Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா மரணம்: வரும் 25-ம் தேதி தொடங்குகிறது விசாரணை!

Featured Replies

ஜெயலலிதா மரணம்: வரும் 25-ம் தேதி தொடங்குகிறது விசாரணை!

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், வரும் 25-ம் தேதி விசாரணையைத் தொடங்க உள்ளது.

ஜெயலலிதா

 

ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் , கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள்  சிகிச்சைபெற்றுவந்த அவர்,  டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், 'ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்திருந்தார். ஆனால், இந்த விசாரணை கமிஷன், அறிவிப்பு நிலையிலேயே இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவந்தன.

 

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், இந்த விசாரணை கமிஷனின் விசாரணை, இன்னும் மூன்று மாத காலத்துக்குள் முடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், வரும் 25-ம் தேதியிலிருந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்குறித்த விசாரணை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/105473-investigation-over-jayalalithas-murder-will-begin-on-october-25.html

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

'ஜெயலலிதா மரணத்தில் 19 சந்தேகங்கள்!' - திகில் கிளப்பும் தீபா கணவர் மாதவன் 

 

மனு கொடுத்த மாதவன்

Chennai: 

ஜெயலலிதா மரணத்தில் 19 சந்தேகங்கள் இருப்பதாக, தீபாவின் கணவர் மாதவன், விசாரணை கமிஷனிடம் தெரிவித்துள்ளார். 

 


ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.  'ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், விசாரணை கமிஷனிடம் அஃபிடவிட்களைத் தாக்கல் செய்யலாம்' என்று நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்தார். அதன்படி அஃபிடவிட்கள் தாக்கல்செய்யப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், இன்று ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். பிறகு அவர், விசாரணை கமிஷனிடம் அஃபிடவிட்களைத் தாக்கல்செய்துள்ளார். அதில், ஜெயலலிதா மரணத்தில் 19 சந்தேங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 
 இதுகுறித்து நம்மிடம் பேசிய மாதவன், "கடந்த 22.09.2016ல் ஜெயலலிதா வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் வேலை செய்ததா என்று விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணம்  தொடர்பாக, மருத்துவர்கள், செவிலியர்கள், வீட்டு வேலைக்காரர்கள், டிரைவர்கள், சமையல்காரர்கள், இஸட் பிளஸ் பாதுகாப்புப் படையினர்கள், மாநில காவல்துறை தலைவர் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோரை விசாரிக்க வேண்டும். எந்த நேரமும் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர்கள், போயஸ் கார்டனுக்கு வந்துசெல்லும் ஜெயலலிதாவின் நலம்விரும்பிகள், அதிகாரிகள், சசிகலாவின் உறவினர்கள் ஆகியோரை விசாரிக்க வேண்டும்.

மனு கொடுத்த மாதவன்

 
 24 மணி நேரமும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் இருக்கும்போது, ஜெயலலிதா மயங்கிவிட்டார் என்று அப்போலோவில் உள்ள ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்து, மருத்துவமனைக்கு தாமதமாக ஜெயலலிதாவை அழைத்துச்சென்றதுகுறித்து விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ரத்த சொந்தங்கள், உறவினர்கள், அவரது உண்மையான நலம் விரும்பிகள் ஆகியோரைச் சந்திக்க விடாமல்செய்து, தங்களது ஆதிக்கத்தை வளர்த்துக்கொண்ட சசிகலா, இளவரசி மற்றும் அவர்களது மொத்த குடும்பத்தினர்களும் ஏன் ஜெயலலிதாவின் உடல் நலம்குறித்து அக்கறை செலுத்தவில்லை. அவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக, வேண்டுமென்றே ஜெயலலிதா உடல்நலத்தில் சதிவலை பின்னினார்களா என்று விசாரிக்க வேண்டும். சசிகலாவின் கணவர் நடராசனின் உடல்நலத்தில் செலுத்திய அக்கறை, ஏன் ஜெயலலிதா உடல் நலத்தில் செலுத்தவில்லை என்பதுகுறித்து விசாரிக்க வேண்டும். அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, மன்னிப்புக் கடிதம் கொடுத்து போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்தார். அந்தக் கடிதத்தில், 'தன்னை மீண்டும் வீட்டில் பணிப்பெண்ணாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எந்தக் காலத்திலும் எனக்கோ, என் குடும்ப சம்பந்தப்பட்டவர்களுக்கோ கட்சியில் பதவிகள் வேண்டாம் என்றும், என் குடும்பத்தினரிடம் எந்தக் காலத்திலும் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன்' என்றும் உறுதியளித்திருந்தார். ஆனால், ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கு முன்பு சசிகலா உறவினர்கள் எப்படி போயஸ் கார்டன் வந்தார்கள். அதன்பிறகு, தொடர்ச்சியாக அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் இருந்தார்கள் என்பதுகுறித்து விசாரிக்க வேண்டும். 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை எந்த கட்சித் தலைவர்களையும் நலம் விரும்பிகளையும் ஏன் அமைச்சர்களையும்கூட சந்திக்க விடவில்லை. இதை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தடுத்ததா அல்லது சசிகலா குடும்பத்தினர் தடுத்தார்களா என விசாரிக்க வேண்டும்.

