Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோட்­சத்­துக்கு வழி­காட்ட வேண்­டி­ய­வர்கள் அர­சி­யலில் ஈடு­ப­ட­லாமா?

Featured Replies

மோட்­சத்­துக்கு வழி­காட்ட வேண்­டி­ய­வர்கள் அர­சி­யலில் ஈடு­ப­ட­லாமா?

 

அர­சியல் என்­பது வேறு, மதம் என்­பது வேறு இந்­நி­லையில் அர­சி­யலில் மதம் ஊடு­ரு­வு­மானால் அது பல்­வேறு சிக்­கல்­க­ளையும் தோற்­று­விப்­ப­தா­கவே அமையும். என­வேதான் உலக நாடுகள் மதச்­சார்­பற்ற அர­சியல் தொடர்பில் அழுத்தம் கொடுத்தும் கவனம் செலுத்­தியும் வரு­கின்­றன. அந்­த­வ­கையில் இலங்கை அர­சி­யலைப் பொறுத்­த­வ­ரையில் மதத்­துக்கும் அர­சி­ய­லுக்கும் இடை­யி­லான தொடர்பு நிலை காணப்­ப­டு­கின்­றது. மத­கு­ருமார் அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இது குறித்து பல்­வேறு விமர்­ச­னங்­களும் இருந்து வரு­கின்­றன. மத­கு­ருமார் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது சரி­யா­னதா? தவ­றா­னதா என்று கேள்­விக்­க­ணை­களும் தொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­கி­டையில் இன­வாதம் மற்றும் பக்­கச்­சார்­பில்­லாத மத­கு­ரு­மாரின் சிறப்­பான ஆலோ­ச­னைகள் அபி­வி­ருத்­திக்கு உந்து சக்­தி­யாக அமை­யு­மென்றும் புத்­தி­ஜீ­விகள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இத்­த­கைய ஆலோ­ச­னைகள் வர­வேற்­கப்­ப­டு­வ­தா­கவும் இவர்கள் மேலும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

மூன்று தசாப்த கால­மாக நில­விய கொடிய யுத்­தத்தின் விளை­வாக நாடு பல்­வேறு பின்­ன­டை­வு­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கின்­றது. நாட்டின் தேசிய வரு­மா­னமும் அபி­வி­ருத்­தியும் தடைப்­பட்­டது. சர்­வ­தேசம் இலங்­கையை சந்­தேகக் கண்­கொண்டு நோக்­கி­யது. யுத்­தத்தில் இருந்தும் மீண்­டெ­ழுந்த இலங்கை இப்­போது படிப்­ப­டி­யாக வளர்ச்­சிப்­பா­தையில் நடை­போ­டு­கின்­றது. பல்­வேறு புறக்­க­ணிப்பு நிலைகள் யுத்தம் மேலெ­ழும்­பு­வ­தற்கு வலு­சேர்த்­தன. தமிழ் மக்கள் பல­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்ள நிலையில் இன்னும் இவற்­றுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வில்லை. யுத்தம் முடி­வுக்கு வந்த நிலையில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்­பி­யி­ருந்­தனர். ஆனால் இந்த எண்­ணத்தில் மண்­வி­ழுந்த நிலையில் இழுத்­த­டிப்பு நட­வ­டிக்­கை­களே தொடர்ந்­து­கொண்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யது. புதிய அர­சி­ய­ல­மைப்பு பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமையும் என்று மக்கள் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தனர். இப்­போது எல்­லாமே புஸ்­வா­ண­மாகி விடும் போல தெரி­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு எதி­ரான சக்­திகள் இப்­போது வெளிக்­கி­ளம்பி இருக்­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மி­டத்து பாதக விளை­வுகள் ஏற்­ப­டு­மென்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. மத­கு­ரு­மார்­களும் இது குறித்து கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக சமஷ்டி முறை முன்­வைக்­கப்­பட உள்­ளது. இதனால் நாடு பிள­வு­படும் என்றும் தனி ஈழத்தை ஏற்­ப­டுத்த இந்த நட­வ­டிக்­கை­யா­னது உந்து சக்­தி­யாக அமையும் என்றும் மத­கு­ரு­மார்கள் கருத்­து­களை தெரி­வித்து வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும். மேலும் தமி­ழீ­ழத்­திற்கு சட்ட ரீதி­யி­லான அங்­கீ­கா­ரத்­தினை புதிய அர­சி­ய­ல­மைப்பு வழங்கப் போகின்­றது. ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து வரப் போகின்­றது. மாகாண சபை முறை­மையை 13 ஆவது திருத்­தத்தின் ஊடாக இந்­தியா பல­வந்­த­மா­கவே இலங்கை அர­சி­ய­ல­மைப்­பிற்குள் திணித்­தது, தமி­ழீழ கோரிக்­கையின் ஒரு பகு­தியே அது­வாகும், சர்­வ­தேசம் இலங்­கையை தன் பிடிக்குள் வைத்­துக்­கொள்­வ­தற்கு சூழ்ச்சி செய்­கின்­றது, பௌத்த மதத்­திற்கு புதிய அர­சி­ய­ல­மைப்பில் பாதிப்பு வரப்­போ­கின்­றது, பௌத்­தத்­திற்கு புதிய அர­சி­ய­ல­மைப்பில் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வில்லை எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உட­னடி­யாக நிறுத்த வேண்டும் என்று சில அர­சி­யல்­வா­தி­களும் சில மத­கு­ரு­மாரும் தெரி­வித்து வரு­கின்­றனர். இக்­க­ருத்­துகள் தொடர்பில் பலரும் பல­வி­த­மாக தமது பார்­வை­யினைச் செலுத்தி வரு­கின்­றனர். இந்­நி­லையில் சமஷ்டி மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டுள்­ள­தாகக் கூறப்­படும் சில விட­யங்­களை இன்னும் சிலர் வர­வேற்றுப் பேசி­யுள்­ள­மையும் இங்கு நோக்­கத்­தக்­க­தாக உள்­ளது.

