Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு ஒரு முன்னுதாரணம்

Featured Replies

யூதர்களின் புகழ்பெற்ற கருத்தியல் உருவாக்க குழுவின் (The American Israel Public Affairs Committee, AIPAC) வருடாந்த கொள்கை வகுப்பு மாநாடு இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது.

http://en.wikipedia.org/wiki/American_Isra...fairs_Committee

http://www.aipac.org/

http://www.aipac.org/ner/

http://www.aipac.com/

இந்த கருத்தியல் குழு இஸ்ரேல் என்ற நாடு உருவாகி சில வருடங்களில் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அமெரிக்காவின் வெளிவிகார கொள்கைவகுப்பு மீது இவர்களின் அளவு கடந்த தாக்கம் பற்றி பல ஆய்வுகள் விமர்சனங்கள் வந்துவிட்டது.

http://en.wikipedia.org/wiki/Israel_lobby_...e_United_States

http://www.thenation.com/doc/20060814/aipacs_hold

http://www.counterpunch.org/walsh08162006.html

http://www.antiwar.com/cole/?articleid=3467

http://www.stopaipac.org/

ஒரு சர்ச்சைக்குரிய நாட்டின் இருப்பிற்கு எந்தளவிற்கு ஆதரவுக் கருத்தியல் உருவாக்க ஒரு குழு தொடர்ந்து உழைக்கிறதோ அதில் ஒரு சிறு அளவாவது இப்படிப்பட்ட கருத்தியல் உருவாக்க அரசியல் நடத்தைக்கு பழக்கப்பட்ட உலக ஒழுங்கில் ஒரு நியாயமான புதிய தேசத்தை எதிர்ப்புகளை வென்று உருவாக்க அங்கீகாரத்தைப் பெறத் தேவை என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். பிரிந்து சென்று சுதந்திர பிரகடனம் செய்யப்பட்டாலும் ஒரு புதிய நாடு என்றரீதியில் நீண்ட கொடிய யுத்தங்களிற்கு பின்னர் சிறீலங்காவின் விருப்பிற்குமாறாக பிரிந்து சென்றோம் என்றரீதியில் பல சவால்களை பல வருடங்களிற்கு தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இவற்றை எதிர்கொள்ள புலம்பெயர்ந்தவர்கள் நீண்டகால சிந்தனை கண்ணோட்டங்களோடு தமிழீழம் என்ற சுதந்திர தனியரசின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டிய கருத்தியல் தளத்தை உருவாக்கி பேணும் வகையில் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.

சர்வதேசம் எமது நியாயப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது, தமது நலன்களை மாத்திரம் தான் முன்னிறுத்துகிறது, எமது நியாயமான தேசியவிடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது என்ற கசப்பான உண்மைகள் சர்வதேசம் மீதான வெறுப்பாக மாறுவதை தவிர்க்க வேண்டும். சர்வதேசத்தின் சதிவலைகளிற்கு பலியாகாது இருக்க வேண்டியது எமது பொறுப்பு. அதற்கு எதிர்வினையாக நாம் சர்வதேசம் மீது வெறுப்பையும் ஆத்திரத்தையும் காட்டுவது சர்வதேசத்தில் எம்மை நாமே தனிமைப்படுத்துவதாக அமையும். நாம் எந்தளவிற்கு எமது தேசத்தின் இருப்பு நலன்களை சர்வதேசத்தின் நலன்களோடு இணைக்கும் கருத்தியல் தளத்தை உருவாக்கிறோமே அந்தளவிற்கு சர்வதேசத்தின் எதிர்ப்பு சதிகளும் படிப்படியாக வலுவிழக்கும்.

இதைதான் யூதர்களின் கருத்தியல் உருவாக்க குழு மிகவும் காத்திரமாக பலவித சவால்களிற்கு மத்தியில் மிகவும் பலமாக கட்டி எழுப்பியிருக்கிறது. யூதர்களின் நலன்கள் என்பது சர்வதேசத்தின் நலன்களாக ஒரே தட்டில் ஒரோ கோட்டில் பார்க்க வைத்தது இவர்களின் வெற்றி. இல்லாவிட்டால் இவர்கள் சுற்றி வளைக்கப்பட்ட அரபியர்களினால் துடைத்தெறியப்படாவிட்டாலும் படுமோசமாக ஓரங்கட்டப்பட்டிருப்பார்கள்.