மனு கொடுத்த மாதவன்


ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது யாரெல்லாம் சந்திக்க வந்தார்களோ, குறிப்பாக இன்றைய துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு மற்றும் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அப்போதைய தமிழக கவர்னர், ஜெயலலிதாவைச் சந்திக்க வந்த கட்சித் தலைவர்கள், தற்போதைய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டும். குறிப்பாக ஜெயலலிதாவைச் சந்திக்கவிடாமல் தடுத்தவர்கள்குறித்து விசாரிக்க வேண்டும். 
 ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், இட்லி சாப்பிட்டார், டீ குடித்தார், உப்புமா சாப்பிட்டார், டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்ன டாக்டர்களிடம் விசாரிக்க வேண்டும். 'ஜெயலலிதா உடல் நலம் தேறிவிட்டார். அவர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் இல்லம் திரும்பலாம்' என்று அறிக்கை வெளியிட்ட அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியையும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவையும் எம்ய்ஸ் மருத்துவர்களையும் விசாரிக்க வேண்டும். அப்போது, மருத்துவப் புலனாய்வில் சிறந்துவிளங்கும் மருத்துவர்களைக்கொண்டு விசாரிக்க வேண்டும். 
 மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த சமயத்தில் நடந்த இடைத்தேர்தலின்போது, ஏன் ஜெயலலிதா கையெழுத்திடவில்லை என்பதை விசாரிக்க வேண்டும். 
 அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவைப் பார்க்க,  நானும் என் மனைவி தீபாவும் எத்தனையோ முறை முயன்ற போதும் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எங்களை உள்ளே விடாமல் தடுத்த நபர்கள் யார்? அந்த சக்தி எது என்பதையும் விசாரிக்க வேண்டும். 

 
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி.கேமராக்கள் குறித்து விசாரிக்க வேண்டும். டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா இறந்திருந்தால், எதற்காக எம்பார்மிங் செய்ய வேண்டும் என்பதுகுறித்து விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா உடலை வைத்த சவப்பெட்டியைச் செய்தது யார்? ஒரே இரவுக்குள் சிறப்பு சவப்பெட்டியைத் தயார்செய்ய முடியுமா என்று விசாரிக்க வேண்டும். சசிகலாவின் சகோதரர் திவாகரன், அவருடைய மகன் ஜெயானந்த் ஆகியோர், ஜெயலலிதாவின் வீடியோ இருப்பதாகக் கூறியுள்ளனர். அதை ஏன் வெளியிடவில்லை. அதை கமிஷனர் அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும். 
சிகிச்சையின்போது ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டனவா என்று விசாரிக்க வேண்டும் என 19 சந்தேகங்களைக் கூறியுள்ளேன் என்றவர், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்பு, வீட்டில் தாக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருப்பதால், அவரிடமும் சிறப்பாக சிகிச்சை அளித்திருந்தால் ஜெயலலிதா இன்னும் உயிரோடு இருந்திருப்பார் என்று கூறிய திருநாவுக்கரசரிடமும் விசாரணை கமிஷன் விசாரிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.  
 

https://www.vikatan.com/news/tamilnadu/108377-jayalalithaa-death-mystery-madhavan-lists-out-19-questions.html

  • தொடங்கியவர்

ஆரம்பிக்கிறார் ஆறுமுகசாமி...வெளிச்சத்திற்கு வருமா ஜெயலலிதா மரணத்தின் கதை?

