Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் யாப்பும் அரசியல் கட்சிகளும்

Featured Replies

புதிய அரசியல் யாப்பும் அரசியல் கட்சிகளும்

 

இலங்­கையின்  பாரா­ளு­மன்ற வர­லாற்றுப் போக்கில் 7  தசாப்­த­காலம்  கடந்­து­விட்­ட­போதும்  இப்­பா­ரா­ளு­மன்றை நம்பி உரு­வாக்­கப்­பட்ட  தேசி­யக்­கட்­சிகள் மற்றும் பிர­தே­சக்­கட்­சிகள்,  சிறு­பான்­மைக்­கட்­சிகள், இன­வா­தக்­கட்­சிகள் என எத்­த­னையோ கட்­சிகள் உற்­பத்­தி­யா­கி­யி­ருக்­கின்­றன.  இவற்றில் தேசியக்  கட்­சி­க­ளாக தம்மை  நிர்­ணயம் செய்து கொண்டு உரு­வா­கிய கட்­சிகள் காலப்­போக்கில் ஒரு இனம் குறித்த ஒரு சமூ­க­மென்ற  வட்­டத்­துக்குள்  சுருங்­கிக்­கொண்டு தமது முன்­னை­ய­கால தேசிய இலக்­குகள், போக்­கு­க­ளி­லி­ருந்து விலத்­திக்  கொண்­டிருப்­ப­தையே நமது அனு­ப­வ­மாகக் காண­மு­டியும். 

 

 

இலங்கை பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம் கொண்­டு­வ­ரப்­பட்டு 70 வரு­டங்கள் நிறை­வ­டை­வதை முன்­னிட்டு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (03.10.2017) இடம்­பெற்ற விசேட பாரா­ளு­மன்ற அமர்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரை­யாற்­றி­யி­ருந்தார்.

அவர் தனது உரையில் பிள­வு­ப­டாத ஒரு­மித்த நாட்­டுக்குள் அனைத்து மக்­க­ளி­னதும் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தும் அர­சியல் யாப்பின் ஊடாக மேலும் பாரா­ளு­மன்­றத்தைப் பலப்­ப­டுத்­துவோம். இவ்­வா­றான புதிய அர­சியல் அமைப்பின் ஊடாக பலப்­ப­டுத்தும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்கும் அனைத்து அர­சியல் கட்­சி­களும் ஆத­ர­வ­ளிக்க வேண்­டு­மென பகி­ரங்­க­மான கோரிக்கை ஒன்றை விடுத்­தார்.

பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம் இலங்­கையில் மலர்ந்து 70 வரு­டங்கள் இவ்­வாறு நிறை­வ­டைந்­துள்ள அதே­வேளை தமிழ் மக்­களின் அர­சியல் உரிமைப் போர் ஆரம்­பித்து சுமார் 70 வரு­டங்கள் ஓடி­விட்­ட­போதும் இன்னும் தீர்க்­கப்­ப­டாத புரை­யோ­டிப்­போன பிரச்­சி­னை­யா­கவே இது இருந்து கொண்­டி­ருக்­கி­ற­தென்­பதும் சக­ல­ராலும் அறி­யப்­பட்ட விட­ய­மாகும்.

தமிழ் மக்கள் 30 வரு­டங்கள் ஆயு­தப்போர் மூலம் போரா­டி­யி­ருந்­த­போ­திலும் சுதந்­தி­ரத்­துக்குப் ­பின்­னுள்ள காலப்­ப­கு­தி­யிலும் முள்­ளி­வாய்க்கால் முடி­வுற்ற நிலை­யி­லு­முள்ள சுமார் 40 வருட காலங்கள் ஜன­நா­யக வழிப்­போ­ராட்­டங்­களில் நம்­பிக்கை வைத்தே போரா­டி­னார்கள். போரா­டி­வ­ரு­கின்­றார்கள் என்­பது யதார்த்தம்.

சுதந்திரம் பெறப்­பட்­டது என்­பது இலங்கை அர­சி­யலைப் பொறுத்­த­வரை ஒரு தற்­செ­ய­லான விபத்து. 1947 ஆம் ஆண்டு டொமி­னியன் அந்­தஸ்தின் கீழ் இலங்­கைக்கு சுதந்­திரம் வழங்­கப்­பட்டு முத­லா­வது பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் 1947 ஆம் ஆண்டு நடாத்­தப்­பட்­டது.

