Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு காரணம் : சதித்திட்டமா?

Featured Replies

எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு காரணம் : சதித்திட்டமா?

 

ஆராய்­வ­தற்கு அமைச்­ச­ரவை உப­ குழு நிய­மனம்
(நமது நிருபர்)

நாட்டில் எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­டுவ­தற்கு ஏது­வாக அமைந்த கார­ணிகள் குறித் தும் இந்த விவ­கா­ரத்தில் சதித்­திட்டம் ஏதே னும் இடம்­பெற்­றுள்­ளதா என்­பது தொடர்­பிலும் ஆராய்­வ­தற்­காக அமைச்­ச­ரவை உப­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.  

அமைச்­சர்­க­ளான சம்­பிக்க ரண­வக்க, அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, சுசில் பிரே­ம்­ஜ­யந்த ஆகிய மூவரை உள்­ள­டக்­கியே இந்­தக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள எரி­பொருள் தட்­டுப்­பாடு குறித்தும் அதற்­கான கார­ணங்கள் தொடர்­பிலும் விரி­வாக ஆரா­யப்­பட்­டது.

இதன்­போது பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் அர்­ஜுண ரண­துங்க எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்­கான கார­ணங்கள் தொடர்பில் விளக்­க­ம­ளித்தார். இந்­திய எண்ணெய்க் கம்­பனி கொண்டு வந்த கப்­பலில் தர­மற்ற எரி­பொருள் இருந்­த­மை­யினால் அதனை நிரா­க­ரிக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இதே­போன்று இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு எரி­பொருள் ஏற்­றிய கப்பல் இலங்­கையை வந்­த­டை­வ­தற்கு கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­விட சப்­பு­கஸ்­கந்த எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு செய்ய முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இத்­த­கைய சூழ்­நி­லை­யால்தான் நாட்டில் எரி­பொ­ரு­ளுக்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது என்று அமைச்சர் விளக்­க­ம­ளித்­துள்­ளார.

ஆனாலும் இந்­திய எண்ணெய் கம்­பனி தரம் குறைந்த எரி­பொ­ருளை கொண்­டு­வந்­தமை மற்றும் இலங்கை பெற்­றோ­லி­யக்­கூட்­டுத்­தா­ப­னத்­திற்­கான எரி­பொருள் நிரப்­பிய கப்பல் இலங்­கையை வந்­த­டை­வதில் ஏற்­பட்­டுள்ள கால­தா­மதம், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு செய்­வதில் ஏற்­பட்ட கால தாமதம் போன்ற விட­யங்­களில் ஏதேனும் சதித்­திட்டம் உள்­ளதா? என்று ஆரா­ய­வேண்­டு­மென்று அமைச்­ச­ர­வையில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து எரி­பொ­ரு­ளுக்­கான தட்­டுப்­பாடு குறித்தும் அதற்­கான கார­ணங்­களில் ஏதேனும் சதி இடம்­பெற்­றுள்­ளதா என்­பது குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்கு மூன்று அமைச்­சர்­களைக் கொண்ட குழு­வினை ஜனா­தி­பதி நிய­மித்­துள்ளார். இந்­தக்­குழு இந்த விடயம் குறித்து விரி­வாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்­ளது.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து இந்த விடயம் குறித்து நீண்­ட­நேரம் ஆராய்ப்­பட்­டுள்­ளது. இதன்­போது பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் அர்­ஜுண ரண­துங்க மீது பல அமைச்­சர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். முன்னாள் பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் சந்­திம வீரக்­கொ­டியும், அமைச்சர் அர்­ஜுண ரண­துங்­கவும் பெரும் வாக்கு வாதத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

