Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோனியை விமர்சிக்காதீர்கள்: மூத்த பத்திரிகையாளரிடம் திராவிட்

Featured Replies

தோனியை விமர்சிக்காதீர்கள்: மூத்த பத்திரிகையாளரிடம் திராவிட்

 

 
dhoni-dravid

திராவிட், தோனி.   -  கோப்புப் படம். | ஏ.எஃப்.பி.

பெங்களூரு இலக்கிய விழா ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் தோனியை விமர்சிக்காதீர்கள் என்றார் ராகுல் திராவிட்.

அதாவது, தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று அவரே முடிவு செய்யும் அளவுக்கு அதிகாரமிக்க வீரராகி விட்டாரா தோனி என்ற கேள்வி திராவிடிடம் முன் வைக்கப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த ராகுல் திராவிட், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் கூறும்போது, “தோனியை விமர்சிக்க வேண்டாம், ஆஷிஷ் நெஹ்ரா கூட தனது கடைசி போட்டி எது என்பதை முடிவு செய்கிறார் என்றார்.

ராஜ்தீப் சர்தேசாயின் புதிய கிரிக்கெட் புத்தகமான Democracy’s XI பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராகுல் திராவிட் பலதரப்பட்ட விஷயங்களை தெரிவித்தார்.

சையத் கிர்மானி, ஈராப்பள்ளி பிரசன்னா, சந்திரசேகர் ஆகியோரை மேடைக்கு அழைத்த போது அனைவரும் எழுந்து நின்றி கரகோஷம் செய்தனர்.

உணர்ச்சிவயப்பட்ட பத்திரிகையாளர ராஜ்தீப் சர்தேசாய், “பெங்களூரு தட்பவெப்பம் போல் கிரிக்கெட்டிற்கு இந்த ஊரிலிருந்து வந்த வீரர்கள் மிகவும் டீசண்ட்” என்றார்.

இதில் திராவிட் கூறியதாவது:

தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் தங்கள் ஓய்வை தாங்களே முடிவெடுப்பார்கள். தோனியை விமர்சிக்க வேண்டாம், ஆஷிஷ் நெஹ்ரா கூட தன் ஓய்வை அவரே முடிவு செய்ய முடிகிறது.

ஓய்வு எடுக்கும் முடிவை தோனியே எடுப்பார் என்று நமக்கு எப்படி தெரியும்? ஊடகங்களில் சிலர் இப்படிக் கூறுகின்றனர் என்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

கும்ப்ளே-கோலி மோதல் விவகாரம் குறித்து...

இந்த ஒட்டுமொத்த விவகாரமும் ஊடகங்களிலேயே நடத்தப்பட்டது. இது அனில் கும்ப்ளேவுக்கு துரதிர்ஷ்டமானது. எனக்குத் தெரிந்து இந்தியாவை அதிக போட்டிகளில் வெற்றி பெறச் செய்ததில் அனிலுக்கு நிகர் இல்லை என்றே கூற வேண்டும். அவர் முழு லெஜண்ட்.

பயிற்சியாளர்களை விட வீரர்கள் அதிகாரம்படைத்தவர்கள். நாங்கள் வீரர்களாக இருந்த போது பயிற்சியாளர்களை விட அதிகாரமிக்கவர்களாக இருந்தோம். பயிற்சியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர், இதுதான் எதார்த்தம்.

தற்போது இந்தியா ஏ, இந்தியா அண்டர் 19 பயிற்சியாளராக ஒருநாள் எனக்கும் இது நடக்கும். ஆனால் இவையெல்லம் சரியான வழியில் நடக்க வேண்டும் என்பதே என் பார்வை.

விராட் கோலி போல் ஏன் இல்லை?

என்னிடம் சிலர் கேட்பதுண்டு நான் விளையாடும் காலத்தில் நான் ஏன் விராட் கோலி போல் இல்லை என்று. அப்படியிருந்தால் நான் நானாக இருந்திருக்க மாட்டேன், உடலில் பச்சைக்குத்திக் கொள்ளுதல்... என்றெல்லாம் விராட் கோலி போல் நான் நடந்திருந்தால் எனக்கு நானே உண்மையானவனாக இருந்திருக்க மாட்டேன்.

ஏதோ ஒரு ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக விராட் கோலி ஆஸ்திரேலியாவை பற்றி இழிவாக ஏதோ பேசியிருந்தார், நான் அதனைச் செய்தித்தாளில் பார்த்து பயந்து போனேன். ஆனால், ஒருவேளை இப்படி ஏதாவது கூறி கடினமாக தன்னை ஆக்கிக் கொள்ளும்போதுதான் அவர் தன்னிடமிருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படும் என்று நினைக்கிறாரோ என்னவோ என்று தோன்றியது.

அவரைக் குற்றம் கூற முடியாது. அவருக்கு அந்தவழி ஒத்துப் போகிறது. ஆனால் அதற்காக அது அனைவரும் கடைபிடிக்கக் கூடியது என்று கருதுதல் கூடாது. அஜிங்கிய ரஹானே வித்தியாசமானவர்.

சிறுவயது கிரிக்கெட் வீரர்கள் பலர் விராட் போல் இருக்க வேண்டும் என்று அவரை நகலெடுக்க முயற்சிக்கின்றனர். இது கவலையளிக்கக் கூடியது. ஆனால் அவர்களுக்கு தங்களுக்கு உண்மையாக இருப்பது எப்படி என்பது தெரியவில்லை.

பிரசன்னாவுடன் பழக்கம்...

இந்திரா நகரில் ஈராப்பள்ளி பிரசன்னா என் வீட்டுக்கு எதிரேதான் இருந்தார், அவர் தன் நாயுடன் வாக்கிங் போவதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு நானே அப்போது ‘ஓ அது பிரசன்னாவல்லவா’ என்று அதிசயிப்பேன், ஆனால் அவரிடம் பேச தைரியம் வந்ததில்லை.

பிறகு என் பெயர் செய்தித்தாள்களில் அடிபடத்தொடங்கியவுடன் பிரசன்னா என்னிடம் பேசினார், என்னத் தெரியும் என்றார்.

அதன் பிறகு ஒவ்வொரு முறை அவர் விட்டை விட்டு வெளியே வரும்போதும் நானும் வெளியே வந்து அவரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன், அதாவது இவரைப்பார்க்க வரவில்லை எதேச்சையாக சந்திக்கிறேன் என்று பாசாங்காக நினைத்துக் கொள்வேன். நான் ஹலோ சார் என்று கூறி அவரிடம் பேசத்தொடங்குவேன், உரையாடல் தொடங்கும். அவையெல்லாம் இனிமையான நாட்கள்.

இவ்வாறு பேசினார் ராகுல் திராவிட்.

http://tamil.thehindu.com/sports/article19949139.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.