மன்னிங் சீர்­தி­ருத்தம், மக்­கலம் சீர்­தி­ருத்தம், டொனமூர் அர­சியல் யாப்பு, சோல்­பரி அர­சியல் சாசனம் என்ற படி­முறை வளர்ச்­சியின் முதிர்ந்த வடி­வ­மாக இலங்கைப் பாரா­ளு­மன்றம் உரு­வா­கி­யது.

முத­லா­வது பாரா­ளு­மன்றம் (1947.08.23) இல் உரு­வா­கிய நிலையில் தமிழ், சிங்­கள மற்றும் முஸ்லிம் சமூ­கங்­களைச் சேர்ந்த அர­சியல் தலை­மைகள் சுதந்­திர இலங்­கை­யென்ற கன­வுக்கு உட்­பட்­ட­வர்­க­ளாக காணப்­பட்­டார்­களே தவிர அர­சியல் உரிமை, அடிப்­படை உரிமை, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, இன ஒற்­றுமை, இன நல்­லு­றவு என்ற விட­யங்கள் தொடர்பில் அதிக கவனம் கொண்­ட­வர்­க­ளா­கவோ பார்­வை­யு­டை­ய­வர்­க­ளா­கவோ காணப்­ப­ட­வில்லை. முத­லா­வது பாரா­ளு­மன்­றத்தில் இந்­தியப் பிர­ஜா­வு­ரிமைச் சட்டம் (10.12.1948) கொண்­டு­வ­ரப்­பட்­டதன் கார­ண­மாக ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்­துடன் இணைந்­தி­ருந்த தந்தை செல்­வ­நா­யகம் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியை 1951 ஆண்டு ஏப்ரல் மாதம் திரு­கோ­ண­ம­லையில் நடத்­தப்­பட்ட முத­லா­வது தேசிய மகா­நாட்­டுடன் ஆரம்­பித்து வைத்தார். அகில இலங்கை காங்­கிரஸ் இந்­திய தமி­ழர்­க­ளுக்கு இச் சட்ட நிறை­வேற்­றத்­துக்கு உத­வி­யதன் மூலம் துரோகம் இழைத்து விட்­டது என்ற போக்கின் அடிப்­ப­டையில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி ஸ்தாபிக்­கப்­பட்­டது.

பிர­ஜா­வு­ரிமைச் சட்டம் என்­ற­வொன்று கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்­லை­யாயின் ஒரு­வேளை இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யென்­ற­வொன்று ஸ்தாபிப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் இல்­லாமல் போயி­ருக்­கலாம். இதன் சதி­யாக தந்தை செல்வா, அ.அமிர்­த­லிங்கம், வி.என்.நவ­ரத்­தினம், கோப்பாய் கோமகன், ராஜ­வ­ரோ­தயம் போன்ற உத்­தம தலை­வர்­களை தமிழ் மக்கள் பெற்­றி­ருக்க வாய்ப்­பில்­லாமல் போயி­ருக்­கலாம்.

இலங்­கையின் பாரா­ளு­மன்றம் உரு­வாக்­கப்­பட்­டதன் பின் 15 பொதுத்­தேர்­தல்­க­ளையும், 7 ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளையும் மக்கள் சந்­தித்­தி­ருக்­கின்­றார்கள். இது தவிர இலங்­கையின் முத­லா­வது குடி­ய­ரசு யாப்பை (22.05.1972) யும் இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்பை 1978 ஆம் ஆண்­டிலும் பாரா­ளு­மன்றம் கண்­டி­ருக்­கின்­றது. இது­த­விர 1987 ஆம் ஆண்டு (29.09.1987) இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­துக்கு அமை­வாக 13 ஆவது சட்­டத்­தி­ருத்தத்தின் ஊடாக மாகா­ண­ச­பைகள் அதற்­குமுன் 1980 மாவட்டச் சபைகள் என்ற எத்­த­னையோ வகைப் பரி­கா­ரங்கள் மூலம் இலங்கை தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காணும் பல பிர­யத்­த­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போதும், அவை எவ்­வி­த­மான பல­னையும் தீர்­வையும் கொண்­டு­வ­ராத நிலை­யி­லேயே 1983 ஆம் ஆண்­டுக்­குப்பின் ஆயு­தப்போர் தீவி­ர­ம­டையும் அகப்­புற சூழ்­நி­லையும் உரு­வா­கி­யது.

