Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக திறந்த மன்றில் ஆஜர்

Featured Replies

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக திறந்த மன்றில் ஆஜர்

 


11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக திறந்த மன்றில் ஆஜர்
 

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக இன்று திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

கடற்படை வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், சக்கர நாற்காலியில் அமர வைத்து திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்திற்குள் அழைத்துச் செல்லும் போதும், வழக்கு விசாரணையின் பின்னரும் அவரை நிழற்படம் அல்லது காணொளி எடுக்க முடியாதவகையில், சிவில் உடையில் சென்ற கடற்படை உத்தியோகத்தர்கள் மறைத்துக்கொண்டதாக நியூஸ்பெஸ்ட்டின் நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் 25 கடற்படை உறுப்பினர்களிடம் கடந்த சில நாட்களாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதின்றத்தில் இன்று அறிவித்தனர்.

இந்த வாக்குமூலம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த தவணையின் போது மன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

 

http://newsfirst.lk/tamil/2017/09/11-தமிழ்-இளைஞர்கள்-கடத்தல்/

  • தொடங்கியவர்

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் கடற்படை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்

கடந்த 2008 -ஆம் ஆண்டு கொழும்பு நகரில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தசனாயக்க உற்பட 6 கடற்படை அதிகாரிகள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதை நிருபிக்க தேவையான ஆதாரங்கள் இருப்பதாக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்நாட்டு போரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஒரு போராட்டம் . (கோப்பு படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇலங்கை உள்நாட்டு போரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஒரு போராட்டம் . (கோப்பு படம்)

தனக்கு பிணை வழங்குமாறு கோரி சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.

சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பின் வழக்கறிஞர் கருத்து தெரிவித்த போது, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டது முதல் அவர்களை காணாமல் போகும் வரை இடம்பெற்ற நிகழ்வுகளில் இந்த சந்தேக நபர்களுக்குத் தொடர்புள்ளதாகத் தெரிவித்தார்.

  •  

இப்போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் அதன் மூலம் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாகத் தெரிவித்த அரச தரப்பு வழக்கறிஞர் மேலும் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுமென்றும் எச்சரித்தார்.

எனவே சந்தேக சபர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பாக தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் கூறினார் அரச தரப்பின் வழக்கறிஞர்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அரச தரப்பிற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்தார்.

இதன்படி பிணை மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 தேதி வரை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு அரச தரப்பின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-41402239

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.