 

ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் விசாரணை கமிஷனின் விசாரணை நவம்பர் 22-ம் தேதி துவங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

 

முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 செப்டபம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீரென சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாள்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டது முதல் மரணம் அடைந்த தேதிவரை, அனைத்தும் மர்மமாகவே இருந்தது. ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதா மருத்துமனையில் இருந்த நாள்களில் அவரின் எந்தவொரு புகைப்பட ஆதாரங்களையும் மருத்துவமனை தரப்போ, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களோ வெளியிடவில்லை.

சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை மருத்துவனைக்கு பார்க்கச் சென்ற அப்போதைய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.வி.ஐ.பி-க்கள் யாரையும் அவரைப் பார்க்க அனுமதிக்காதது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துவந்தாலும், அவரின் உடல்நிலை குறித்த சந்தேகம், அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ந்து நீடித்து வந்தது. 'நன்றாக குணமடைந்து விட்டார்' என்று மருத்துவமனையில் இருந்து அறிக்கை வந்த சில தினங்களிலேயே ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியால் அ.தி.மு.க.தொண்டர்கள் உட்பட பொதுமக்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. ஜெயலலிதாவின் மரணம் குறித்து ''நீதி விசாரணை வேண்டும்'' என ஓ.பன்னீர்செல்வமும் குரல் கொடுத்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் இணைவதற்கு ஏதுவாக, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

ஜெயலலிதா மரணம்

அந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாத காலத்திற்குப் பிறகு ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். விசாரணை ஆணையத்திற்கான அலுவலகம், சேப்பாக்கம் எழிழகம் வளாகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தின் செயலாளராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, செய்திதாள்கள் மூலம் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, நவம்பர் 22-ம் தேதி இந்த விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடங்க உள்ளது. விசாரணை ஆணையத்திற்கான அலுவலகம் முழுவதும் தயாராகி விட்டது. நீதிமன்றப் பாணியில் விசாரணைக்கூண்டு, நீதிபதி நாற்காலி, கணிப்பொறி உள்ளிட்ட அனைத்தும் இந்த அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஜெயலலிதா மரணத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்தவர்கள் என பலரும் விசாரணை கமிஷன் முன் வாக்குமூலம் அளிக்க, சம்மன் அனுப்பி அழைக்கப்படலாம் என்று தெரிகிறது. 

ஜெயலலிதா மரணம் குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தி.மு.க. பிரமுகர் டாக்டர். சரவணனுக்கு விசாரணை கமிஷன் மூலம் முதலாவதாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ள விசாரணையில் முதல் ஆளாக சரவணன் விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது. மேலும் இந்த விசாரணை ஆணையத்தில் "ஜெயலலிதா மரணம் குறித்து  தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித் தொடர்பு உடையவர்களும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களை சத்தியப் பிரமாண உறுதிமொழிப் பத்திரவடிவத்தில் (1 பிளஸ் 2 நகல்களுடன்) தகுந்த ஆவணங்கள் இருப்பின், 'மாண்புமிகு நீதியரசர் திரு அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், முதல்தளம், கலச மகால் புராதன கட்டடம், எழிலகம் அருகில், சேப்பாக்கம், சென்னை-600005. (Email ID: justicearumughaswamycoi@gmail.com) என்ற முகவரியில் அமைந்துள்ள ஆணையத்திடம் 2017-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அளிக்கலாம்'' என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, எழுபது நபர்கள் விசாரணை ஆணையத்தின் மெயிலுக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்கள். ஏழுபேர் நேரடியாகவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்கள். இவர்களிடமும் அடுத்தடுத்த கட்டங்களில் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. 

 

'ஜெயலலிதா மரணம் அடைந்து ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இப்போது அவர் மரணம் குறித்து தொடங்கவுள்ள விசாரணை கமிஷன், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, உண்மையை வெளிக் கொண்டுவருமா?' என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு,க தொண்டர்களிடம் மட்டுமல்லாது, தமிழக மக்களிடையேயும் எழுந்துள்ளது....!. 

https://www.vikatan.com/news/tamilnadu/108420-arumugasamy-commission-starts-queriying-the-death-of-jayalalithaa.html

  • தொடங்கியவர்

gallerye_012653334_1902871.jpg

  • gallerye_234551221_1902871.jpg

 

தேர்தல் கமிஷன் ஆவணத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள, ஜெ., கைரேகையில் உயிரோட்டம் இல்லை என்றும், அவர் இறந்த பின் பிரட்டப் பட்ட கைரேகை என்றும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணையில், தி.மு.க., தரப்பில் ஆஜரான, டாக்டர் சரவணன் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார். அது தொடர்பான கூடுதல் ஆவணங்களையும், இன்று அவர் தாக்கல் செய்கிறார். இதையடுத்து, ஜெ., கைரேகையை பதிவு செய்தவர் உள்ளிட்ட, இரண்டு அரசு டாக்டர்களுக்கு, நீதிபதி ஆறுமுகசாமி, 'சம்மன்' அனுப்பியுள்ளார்.