இலங்­கையின் இன­வாத கெடு­பி­டி­க­ளுக்கு வித்­திட்ட கால­மாக 1956 ஆம் ஆண்டை சுட்­டிக்­கூ­று­வது அர­சியல் ஆய்­வா­ளர்­களின் பொது­வான கருத்­தாகும். இலங்­கையில் இடம்­பெற்ற அனைத்து அர­சியல் மாற்­றங்­க­ளிலும் தமிழ் மக்­களின் அடிப்­படை அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­கா­ணப்­ப­டலாம் என்ற நம்­பிக்கை ஆழ­மாக பதிந்த காலங்கள் வர­லாற்றில் இடம்­பெற்­றுள்­ளன. 1956 ஆம் ஆண்டு இலங்­கையின் பிர­த­ம­ராக ஆகிக்­கொண்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் அர­சியல் தீர்வு காணப்­ப­ட­லா­மென்ற அதீத நம்­பிக்கை கார­ண­மாக தந்தை செல்­வ­நா­யகம் அவர்கள் பண்டா – செல்வா ஒப்­பந்­தத்தை (27.07.1957) நிறை­வேற்­று­வ­தற்கு கடு­மை­யான பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டார். பண்டா – செல்வா ஒப்­பந்­தத்தின் மூலம் காத்­தி­ர­மான ஒரு தீர்வை வட­கி­ழக்கு தமி­ழர்கள் அடைந்­து­வி­ட­லா­மென்­பது அவரின் அதி­கூ­டிய நம்­பிக்­கை­யா­க­வி­ருந்­தது. அந்தக் கனவு இன­வா­தி­களின் கெடு­பி­டி­களால் நீத்­து­போ­னது. அதற்கு நேர்ந்த கதி­போன்றே டட்லி – செல்வா ஒப்­பந்­தத்­துக்கும் நடந்­தது.

ஆனால் நடந்­த­வைகள் எல்லாம் தலைகீழ்ப் பய­ணங்­க­ளா­கவே அமைந்­தன. இவற்­றுக்குப் பின்­னுள்ள இன்­றைய சூழ்­நி­லையில் புதிய அர­சியல் சாச­ன­மொன்றை உரு­வாக்­கு­வதன் மூலம் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­ப­டலாம். இதற்கு அனைத்து தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பகி­ரங்க அழைப்­பொன்றை விடுத்­தி­ருந்தார்.

அவர் இது­பற்றி மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்; "சுபீட்­சமும் சௌபாக்­கி­யமும் மல­ர­வேண்­டு­மென என்னால் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணை­களில் குறிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த எழு­பது வரு­டங்­களில் இவ்­வி­ரண்­டையும் பெறு­வ­தற்கு நாம் தவ­றி­விட்டோம். இது பெரும் கவ­லை­ய­ளிக்­கி­றது" என பிர­தமர் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­வேளை எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் அவர்கள் தமி­ழர்­க­ளுக்கு உடன் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற ஆணித்­த­ர­மான கருத்தை மிக ஆவே­சத்­துடன் பாரா­ளு­மன்றில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (03.10.2017) கோரி­யி­ருந்தார். அவர் தனது உரையில் நீண்­ட­கால ஆயு­தப்­போ­ராட்­டத்தால் மிகவும் மோச­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தமி­ழர்­களே. அவர்கள் தமது அடை­யா­ளத்­தையும் கௌர­வத்­தையும் காப்­பாற்­றிக்­கொள்ள நீண்­ட­காலப் போராட்­டங்­களை நடத்­தி­யுள்­ளனர். எனவே தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னை­க­ளுக்கு உடன் தீர்வு காணப்­ப­ட­வேண்டும். மோச­மான நிலை தொடரின் பெரும் சோகமே ஏற்­ப­டு­மென சம்­பந்தன் எச்­ச­ரித்­துள்ளார்.

தமிழ் மக்­களின் யதார்த்த நிலைப்­பா­டுகள் உரு­வாக்­கப்­படும் புதிய அர­சியல் சாச­னத்­தின்­மூலம் நிவர்த்தி செய்­யப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற போதிலும் அதற்­கான சூழ்­நி­லைக்­கான சவால்கள் அதி­க­ரித்­துக்­கொண்டு போவ­தையே அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. பாரா­ளு­மன்ற ஜன­நா­யக நிறைவு என்­பது ஏழு தசாப்த காலத்தைத் தாண்­டி­விட்­ட­போதும் அதற்­கு­ரிய நிறை­வான பரி­கா­ரங்­களின் முன்­னெ­டுப்­புகள் இன்னும் ஒரு புள்­ளி­யால்­கூட நக­ர­வில்­லை­யென்ற அவ நம்­பிக்­கை­யு­ட­னேயே தமிழ் மக்கள் இன்னும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதே உண்­மை­யா­க­வுள்­ளது.

