Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் வழக்கில் திடீர் திருப்பம்: 2 வாரங்களில் முடிவை தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

பேரறிவாளன் வழக்கில் திடீர் திருப்பம்: 2 வாரங்களில் முடிவை தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

 
15CHRGNRAJIV

1991-ல் நடந்த ராஜீவ் படுகொலை சம்பவம்.

‘‘எதற்காக 2 பேட்டரிகளை வாங்கி கொடுத்தேன் என்பது எனக்கு தெரியாது’’ - இந்த ஒற்றை வரிகளை திட்டமிட்டே மறைத்த சிபிஐ அதிகாரியின் தவறால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு அநியாயமாக இளமையை பறிகொடுத்துள்ளார் பேரறிவாளன். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அந்த சிபிஐ அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுள்ள உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை தண்டனையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

15CHRGNPERARIVALAN%202

பேரறிவாளன் இப்போது..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 மே 21-ல் தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படை நடத்திய துல்லிய மனித வெடிகுண்டு தாக்குதலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

சோனியா காந்தியின் பரிந்துரையால் நளினியின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் மற்ற மூவரின் தூக்கு தண்டனைக்கு கடந்த 30.8.11 அன்று சென்னை உயர் நீதிமன்றம் திடீரென இடைக்காலத் தடை விதிக்க, மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மற்றவர்களின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் ரத்து செய்து உத்தரவிட்டது.
 

 

15CHRGNPERARIVALAN

பேரறிவாளன் அப்போது..

‘எதற்காக என தெரியாது’

ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ முன்னாள் எஸ்.பி.யான தியாகராஜன்தான், பேரறிவாளனிடம் தமிழில்வாக்குமூலத்தைப் பதிவு செய்தவர். அப்போது பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனால் எதற்காக அந்த 2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தேன் என்பது எனக்கு தெரியாது’’ - இதுதான் பேரறிவாளன் கொடுத்த ஒரிஜினல் வாக்குமூலம்.

இதில் ‘‘எதற்காக வாங்கிக் கொடுத்தேன் என்பது தெரியாது’’ என்ற ஒற்றை வரிகளை, வழக்கின் கோணத்துக்காக தியாகராஜன் முழுமையாக பதியாமல் மறைத்ததால் பேரறிவாளன் தனது 19 வயதில் இருந்து தற்போது வரை கடந்த 26 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

மேலும், இந்த வழக்கில் சிவராசனும் பொட்டு அம்மனும் பேசிய வயர்லெஸ் உரையாடலும், ‘இந்தக் கொலை குறித்து சிவராசன், தனு, சுபா ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும்; பேரறிவாளனுக்கு தெரியாது’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பேரறிவாளனை 2 மாதங்கள் மட்டும் பரோலில் வெளியே வர அனுமதித்தது. தற்போது அவர் மீண்டும் சிறைக்குள் இருக்கிறார்.

 

உத்தரவால் திடீர் திருப்பம்

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘பேரறிவாளனுக்கும் ராஜீவ் கொலை சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்தக் குற்றச்சாட்டைப் பதிவு செய்த அதிகாரியே மறுத்துவிட்டார். பெல்ட் வெடிகுண்டை உருவாக்கிக் கொடுத்த நபர் யார் என்பதை புலனாய்வு அமைப்புகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அந்த நபர் தற்போது இலங்கை சிறையில் உள்ளதாக தெரிகிறது. உண்மை குற்றவாளியை விட்டுவிட்டு மற்றவர்களை எல்லாம் சிபிஐ இந்த வழக்கில் சேர்த்துள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.

