Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவின் கணவர் கவலைக்கிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலாவின் கணவர் கவலைக்கிடம்:

 
natarajan.jpg

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் கணவரான நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்டது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு லண்டனைச் சேர்ந்த பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் முகம்மது ரீலா சென்னை வந்துள்ளதாகவும், ஓரிரு நாட்களுக்குள் கல்லீரல் மாற்று அறுவகை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் நடராஜனினுக்கு சிறுநீரக பாதிப்பு மற்றும் நுரையீரல் அடைப்பு இருந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 மணி நேரத்திற்கு மேலாக டயாலிசிஸ் நடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கணவரை பார்க்க சசிகலா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா பரோல் எதற்கும் விண்ணப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

http://ttnnews.com/2017/09/12/சசிகலாவின்-கணவர்-கவலைக்க/

கல்லீரலை மாற்ற முடிவு: நடராஜனுக்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை- சசிகலா வேதனை

 

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதனால் சசிகலா வேதனை அடைந்துள்ளார்.

 
 
கல்லீரலை மாற்ற முடிவு: நடராஜனுக்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை- சசிகலா வேதனை
 
சென்னை:

சசிகலாவின் கணவர் நடராஜன் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து உடலில் உள்ள பாதிப்புகளை கண்டறிந்து வருகிறார்கள்.

சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளதால் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இன்றுடன் 3-வது நாளாக டயாலிசிஸ் தொடர்கிறது.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:-

நடராஜன் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மயக்க நிலை எதுவும் இல்லை. நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்.

உடல் பரிசோதனையில் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதும் நுரையீரலில் தண்ணீர் சேர்ந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கல்லீரல் கண்டிப்பாக மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது.

சிறுநீரக பாதிப்பை சீர் செய்ய முடியுமா? மாற்ற வேண்டுமா? என்பது தொடர் சிகிச்சையில்தான் தெரிய வரும். மருத்துவ குழுவினர் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.

தன் கணவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்த சசிகலா வேதனை அடைந்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், அவர் லிங்கத்துக்கு ஜல அபிஷேகம் செய்து கணவர் உடல்நலம் பெற வேண்டிக் கொண்டார். மனவேதனையுடன் இருக்கும் அவரை இளவரசி தேற்றி வருகிறார்.

இதற்கு முன்பு உறவினரான மகாதேவன் இறந்தபோது சசிகலாவுக்கு பரோல் கிடைக்கவில்லை. இதனால் தனது கணவரை பார்க்க பரோல் கேட்டால் கிடைக்காது என்பதால் அவர் சுப்ரீம் கோர்ட்டில் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/12155040/1107650/Sasikala-was-distressed-due-to-dialysis-for-Natarajan.vpf

 

ஆபத்தான நிலையில் சசிகலா கணவர் நடராஜன் ! |

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.