Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மொழியால் மக்களை வேறுபடுத்தியோர் யார்?

Featured Replies

மொழியால் மக்களை வேறுபடுத்தியோர் யார்?

 
 

போராட்டங்கள், கறுப்புக்கொடி காட்டல்கள் என்ற பதற்றத்துக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி யாழ்ப்பா ணத்திற்கு நேற்று வந்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. இந்தப் பதற்றமான, அரசியல் சூடான கள நிலவரத்தில் இந்தப் பயணத்தைக் கூடுமான வரையில் தவிர்ப்பதே நல்லது என்று அவரது பாதுகாவலர்கள் அவருக்கு அறிவுறுத்தியிருப் பார்கள் என்பது நிச்சயம். திட்டமிட்டபடி தேசிய தமிழ் மொழித் தின விழா யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறாமல் உள்ளரங்கத்திற்கு இறுதிநேரத்தில் மாற்றப்பட்டதில் இருந்தே அதனை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும்.

அந்தத் தடைகளை எல்லாம் மீறி தமிழ் மக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலாக மாட்டார்கள் என்று அவர் நம்பி வந்ததற்காக அவரைப் பாராட்டியே ஆகவேண்டும்.
என்னதான் வாக்குறுதிகளை அவர் தமிழ் மக்களுக்கு வழங்கி அவற்றை நிறைவேற்றாமல் விட்டாலும், தமிழ் மக்கள் மீது அவர் கொண்ட அந்த நம்பிக்கை இதுவரை இருந்த பௌத்த சிங்களத் தலைவர்களில் இருந்து அவரை வேறுபடுத்துகின்றது.

அந்த உரிமையுடன்தான் தமிழ் மக்கள் அவரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அவற்றை அவர் நிறைவேற்றாதபோது கோபமும் விசனமும் கொள்கிறார்கள் என்பதையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும்.
எப்படியிருந்தா லும் அவர் வைத்த நம்பிக்கையைத் தமிழர்களும் காப்பாற்றியே இருக்கிறார்கள்.

இத்தனை பதற்றம், ஆர்ப்பாட்டம், சூடான அரசியல் களச் சூழலிலும் அவர் மீது தூசு துரும்பு விழாத வகையில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி மைத்திரி வைத்த நம்பிக்கையை தமிழர்களும் காப்­பாற்றி இருக்­கி­றார்­கள்.

இத்­த­கைய கண்­ணி­ய­மான அர­சி­யல் போக்கு இலங்­கை­யில் கடந்த பல தசாப்­தங்­க­ளா­கக் காணக்­கி­டைக்­கா­தது. தனக்­குக் கறுப்­புக் கொடி காட்­டிப் போராட்­டம் நடத்­தி­ய­வர்­களை நோக்­கிச் சென்று அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார் மைத்­திரி. “பேசித் தீர்க்­க­லாம் வாருங்­கள்“ என்ற அவ­ரு­டைய அழைப்பை நிரா­க­ரித்­த­போ­தும், பெருங் குரல் எடுத்து எதிர்ப்பு முழக்­க­மிட்­ட­போ­தும், அசம்­பா­வி­தங்­களோ வன்­மு­றை­களோ அங்கு இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

இதுவே இரு தரப்­பி­ன­ருக்­கும் இடை­யி­லான சிறந்த மாற்­றம்­தான். ஜன­நா­யக வழி­யி­லான போராட்­டத்­திற்கு மதிப்­ப­ளித்து அரச தலை­வர் ஒரு­வர் இறங்கி போராட்­டக்­கா­ரர்­க­ளு­டன் பேசி­ய­தும், அவ­ரது கோரிக்கை தமக்கு ஏற்­பு­டை­யது இல்லை என்­ற­ போ­தும் அதற்­கான தமது எதிர்ப்பை நிதா­ன­மா­கத் தமி­ழர்­கள் வெளிப்­ப­டுத்­தி­ய­தும் நம்­பிக்­கைக்­கு­ரிய முன்­னேற்­றம் என்றே சொல்­ல­லாம்.

