Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

800 கி.மீ தூரம், 26 மணி நேர பயணம்... பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ஒரு மதம்! #CricketBackToPak

Featured Replies

800 கி.மீ தூரம், 26 மணி நேர பயணம்... பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ஒரு மதம்! #CricketBackToPak

 
 

மார்ச்  3, 2009. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பஸ், லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தை நோக்கி பயணிக்கிறது. சுற்றிலும் பாதுகாப்பு. பஸ் லிபர்டி செளக் பகுதியில் சென்றபோது அங்கு ஊடுருவியது, துப்பாக்கி ஏந்திய 12 பேர் கொண்ட கும்பல். பாதுகாப்பு வீரர்கள் சுதாரிப்பதற்குள் நடந்து முடிந்துவிட்டது தாக்குதல். இலங்கை வீரர்கள் ஆறு பேர் காயம். ஆறு போலீஸார், பொதுமக்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலி. 

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்

அஷன் ரஸா, பாகிஸ்தானைச் சேர்ந்த அம்பயர். லாகூர் டெஸ்ட் போட்டியின் ரிசர்வ் அம்பயரும் கூட. இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் அவரும் ஒருவர். துப்பாக்கிச் சூட்டின்போது அவரைக் காப்பாற்றியது ஐ.சி.சி விதிமுறைகள் தொடர்பான புத்தகமே. மார்போடு இறுக்கி அணைத்து வைத்திருந்த அந்த புத்தகத்தையும் ஊடுருவி இரண்டு தோட்டாக்கள் அவர் நுரையீரலைத் தாக்கியது. மூன்று நாள்கள் கோமா. 27 நாள்கள் ஐ.சி.யு-வில் சிகிச்சை. 9.46 லிட்டர் (20 pints of blood) ரத்தம் ஏற்றப்பட்டது. வயிற்றில் 80 தையல்கள். எழுந்து நடக்க ஆறு மாதங்கள் ஆனது. இனி அம்பயராக பணியாற்றுவது கடினம் என்றே நினைத்தனர். ஆனால், சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த வேர்ல்ட் லெவன் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி -20 தொடரில், மீண்டும் அம்பயர் அவதாரம் எடுத்தார் அஷன் ரஸா. லாகூரில் மீண்டும் சர்வதேச போட்டிகள் நடக்க வேண்டும், அதில் அம்பயராக பணியாற்ற வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்றியது சமீபத்தில் முடிந்த இண்டிபெண்டன்ஸ் கப் சீரிஸ்.

கிரிக்கெட்

பாகிஸ்தான் பத்திரிகைகளில் கடந்த சில நாள்களாக விதவிதமாக பல கதைகள். பஹவல்பூரில் சலூன் கடை வைத்திருக்கும் ஒருவர், ‘‘எனக்கு டிக்கெட் வாங்கிக் கொடுப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக முடி திருத்தம் செய்வேன்’ என்றார். மற்றொருவர், லாகூரில் இருந்து தென்கிழக்கே உள்ள ஊரில் இருந்து 800 கி.மீ பயணித்து கிரிக்கெட் பார்க்க வந்திருக்கிறார். அதேபோல, கிரிக்கெட் வெறிபிடித்த ஒரு தம்பதி 26 மணி நேரம் பயணித்து லாகூர் வந்து சேர்ந்திருக்கிறது. இப்படி பல கதைகள். 

எப்படியோ... பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் மேகம் சூழ்ந்து விட்டது. மூன்று நாள்கள் கடாஃபி ஸ்டேடியத்தில் நிறைந்திருந்தவர்களில் 65 சதவிதிகம் பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட சர்வதேச போட்டியை நேரில் பார்த்தது இல்லை. ரசிகர்கள் மட்டுமல்ல, பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தவர்களில் பத்து பேர், இதற்கு முன் சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை. அதில் ஐந்து பேர் பிளேயிங் லெவனில் இருந்தனர். அவர்கள் முதன்முறையாக சொந்த மண்ணில் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடினர். ஹோம் கிரவுண்ட் எஃபெக்ட் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தனர். இளம் வீரர்கள் மட்டுமல்ல, சீனியர் வீரர்களுக்கும் நீண்டநாளுக்குப் பின் வீட்டுச்சாப்பாடு சாப்பிட்ட திருப்தி.