எமதுபோராட்டம் எந்தளவிற்கு நியாயமனது என்றாலும் அதை சர்வதேசம் அதற்காக மாத்திரம் ஏற்றுக் கொண்டு எம்பக்கம் சாயாது என்பதற்கு இன்ற உலக ஒழுங்கில் AIPAC ஈட்டியுள்ள வெற்றிகள் தாக்கங்கள் சிறந்த உதாரணங்களும் படிப்பினையும் ஆகும். எனவே நியாயமான போராட்டம் என்பது இதய சுத்தியான மனநிலையை அதனை நம்பி அதன் பின்நிற்பவர்களிற்கு தந்தாலும் அதுவே சர்வதேசத்தை எம்பக்க வென்றுவிட உதவாது. சர்வதேசத்தை எம்பக்க வெல்லாதவரை எமது போராட்டம் வெற்றி பெறப்போவதும் இல்லை.

சர்வதேசம் எமது நியாயப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது, தமது நலன்களை மாத்திரம் தான் முன்னிறுத்துகிறது, எமது நியாயமான தேசியவிடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது என்ற கசப்பான உண்மைகள் சர்வதேசம் மீதான வெறுப்பாக மாறுவதை தவிர்க்க வேண்டும். சர்வதேசத்தின் சதிவலைகளிற்கு பலியாகாது இருக்க வேண்டியது எமது பொறுப்பு. அதற்கு எதிர்வினையாக நாம் சர்வதேசம் மீது வெறுப்பையும் ஆத்திரத்தையும் காட்டுவது சர்வதேசத்தில் எம்மை நாமே தனிமைப்படுத்துவதாக அமையும். நாம் எந்தளவிற்கு எமது தேசத்தின் இருப்பு நலன்களை சர்வதேசத்தின் நலன்களோடு இணைக்கும் கருத்தியல் தளத்தை உருவாக்கிறோமே அந்தளவிற்கு சர்வதேசத்தின் எதிர்ப்பு சதிகளும் படிப்படியாக வலுவிழக்கும்.

:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் உபயோகமுள்ள ஆக்கத்தை இணைத்தமைக்கு நன்றி.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இது எவ்வளவு தூரம் (நேரடியாக) ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும்?

  • யூதர்களுக்கும் அமெரிக்கருக்கும் வரலாற்றுரீதியான தொடர்புகள் இருக்கின்றன - எமக்கு அப்படி எதுவுமே இல்லை
  • என்ன தான் சொன்னாலும் யூதர்களின் திறமையையும் அதன்மூலம் அவர்கள் ஒரு சமூகத்தில் செலுத்தக்கூடிய ஆதிக்கத்தையும் எம்மவராலும் அப்படியே செய்ய முடியும் என்று எதிர்பார்க்க முடியுமா? இல்லை என்பது என் கருத்து.

இந்த நிலையில் இதை ஒரு அப்படியே ஒரு முன்னுதாரணமாகப் பின்பற்ற முடியாது தானே?

ஆனால் இதை ஒரு வரலாற்ருப் பாடமாக எம்மவர் எடுத்து, எம்மவரது தற்போதைய யதார்த்தங்களை உள்வாங்கி எவ்வாறான ஒரு தளத்தை உருவாக்கலாம் என்று திட்டமிட்டு அதன்படி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இது சம்பந்தமாக ஒரு உரையாடலை ஆரம்பிப்போமா? குறூக்ஸ் அந்த உரையாடலை தலைமை தாங்கி நடத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேலியனையும் ஈழத்தமிழனையும் ஏன் ஒப்பிடக்கூடாது?