எரி­பொருள் கையி­ருப்பு தொடர்பில் வாரா­வாரம் அறிக்கை பெறப்­ப­ட­வேண்டும். எந்த வித நிலை­மை­யையும் சமா­ளிக்­கும்­வ­கையில் 21 நாட்­க­ளுக்குத் தேவை­யான எரி­பொருள் எப்­போதும் சேமிப்பில் இருக்­க­வேண்­டி­யது வழ­மை­யாகும். ஆனால் அந்த நடை­முறை தற்­போது பின்­பற்­றப்­ப­ட­வில்லை. இத­னால்தான் பெரும் பிரச்­சி­னைக்கு முகம் கொடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர்கள் இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இலங்­கையின் எரி­பொருள் விநி­யோ­கத்தில் இந்­திய எண்­ணெய்க்­கம்­பனி 14 வீதத்­தைத்தான் கையாள்­கின்­றது. எனவே இந்­திய எண்­ணெய்க்­கம்­பனி தர­மற்ற எரி­பொ­ருளை கொண்­டு­வந்­தது என்­ப­தற்­காக எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­ட­வேண்­டிய அவ­சியம் நாட்டில் இல்லை. உரிய செயற்­றிட்­டத்தை பின்­பற்­றா­மை­யி­னா­லேயே இத்­த­கைய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் அமைச்­சர்கள் இதன்­போது விசனம் தெரி­வித்­துள்­ளனர்.

எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­படும் என்று தெரிந்தால் அல்­லது எரி­பொருள் கப்பல் தாமதம் அடையும் என்­பதை அறிந்­தி­ருந்தால் உட­ன­டி­யாக இந்­தி­யா­வுடன் தொடர்­பு­கொண்டு மூன்று நாட்­களில் எரி­பொ­ருளை கொண்­டு­வந்­தி­ருக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் சில அமைச்சர்கள் தமது அதிருப்தியினை தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இந்திய எண்ணெய்க் கம்பனி பிரச்சினைகளை ஏற்படுத்தி தரம் குறைந்த எரிபொருளை இலங்கையில் விற்பனை செய்வதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு அனுமதிக்க முடியாது. ஆனாலும் எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 

http://epaper.virakesari.lk

 

 

நெருக்கடி தொடர்கிறது : நீண்ட வரிசையில் மக்கள்

 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் எரி­பொருள் தட்­டுப்­பாட்டு பிரச்­சினை கார­ண­மாக நேற்று ஐந்­தா­வது நாளா­கவும் பல பிர­தே­சங்­களின் எரி­பொருள் நிரப்பும் நிலை­யங்­க­ளுக்கு அரு­கா­மையில், பொது­மக்கள் மற்றும் வாக­னங்கள் நீண்ட வரி­சையில் காத்­தி­ருந்­த­துடன் சில பகு­தி­களில் பதற்­ற­மான நிலை­மையும் ஏற்­பட்­டது. ஒரு­சில பிர­தே­சங்­களில் வாக­னங்கள்

நேற்று அதி­கா­லை­யி­லி­ருந்தே எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­க­ளுக்கு முன்னால் வரி­சையில் காத்­தி­ருந்­தன .

வாகன போக்­கு­வ­ரத்து மந்­த­க­தியில் அத்­துடன் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் எரி­பொருள் பிரச்­சினை கார­ண­மாக மக்­களின் அன்­றாட வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் வாகன போக்­கு­வ­ரத்­துக்­களும் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன.  

குறிப்­பாக கொழும்பில் பல பிர­தே­சங்கள் கிழமை நாட்­களில் காலை மற்றும் மாலை நேரங்­களில் பாரிய வாகன நெரிசல் காணப்­ப­டு­கின்­ற­போதும் நேற்று மற்றும் நேற்று முன்­தி­னங்­களில் அவ்­வா­றா­ன­தொரு பாரிய வாகன நெரி­சலை காணக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை.

எரி­பொ­ரு­ளுக்­கான

 கேள்வி அதி­க­ரிப்பு

அத்­துடன் எரி­பொருள் தட்­டுப்­பாடு நில­வப்­போ­வ­தாக மக்கள் அத்­தியில் ஏற்­பட்­டி­ருக்கும் அச்சம் கார­ண­மாக கடந்த நான்கு நாட்­களில் எரி­பொ­ரு­ளுக்­கான கேள்­வியும் அதி­க­ரித்­துள்­ள­தாக பெற்­றோ­லிய வளங்கள் அமைச்சு அறி­வித்­துள்­ளது.

