Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அவதானிப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியும்

Featured Replies

சர்வதேச அவதானிப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியும்

 

நியூயோர்க்­கி­லி­ருந்து
ரொபட் அன்­டனி

தற்போது ஜனாதிபதி சர்வதேசத்திடம் நிதானமான மெதுவான பயணத்துக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார். ஆனால் 2019 ஆம் ஆண்டாகும்போது முன்னேற்றத்தை  வெ ளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரி‍மை பேரவை வலியுறுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு தீர்க்கமானதாகவே அமையப்போகின்றது

 

னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் அமெ­ரிக்கா வந்­துள்ள நிலையில் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யிலும் இலங்கை தொடர்­பாக அனல் பறக்கும் நகர்­வுகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

அமெ­ரிக்­காவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல்­வேறு தரப்­புக்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார், குறிப்­பாக அமெ­ரிக்­காவின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர், தூதுவர் தோமஸ் சென்­னனை, பாகிஸ்தான் பிர­தமர் அப்­பாஸி, நேபாள பிர­தமர் பஹாதுர் டியுபா ஆகி­யோரை ஜனா­தி­பதி சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார். இந்த பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது சர்­வ­தேச நிலை­மைகள் இரு­த­ரப்பு உறவு தொடர்­பாக கூடிய கவனம் செலுத்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது,

அதே­போன்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் அன்­டோ­னியோ கட்ரஸ் உள்­ளிட்­ட­வர்­க­ளையும் சந்­தித்து பேச்சு நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் ஜனா­தி­பதி 19 ஆம் திகதி மாலை ( அமெ­ரிக்க நேரப்­படி மாலை 5 மணி) இலங்­கையின் சார்பில் உரை­யாற்­றி­யி­ருந்தார். இதே­வேளை ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்று­வ­ரு­கின்­றது,

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் எந்­த­வொரு விவா­தமும் நிகழ்ச்சி நிரலில் உள்­ள­டக்­கப்­ப­டா­வி­டினும் முதல்நாள் அமர்வில் உரை­யாற்­றிய ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை தொடர் பில் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

அதே­போன்று 19 ஆம் திகதி மாலை நியூயோர்க்கில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரை­யாற்­றி­யி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அல் ஹுசைனுக்கு நேர­டி­யாக பதில் கூறா­வி­டினும் மறை­மு­க­மாக சில விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

அந்­த­வ­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி, பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு, சர்­வ­தே­சத்தின் அக்­கறை, தாமதம் போன்­றவை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின் கருத்து பரி­மாற்­றங்கள் அதிக விட­யங்­களை வலி­யு­றுத்­து­வ­தா­கவும் முன்­வைப்­ப­தா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றன.

முன்­ன­தாக கடந்த 11 ஆம் திகதி ஆரம்­ப­மான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரின் முதல்நாள் அமர்வில் உரை­யா­ற்­றிய செய்ட் அல் ஹுசைன் பல்­வேறு விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார், அவற்றின் சாராம்­சத்தை இங்கு பார்ப்போம்.

அதா­வது இலங்கை அர­சாங்கம் காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக நிறு­வ­வேண்டும் என்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன். அது­மட்­டு­மின்றி மக்­க­ளுக்­கி­டையில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டங்­க­ளையும் அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்­க­வேண்டும்.

விசே­ட­மாக இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்­க­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினால் பதி­வு­செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­களை உட­ன­டி­யாக தீர்க்­க­வேண்டும். இந்த வழக்­குகள் நீண்­ட­கா­ல­மாக தேங்­கிக்­கி­டக்­கின்­றன.

அது­மட்­டு­மின்றி பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும் என்றும் அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும் சட்­ட­மா­னது சர்­வ­தேச தரத்­திற்கு அமை­வாக இருக்­க­வேண்டும் என்று அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கின்றேன். மேலும் வடக்கில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். இதன்­மூலம் அர­சாங்­கத்தின் தாம­த­மான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­யினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர் என்­பது தெளி­வா­கின்­றது.

அது­மட்­டு­மின்றி ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்­டு­மென்று அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றேன். அத­னூ­டாக பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை அர­சாங்கம் உரு­வாக்கி அதன் செயற்­பா­டு­களை ஒரு கால­நேர அட்­ட­வ­ணைக்குள் செயற்­ப­டுத்­த­வேண்டும்,

இதே­வேளை இந்த செயற்­பா­டு­க­ளா­னவை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை­பே­ர­வையை தணிப்­ப­தற்­காக முன்­னெ­டுக்கும் செயற்­பா­டு­க­ளாக வெளிக்­காட்­டப்­ப­டக்­கூ­டாது. மேலும் இலங்­கை­யா­னது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாக கூறப்­படும் விட­யத்தில் நம்­ப­க­ர­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கிப் பய­ணிக்கும்.