இன்னும் அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கூ­றப்­போனால் அர­சியல் தீர்­வொன்­றுக்­குப்பின் தம்மை செம்­மைப்­ப­டுத்த வேண்­டி­ய­தேவை இருக்­கின்­றது என்ற அதி உச்ச கன­வி­லேயே தமிழ் மக்கள் இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

சுய­நிர்­ண­யத்­துடன் கூடிய பரி­பூ­ரண அதி­காரப் பகிர்வு கிடைக்­கப்­பெ­று­மாயின், சுயாட்சி சுதந்­தி­ரத்தின் மூலம் நாட்டில் குறிப்­பாக வட­கி­ழக்கில் நிலவும் யதார்த்­தப்­பி­ரச்­சி­னை­க­ளான காணிப்­பி­ரச்­சினை, பொரு­ளா­தார, சமூக அபி­வி­ருத்­தி­யின்மை, வேலை­யில்­லாப்­பி­ரச்­சினை, வாழ்­வா­தா­ரப்­பி­ரச்­சி­னை­யென்ற ஏகப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்­கு­ தாமே தீர்வு கண்­டு­வி­ட­லா­மென்ற அதீத நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளா­கவே தமிழ் மக்கள் காணப்­ப­டு­கின்­றார்கள் என்­ப­தே­யுண்மை.

இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தின் ஆட்சி ஓட்­டங்கள் 70 வரு­டங்­களை தாண்டி விட்­ட­போதும் இந்த நாட்டில் சக­லரும் அனு­ப­விக்க வேண்­டிய சுதந்­திரம், ஜன­நா­யகம், ஆதி பத்­தியம், அர­சியல் உரிமை என்­ப­வற்றை ஒரே­யொரு இனமே அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது என்ற உண்­மையை யாராலும் மறு­த­லிக்க முடி­யாது.

நல்­லாட்சி மலர்ந்­த­தாக கூறப்­ப­டு­கின்ற வேளை­யிலும் இன ஒடுக்­கல்­க­ளுக்­கான கெடு­பி­டிகள் தீவி­ர­ம­டைந்தே காணப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மா­கவோ என்­னவோ இலங்­கையில் வாழும் சிறு­பான்மை சமூகம், தேசியக் கொடி மற்றும் தேசி­ய ­கீதம் ஆகி­ய­வற்­றுக்கு அளிக்கும் மரி­யா­தை­யென்­பது இன்னும் உயர்ந்த நிலை­பெ­ற­வில்­லை­யென்ற உண்­மையை இலங்­கை­ அ­ரசு புரி­யா­ம­லில்லை. இந்த நிலை மாற­வேண்­டு­மாயின் அடிப்­ப­டைப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு நித்­தி­ய­மான தீர்வு காணப்­ப­ட­வேண்டும்.

இலங்­கையின் பாரா­ளு­மன்ற வர­லாற்றுப் போக்கில் 7 தசாப்­த­காலம் கடந்­து­விட்­ட­போதும் இப்­பா­ரா­ளு­மன்றை நம்பி உரு­வாக்­கப்­பட்ட தேசி­யக்­கட்­சிகள் மற்றும் பிர­தே­சக்­கட்­சிகள், சிறு­பான்­மைக்­கட்­சிகள், இன­வா­தக்­கட்­சிகள் என எத்­த­னையோ கட்­சிகள் உற்­பத்­தி­யா­கி­யி­ருக்­கின்­றன.

இவற்றில் தேசியக் கட்­சி­க­ளாக தம்மை நிர்­ணயம் செய்து கொண்டு உரு­வா­கிய கட்­சிகள் காலப்­போக்கில் ஒரு இனம் குறித்த ஒரு சமூ­க­மென்ற வட்­டத்­துக்குள் சுருங்­கிக்­கொண்டு தமது முன்­னை­ய­கால தேசிய இலக்­குகள், போக்­கு­க­ளி­லி­ருந்து விலத்­திக்­கொண்­டிருப்­ப­தையே நமது அனு­ப­வ­மாகக் காண­மு­டியும்.

