Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைகள்........

Featured Replies

யோவ்வ்வ்வ்........ உந்தக் கொலைக்கெல்லாம் ஒரு தலைப்பா??????????

எட்டோ, பத்துக் கோடி தமிழ்ச்சனமாம் உலகத்திலை!!!!!!! உந்த ஈழத்தமிழன் முடிந்தால், உலகத்திலை தமிழன் இல்லாமலா போகப் போறான்??????

நம்மடை ஆட்கள் எட்டோ... பத்தையோ தான் சரியாக ஞாபத்தில் வைத்திருக்கிறார்கள் போலிருக்கு!!!!!!!!!!!!! அதுதான் சிங்களவனை அழிக்க விட்டிட்டினம் போல!!!!!!!!!!!

நாசமாய் அழிந்து போறான் ஈழத்தமிழன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இதென்ன புலம்பல். ஆதங்கத்தாலேற்பட்டதா? அல்லது ஆற்றாமை எனக்கண்டு

மொட்டவிழும் முத்துக்களா?

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு சிறப்பு அதிரடிப் படையினரால் 4 இளைஞர்கள் சுட்டுப் படுகொலை.

[Monday March 19 2007 04:20:59 PM GMT] [tharan]

மட்டக்களப்பு வெல்லாவெளியில் சிறீலங்காப் சிறப்பு அதிரடிப் படையினரால் 4 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5.30 மணியளவில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் வீதியால் சென்ற 4 இளைஞர்களையும் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை

[Tuesday March 20 2007 01:20:31 PM GMT] [யாழ் வாணன்]

வவுனியா கோவிற்குளம் பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைசெய்யப்பட்ட நபரின் சடலம் நேற்று இரவு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உறவினர்களார் இனங்காணப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட நீதிவான் பிரேத பரிசோதனைகளின் பின் பிரேத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார். அதேவேளை வவுனியா கோவிற்குளம் பகுதியில் இன்று செவ்வாய் காலை இரு கிளேமோர் குண்டுகளை பாதுகாப்பு படையினர் கைபற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

  • தொடங்கியவர்

பருத்தித்துறை, கொடிகாமம் வீதியில் முள்ளிப்பாலத்தடியில் எரிந்த நிலையில் இரு இளைஞர்களின் சடலங்கள்

[Tuesday March 20 2007 06:21:00 AM GMT] [pathma]

பருத்தித்துறை கொடிகாமம் வீதியில் முள்ளிப் பாலத் துக்கு சமீபமாக கண்டல்காட்டுப் பகுதியில் எரியுண்ட நிலையில் இரு இளைஞர்களின் சடலங்கள் காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தப் பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள் இச்சடலங்களைக் கண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரயர்போட்டு எரிக்கப்பட்ட நிலையில் இச்சடலங்கள் காணப்பட்டன என்றும் மிகவும் உருக்குலைந்த நிலையில் சடலங்கள் இருந்தன என்றும் அவற்றைக் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இச்சடலங்கள் குறித்து கொடிகாமம் பொலிஸாருக்கோ, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கோ நேற்றுமாலை வரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

  • தொடங்கியவர்

வவுனியாவில் இரண்டு வர்த்தகர்கள் சுட்டுப்படுகொலை

[Thursday March 22 2007 12:52:43 PM GMT] [Naffel]

வவுனியாவில் சிறீலங்கா இராணுவத்துடன் இணைந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களுக்கு கப்பம் கொடுக்கத் தவறிய இரண்டு வர்த்தகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்தப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் ஒட்டுக் குழுக்களுக்கு கப்பம் கொடுக்கத் தவறுபவர்கள் கடத்திச் செல்லபட்டு படுகொலை செய்யப்படுதல் அதிகரித்துள்ளது.

  • தொடங்கியவர்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகிருள்ள மருந்துக்கடை ஒன்றில் பணி புரிந்த கைதடியைச் சேர்ந்த யுவதியே இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ([Thursday March 22 2007 12:51:35 PM GMT] [Naffel]

இன்று காலை 10.50 மணியளவில் கடைக்குள் சென்ற நபர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டதாகவும், சம்பவ இடத்திலேயே இந்த யுவதி கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்டவர் கைதடி தெற்கு கைதடியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிரன் உதயயோகிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

  • தொடங்கியவர்

மிருசுவிலில் சுடப்பட்டு

சிகிச்சை பெற்றவர் மரணம்

யாழ்ப்பாணம், மார்ச் 24

கடந்த 17ஆம் திகதி மிருசுவில் வடக்கில் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் வியாழக்கிழமை இரவு மரணமானார்.