இவ்­வாறு ஒரு­வ­கை­யான கடும் தொனியில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்­டி­ருந்தார். காரணம் கடந்த அர­சாங்­கத்தின் போது இலங்கை மீது கடும் அழுத்­தங்­களை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை பிர­யோ­கித்து வந்­தது.

எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டதும் நிலைமை மாறி­யது. தலை­கீ­ழாக மாறி­யது என்றே கூறலாம். குறிப்­பாக இலங்கை மீது அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வந்த ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை 2015 ஆம் ஆண்­டுக்கு பின்னர் புதிய அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்கும் போக்கை கடைப்பிடிக்க ஆரம்­பித்­தது.

காரணம் புதிய அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் ஐக்­கிய நாடுகள் சபைக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களே அதற்கு கார­ண­மாகும். அத்­துடன் இலங்­கை­யா­னது பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் சில அடிப்­ப­டை­யான விட­யங்களை செய்­ய­வேண்டும் என்று வலி­யு­றுத்தி 2015 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் பிரே­ரணை ஒன்றும் நிறை­வேற்­றப்­பட்­டது.

அந்த பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.அது மட்­டு­மின்றி உண்­மையை கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல் நட்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள்­நி­க­ழாமை ஆகிய நான்கு விட­யங்­களின் அடிப்­ப­டையில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தாக இலங்கை அர­சாங்கம் வாக்­கு­று­தியும் வழங்­கி­யது,

குறித்த 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையில் பொறுப்பு கூறல் பொறி­மு­றை­யா­னது சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்­புடன் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்ட நிலையில் இலங்கை அந்த கோரிக்­கையை நிரா­க­ரித்­தது. எனினும் அர­சாங்கம் நம்­ப­க­ர­மான பொறி­மு­றையை முன்­னெ­டுக்கும் என்ற நம்­பிக்­கையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விட­யத்தில் சற்று தளர்வு போக்கை கையாண்­டது.

இந்­நி­லையில் 2015 ஆம் ஆண்டு புதிய ஆட்சி மலர்ந்து இரண்­டரை வரு­டங்கள் முடிந்து விட்ட நிலையில் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை செயற்­பாட்டில் முன்­னேற்றம் இல்­லா­ததன் கார­ண­மா­கவே ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் கார­சா­ர­மான விமர்­சனம் இலங்கை தொடர்பில் வந்­தி­ருக்கும் என்று கூறப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்க ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை ‍அமர்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரை­யாற்­றி­ய­போது மறை­மு­க­மாக சில விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்தார். ஜனா­தி­பதி கூறிய சில விட­யங்களை பார்ப்போம்.

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்­கா­கவும் மனித உரி­மை­யையும் சுதந்­தி­ரத்­தையும் பலப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும்.

அத்­துடன் 30 வருட யுத்­தத்­தினால் ஏற்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு மெது­வான பய­ணத்­துடன் தீர்­வு­காண்­ப­தற்கு ஐக்­கிய நாடுகள் சபையும் சர்­வ­தேச சமூ­கமும் உத­வ­வேண்டும். விரை­வான பயணம் ஆபத்­துக்­களை ஏற்­ப­டுத்தும் என்­பதால் மெது­வான பய­ணத்­துக்கு உதவி வழங்­கு­மாறு சர்­வ­தே­சத்தை கோரு­கின்றேன் .

சில இன­வாத சக்­திகள் 30 வருட கால பிரச்­சி­னைக்கு மிக அவ­ச­ர­மான மற்றும் குறு­கி­ய­கால தீர்­வு­களை எதிர்­பார்க்­கின்­றனர். ஆனால் எனது அர­சாங்கம் ஜன­நா­ய­கத்­தையும் மனித உரி­மை­யையும் சுதந்­தி­ரத்­தையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்­றது

இதே­வேளை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை­யினால் இலங்கை மீது குற்­றச்­சாட்­டுக்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த பிரே­ர­ணை­க­ளையும் யோச­னை­க­ளையும் சாத­க­மாக பரி­சீ­லிப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் தயா­ராக இருக்­கின்­றது.