 

தேர்தலுக்காக,ஜெ.,யிடம் பெற்ற, கைரேகையில்..., உயிரோட்டமில்லை!

முதல்வராக இருந்த, ஜெ., திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்; டிச., 5ல் இறந்தார். அவரது இறப்பில் எழுந்த சந்தேகங்கள் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை கமிஷன், நேற்று விசாரணையை துவக்கியது. முதல் நாள் விசாரணைக்கு, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, டாக்டர் சரவணன் அழைக்கப்பட்டிருந்தார். காலை, 9:50 மணிக்கு, சரவணன், தன் வழக்கறிஞர்களுடன், விசாரணை கமிஷன் அலுவலகம் அமைந்து உள்ள, சென்னை, சேப்பாக்கம், கல்ச 
மஹாலுக்கு வந்தார். நீதிபதி ஆறுமுகசாமி, காலை, 10:10 மணிக்கு வந்தார்.அதை தொடர்ந்து, பூட்டப்பட்ட அறையில், சரவணனிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். 

ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணையின் போது, 'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு முன், ஜெ., இறந்து இருக்கலாம்; அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையிலும், முரண்பாடுகள் உள்ளன' என, தெரிவித்துள்ளார்.

நிறைய முரண்பாடுகள்: விசாரணைக்கு பின், சரவணன் கூறியதாவது:ஜெ., சிகிச்சையில் 

இருந்தபோது, பத்திரிகை செய்திகள், வரிசை யாக வந்தன. அதில் இருந்த தகவலுக்கும், ஜெ., மறைந்த பின், டிச., 7ல், மருத்துவ மனை இணையதளத்தில் வெளியிடப்பட்ட, சிகிச்சை விபரங்களுக்கும், நிறைய முரண்பாடுகள் உள்ளன. அதை சுட்டிக்காட்டி உள்ளோம். உதாரணத்திற்கு, மருத்துவ மனையில், செப்., 22ல் அனுமதிக்கப் படுகிறார். மறுநாள், மருத்துவமனை வழங்கிய பத்திரிகை செய்தி யில், 'அவர் காய்ச்சலுக்காகவும், நீர்ச்சத்து குறைவு காரணமாகவும் அனுமதிக்கப் பட்டுள்ளார்' என, தெரிவித்து இருந்தனர்.

அவர் இறந்த பின், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ஜெ., மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டபோது, பாதி மயக்க நிலையில் இருந்துள்ளார் என்றும், 48 சதவீதம் ஆக்சிஜன் உள்ள நிலையில் தான், அவர்அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

சாதாரணமாக, 100 சதவீதம் ஆக்சிஜன் இருக்க வேண்டும் என்பதை, கமிஷன் விசாரணையில் சுட்டிக்காட்டி உள்ளோம். அதேபோல், கவர்னர் மாளிகை பத்திரிகை செய்தியில் இருந்த தகவலுக்கும், ஜெ., உடல் நிலைக்கும், பெரிய முரண்பாடு உள்ளது என்பதையும் விளக்கினோம்.
 

நாளை சமர்ப்பிப்பு


ஜெ., கைரேகை மற்றும் கையெழுத்து தொடர்பான ஆவணங்களை, நாளை சமர்ப்பிக்க உள்ளோம்.திருப்பரங்குன்றம் இடை தேர்தலில், தேர்தல் அதிகாரியிடம் வழங்கிய, வேட்பாளர் அங்கீகார படிவம், 'ஏ'யில், ஜெ., கைரேகை, நான்கு இடத்திலும், படிவம், 'பி'யில், ஒரு இடத்திலும் உள்ளது. உயிரோடு உள்ளவரின் கைரேகையில், வரி வரியாக கோடுகள் தெரியும். இறந்தவர் கைரேகையில், வரி போன்ற வடிவம் இருக்காது; அது மறைந்திருக்கும்.