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்

நினைத்துப் பாருங்கள்... லார்ட்ஸ் டெஸ்டில் தன் 500-வது விக்கெட்டை எடுக்கிறார் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன். கரியர் பெஸ்ட். அலெக் பெட்சருக்கு அடுத்ததாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமை. தொடரின் சிறந்த வீரர் என்ற கெளரவம். இதையெல்லாம் அசைபோட்டபடி, பந்தைத் தூக்கிப் பிடித்தபடி பெவிலியன் நோக்கி நடக்கிறார். மைதானத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டுகின்றனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் வாழ்வின் முக்கியமான தருணங்களில் இதுவும் ஒன்று. ஒருவேளை இந்த டெஸ்ட் போட்டி, இரு அணிகளுக்கும் பொதுவான இடத்தில், அந்நிய மண்ணில், காலி மைதானத்தில் நடந்திருந்தால்? அவர் செய்த சாதனை மறையப்போவதில்லை. ஆனால், முதுமையில் அசைபோட நல்லதொரு நினைவு இருக்குமா? நண்பர்கள், ரசிகர்கள், ஆதரவாளர்கள் எல்லாம் எழுந்து நின்று கைதட்ட, மைதானத்தை வலம் வருவதே கெத்துதானே!

கிரிக்கெட்

கடந்த எட்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அசைபோட இப்படி ஒரு தருணம் கூட வாய்க்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுடைய ஹோம் மேட்ச்கள் நடந்தது எல்லாமே ஐக்கிய அரபு அமீரகத்தில். பாகிஸ்தான் வீரர்களைப் பொறுத்தவரை ஹோம் கிரவுண்ட் என்பது பெயரளவில் மட்டுமே. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அசார் அலி முச்சதம் அடித்தது துபாயில்...  மிஸ்பா உல் ஹக் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் அதிவேக சதம் அடித்தது, சோயிப் மாலிக் தன் வாழ்நாளில் உச்சபட்ச ரன்கள் விளாசியது அபுதாபியில்... எல்லாமே ஆளில்லா அரங்கில்...காலி இருக்கைகள்! அப்படி இருந்தவர்கள் முதன்முறையாக சொந்த மண்ணில் இவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததும் உற்சாகமாகி விட்டனர். 

ஒருவழியாக மெள்ள மெள்ள, பாகிஸ்தான் மீது சர்வதேச வீரர்கள் கருணை காட்டத் தொடங்கியுள்ளனர். ஜிம்பாப்பேவ அணி 2015-ல் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்தது. மூன்று ஒன்டே மேட்ச், இரண்டு டி-20 மேட்ச். லாகூரில் மார்ச் மாதம் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் ஃபைனலில் வெஸ்ட் இண்டீஸ் உள்பட பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர். ஜூலை மாதம் லாகூர் மற்றும் கராச்சியில் நடந்த கண்காட்சி கால்பந்து போட்டிகளில் ரியான் கிக்ஸ், ரொனால்டினோ போன்ற கால்பந்து வீரர்கள் வித்தை காட்டினர். சர்வதேச டென்னிஸ், ஸ்னூக்கர், ஸ்குவாஷ் டோர்னமென்ட்டுகள் மெள்ள மெள்ள பாகிஸ்தானில் அடியெடுத்து வைத்துள்ளன. ஆனாலும், பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான நீண்டகால செயல்திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. 

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்

பாகிஸ்தான் - வேர்ல்ட் லெவன் அணிகளுக்கு இடையிலான இண்டிபென்டன்ஸ் கப் டி-20 தொடர் அதற்கு ஒரு வடிவம் கொடுத்துள்ளது. அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி, ஒரு டி-20 போட்டியில் பங்கேற்கிறது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டும் பாகிஸ்தான் செல்வது நல்ல அறிகுறி. இலங்கையைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் செல்ல சம்மதித்திருப்பதாகத் தெரிகிறது.  

சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கு பாகிஸ்தான் ஏற்ற இடம் என்பதை உலகுக்கு அறிவிக்கும் முயற்சியை எப்போதோ தொடங்கி விட்டது பஞ்சாப் மாகாணம். லாகூர் மட்டுமல்லாது பஞ்சாப் மாகாணத்தில் உள்ள எட்டு நகரங்களிலும் பாதுகாப்பை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் ‛பஞ்சாப் சேஃப் சிட்டி’ திட்டத்தை முன்னெடுத்தது மாகாண அரசு. ஆறு நகரங்களில் 8,000 கேமராக்கள். இதற்கு சீனாவைச் சேர்ந்த ஹுவாய் நிறுவனம் ஒத்துழைத்தது. இவை எதுவும் பயங்கரவாதிகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை. லாகூரில் ஃபிப்ரவரி மாதம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர், ஜூலையில் நடந்த தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். அதோடு நிற்கவில்லை. ‘பழங்குடியின நிலத்தில் ராணுவம் செய்யும் அட்டூழியத்தை எதிர்க்கும் எங்கள் போராட்டம் தொடரும்’ என அறிவித்தனர். கடந்த வாரம் வரை பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்