மத­கு­ருமார் அர­சி­யலில் தலை­யீ­டு­களைச் செய்­வது சரியா? தவறா என்ற வாத பிர­தி­வா­தங்கள் மிக நீண்ட கால­மா­கவே இடம்­பெற்று வரு­கின்­றன. இதற்­கி­டையில் கந்­தப்­பொல மேத்­தா­னந்த தேரர் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு சிறந்த ஆலோ­ச­னை­களை வழங்­கு­ப­வர்­க­ளாக மத­கு­ரு­மார் இருக்­க­வேண்டும். பிழை­யான வழி­களில் அர­சி­யல்­வா­தி­கள் செல்­வ­தற்கு முற்­ப­டு­மி­டத்து அவர்­களை நேர்­வ­ழியில் செல்­ல­வைக்க வேண்டும். இதை விடுத்து நேர­டி­யாக மத­கு­ரு­மார் அர­சி­யலில் பிர­வே­சிப்­பது என்­பது பொருத்­த­மா­ன­தாக இல்லை என்று தனது நிலைப்­பாட்­டினை தெளி­வு­ப­டுத்திக் கூறி இருந்தார்.

யுத்­தத்தின் கார­ண­மாக நாடு சிக்­கல்­களை எதிர்­நோக்கி இருந்த நிலையில் நாட்டு மக்­க­ளுக்­கி­டை­யே­யான ஒற்­று­மையும் சீர்­கு­லைந்­தி­ருந்­தது. எனவே ஒற்­று­மைக்கு வலு­சேர்த்து நாட்டை அபி­வி­ருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில் எல்லா இனத்­தையும் சார்ந்த மத­கு­ரு­மார்­க­ளி­னது கருத்­து­களும் அமைதல் வேண்டும். நாடு ஏற்­க­னவே இன­வா­தி­களின் பிழை­யான வழிப்­ப­டுத்­தலின் கார­ண­மாக பல்­வேறு துன்ப, துய­ரங்­க­ளையும் அனு­ப­வித்­தி­ருக்­கின்­றது. எனவே மேலும் மேலும் இன­வாத, மத­வாத சிந்­த­னை­களை விதைத்து மக்­களைக் கூறு­போ­டு­வ­தற்கு யாரும் முற்­ப­டுதல் கூடாது.