மிருசுவில் வடக்கைச் சேர்ந்த சி.மெய்கண்டதேவர் (வயது 48) என்பவரே சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தவராவார்.

http://www.uthayan.com/pages/news/today/15.htm

  • தொடங்கியவர்

ஊரடங்கு வேளையில் 3 இளைஞர்கள் படுகொலை கிணற்றுக்குள்ளிருந்து குடும்பஸ்தர் சடலம் மீட்பு

[24 - March - 2007] [Font Size - A - A - A]

யாழ்.குடாநாட்டில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவு அமுலிலிருந்த வேளையில் வெவ்வேறு பகுதிகளில் மூன்று இளைஞர்கள் சுட்டும் வெட்டியும் எரித்துக்கொல்லப்பட்ட அதேநேரம் கிணறொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்நகர் பொம்மை வெளியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் வெள்ளை வான் ஒன்றில் சென்ற ஆயுதபாணிகள், வீட்டினுள் நுழைந்து இளைஞர் ஒருவரைப் பிடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர் இவர்கள், வீட்டிலிருந்து சுமார் 100மீற்றர் தூரத்தில் வைத்து இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த சிவபாத சுந்தரம் விஜிதாஸ் (வயது-27) என்பவரே கொல்லப்பட்டவராவார்.

இதேநேரம் வியாழன் இரவு கோண்டாவில் - உரும்பிராய் எல்லையில் மூன்றுகோவிலடிப்பகுதியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

பின்னர் இவரது சடலம் எரிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த அரசலிங்கம் ரொபின்சன் (18வயது) என்பவரே வெட்டிக்கொல்லப்பட்டவராவார்.

இதேநேரம், வியாழக்கிழமை நள்ளிரவு தென்மராட்சியில் கொடிகாமம் வரணிப்பகுதியில் ஆயுதபாணிகளால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நள்ளிரவு நேரம் இவரது வீட்டிற்குச் சென்றவர்கள் இவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.

குடமியன் வரணியைச் சேர்ந்த தர்மரட்ணம் உதயசங்கர் (19வயது) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

இதேவேளை, புத்தூர் நிலாவரைப்பகுதியில் கிணறொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் நேற்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டது.

நேற்று முன்தினம் இவரது சடலம் கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டபோதும் நேற்றுக்காலையே இவரது சடலம் மீட்கப்பட்டது.

சங்கானையைச் சேர்ந்த குமாரசாமி சரவணபவன் (54 வயது) என்ற குடும்பஸ்தரின் சடலமே இதுவென அடையாளம் காணப்பட்டது.

மேற்படி நான்கு சடலங்களும் நேற்று முற்பகல் யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட

உந்த மகிந்த எண்ட காட்டு மிராண்டீ நாய் எப்ப ஐனாதிபி ஆகிச்சுதோ அண்டைக்கு தொடங்கின வெறிதான் பிணந்தின்னி நாய்

புதியவன் நல்லாய் சொன்னீர் ஆனால் இவருக்கு ஜனாதிபதி என்று அழைக்காமல் அவரை பிணாதிபதி என்று அழைத்தால் நன்றாய் இருக்கும் என்று கருதுகின்றேன்

நாதன்

  • தொடங்கியவர்

நகரின் மையப் பகுதியில் நேற்று

மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம்,மார்ச் 26

யாழ்ப்பாணம் நகரத்தின் மையப் பகுதியில் நேற்று நண்பகல் மூன்று இளைஞர்கள் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இனந் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆஸ்பத்திரி வீதியில் பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரும், மின்சார நிலைய வீதியில் குளிர்பான நிலைய உரிமையாளரும், அங்கு இருந்த ஒருவருமே கொலையுண்டனர்.

மின்சார நிலைய வீதியில் உள்ள குளிர்பான நிலையம் ஒன்றில் வைத்து அந்த நிலையத்தின் உரிமையாளரான அருள்ராஜா ஜெயந்தரூபன் (வயது 26 காந்திஜி வீதி, கொக்குவில் மேற்கு, கொக்குவில்) என்பவரும்

அங்கு இருந்த யோகலிங்கம் சாரங்கன் (வயது 23 தியேட்டர் ஒழுங்கை இணுவில்) என்பவரும் நேற்று நண்பகல் 12.45 மணியளவில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுடப்பட்டனர்.

நகரில் பழ விற்பனையில் ஈடுபடும் சூசைதாசன் டனில்ராஜ் (வயது 19 அந்தோனியார் வீதி,

பெரியவிளான், இளவாலை) என்பவர் ஆஸ்பத்திரி வீதியில் வைத்து நண்பகல் 12.50 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வைரவர் கோயிலுக்கு சமீபமாக பழ வியாபாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தவேளை, ஆயுததாரிகள் அங்கு வைத்து இவரை விசா ரித்தனர் என்றும்

அவர் தப்பி ஓடிய சமயம் துரத்திச் சென்று ஆஸ்பத்திரி வீதியில் வைத்து சுட்டு விட்டுத் தப்பிச் சென்றனர் என்றும் மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

யாழ்.நீதிவான் இ.த.விக்னராஜா மரண விசாரணைகளை நடத்தினார்.

சடலங்களை பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.