2009-ம் ஆண்டுக்குப் பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடக்காததால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் வருமானமும் இல்லை. அதனால், ஐ.சி.சி-யின் உதவியை நாடியது. ஐ.சி.சி-யும் பாதுகாப்பு விஷயத்தில் உதவ முன்வந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ரெஜ் டிக்சன், சமீபத்தில் முடிந்த தொடரில் வெளிநாட்டு வீரர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார். இந்தத் தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு £80,000 வழங்கப்பட்டது. பணம் விஷயமல்ல. ஆம்லா, டூ பிளஸ்ஸிஸ் உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட சம்மதித்ததே பெரிய விஷயம். தென் ஆப்ரிக்க வீரர்கள் ரிஸ்க் எடுப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. 

‘‘இனவெறியில் இருந்து தென் ஆப்ரிக்க அணி மீண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது அனைவரும் அறிந்ததே. இந்த வீரர்கள் அனைவருக்கும் அப்போதைய சூழல் நன்கு தெரியும். அப்போது அவர்கள் சிறுவர்களாக இருந்திருப்பர். பாகிஸ்தான் மீதான கரிசனத்தால் அவர்கள் இங்கு வரவில்லை. அதையும் தாண்டி ஒரு காரணம் இருக்கிறது’’ என்றார் டிவி நிகழ்ச்சியில் பேசிய கம்ரான் முஸாபர். இருக்கலாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்

இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ஒரு மதம். அங்கு கிரிக்கெட் வெறியர்கள் ஏராளம். லாகூரில் அது அப்பட்டமாக தெரிந்தது. போட்டி இரவு 8 மணிக்கு என்றால், மதியம் 2 மணியில் இருந்தே கடாஃபி ஸ்டேடியத்தைச் சுற்றிலும் கிரிக்கெட் ரசிகர்கள். அல்ல வெறியர்கள். எங்கெங்கும் ஆம்லா, டூ பிளஸ்ஸிஸ் உள்ளிட்ட வீரர்களின் கட் அவுட்கள். மூன்றரை மணி நேர போட்டியைப் பார்க்க பல நூறு கி.மீ பயணித்து வந்தனர் ரசிகர்கள். பாதுகாப்புக்கு 20,000 வீரர்கள், லிபர்டி செளக் பகுதியில் இருந்து கடஃபி ஸ்டேடியம் வரை ஏழு கட்ட சோதனை. இதை முடிக்கவே பல மணி நேரம். இருந்தாலும் சளைக்காமல் காத்திருந்தனர் ரசிகர்கள். இதைப் பார்த்து ட்விட்டரில் ஒருவர் ‛ரசிகர்களுக்காகவேனும் பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேசப் போட்டிகள் நடக்க வேண்டும்’ என கமென்ட் செய்தார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்

‘‘பாகிஸ்தான் - ஜிம்பாப்வே மோதிய போட்டியைப் பார்த்தேன். அது வித்தியாசமான அனுபவம். டிவியில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.  ஸ்போர்ட்ஸ் மூலம் மட்டுமே சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். கிரிக்கெட் பார்க்கும்போது நாட்டுப்பற்றும் வந்துவிடுகிறது.  மாகாணங்களால் வேறுபட்டிருந்தாலும் கிரிக்கெட் என்று வந்துவிட்டால், பாகிஸ்தான் என ஒன்றுபடுகிறோம். இதற்கு முன் பாதுகாப்பு பிரச்னைகளால் கிரிக்கெட்டை நேரில் பார்க்க முடியாமல் இருந்தது. இப்போது அந்த பிரச்னை தீர்ந்தது. நாளடைவில் முழுவதும் தீரும் என நம்புகிறேன். இருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் தொடர் இங்கு நடந்தால், அது வேற லெவலில் இருக்கும்’’ என்றார். 

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் ஆசையும் அதுவே!

http://www.vikatan.com/news/sports/102468-cricket-a-religion-in-pakistan-too.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.