Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை

Featured Replies

பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை

 

பாகிஸ்தான் சென்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 
பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை
 
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 26-ந்தேதி (வியாழக்கிழமை) அபுதாபியில் தொடங்குகிறது. 2-வது போட்டி 27-ந்தேதி அதே மைதானத்தில் நடக்கிறது. 3-வது போட்டி லாகூரில் நடக்க இருக்கிறது.

இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் 2009-ம் ஆண்டில் இருந்து எந்த அணியில் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவில்லை. மீண்டும் சர்வதேச போட்டியை புதுப்பிக்கும் வகையில் இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. இதற்கு இலங்கை அணி நிர்வாகமும் சம்மதம் தெரிவித்தது.

201710201719320867_1_lankaTeam-s._L_styvpf.jpg

ஆனால் இலங்கை அணியின் பெரும்பாலான வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கிறார்கள். கேப்டன் உபுல் தரங்கா மற்றும் மலிங்கா ஆகியோர் பாகிஸ்தான் செல்ல இயலாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ‘‘லாகூர் போட்டிக்கும் சேர்ந்துதான் இலங்கை வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். நாங்கள் தேர்வு செய்யும் வீரர்கள் லாகூர் போட்டியில் விளையாடவும் தயாராக வேண்டும்’’ என அந்நாட்டு தலைமை தேர்வாளர் கிரேம் லேப்ரூய் தெரிவித்துள்ளார்.

201710201719320867_2_PakistanTeam-s._L_styvpf.jpg

இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வீரர்களிடமும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இறுதியில் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதிக்கும் அணியை அறிவிக்க உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/20171918/1123944/Sri-Lanka-players-refusing-Lahore-travel-to-miss-entire.vpf

  • தொடங்கியவர்

இ20 அணிக்கு திசர பெரேரா தலைமை

பாகிஸ்தானுக்கு எதிரான இ20 போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தத் தகவலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

13_Thisara.jpg

பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் இ20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவென ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சென்றிருக்கும் இலங்கை அணி டெஸ்ட் தொடரை வெற்றிகொண்டபோதும், ஒருநாள் தொடரைப் பறிகொடுத்தது.

இரண்டு போட்டிகள் அடங்கிய இ20 போட்டித் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணிக்குத் தலைவராக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/26110

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.