இந்­தக் கண்­ணி­யத்­து­டன் இரு தரப்­பி­ன­ரும் தொடர்ந்து நடந்­தால், பேசி­னால், விட­யங்­களை ஆராய்ந்­தால் பிரச்­சி­னைக்கு இல­கு­வா­கத் தீர்­வைக் கண்­டு­கொள்­வ­தும் சாத்­தி­ய­மா­கக்­கூ­டும்.

இந்த நம்­பிக்கை இரு தரப்­பி­ன­ருக்­கும் இடை­யில் வளர்த்­தெ­டுத்­துச் செல்­லப்­ப­டு­வதே இனப் பிரச்­சி­னை­யின் தீர்­வுக்­குச் சாத­க­மா­ன­தா­க­வும் இருக்­கும்.
அதே­வேளை, தேசிய தமிழ் மொழித் தின விழா­வில் பேசிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு விட­யத்தை ஆழ­மா­கக் குறிப்­பிட்­டார்.

மொழி­யால் மக்­களை வேறு­ப­டுத்­து­ப­வர்­கள் மனி­தா­பி­மா­னம் அற்­ற­வர்­கள் என்­றார் அவர். யாழ்ப்­பா­ணத்­தில் நின்­று­கொண்டு அவர் இத­னைத் தெரி­வித்­தார். உண்­மை­யில் அவர் இந்­தக் கருத்தை தெற்­கில் பௌத்த சிங்­க­ள­வர்­க­ளுக்கு சொல்­லி­யி­ருக்­க­வேண்­டும்.

இலங்கை என்­கிற நாாட்­டில் மொழி­யால் மக்­களை வேறு­ப­டுத்­தி­ய­வர்­கள் சிறு­பான்மை மக்­கள் அல்­லர். இன்­றும் மொழி­யா­லும் மதத்­தா­லும் மக்­களை வேறு­ப­டுத்­து­ப­வர்­கள் சிறு­பான்­மை­ யி­னர் அல்­லர்.

தனிச் சிங்­க­ளச் சட்­டத்தை 1956ஆம் ஆண்டு கொண்டு வந்­தது முதல் மொழி­யால் மக்­களை வேறு­ப­டுத்­தி­ய­வர்­கள் பௌத்த சிங்­க­ளத் தலை­வர்­க­ளே­யன்றி வேறு­யா­ரு­மல்­லர்.

அந்­தத் தவ­றுக்கு பரி­கா­ரம் தேடி­யி­ருக்­க­வேண்­டிய இன்­றைய தலை­வர்­கள் அதைச் செய்ய மறுத்து இன்­றும் பிரச்­சி­னை­ யைத் தொடர அனு­ம­திப்­ப­தன் மூலம் அதே தவ­றையே இழைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­றால், மொழி­யால் மதத்­தால் மக்­களை வேறு­ப­டுத்­திக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் யார் என்­ப­தைச் சொல்­லித்­தான் தெரி­ய­வேண்­டும் என்­ப­தில்லை.

எனவே இந்­தத் தடவை தமிழ் மக்­கள் மீது நம்­பிக்கை வைத்து யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்து போற்­றத்­தக்க ஜன­நா­யக வழி­மு­றை­யின் ஊடாக தமி­ழர்­க­ளின் எதிர்ப்­புப் போராட்­டங்­க­ளை­யும் கையாண்ட அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தான் சுட்­டிக்­காட்­டி­ய­படி மொழி­யால் மக்­க­ளைப் பிரிக்­காத ஒரு தேசத்தை விரை­வில் கட்­டி­யெ­ழுப்ப உறு­தி­பூ­ண­வேண்­டும். அதற்­கா­கத் தன்னை அர்ப்­ப­ணிக்­க­வும்­வேண்­டும். அதா­வது அவ­ரா­வது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவேண்டும்.

http://newuthayan.com/story/37207.html

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இலங்கையை ஆட்சி செய்பவர்கள் புத்த தேரர்களே! இவர்களை மத ஆராதனை செய்து மக்களுக்கு இறைபக்தியை ஊட்டுவதற்கு மட்டும் அனுமதித்துக் கட்டுப்படுத்தாதுவிட்டால்....! இலங்கையில் இனப்பிரச்சனையானது இலங்கைத்தீவு அழியுமட்டும் தொடரும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.