Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்: இன்று தொடங்குகிறது சுதந்திரக் கோப்பைத் தொடர்

Featured Replies

உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு

 

பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.சி.சி.யின் உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.

 
உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு
 
இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணி மட்டும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

தற்போது பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் தொடங்குவதற்கான காலம் கனிந்துள்ளது. ஐ.சி.சி. உலக லெவன் அணியை பாகிஸ்தான் அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் - ஐ.சி.சி. உலக லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டது.

201709111553060195_1_1wolrdXI002-s._L_st

அதன்படி முதல் போட்டி நாளை தொடங்குகிறது. 2-வது போட்டி 13-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 15-ந்தேதியும் நடக்கிறது. மூன்று போட்டிகளும் லாகூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான உலக லெவன் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அணி கடந்த சில தினங்களாக துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 13 வீரர்கள் பாகிஸ்தான் சென்றடைந்தனர். பாகிஸ்தான் சென்றடைந்த அவர்கள் வரலாறு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

201709111553060195_2_1wolrdXI003-s._L_st

போட்டி நடைபெறும் மைதானத்திற்கும் வீரர்கள் தங்கும் ஹோட்டலுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் உள்பட 9 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

201709111553060195_3_1wolrdXI004-s._L_st

இந்த தொடர் வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணி ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட ஒப்புக் கொண்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/11155303/1107483/Pakistan-Braces-For-a-Revival-as-World-XI-Arrive.vpf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்: இன்று தொடங்குகிறது சுதந்திரக் கோப்பைத் தொடர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில், ஐ.சி.சி ஆதரவுடன் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று  நடைபெறுகிறது. 

world11_07377.jpg


பாகிஸ்தான் நாடும், இந்தியா போன்றே கிரிக்கெட் விளையாட்டை அதிகம் நேசிக்கும் மக்களைக் கொண்ட நாடு. ஆனால், கடந்த 2009 -ம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு சர்வதேசப் போட்டிகள் நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்துவந்தன. 

2015 -ல், ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடியபோதும், அது ஐ.சி.சி-யின் ஆதரவு இல்லாமல்தான் நடைபெற்றது. அந்தத் தொடருக்கு ஐ.சி.சி தனது நடுவர்களை அனுப்ப மறுத்துவிட்டது. 
இந்நிலையில், பாகிஸ்தான் அணி இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களைத் தங்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. இனிமேலாவது எங்கள் மண்ணில் விளையாட வாருங்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், தற்போது ஐ.சி.சி அனுமதியுடன் பாகிஸ்தான்  மண்ணில் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, டுபிளெசிஸ் தலைமையில் உலக லெவன் அணி பாகிஸ்தான் வந்துள்ளது. லாகூர் வந்துள்ள உலக அணி வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

worls11_08050.jpg

போட்டி நடைபெறும் கடாஃபி மைதானமும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. உலக லெவன் அணியில், இந்தியர்கள் யாரும் இல்லை என்றபோதும் ஆசிய வீரர்கள் இருப்பதால், பாகிஸ்தான் அணிக்கு உலக லெவன் சவால் அளிக்கும். இந்திய துணைக் கண்டத்தில் அதிக போட்டிகள் விளையாடிய அனுபவம்கொண்ட வீரர்கள், உலக லெவன் அணியில் இருக்கிறார்கள். டுபிளெசிஸ், ஆம்லா, மில்லர், இம்ரான் தாஹிர், மோர்னி மோர்கெல் போன்ற ஐ.பி.எல் நட்சத்திரங்களுடன் ஆசிய வீரர்களான தமீம் இக்பால், திசெரா ஃபெரெரா ஆகியோரும் உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

 

பாகிஸ்தானைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய அதே அணிதான் களமிறங்குகிறது. அந்த அணியின் நம்பிக்கைக்குரிய பந்து  வீச்சாளரான ஆமிர், தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் இருப்பதால், இந்தத் தொடரில் அவர் மட்டும் பங்கேற்கவில்லை. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் தொடரால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த மகிழ்சியில் உள்ளனர். 

http://www.vikatan.com/news/sports/101974-pakistan-host-international-cricket-tournament-after-long-time.html

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Text

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்

உலக லெவன் அணிக்கெதிரான டி20 போட்டி: 20 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

 

உலக லெவன் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 
உலக லெவன் அணிக்கெதிரான டி20 போட்டி: 20 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
 
லாகூர்:

பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் டு பிளிசிஸ் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய பகர் சமான் 4-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி 33 பந்தில் அரைசதம் அடித்தார். 11.2 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைத் தொட்டது.

அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது ஷேசாத் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார். பாபர் ஆசம் 86 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

201709130000438615_1_cricket11._L_styvpf

சோயிப் மாலிக் 20 பந்தில் 38 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, இமாத் வாசிம் கடைசி 3 பந்தில் 14 ரன்கள் விளாச பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது. பெரேரா கடைசி ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். பாகிஸ்தான் கடைசி 3 ஓவரில் 48 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 18 ரன்களில் ராயீஸ் வேகத்தில் போல்டானர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லாவும் 26 ரன்களில் ராயீஸ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து டிம் பெயின் மற்றும் கேப்டன் டூபிலஸிஸ் ஜோடி சேர்ந்தனர். டூபிலஸிஸ் 29 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து டிம் பெயினும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் உலக லெவன் அணி 108 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லரும் 9 ரன்களில் ஆட்டமிளந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன்பின்னர் கிரண்ட் ஏலியாட் 14 ரன்களிலும், திசாரா பெரேரா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி ஏழு விக்கெட்களை இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டேரன் சம்மி 16 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 86 ரன்கள் எடுத்த பாபர் ஆசம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் அடுத்த போட்டி நாளையும், கடைசி போட்டி 15-ம் தேதியும் நடைபெற உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/13000040/1107705/pakistan-won-first-t20-against-iccworld11-team.vpf

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக லெவன் அணி திரில் வெற்றி

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் உலக லெவன் அணி, ஒரு பந்து மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

 
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக லெவன் அணி திரில் வெற்றி
 
லாகூர்:

பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ( 13-ம் தேதி ) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 12.2 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைத் தொட்டது.

அணியின் ஸ்கோர் 130 ரன்களை எட்டியபோது ஷேசாத் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார்.  பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 45 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

201709140055488839_1_crickettt._L_styvpf

சோயிப் மாலிக் 23 பந்தில் 39 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. உலக லெவன் அணி பந்துவீச்சில் சாமுவேல் பத்ரி, திசாரா பெரேரா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 23 ரன்களில் சோஹைல் கான் பந்தில் சோயிப் மாலிக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் பெய்ன் 10 ரன்னில் இமாத் வாசிம் வேகத்தில் போல்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லா 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கேப்டன் டூபிலஸிஸ் டூபிலஸிஸ் 20 ரன்களில் அவுட்டானார். இதன்மூலம் உலக லெவன் அணி 14 ஓவர்களில் 106 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. அடுத்து களமிறங்கிய திசாரா பெரேரா - ஹாசிம் அம்லாவுடன் ஜோடி சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். உலக லெவன் அணி 19.5 ஓவரின் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஹாசிம் அம்லா 72 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 19 பந்துகளில் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திசாரா பெரேரா ஐந்து சிக்ஸர்கள் அடித்தார்.

உலக லெவன் அணியின் திசாரா பெரேரா ஆட்டநாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி, 15ம் தேதி நடைபெறுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/14005543/1107889/world11-team-won-t20-cricket-match-against-pakistan.vpf

  • தொடங்கியவர்

உலக லெவன் கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்

உலக லெவன் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்று சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது.

 
உலக லெவன் கிரிக்கெட் அணிக்கெதிரான டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்
 
லாகூர்:

பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இந்நிலையில், கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில், டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பகர் சமான் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷேசாத் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

அணியின் ஸ்கோர் 163 ரன்னாக இருக்கும்போது ஷேசாத் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஷேசாத் - ஆசம் ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார். அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் 48 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

20 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. சோயிப் மாலிக் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். உலக லெவன் அணியின் திசாரா பெரேரா இரண்டு விக்கெட்கள் எடுத்தார்.

தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 14 ரன்களில் உஸ்மான் கான் வேகத்தில் போல்டானர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லாவும் 21 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

201709152349220534_1_pak2._L_styvpf.jpg

அடுத்து களமிறங்கிய பென் கட்டிங் 5 ரன்களிலும், ஜார்ஜ் பெய்லி 3 ரன்களிலும், கேப்டன் டு பிளிஸ்சிஸ் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் அந்த அணி 10 ஓவர்களுக்குள் ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதைத்தொடர்ந்து டேவிட் மில்லரும், திசாரா பெரேராவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 13 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டேரன் சமி களமிறங்கினார். மில்லரும் 32 ரன்களில் கேட்சாகி வெளியேறினார்.

20 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி எட்டு விக்கெட்கள் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டேரன் சமி 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 89 ரன்கள் எடுத்த அகமது ஷேசாத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி சுதந்திர தின கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் ஆசம் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/15234915/1108237/Pakistan-seal-independence-day-series-as-successful.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.