Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிக் (சுவிஸ்) குமார் தப்பித்த வழக்கு: மாவையிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்!!

Featured Replies

சசிக் (சுவிஸ்) குமார் தப்பித்த வழக்கு: மாவையிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்!!

 
சசிக் (சுவிஸ்) குமார் தப்பித்த வழக்கு: மாவையிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான மகாலிங்கம் சசிக்குமாரை (சுவிஸ்குமார்) தப்பிக்க வைக்க முயன்றார் என்று மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சோனாதிராசாவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகின்றது என்று தெரியவருகின்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாவிட்டபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனிடம் சில மாதங்களுக்கு முன்னர் வாக்குமூலம் பெறப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் வாக்குமூலமும் பெறப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடைபெறும் இந்த வழக்கில் முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோர் சந்தேகநபர்களாக உள்ளனர்.

லலித் ஜெயசிங்க கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களின் பின் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். சிறிகஜன் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். அதையடுத்து சிறிகஜனுக்கு பகிரங்கப் பிடியாணை நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/43562.html

  • தொடங்கியவர்

யாழ். சென்ற சிறப்பு சி.‍‍ஐ.டி. குழு மாவை எம்.பி.யிடம் விசா­ரணை

Published by Priyatharshan on 2017-11-06 10:06:31

 

புங்­கு­டு­தீவு பகு­தியில்  படு­கொலை செய்­யப்­பட்ட மாணவி வித்­யாவின் கொலை தொடர்­பி­லான பிர­தான குற்­ற­வாளி சுவிஸ் குமார் முதலில் கைது­செய்­யப்­பட்ட போது தப்பிச் சென்­றமை தொடர்பில் அவ­ருக்கு நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் உதவி செய்த அத்­தனை சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்ய குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழு விசா­ர­ணை­களை  தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது தொடர்பில் ஏற்­க­னவே வட­மா­கா­ணத்தில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித ஜய­சிங்க கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள நிலை­யி­லேயே இந்த விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதன்­படி யாழ்ப்­பாணம் சென்ற குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி விசேட விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா தலை­மை­யி­லான சிறப்புக் குழு, யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ரா­ஜா­விடம் விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சாணி அபே­சே­க­ரவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பி.ரே.திசே­ரவின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

இதன்போது சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விவ­காரம் தொடர்பில் தற்­போதும் தேடப்­பட்­டு­வரும் யாழ். பொலிஸ் நிலை­யத்தில் அப்­பொ­ழுது கட­மை­யாற்­றிய முன்னாள் உப­ பொலிஸ் பரி­சோ­தகர் ஸ்ரீக­ஜனின் வீட்­டையும் விசேட சி.ஐ.டி. குழு சுற்றி வளைத்து தேடுதல் நடத்­தி­யது. 

எனினும் இதன்­போது அவர் அங்­கி­ருக்­க­வில்லை எனவும், பெரும்­பாலும் சட்ட விரோ­த­மாக நாட்டை விட்டு அவர் தப்பிச் சென்று இருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார். 

நேற்று முன்­தி­னமே சுவிஸ்குமார் தப்­பித்த விவ­கா­ரத்தில் மாவை சேனா­தி­ராஜா எம்.பி.யிடம் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டுள்­ள­துடன்,  விசே­ட­மாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­க­வுக்கும் அவ­ருக்கும் இடை­யி­லான தொடர்­புகள் வித்தியா படு­கொ­லையின் பின்னர் ஊர்­கா­வற்றுறையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, கொழும்பு பல்­க­லைக்க­ழ­கத்தின் சட்­டபீட விரி­வு­ரை­யாளர் தமிழ் மாறன் உள்­ளிட்­டோ­ருடன் சேர்ந்து நடத்­திய விசேட மக்கள் சந்­திப்பு தொடர்பில் இவ்­வி­சா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. 

இத­னை­விட தப்­பி­ச்செல்ல முற்­பட்ட சுவிஸ்­கு­மாரை பொதுமக்கள் கட்டி வைத்­தி­ருந்த போது அங்கு இடம்­பெற்­றி­ருந்த சம்­ப­வங்­களை ஒளிப்­ப­திவு செய்த தொலைக்­காட்சி ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரின் சாட்­சியம் உள்­ளிட்ட மேலும் பல சாட்­சி­யங்­க­ளையும் வாக்­கு­மூ­லங்­க­ளையும் விசேட பொலிஸ் குழு பதிவு செய்­துள்­ளது. 

அத்­துடன் பிறிதொரு குற்­றச்­சாட்டு தொடர்பில் சிறை­யி­லுள்ள பொலிஸ் அதி­கா­ரி­யான சிந்­தக பண்­டார, சுவிஸ்குமார் ஆகி­யோ­ரிடம் சிறைச்­சா­லைக்குள் வைத்து விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சிறப்­புக்­குழு ஊர்­கா­வற்­றுறை நீதி­வானின் அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளது. 

இந்நிலையில் சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விவகாரத்தில் மேலும் சில முக்கிய நபர்களிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ள தாகவும் விரைவில் அதனோடு தொடர்பு டைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் சுட் டிக்காட்டினார்.

http://www.virakesari.lk/article/26687

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.