Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற முடியாது

Featured Replies

ஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற முடியாது

 

ஆளுமையற்ற அரசியல் தலைமைகளால் சமூகத்தின் உரிமைகளைப் பெற முடியாது

எமது அரசியல்வாதிகள் பலர் எமக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கத்தினாலேயே எம் சமூகத்திற்கான பல நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். 

யாருக்கும் அச்சம், தயக்கமின்றி ஆளுமையுடன் எமக்கான நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய அரசியல் தலைமைகளை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். 

ஓட்டமாவடி அல் ஹிதாயா மகா வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழாவில் நேற்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியான கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வெளி மாகாணங்களுக்கும் தூர இடங்களுக்கு நியமிக்கப்பட்டனர். இந்நியமனங்கள் மத்திய அமைச்சினாலேயே வழங்கப்பட்டிருந்தன. 

அந்தச் சந்தர்ப்பத்தில் ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி போன்ற பகுதிகளில் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் இருந்தனர். ஆனால், மத்திய அரசில் பதவிகளை வகித்த அவர்களால் வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஒரு ஆசிரியரைக் கூட சொந்த மாகாணத்துக்கு எடுக்க முடியவில்லை. 

ஆனால், மாகாண அரசிலுள்ள நாங்கள் மத்திய அரசின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசி வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற எமது ஆசிரியர்களைச் சொந்த மாகாணத்திலேயே நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுத்தோம். 

ஆனால், 2014, 2013 ஆண்டுகளில் கூட மாகாண மற்றும் மத்திய அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு அப்போது கூட அந்த ஆசிரியர்களைச் சொந்த மாகாணங்களில் நியமிப்பதற்கான ஆளுமை இருக்கவில்லையா? என்ற கேள்வி சமூகத்தின் மத்தியிலுள்ளது. 

பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த போது, பலர் அறிக்கைகள் விட்டதுடன், பட்டதாரிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால், நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். 

இதற்கு முன்னர் சிலருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்டோருக்கான நியமனங்களை வழங்குவதற்கான போட்டிப் பரீட்சைகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி நடத்தப்படவுள்ளதுடன், அவர்களுக்கான நியமனங்கள் அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் வழங்கப்படவுள்ளன. 

மேலும் மூவாயிரத்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கான அனுமதிகள் விரைவில் கிழக்கு மாகாணத்துக்கு கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. இவையெல்லாம் தானாக கிடைத்து விடவில்லை. நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னரே சாத்தியப்பட்டுள்ளன. 

எனவே எமது மக்களின் உரிமைகளைக் கேட்டுப்பெற்றுக் கொள்ளும் அரசியல் தலைமைகளை உருவாக்க மக்கள் முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார். 

http://tamil.adaderana.lk/news.php?nid=95864

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.