கடந்த ஆண்டு, அக்., 27ல், தேர்தல் கமிஷனிடம் வழங்கிய படிவத்தில் உள்ள, ஜெ., கைரேகையில் வரி வடிவம் இல்லை. டிச., 5ல், ஜெ., இறந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், அவர் அதற்கு முன்னரே இறந்திருக்க வேண்டும். இது குறித்து, தடயவியல் துறை விசாரிக்க வேண்டும் என, ஆவணம் தாக்கல் செய்ய உள்ளோம்.அதே ஆண்டு, நவ., 10ல், ஜெ., வசமிருந்த துறைகள், பன்னீர்செல்வத்திற்கு 

 

மாற்றி கொடுக்கப்பட்டன. அந்த காலத்தில் இருந்து, கைரேகை வாங்கிய காலத்திற்குள், அவர் இறந்திருக்க வேண்டும். அதை மறைத்து, மருத்துவ அறிக்கை வழங்கியதாக சந்தேகிக்கிறோம்.இவ்வாறு சரவணன் கூறினார்.

இதையடுத்து, இன்று விசாரணைக்கு வரும்படி, இரண்டு அரசு மருத்துவர்களுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது. அதில்ஒருவர், ஜெ., கைரேகையை பெற்ற, டாக்டர் பாலாஜியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. டாக்டர்கள் மட்டுமின்றி, நேற்று விசாரணைக்கு வந்த, தி.மு.க., டாக்டர் சரவணனும், இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

அரசு மருத்துவர்களை தொடர்ந்து, அரசு அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்க, கமிஷன் முடிவு செய்துள்ளது.
 

பிரமாண பத்திரம்: காலக்கெடு இல்லை


விசாரணை கமிஷன் சார்பில், ஜெ., மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தற்கான சூழ்நிலைகள் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும், பிரமாண பத்திரங்கள், தகுந்த ஆவணங்களு டன், நவ., 22 அல்லது அதற்கு முன், நேரடியாக அல்லது தபால் வழியாக அளிக்க லாம் என, அறிவிக்கப்பட்டது.நேற்று வரை, 75 கடிதங்கள், 12 பிரமாண பத்திரங்கள், தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மேலும், பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய, காலக்கெடு முடிந்திருந்தாலும், முக்கிய ஆவணங்கள் இருந்தால், எப்போது வேண்டுமானாலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யலாம்; புகார் அளிக்கலாம் என, விசாரணை கமிஷன் அறிவித்துள்ளது.
 

'டிராபிக்' ராமசாமி திடீர் மனு


இதற்கிடையில், 'ஜெ., மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக, நான் அளிக்கும் மனுவை ஏற்று, விசாரணை நடத்த வேண்டும்' என, விசாரணை கமிஷனில், சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி மனு கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே, அவரது சிகிச்சை தொடர்பான, புகைப் படங்களை வெளியிட வேண்டும் என, பொது நல வழக்கு தொடர்ந்தேன். அதன் பின்னும், பல்வேறு புகார் மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றத்திலும், பிற நீதிமன்றங்களிலும் அளித்தேன்.நான், தடய வியல் அறிவியல் படித்துள்ளேன். எனவே, ஜெ., மரணம் தொடர்பாக, சில தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன். அது குறித்து, கமிஷன் விசாரிக்க வேண்டும் எனக் கோரி, கமிஷனில், மனு கொடுத்துள்ளேன். இன்று, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
 

நீதிபதி பெயர் பலகை


சென்னையில், விசாரணை கமிஷன் அலுவலகம், சேப்பாக்கத்தில் உள்ள, கல்ச மஹால், முதல் தளத்தில் அமைந்துள்ளது. அந்த கட்டடம் முன், 'நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்' என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1902871

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா....இன்னும் அந்தரட்டியே முடியேல்லை.!

அதுக்குள்ளே விசாரணையா?

சும்மா சொல்லக் கூடாது.....இந்தியன் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறான்!

  • தொடங்கியவர்
கவர்னருக்கு ஜெ., அனுப்பிய கடிதத்தில்
போலி கையெழுத்து :
விசாரணை கமிஷனில் தி.மு.க. புகார்
 
 
 

சென்னை: ''கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில் இருந்தது, ஜெ., கையெழுத்தில்லை. அக்., 27ல், அவர் உயிரோடு இல்லை,'' என, நீதிபதி, ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜரான, தி.மு.க., டாக்டர் சரவணன் கூறினார்.