இது­போன்ற பிர­தேச கட்­சிகள் தமது பிர­தேசம், சமூகம் என்ற இலக்­குடன் உரு­வா­கி­ய­போதும் சில­வே­ளை­களில் தேசியக் கட்­சி­க­ளுடன் இணைந்தும் சில சந்­தர்ப்­பங்­களில் தமது சமூக செல்­வாக்கை நிலை­நி­றுத்­திக்­காட்­டவும் இயங்­கி­வந்­துள்­ளன. இதற்கு இலங்­கையில் பல கட்­சி­களை உதா­ர­ணங்­க­ளாகக் காட்­ட­மு­டியும்.

அண்­மைக்­கால போக்­கு­களில் இவ்­வ­கையில் அவ­தா­னிக்­கக்­கூ­டிய முக்­கி­ய­மான ஒரு விடயம் தேசியக் கட்­சிகள், பிர­தேசக் கட்­சிகள் என்­ப­வற்றின் பெருக்கம் செல்­வாக்கு என்­ப­தை­விட கடந்த 70 வரு­ட­கா­லத்தில் இலங்­கையில் உரு­வா­கிய இன­வாதக் கட்­சிகள் மற்றும் தலை­வர்­களின் பெருக்­கமோ அதி­க­மா­க­வுள்­ளது என்­பதை எமது நடை­முறை அனுபவங்களினூடாகக் கண்டுகொள்கின்றோம்.

கடந்த இரண்டு தசாப்தகால அனுபவத்தைத் தேடிப் பார்ப்போமாயின், இனவாதக் கட்சிகளின் உற்பத்தி அதிகமாக இருப்பதையும் அதற்கு தலைமைதாங்கும் பெருமையை மத பீடங்களைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்து இருப்பதையும் காணலாம்.

தேசியக் கட்சிகளின் சுத்தப்போக்கின்மையும் தேசிய நலக்குறைவுமே இலங்கையில் பெரும்பான்மை இனவாதக் கட்சிகளையும் பிரதேச கட்சிகளையும் உருவாக்க மூலகாரணங்களாக இருந்துள்ளன என்பது வெளிப்படையான உண்மை. இன்னும் குறிப்பிட்டுக்கூறப்போனால் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட கட்சியான சுதந்திரக்கட்சி தேசிய தகைமைகளுடன் உருவாக்கப்பட்டபோதும் அது இனவாதத்துக்குள் சுருங்கிக்கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நாம் சந்தித்திருக்கின்றோம்.

இது போன்றே ஐ.தே.கட்சி, ஜே.வி.பி, லங்கா சமசமாஜக்கட்சி போன்றவற்றின் போக்குகள் இருந்து வந்துள்ளன. இருந்து வருகிறது.

இவையெல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுமருந்து தேவையாயின், அனைத்து சமூகங்களின் தேசிய தகைமைகளை உயர்த்திச் சொல்லும் ஒரு பூரணமான அரசியல் சாசனம் கொண்டுவரப்படவேண்டும். ஏழு தசாப்தம் ஓடி விட்டபின்பும் இலங்கைப் பாராளுமன்றம் பெருமைப்படுமளவுக்கு எதையாவது செய்யத் தவறுமாயின் அது ஒரு இனத்துக்கு சொந்தமான பாராளுமன்றமாகவே நூற்றாண்டு சென்றாலும் இருந்துகொண்டிருக்கப்போகிறது.

திரு­மலை நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-07#page-2

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

 

 

இலங்கை பாரா­ளு­மன்ற ஜன­நா­யகம் கொண்­டு­வ­ரப்­பட்டு 70 வரு­டங்கள் நிறை­வ­டை­வதை முன்­னிட்டு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (03.10.2017) இடம்­பெற்ற விசேட பாரா­ளு­மன்ற அமர்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரை­யாற்­றி­யி­ருந்தார்.

அவர் தனது உரையில் பிள­வு­ப­டாத ஒரு­மித்த நாட்­டுக்குள் அனைத்து மக்­க­ளி­னதும் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தும் அர­சியல் யாப்பின் ஊடாக மேலும் பாரா­ளு­மன்­றத்தைப் பலப்­ப­டுத்­துவோம்.

திரு­மலை நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-07#page-2

ஒன்றுபட்ட இலங்கையை அடைய சிங்கள ஆளும் தரப்பு நிறை அர்பணிப்புகளை (உயிரர்பணிப்பல்ல) செய்ய வேண்டியிருக்கும். அதற்குத் தயாரா?  எடுத்துக்காட்டிற்கு "ஐக்கிய இலங்கைச் சமஷ்டி மக்கள் குடியரசு" என்று மாற்றவேண்டிவரும் . பிடிக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.