இந்­நி­லையில் மத­கு­ரு­மார் அர­சி­யலில் தலை­யி­டு­வது என்­பது வர­லாற்று ரீதி­யாக எவ்­வாறு இருந்து வரு­கின்­றது என்­பது குறித்து பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் தனது பார்­வை­யினை பின்­வ­ரு­மாறு வெளிப்­ப­டுத்தி யுள்­ள­மையும் இங்கு நோக்­கத்­தக்­க­தாக உள்­ளது. சந்­தி­ர­சே­கரன் இது பற்றிக் கூறு­கையில்;

முன்­னைய காலங்­களில் மதங்­களின் செல்­வாக்கு என்­பது அதி­க­மாக இருந்­தது. சமயத் தலை­வர்கள் அர­சுக்குள் அர­சா­கவும் இருந்­துள்­ள­மையை வர­லா­றுகள் உணர்த்­து­கின்­றன. பல்­வேறு பொறுப்­புகள் கூட சமயத் தலை­வர்­க­ளி­டத்தில் விடப்­பட்­டி­ருந்­தன. அர­சர்­களின் முடி­சூட்டு விழா முன்னர் இடம்­பெற்ற போது சமயத் தலை­வர்­களின் ஆசி­யு­ட­னேயே இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றன. இந்த நிலைமை அந்த காலத்தில் அதி­க­மாக இருந்­தது. பிற்­கா­லத்தில் நவீன அர­சுகள் தோற்­றம்­பெற்ற நிலையில் புதிய எண்ணக் கருக்கள் தோற்­றம்­பெற்­றன. சம­யச்­சார்பு அற்­ற­தாக அர­சுகள் இருக்க வேண்டும் என்­கிற கருத்­துக்கும் வலு­சேர்க்­கப்­பட்­டது. இந்­தியா போன்ற நாடுகள் சமயச் சார்­பில்லா அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதில் பெரிதும் ஆர்வம் கொண்டு செயற்­பட்­ட­த­னையும் இங்கு கூறி­யாதல் வேண்டும். நவீன அர­சினை பொறுத்­த­வ­ரையில் மதமும் அர­சி­யலும் வேறு­வே­றாக காணப்­பட வேண்டும் என்ற நிலைக்கு அழுத்தம் கொடுத்­து­வ­ரு­வ­தனைக் காண­மு­டியும். அர­சி­யலில் சமயம் ஆதிக்கம் செலுத்­து­மானால் அது முர­ணான பல பல விட­யங்­க­ளையும் தோற்­று­விக்க உந்­து­சக்­தி­யாக அமையும் என்றும் சிலர் கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இலங்­கையில் கடந்­த­கால வர­லா­று­களை நாம் எடுத்து நோக்­கு­கின்­ற­போது அர­சர்கள் மதத்தின் வளர்ச்­சிக்கும் பாது­காப்­பிற்கும் பல்­வேறு செயற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தனை தெளி­வாகப் புரிந்­து­கொள்ள முடியும். அர­சர்கள் நாட்டு விட­யங்கள் தொடர்பில் மத­கு­ரு­மாரிடம் எத்­த­கைய அறி­வு­ரையை பெற்­றுக்­கொண்­டார்கள் என்­பது குறித்து எனக்கு தெளி­வாக எத­னையும் கூற­மு­டி­யாது. எனினும் இலங்­கையில் ஒரு கால­கட்­டத்தில் இருந்த அர­சி­யல்­வா­திகள் மத­கு­ரு­மாரிடம் அர­சியல் தொடர்­பான விட­யங்­களில் கருத்­து­களைக் கேட்­ப­தினை விடுத்து அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்­த­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. சம­கா­லத்தில் சிங்­கள இன­வாத உணர்­வுடன் சில அர­சி­யல்­வா­திகள் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். இவர்கள் அதே உணர்­வினைக் கொண்ட சில மத­கு­ரு­மாரிடம் சென்று தமது அபி­லா­ஷை­களை நிறை­வேற்றிக் கொள்ள முனை­வதும் தெரிந்த விட­ய­மாகும். குறிப்­பாக ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக மக்­களை திசை­தி­ருப்பி விடு­வ­தற்கு இத்­த­கைய கைங்­க­ரி­யங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன என்­ப­த­னையும் நீங்கள் நன்கு விளங்­கிக்­கொண்­டி­ருப்­பீர்கள்.

