Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஹிங்யா அகதிகள் மீதான அத்துமீறல் : மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படை

Featured Replies

ரோஹிங்யா அகதிகள் மீதான அத்துமீறல் : மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படை

 

 

மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களை  உட­ன­டி­யாக வெளி­யேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் செய்த  அத்து மீறல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­னின்று செயற்­பட்ட மேலும் இரு­வரை கைது செய்ய இரு தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த சொய்­ஷாவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த இரு தனிப் படை­களும் அமைக்­கப்பட்­டுள்­ளன.  கிரு­லப்­பனை, பூர்­வா­ராம விகா­ரையின் அரம்­பே­பொல ரத­்ன­சார தேரர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான மஹ­வா­துவ, வாதுவை பகு­தியைச் சேர்ந்த பிரகீத் சாணக குண­தி­லக ஆகி­யோரைக் கைது செய்­யவே இவ்­வாறு விசேட பொலிஸ் படை அமைக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

இதில் பிரகீத் சாணக்க குண­தி­ல ­க­வுக்கு எதி­ராக பாணந்­து­றையில் முஸ்லிம் பள்­ளி­வாசல் மீது  பெற் றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தி­யமை மற்றும் பாணந்­துறை வித்­தி­யா­லயம் ஒன்றின் பெண் அதி­பரை அச்­சு­றுத்­தி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ள­தா­கவும் அது தொடர்பில் கைது செய்­யப்பட்டு பிணையில் உள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் குறித்த இரு­வரும் தற்­போது தமது இருப்­பி­டங்­களை விட்டு தலை­ம­றை­வாகி­யுள்­ள­தா­கவும் அவர்கள் தொடர்பில் எவ­ரேனும் தகவல் அறிந்தால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த சொய்­ஸாவின் 0718591727 எனும் இலக்­கத்­துக்கு தகவல் தரு­மாறும் பொலிஸார்  வேண்­டுகோள் விடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/25285

 
 
 
றோகிஞ்சா அகதிகள் விவகாரம்: இருவரை கண்டால் அழைக்கவும்
 

மியான்மார் றோகிஞ்சா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், கொழும்பு குற்றப்பிரிவால் தேடப்பட்டு வருகின்றவர்களில் இருவர் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  

அதில், கிருலப்பனை பூர்வாராம விஹாரையைச் சேர்ந்த, அருவோபொல ரத்னசார தேரர் முதலாவது சந்தேகநபராவர். இரண்டாவது சந்தேகநபர், வாதுவை,மஹாவாதுவைச் சேர்ந்த பீகின் ஜானக குணதிலக்க என்பவராவார் என்றும் தலைமையகம் விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதில், இரண்டாவது சந்தேகநபர், இலங்கை பொலிஸில் கடமையாற்றிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். அவர், கடமையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், அவருக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   

அதில், ஒரு வழக்கு, முஸ்லிம் பள்ளிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு, சேதங்களை விளைவித்த சம்பவங்களுடன் தொடர்புடையதாகும். மற்றைய வழக்கு, பாணந்துறை மகளீர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை அச்சுறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாகும் என்றும் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேற்குறிப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும். தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவ்விருவர் தொடர்பிலான, தகவல் கிடைக்குமாயின், 071-8591727 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, கொழும்பு குற்றப்பிரிவு பணிப்பாளருடன் தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மியான்மார் றோகிஞ்சா 30 பேரும், காங்கேசன்துறை கடலுக்கு அண்மையில் வைத்து, கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியன்று இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.   

அவர்கள், கல்கிஸையில் உள்ள வீட்டில், தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அந்த வீட்டை கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று சுற்றிவளைத்த பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் பெரும் களேபரத்தில் ஈடுபட்டனர்.  

இந்தச் சம்பவத்தையடுத்து, பெண்ணொருவர் உட்பட அறுவர், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர். அதில், நான்கு பேர், நீதிமன்ற உத்தரவின் பேரில். எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில், கொழும்பு குற்றப்பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்கு, அக்மீமன தயாரத்ன தேரர், திங்கட்கிழமை (02) சென்றிருந்தார். அவரிடம் நீண்ட நேர விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவினர் அவரைப் பின்னர் கைதுசெய்தனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான, அக்மீமன தயாரத்ன தேரர், கல்கிஸை பிரதான நீதிமன்ற நீதவான் மொஹமட் வஹாப்தீன், முன்னிலையில் அன்றுமாலை ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

இதேவேளை, கல்கிஸை பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட மியான்மார் றோகிஞ்சா 30 பேரும், காலி பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.    

http://www.tamilmirror.lk/செய்திகள்/றோகிஞ்சா-அகதிகள்-விவகாரம்-இருவரை-கண்டால்-அழைக்கவும்/175-204939

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.