  1. நிறம்: இஸ்ரேலியர்கள் மேற்கத்தைய வெள்ளைகளின் நிறத்தையுடையவர் என்பதால் அவர்களால் இலகுவில் அந்த சமூகத்துடன் கலக்கக் கூடியதாக விருந்தது.
  2. மொழி: வட அமெரிக்காவுக்கு வந்த அனேக இஸ்ரேலியர் ஐரோப்பிய மொழிகளிலேயே பேசுபவராக இருந்தனர். மொழிரீதியிலான ஒரு தொடர்பு அமெரிக்கர்களுடன் இருக்கிறது. மேலும் இதனால் அவர்கள் ஆங்கிலத்தை இலகுவில் சரளமாக பேசக்கூடியவர்களாக இருந்தனர். நம்மவருக்கு இப்பவும் (இங்கு பிறந்து வளர்ந்தவர்களைத் தவிர) புறோக்கின் இங்கிலிசு தான்.
  3. கல்வி: இஸ்ரேலியர்கள் வியத்தகு கல்விமான்களாக இருந்தனர். நம்மவரில் (முதல் தலைமுறை) பெரும்பாலோனோர் கல்வியறிவு பெறாதவர்களாக இருக்கின்றனர்.
  4. கலாச்சாரம்: இஸ்ரேலியர்க்ளின் கலாச்சாரம் அமெரிக்கர்களுடன் பழகுவதில் எந்த தடையையும் வைக்கவில்லை. அனேகமாக இஸ்ரேலியர்கள் அமெரிக்கர்களுடன் இரண்டறக் கலந்து விடார்கள். அதாவது நீங்கள் வீதியில் சந்திக்கும் ஒருவர் யூதராக இருந்தால் அவரின் கணவன்/மனைவி ஒரு யூதரல்லாதவராகவே இருப்பர். எங்களின் கலாசாரம் இலகுவில் இதை அனுமதிக்காது.
  5. கடந்தகால அனுகூலங்கள்: வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பாவிலிருந்து வந்த இஸ்ரேலியர்களுக்கு இன்னொரு வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவில் இலகுவில் தம்மை நிலைநிறுத்தி பொருளாராத ரீதியில் முன்னேறக்கூடியதாக இருந்தது. வறுமைப்பட்ட நாடான இலங்கையில் இருந்து வரும் நம்மவருக்கு பொருளாதார ரீதியில் தம்மை நிலைநிறுத்த ஒரு தலைமுறை எடுக்கிறது. அதாவது இவர்களின் பொருளாதார அறிவும், அணுகுமுறை, மனப்பாங்கு என்பன பழைய பாணியிலேயே இருப்பதால் இவர்கள் பொருளாதார ரீதியில் தோல்வியடைகிறார்கள். பெருமளவு பணம் உளைப்பவன் என்றால் அது சுத்துமாத்தின் ஊடாக மட்டுமே சாத்தியம் என்பது இவர்களின் (அனுபவ ரீதியிலான) கணிப்பு. உதாரணமாக இலங்கையில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தால் அவர்: 1) பரம்பரை பணக்காரராக இருக்க வேண்டும் 2) அரசியல் வாதியாக இருக்க வேண்டும் 2) வியாபாரியாக இருக்க வேன்டும் (0 இலிருந்து தொடங்கி வியபாரத்தினால் பெரும் பணம் படைத்த உதாரணங்கள் குறைவு). இங்குள்ள ஒவ்வொரு பில்லியனரும் 18 வயதில் வீட்டிலிருந்து வெறுங்கையுடன் தொடங்குபவர்கள் என்பது இவர்களுக்கு உறைப்பதில்லை. எனவே இவர்களும் சுத்துமாத்து வேலைகளில் ஈடுபட்டு தோல்வியடைகிறார்கள்.
இவ்வாறு பல விடயங்கள் இருப்பதால், நாம் இஸ்ரேலியரின் முன்னுதாரணத்தை பின்பற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். எமது தற்கால யதார்த்தத்திற்கமைய எமது திட்டங்களை கவனமாக வகுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.