 

கவர்னருக்கு,ஜெ., அனுப்பிய,கடிதத்தில்,போலி,கையெழுத்து : விசாரணை,கமிஷனில்,தி.மு.க. புகார்

ஜெ., மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, நீதிபதி, ஆறுமுகசாமி கமிஷனில், இரண்டாவது நாளாக நேற்று, தி.மு.க., டாக்டர் சரவணன் ஆஜரானார். அவரிடம், ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.
 

விசாரணை குறித்து, சரவணன் கூறியதாவது:


ஜெ., கைரேகை தொடர்பான ஆவணங்கள் மற்றும் அவரது கையெழுத்து தொடர்பான ஆவணங்களை, தாக்கல் செய்தோம். 2016 அக்., 27ல், ஜெ.,யிடம் கைரேகை வாங்கிய நாளில், அவர் உயிரோடு இல்லை என்பதை, பதிவு செய்துள்ளேன். செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மருத்துவமனை ஆவணங்களின்படி, 23ல், அவர் சுயநினைவில்லாமல், 'வென்டிலேட்டரில்' இருந்துள்ளார்.ஆனால்,

'விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப வேண்டும்' என, கவர்னர் கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து, அன்றைய தினம், ஜெ., பதில் கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. 

அவர் கையெழுத்துடன் கூடிய கடிதம் வெளியானது; இந்த கடிதம் போலி. கடிதத்தில் உள்ள, ஜெ., கையெழுத்தை, தடய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என, கோரினோம்.நாங்கள் தனிப்பட்ட முறையில், விரல் ரேகை பிரிவில் பணியாற்றி, ஓய்வு பெற்ற, டி.எஸ்.பி., மூலம் ஆய்வு செய்த போது, அதில் தவறு உள்ளதாக உறுதி அளித்துள்ளார். அவரையும் விசாரணைக்கு அழைப்பதாக, நீதிபதி தெரிவித்து உள்ளார். என்னிடம் விசாரணை முடிந்தது. 'தேவைப்பட்டால், மீண்டும் அழைப்போம்' என, நீதிபதி கூறியுள்ளார். 

ஜெ., கையெழுத்து போலி என்பதற்கான முகாந்திரம் உள்ளது என, தெரிவித்துள்ளோம். அவரும், ஆய்வுக்கு அனுப்புவதாக தெரிவித்து உள்ளார். மேலும், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட, மருத்துவ சிகிச்சை தொடர்பான சந்தேகங்களை, நீதிபதி கேட்டார். அதற்கு விளக்கம் அளித்தோம். மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக்கும், மருத்துவ அறிக்கைக்கும், ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. 

பத்திரிகை செய்தியை, சூழ்நிலைக்கேற்ப மருத்துவர்கள் குழு தயார்செய்துள்ளது. ஜெ.,க்கு சிகிச்சை அளித்த, அனைத்து முன்னாள் மருத்துவ கல்விஇயக்குனர்களிடம் விசாரணை
ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவக் கல்வி இயக்குனராக, விமலா என்பவர் பணியாற்றினார். அவர் ஓய்வு பெற்ற பின், மருத்துவக் கல்வி இயக்குனராக, நாராயணபாபு பொறுப்பேற்றார். ஜெ., மரணத்தின் போது, அவர்

 

அந்த பொறுப்பில் இருந்தார்.தற்போது, சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வராக உள்ளார்.

நேற்று, விமலா, நாராயணபாபு ஆகியோர், விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஜெ.,க்கு அளித்த சிகிச்சையை கண்காணிப்பதற்கான மருத்துவக் குழு, தினமும் மருத்துவக் கல்வி இயக்குனருக்கு, அறிக்கை அளித்தது. அதன்படி, அவர்கள் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணை தொடர்பாக, அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
 

போலீசார், 'ஆப்சென்ட்' :


நீதிபதி, ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அலுவலகம், சென்னை, சேப்பாக்கம், கலசா மஹால் முதல் தளத்தில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம், சப் - இன்ஸ்பெக்டர் தலைமையில், நான்கு போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்; நேற்று, போலீஸ் பாதுகாப்பு இல்லை.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1903713

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.