இவ்­வாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்­பா­கவும் சில விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார். அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனும் இந்த விட­யங்கள் குறித்து தமது நிலைப்­பா­டு­களை பரி­மா­றிக்­கொண்­டுள்­ளதை காண முடி­கின்­றது. இவை எந்­த­ளவு தூரம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வதில் தாக்கம் செலுத்­தப்­போ­கின்­றன என்­ப­த­னையும் இங்கு பார்க்­க­வேண்டும்.

அது­மட்­டு­மின்றி இன்று சனிக்­கி­ழமை ஜனா­தி­ப­திக்கும் ஐக்கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்­ர­ஸுக்கும் இடையில் முக்­கிய சந்­திப்பு ஐக்­கிய நாடுகள் தலை­மை­ய­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த சந்­திப்­பின்­போதும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலைமை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்றது,

இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மட்­டத்தில் பேசப்­ப­டு­கின்­றதே தவிர அந்த மக்­க­ளுக்கு இது­வரை நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் இது­வரை காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை.

தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யாமல் பாதிக்­கப்­பட்ட மக்கள் காத்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் தற்­போது பொறு­மை­யி­ழந்து வீதியில் இறங்கி போராட ஆரம்­பித்­துள்­ளனர்.

அர­சாங்கம் ஏதா­வது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க பொறி­மு­றையை முன்­னெ­டுத்து காணாமல் போனோரின் உற­வு­க­ளுக்கு உண்­மையை வெ ளிப்­ப­டுத்­த­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. ஆனால் அந்த விடயம் இது­வரை இடம்­பெ­ற­வில்லை. இத­னால்தான் பாதிக்­கப்­பட்ட மக்கள் விரக்தி நிலைக்கு சென்­றுள்­ளனர்.

ஜனா­தி­ப­தியின் பார்­வையில் அவரின் கூற்று சரி­யாக இருக்­கலாம். அதா­வது இன­வாத சக்­திகள் இந்த நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்­தைக்­கொண்டு ஆட்­சியை மாற்­றி­வி­டுமா என்ற சவால் ஏற்­பட்­டுள்­ளது. எனவே அர­சாங்­கத்தின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி இந்த நிலை­மை­களை கருத்­திற்­கொண்டு கருத்­துக்­களை வெ ளியி­ட­வேண்டும். அதற்­கான பொறுப்பு அவ­ருக்கு உள்­ளது.

ஆனால் அர­சாங்கம் உள்­ளிட்ட அனைத்து தர­ப்­பி­னரும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலை குறித்து சிந்­திக்­க­வேண்டும். குறிப்­பாக நிலை­மை­களை கு ழப்பும் இன­வாத சக்­திகள் இது குறித்து சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஜனா­தி­பதி மெது­வான பய­ணத்தை முன்­னெ­டுக்க சர்­வ­தே­சத்தின் அனு­ம­தியை கோரு­வ­தற்கு கார­ண­மான இன­வாத சக்­திகள் பாதிக்­கப்­பட்ட மக்கள் படும் வேத­னைகள் குறித்து சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

ஒரு முறை யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்கு நலன்­புரி நிலை­யங்­களில் வாழும் மக்­களின் அவல நிலையை நேரில் கண்­டி­ருந்தார்.அப்­போது அந்த மக்­களின் காணிகள் மீள்­வ­ழங்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­திய ஜனா­தி­பதி அதனை ‍எதிர்ப்­ப­வர்கள் அந்த மக்களின் அவல நிலையை நேரில் வந்து பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்றும் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்றும் தலைவர்களும் உணர்கின்றனர். ஆனால் நீதி வழங்குவதில் தயக்கமும் தாமதமும் நிலவுகின்றது.

தற்போது ஜனாதிபதி சர்வதேசத்திடம் நிதானமான மெதுவான பயணத்துக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார். ஆனால் 2019 ஆம் ஆண்டாகும்போது முன்னேற்றத்தை வெ ளிப்படுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரி‍மை பேரவை வலியுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரும் இலங்கைக்கு தீர்க்கமானதாகவே அமையப்போகின்றது. அதன்போது இலங்கை எவ்வாறு 2015 ஆம் ஆண்டு பிரேரணையை அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும்,

எனவே சர்வதேசம் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாத சக்திகளின் சவால்களை முறியடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க முன்வரவேண்டும். அதில்தான் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் அர்த்தமுள்ளதாக அமையும்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-23#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.