அதன்­கா­ர­ண­மாக வழ­மை­யாக ஒரு­நா­ளைக்கு விநி­யோ­கிக்­கப்­படும் எரி­பொ­ரு­ளை­விட அதிக எரி­பொருள் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சு அறி­வித்­துள்­ளது.

குறிப்­பாக நேற்று முன்­தினம் 2ஆயி­ரத்து 600 மெட்­ரிக்­தொன்னும் நேற்­றைய தினம் 3ஆயிரம் மெட்­ரிக்தொன் பெற்­றோலும் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­தாக பெற்­றோ­லிய வளங்கள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­தி­ருந்தார்.

அத்­துடன் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் வர­வ­ழைத்­துள்ள எரி­பொருள் அடங்­கிய கப்பல் இன்று இரவு துறை­மு­கத்தை வந்­த­டை­ய­வி­ருப்­ப­துடன் நாளை வியா­ழக்­கி­ழமை எரி­பொருள் விநி­யோகம் வழ­மைக்கு திரும்பும் எனவும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

போத்­தல்­களில் எரி­பொருள்

 விநி­யோ­கிக்க தடை

நாட்டில் எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக செய்தி பர­வி­ய­தனால் மக்கள் தங்கள் வாக­னங்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி போத்­தல்­க­ளிலும் எரி­பொ­ருளை சேக­ரிக்க ஆரம்­பித்­தனர். இத­னால்தான் எரி­பொ­ரு­ளுக்­கான கேள்வி அதி­க­ரித்­துள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

அத்­துடன் வழ­மை­யை­விட அதிக எரி­பொ­ருளை விநி­யோகம் செய்­தாலும் அதன் பயனை வாகன உரி­மை­யா­ளர்கள் பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் போயுள்­ள­தா­கவும் போத்­தல்­க­ளுக்கு பெற்­றுக்­கொள்ளும் எரி­பொ­ருளை வெளியில் கூடிய விலைக்கு விற்­பனை செய்­து­வ­ரு­வ­தா­கவும் தெரி­வித்து, வெற்று போத்­தல்­க­ளுக்கு எரி­பொ­ருளை விநி­யோக்கி வேண்டாம் என பெற்­றோ­லிய வளங்கள் அமைச்சின் செய­லாளர் சுற்று நிருபம் ஒன்றை நேற்று வெளி­யிட்­டுள்ளார்.

கொட்டும் மழை­யிலும் மக்கள் வரி­சையில்

அத்­துடன் நாட்டில் கடந்த சில தினங்­க­ளாக மாலை­வே­ளையில் இடி­யுடன் கூடிய மழை பெய்­து­வ­ரு­கின்­றது. இந்­நி­லையில் எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களில் எரி­பொருள் தட்­டுப்­பாடு நில­வு­வதால் மக்கள் கொட்டும் மழை­யையும் பொருட்­ப­டுத்­தாமல் எரி­பொ­ருளை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக நீண்ட வரி­சையில் காத்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடிந்­தது.

அர­சாங்­கத்­துக்கு எதி­ராக

மக்கள் கோஷம்

அத்­துடன் எரி­பொருள் நிலை­யங்­களில் நீண்­ட­வ­ரி­சையில் காத்­தி­ருந்த பொது­மக்கள் ஒரு கட்­டத்தில் பொறு­மையை இழந்து, இதுவா நல்­லாட்சி, இது­தானா அர­சாங்­கத்தின் மாற்றம், நிர்வாம் தெரியாத அரசாங்கம், நாட்டை முழுமையாகவே இந்தியாவுக்கு கொடுத்துவிடுங்கள் போன்ற வார்த்தை பிரயோகங்களை அரசாங்கத்துக்கு எதிராக எழுப்பினர்.

வரிசையில் இருந்தவர்களில் அதிகமானவர்கள் முச்சக்கரவண்டி செலுத்துபவர்களாக இருந்ததுடன் பெற்றோல் கிடைக்காததால் அன்றாட வாழ்க்கை செலவை தேடிக்கொள்வதற்கும் முடியாமல் இருப்பதாக அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். 

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.