது சேவைக்­கா­லத்­தைப் பூர்த்தி செய்த வேளை­யில் போர்க்­குற்­றச்­சாட்டு அவ­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அது­வரை அத்­த­கைய குற்­றச் சாட்­டொன்று முன்­வைக்­கப்­பட்­ட­தில்லை.

எனவே தனிப்­பட்ட நபர்­க­ளது பிரச் சி­னை­க­ளு­டன் மதிப்பு மிக்க இரா­ணு­வத்­தைத் தொடர்­பு­ப­டுத்த வேண்­டாம் என வேண்­டிக் கொள்­கி­றேன். ஜகத் ஜய­சூ­ரிய இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக இருந்த வேளை­யில் எனக்­குச் செய்த தீங்­கு­க­ளுக்­காக நான் அவ­ரைக் குறை கூறி­ய­தில்லை.

பீல்ட் மார்­சல் சரத் பொன்­சேகா இரா­ணு­வம் தொடர்­பாக வெளி­யிட்ட கருத்­துக்கு இரா­ணு­வத்­த­ள­பதி என்ற ரீதி­யில் கண்­ட­னம் தெரி­விக்­கி­றேன். பயங்­க­ர­வா­தி­க­ளு­டன் மேற்­கொண்ட போரில் 28 ஆயி­ரம் இரா­ணு­வத்­தி­னர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

அதற்கு இரு­ம­டங்­கான தொகை­யி­னர் காய­முற்­றும் ஊன­முற்­று­முள்­ள­னர். இவ்­வி­தம் கெட்­ட­பெ­யர் சம்­பா­தித்­துக் கொள்­ளவா இரா­ணு­வத்­தி­னர் இந்த அளவுக்கு உயிர்த்­தி­யா­கம் செய்­த­னர்? இரா­ணு­வத்­தி­னர் எவ­ரும் தமது கட­மை­யின் போது மனித உரி­மை­களை மீறி­ய­தில்லை” என அவர் கருத்து வெளி­யிட் டி­ருந்­தார்.

ஜகத் ஜய­சூ­ரிய குற்­ற­மி­ழைத்­தாரா இல்­லையா என்­பதை உறு­தி­யா­கக் கூற இய­ல­வில்லை. நாட்­டுக்­கா­கப் போரா­டிய இரா­ணு­வத்­தி­னர் எவ­ரை­யும் சிறைக்கு அனுப்ப எவர் முயன்­றா­லும் அரச தலை­வர் அதற்கு இட­ம­ளிக்­கப் போவ­தில்லை என்­பது மட்­டும் நிச்­ச­யம்.

ஜேர்­ம­னிய சர்­வா­தி­காரி அடல்ப் ஹிட்­லர் சிறு­வர்­களை நேசித்­த­வர், மிரு­கங்­களை நேசித்­த­வர், புகைத்­தல் பழக்­க­மற்­ற­வர், புலால் உண்­ணா­த­வர் ஆனா­லும் அவர் குற்­ற­மி­ழைத்­த­வர்.

யூத இனத்­த­வர்­களை அழித்­தொ­ழிக்­கக் கனவு கண்­ட­வர். ஆத­லால் தவ­றி­ழைத்த மனி­த­ரொ­ரு­வர் ஆயி­ரம் ஒளி­வி­ளக்­கு­களை ஏற்றி ஆண்­ட­வ­னைத் தொழு­தா­லும் தண்­டனை பெற்­றால் மட்­டுமே விடு­தலை அடைய இய­லும்.

அந்த வகை­யில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள முன்­னாள் இரா­ணு­வத்­த­ள­பதி ஜகத்­ஜ­ய­சூ­ரிய தரப்­பி­னர் குற்­ற­ மி­ழைக்­கா­த­வர்­க­ளாக இருக்­கட்­டும் என்று விரும்புவோம்.

http://newuthayan.com/story/27681.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.