Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணூர் கழிமுகத்தில் கமல்ஹாசன் ஆய்வு: மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

Featured Replies

எண்ணூர் கழிமுகத்தில் கமல்ஹாசன் ஆய்வு: மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

 

 
kamal1jpg

எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

'ட்விட்டரில் அரசியல் செய்ய வேண்டாம் களத்தில் இறங்கட்டும்' என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் அவர் இன்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில்  "தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முழவிவரம் கீழே" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் வெளியிட்டிருந்த முழு விவரத்தில், "கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாறைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம்.

வல்லூர் மின் நிலையமும், வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான்.

பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணை முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கோசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாக கேள்விப்படுகிறேன். நில வியாபாரிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையையும் உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள் தான்.

வழக்கமாக வரும் மழை போனவருடம் போல் பெய்தாலே வடசென்னை வெள்ளக்காடாகும். வானிலை ஆராய்சியாளரின் எதிர்பார்ப்புப்படி இவ்வருடம் அதிகம் மழை வரும் பட்சத்தில் 10 லட்சம் வடசென்னை வாழ் மக்களுக்கு பெரும் பொருட்சேதமும் ஏன்? உயிர் சேதமும் கூட ஏற்படலாம் என்பது அறிஞர் அச்சம். 100 வாக்கி டாக்கிகளும், பல படகுகளும் இவ்வருடம் வெள்ளத்தில் தவிக்கப்போகும் மக்களை ஒரு வேலை கரையேற்றலாம்.

அவர்கள் வாழ்க்கையில் கரை ஏற நிரந்த தீர்வு காண்பதே நல்லரசுக்கு அடையாளம். இது நிகழ்து முடிந்த தவற்றி விமர்சனமல்ல. நிகழக் கூடிய ஆபத்திற்கான எச்சரிக்கை. அரசு விளம்பரப்படுத்தும் ஆபத்து உதவி எண்ணுக்கு கூப்பிடலாம். ஆபத்து வந்தபின் கூப்பிட்டுக் கதறாமல் முன்பே அரசையும் மக்களையும் எச்சரிக்கிறோம். மக்கள் செவிசாய்ப்பார்கள் என்று நம்புகிறோம். ஆனால், அரசு அது செவிசாய்க்காமல் மெல்லச்சாயும். அது விரைவுற நாமும் உதவலாமே!" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை அவர் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்திருக்கிறார்.

அரசியல் கட்சி தொடங்குவதற்குமுன் மக்கள் மனநிலையை ஆராய்ந்துவருவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இன்று முதன்முறையாக அவர் பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் பிரச்சினை குறித்து நேரில் கருத்து கேட்டறிந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/article19937447.ece?homepage=true

  • தொடங்கியவர்

கொசஸ்தலையாறு ஆக்கிரமிப்பு: களத்தில் கமல்

 

4c1f93ac-e946-480e-b4da-e66d83457f71_101

`தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுக உதாசினத்தால் வட சென்னைக்கு ஆபத்து. சென்னை- காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும்' என்று கமல்ஹாசன் நேற்று ஒரு புதிய ட்வீட் பதிவுசெய்திருந்தார்.

 

DNHa8KNVQAIzFjy_10285.jpgDNHa9q8UQAAQDgH_10008.jpg

மேலும் அந்த ட்வீட்டில் அவர், `கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின்  வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1,090 ஏக்கர் நிலத்தைச் சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம். வல்லூர் மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கொசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன.

314d155f-6fdb-4ef0-9124-1c7864287e5c_101

இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாகப் போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான். பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணைய் முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன. காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கொசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தைச் சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

48646e04-188e-4660-bf99-408d90bf99e8_103

நில வியாபாரிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையையும் உதவியையும் ஏழை மக்களுக்குக் கொடுக்காத எந்த அரசும் நல் ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைதான் ' என்று குறிப்பிட்டிருந்தார்.

7f52c050-e5b7-44a3-b51d-fd574c22e699_105

கமலின் இந்த ட்விட் நேற்று பரபரப்பை ஏற்படுத்திருந்த நேரத்தில் இன்று நேரடியாகக் களத்துக்கே சென்று ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். எண்ணூர் கழிமுகம், சாம்பல்குளம் ஆகியப் பகுதிகளில் உள்ள மக்களிடம் அனல்மின் நிலையங்களிலிருந்து  கொட்டப்படும் சாம்பல் கழிவுகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

b2768b9c-e95c-4c79-b920-9f7e27f0e9c7_105

கமல் களத்தில் இறங்கி ஆய்வு செய்தபோது, சமுகச் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராம் உடனிருந்தார். இந்த ஆய்வைப் பற்றி விகடன் இதழில் கமல் எழுதிவரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் விரிவாக எழுதவுள்ளார். 

 

vc6_10087.jpg

 

http://www.vikatan.com/news/politics/106182-encroachments-on-kosasthalaiyar-river-kamal-on-field.html

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறையும் வட சென்னை வெள்ள சேதம்  என்பது தடுக்கவியலாது ஆட்சியில் இருப்பவர்களுக்கு பிஜேபி யின் கண் அசைவுக்கு ஆடும் கூட்டமாகிவிட்டனர் இந்தாள் தெரிந்துகொண்டு கபடி விளையாடுது மீடியா இனி பிச்சு பிடிங்கி எடுக்கும் ஏலே கமலே நேரே போயிட்டார்

  • தொடங்கியவர்

கமலுக்கு அதிரடி காட்டிய பொன். ராதாகிருஷ்ணன் இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை

jothimani


சென்னை: நடிகர் கமலஹாசன் இன்று காலை சென்னையில் உள்ள எண்ணூர் கழிமுகப் பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினார்.

டிவிட்டரில் அரசியல் செய்கிறார், களத்தில் இறங்குவது கஷ்டம் என்று பாஜக தலைவர்கள் பலரும், நடிகர் கமலஹாசன் குறித்துக் கருத்துக் கூறி வந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கமலஹாசன் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், "தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே, அந்தப் பகுதியை இன்று காலை கமலஹாசன் நேரில் பார்வையிட்டு, அங்கிருந்த மக்களிடமும் நிலைமையை கேட்டறிந்தார்.

இது குறித்துக் கருத்துக் கூறிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஆய்வு செய்த நடிகர் கமலஹாசனை வரவேற்கிறேன். அதே போல, டெங்குவை ஒழிக்க அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.

பொன். ராதாகிருஷ்ணன் கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கேள்வியை பதிவிட்டுள்ளார். அதாவது, உங்கள் பினாமி தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்யாமல் என்ன செய்துகொண்டிருக்கிறார்? என்று கேட்டுள்ளார்.

http://www.dinamani.com/tamilnadu/2017/oct/28/கமலுக்கு-அதிரடிக்-காட்டிய-பொன்-ராதாகிருஷ்ணன்-இதை-எதிர்பார்த்திருக்க-வாய்ப்பில்லை-2797550.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.