இலங்­கையில் வேற்று மதத்­த­வர்கள் கூட பௌத்த குரு­மாரிடம் ஆசி­வேண்டும் நிலை ஒன்று காணப்­ப­டு­கின்­றது. இது பர­வா­யில்லை. ஆசி வேண்­டு­வ­தென்­பது இயல்­பா­ன­தே­யாகும். எனினும் அர­சியல் குறித்த விட­யங்­களில் கருத்­து­களை வின­வு­கையில் அவர்கள் எந்­த­ள­வுக்கு விடயம் தொடர்­பான உள்­ள­டக்­கத்­தினைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பது குறித்து நாம் ஆழ­மாக சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு, கல்வி, பொரு­ளா­தாரம் என்­பன குறித்து பெற்­றுக்­கொள்ளும் ஆலோ­ச­னைகள் தொடர்பில் மேலும் ஆழ­மா­கவே சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. பொது­வு­டைமை நாடு­களில் அர­சி­யலில் சமயத் தலை­யீ­டுகள் இல்­லா­துள்­ளன என்­கிறார் பேரா­சி­ரியர் சந்­தி­ர­சே­கரன்.

இலங்கை பல்­லின மக்­களும் வாழு­கின்ற ஒரு நாடாக உள்­ளது. பல மதங்­களும் பல கலா­சா­ரங்­களும் காணப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு இனத்­த­வரின் கலா­சா­ரத்­திற்கும் மதத்­திற்கும் உரி­ய­வாறு மதிப்­ப­ளிக்­கப்­பட வேண்டும். மத­கு­ரு­மார் வணக்­கத்­திற்­கு­ரி­ய­வர்கள். ஒவ்­வொரு இனத்து மத­கு­ரு­மாரின் கருத்­து­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்­கப்­பட வேண்டும். எல்லாத் துறை­க­ளிலும் அவற்றின் அபி­வி­ருத்­திக்கு மத­கு­ரு­மார் ஆலோ­சனை மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது. அர­சி­யலும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. அர­சி­யலின் நேரான போக்­கிற்கு மத­கு­ரு­மார்­களின் ஆலோ­ச­னைகள் அவ­சி­ய­மா­னவை. எனினும் பங்­கேற்பு அர­சியல் நட­வ­டிக்­கைகள் குறித்தே பல விமர்­ச­னங்கள் இருந்து வரு­கின்­றன. அரசு என்­பது எல்­லோ­ருக்கும் பொது­வா­னது. எல்லா மக்­க­ளி­னதும் துயர்­களைத் துடைக்க வேண்­டிய மிக்க பெரும்­பொ­றுப்பு அர­சுக்கு உள்­ளது. இனம், மதம் என்­கிற ரீதியில் மக்­களை வேறு­ப­டுத்த அர­சாங்கம் முனை­வ­தில்லை. எனவே சம­யச்­சார்பு அரசு என்­ப­தனை விட சமயச்சார்பற்ற அரசு என்பதே மிகவும் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது. இந்தியாவை இதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும்.

நாட்டின் அமைதிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு நல்லாட்சி அரசாங்கமும் முன்னின்று செயற்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. நாட்டு மக்களிடையே புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு என்பன கட்டியெழுப்பப்படுதல் வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு மதகுருமாரின் பங்களிப்பு மிகவும் அவசியமாக உள்ளது. எல்லா இன மதகுருமாருக்கும் இதில் மிகமுக்கிய பொறுப்பு இருக்கின்றது. மதகுருக்கள் மோட்சத்துக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு இவர்களைச் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. இனவாதம் பேசுவதும், மக்களைப் பிழையான வழிகளில் திசை மாற்றுவதும் இவர்களுக்குரியதல்ல. இனவாத அரசியல்வாதிகள் இப்போது இதனை வெற்றிகரமாகச் செய்து வருகின்றார்கள். மக்கள் தெளிவுபெற வேண்டும். இல்லாவிட்டால் இனவாதிகளுக்கு இது வாய்ப்பாகிவிடும்.

நாடு இப்போது பல்வேறு சவால்களையும் சந்தித்து வருகின்றது. இச் சவால்களை வெற்றிகொள்ள சகலரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.