15CHRGNthyagarajan

தியாகராஜன்

இதையடுத்து நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கின் வெளிநாட்டு தொடர்பு குறித்து நீண்டகாலமாக விசாரித்துவரும் பல்நோக்கு விசாரணைக் குழுவும் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

‘உடனே விடுவிக்க வேண்டும்’

பேரறிவாளனுக்காக ஆரம்பம் முதலே ஆஜராகிவரும் வழக்கறிஞர் கே.சிவக்குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. காரணம், பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் கடந்த 26 ஆண்டுகளாகசட்டரீதியாகப் போராடி வருகிறோம். ஆனால், சிபிஐ செய்த மன்னிக்க முடியாத குற்றத்தால் பேரறிவாளன் தனது 26 ஆண்டுகால இளமையை அநியாயமாக சிறையில் கழித்துள்ளார்.

இப்போதுள்ள சூழலில் நாங்கள் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. இதில் அரசியல் பாகுபாடு பார்க்காமல் அவரை விடுவித்தால் போதும் என்ற மனநிலையில்தான் உள்ளோம்.

சிபிஐ அதிகாரியின் வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றமே ஏற்றுள்ளதால் தமிழக அரசு தனக்கு உள்ள சிறப்பு அதிகாரமான சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்தி மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்காமல் பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய வேண்டும்’’ என்றார்.

15CHRGNDHANU

சிவராசன், தனு உள்ளிட்டோர்..

 

 

ஆயிரம் ஓட்டைகள்

பெயர் கூற விரும்பாத சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, ‘‘ராஜீவ் கொலை வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே சிபிஐ முறையாக செயல்படவில்லை.

இந்த வழக்கில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் ஏராளமான அரசியல் பொதிந்து கிடக்கிறது’’ என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article20449013.ece

 
Perarivalan

 

புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்ததை ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி உச்ச நீதிமன்றத்தில்  ஒப்புக் கொண்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளுள் ஒருவரான தியாகராஜன் (ஓய்வு) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், 19 வயதாக இருந்த ஏ.ஜி. பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு பகுதியை தான் பதிவு செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். 

அதாவது,  அறிவு என்று அழைக்கப்படும் பேரறிவாளன், 9 வோல்டுகள் கொண்ட இரண்டு பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தபோது, அவை எதற்காக என்று தனக்குத் தெரியாது என்று கூறியிருந்ததை, தான் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது சேர்க்காமல் விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பேட்டரிகள் எதற்காக வாங்கப்படுகிறது என்பது பேரறிவாளனுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால், வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது அதனை நான் விட்டுவிட்டேன். ஏன் என்றால், அதை பதிவு செய்தால், அது குற்றமிழைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் சாட்சியமாக மாறிவிடும். ஆனால் நான் பதிவு செய்வது குற்ற ஒப்புதல் வாக்குமூலம். எனவே ஒட்டுமொத்த வாக்குமூலமும் பயனற்றதாகப் போய்விடும் என்பதால் அந்த பகுதியை நீக்கிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது பயன்படுத்திய வெடிகுண்டுகளை இயக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை முடியும் வரை, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்குமாறு பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில், பேரறிவாளன் மீதான தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து மத்திய அரசிடம், 2 வார காலத்துக்குள் பதில் கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

ராமதாஸ் கருத்து

இந்த வழக்கு பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்ததை சிபிஐ முன்னாள் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பேரறிவாளன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு. சிறைக்கதவு நிரந்தரமாக திறக்கட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது மகன் பேரறிவாளன் பொங்கலுக்குள் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியின் பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அதுதொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், 2 பேட்டரி வாங்கிக் கொடுத்தது தனக்கு தெரியாது என பேரறிவாளன் கூறியதைப் பதிவு செய்ய மறந்து விட்டதாகவும், அதுதொடர்பான மொழி பெயர்ப்பு பல அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

இதுவே தனது மகனுக்கு பாதி விடுதலை கிடைத்தது போல இருக்கிறது. பேரறிவாளன் வருகிற பொங்கலுக்குள் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

http://www.dinamani.com/india/2017/nov/15/26-ஆண்டுகளுக்குப்-பிறகு-பேரறிவாளனுக்குக்-கிடைத்திருக்கும்-ஒரே-ஒரு-துருப்புச்சீட்டு-2808459.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.