Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உறுதியானது தமிழ் இருக்கை!

Featured Replies

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உறுதியானது தமிழ் இருக்கை!

 

அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக முயன்று வந்தனர். இந்நிலையில், 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. 

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்\

 
 

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், கிட்டத்தட்ட10 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில், தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாக தர ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/106106-tamil-chair-likely-to-be-formed-in-harward-university.html

  • தொடங்கியவர்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக ரூ.10 கோடி நிதி: முதல்வர் உத்தரவு

 

 
eps%20edit

முதல்வர் பழனிசாமி | கோப்புப் படம்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்மொழி தொன்மை வாய்ந்தது. திராவிட மொழிகளுக்குத் தாய்மொழியாக விளங்குவது. இலக்கண, இலக்கியங்களை தன்னகத்தே கொண்ட ஏற்றமிகு மொழி, தமிழ்மொழி. எவரும் ஏந்தி மகிழும் இனியமொழி.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஆனால் நம் தமிழ்மொழிக்கு இருக்கும் சிறப்புகள் வேறு மொழிகளுக்கு நிச்சயமாகஇருக்காது. தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் ஜெயலலிதா அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர்.

இது சம்பந்தமாக நிதியுதவி வேண்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரியதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டுசெல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டுபல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று ஒருதனி இருக்கை ஏற்படுத்தப்படும் என்றுஅறிவித்தார்கள்.

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் உலகத்தில் வாழும் அனைத்து தமிழ்ச முதாயத்தின் வேண்டுகோளினை பரிசீலனை செய்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதிவழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த இருக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுதல், ஆராய்ச்சிக் கல்வியில் தமிழ்இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலகங்களிலும், ஆவணக் காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தமிழ்மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19931592.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல விடயம்......!  tw_blush:

  • தொடங்கியவர்

ஹார்வர்டு இருக்கைக்காக ஏ.ஆர்.ரகுமான் நிதியுதவி

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கனடா இசை நிகழ்ச்சி மூலம் ஏ.ஆர்.ரகுமான் நிதியுதவி வழங்கியுள்ளார்.

201710291642155748_ARRahman-financing-fo
 
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்காக 25000 டாலர்களைக் கடந்த வாரம் தனது இசை நிகழ்ச்சியின்போது வழங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். தமிழக அரசு ரூ. 10 கோடியை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானும் தன் பங்களிப்பாக 25 ஆயிரம் டாலர்களை வழங்கியுள்ளார்.

கனடாவின் டொரன்டோ நகரில் கடந்த அக்டோபர் 20-21 தேதிகளில் ரகுமானின் இசைக் கச்சேரி நடந்தது. தமிழ் பாடல்கள் கச்சேரி 21-ம் தேதி நடந்தது.
201710291642155748_1_arrahman._L_styvpf.

இந்த நிகழ்ச்சியில் திரண்ட பணத்தில் ஒரு பகுதியாக ரூ.25 ஆயிரம் டாலர்களை ஹார்வர்டு தமிழ் இருக்கை நிதிக்காக வழங்கினார் ரகுமான். "இது ஒரு சிறு பங்களிப்புதான். ஆனால் உலகத் தமிழர்கள் இந்த நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன்," என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியிருக்கிறார்.

 

 

ஹார்வர்டு இருக்கைக்காக விஷால் நிதியுதவி

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் நிதியுதவி வழங்கியுள்ளார்.

 
201710291259029355_Vishal-financing-for-
 
அமெரிக்க நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த இருக்கை இதுவரை அமையப் பெறவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கல்வித்துறையின் ஓர் அங்கமாக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றினை நிறுவுவதற்கான முயற்சியில் அமெரிக்காவில் வாழும் டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய இருவரும் இறங்கினர்.

தமிழ் இருக்கைக்கான அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய 2 பேரும் வழங்கியுள்ளனர். மீதமுள்ள ரூ.33 கோடிக்கு அதிகமான நிதியை உலக தமிழர்களிடம் நன்கொடையாக திரட்டி வரும் நிலையில், தமிழக அரசு தன் பங்காக 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து விஷால் கூறும்போது, ‘380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
201710291259029355_1_vishal75._L_styvpf.

மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள்!

தமிழுக்கு அங்கே ஓர் இருக்கை அமைக்க சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது. எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன். உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

http://cinema.maalaimalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.