Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜேர்மனியில் அரசியல் நெருக்கடிக்கு வாய்ப்பு

Featured Replies

ஜேர்மனியில் அரசியல் நெருக்கடிக்கு வாய்ப்பு
 

image_e17974cf99.jpgபுதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள், ஜேர்மனியில் நேற்று (20) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போதைய சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தன்னுடைய அரசியல் எதிர்காலத்துக்கான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜேர்மனியில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படக்கூடும்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மன், அடுத்த சில வாரங்களுக்கு - சில வேளைகளில் மாதங்களுக்கு - அதிகாரமற்ற அரசாங்கம் போன்று செயற்பட வேண்டியுள்ளது. எனவே, முக்கியமான அரசியல் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புக் காணப்படவில்லை.

ஜேர்மனில், இவ்வாண்டு செப்டெம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், சான்செலர் மேர்க்கெலின் ஆளும் கூட்டணிக்கு முன்னணி கிடைக்கப்பெற்ற போதிலும், அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. எனவே, கூட்டணி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

பெரும்பான்மைக்கு 335 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், மேர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி, 246 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. அவரது கட்சியோடு இணைந்து காணப்பட்ட சமூக ஜனநாயகக் கட்சி, 153 ஆசனங்களைப் பெற்ற போதிலும், தேர்தலில் பெறப்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, கூட்டணியில் அங்கம் வகிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தது. இதனால் சுதந்திர ஜனநாயகக் கட்சியுடனும் பசுமைக் கட்சியுடனும் இணைந்து, புதிய கூட்டணிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அக்கூட்டணிக்கான முயற்சிகளே தோல்வியடைந்துள்ளன.

எனவே தற்போதைய நிலையில், சமூக ஜனநாயகக் கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். ஆனால் அது தோல்வியடைந்தால், மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்படலாம்.

அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமாயின், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைத் தலைமை தாங்குவதற்கு, மேர்க்கெல் பொருத்தமானவர் தானா என்ற கேள்விகளும் காணப்படுகின்றன. அவ்வாறு அந்த வாய்ப்பை அவர் இழப்பாராயின், 4ஆவது தடவையாகவும் சான்செலராகப் பதவியேற்கும் வாய்ப்பை அவர் இழப்பார்.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஜேர்மனியில்-அரசியல்-நெருக்கடிக்கு-வாய்ப்பு/50-207577

  • தொடங்கியவர்

ஜெர்மன் அதிபர் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல் கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முனைப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், புதிதாக கூட்டணி அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அன்ஜலா மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தால் புதிதாக தேர்தல் நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/archives/51051

  • தொடங்கியவர்

ஜெர்மனியின் அரசியல் குழப்பம் ஏற்படுத்தியிருக்கும் புதிய சவால்கள்!

 

 

ஜெர்மனியில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக அதிபர் ஏஞ்சலா மெர்கலின் ‘கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன்’ (சி.டி.யூ.) கட்சிக்கும் பிற கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், மீண்டும் தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத் தில் ஸ்திரத்தன்மையின்மை ஏற்படும் அபாயமும் உருவாகியிருக்கிறது. ஜெர்மனியில் தஞ்சமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான சிரியா அகதிகள் தங்கள் குடும்பத்தினரையும் ஜெர்மனிக்கு அழைத்துக்கொள்ள அனுமதிக்கலாமா, கூடாதா எனும் விவாதம் தான் இந்தப் பேச்சுவார்த்தையில் மிக முக்கியமான அம்சம். வெவ்வேறு சித்தாந்தக் கொள்கை கொண்ட மத்திய வலதுசாரிக் கட்சியான சி.டி.யூ., இடதுசாரிக் கட்சியான கிரீன்ஸ் கட்சி, சந்தைக்கு ஆதரவான ‘ஃப்ரீ டெமாக்ரடிக் பார்ட்டி’ (எஃப்.டி.பி.) ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிவடைந்திருக்கிறது.

சி.டி.யூ.வின் துணை அமைப்பான ‘கிறிஸ்டியன் சோஷியல் யூனியன்’ கட்சி வலியுறுத்தியதன்பேரில், அகதிகளின் குடும்பத்தினரை அனுமதிப்பதற்குத் தற்போது இருக்கும் கட்டுப்பாட்டை நீட்டிப்பது எனும் நிலைப்பாட்டை சி.டி.யூ. எடுத்திருக்கிறது. 2015-ல், சிரியா போன்ற நாடுகளிலிருந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஐரோப்பியாவுக்கு வந்த அகதிகளை அனுமதிப்பது என்று ஜெர்மனி அரசு எடுத்த முடிவுக்கு கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கிரீன்ஸ் கட்சிக்கும் இதில் உடன்பாடுதான்.

ஆனால், ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று பிடிவாதம் காட்டும் எஃப்.டி.பி. கட்சி யால் இந்தப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கூட்டணியில் இடம்பெற மத்திய இடதுசாரிக் கட்சியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சி மறுத்துவரும் நிலையில், இன்னொரு தேர்தலுக்கு வாய்ப்பு அதிகம். செப்டம்பரில் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த இந்தக் கட்சி, சி.டி.யூ.வுக்கு ஆதரவு தர விரும்பவில்லை. அப்படியே ஆதரவு தர முன்வந்தாலும் மெர்கலுக்குப் பதிலாக வேறு தலைவரைத்தான் அதிபராக்க வேண்டும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடு.

சி.டி.யூ. தலைமையில் சிறுபான்மை அரசு அமையலாம் என்றாலும், பழைமைவாதிகள் அதற்குப் பெரிய ஆர்வம் காட்டவில்லை. கூட்டணி அரசு அமைய வாய்ப்பில்லாத இந்தச் சூழலில் மீண்டும் தேர்தல் நடந்தால், அதைப் பயன்படுத்தி அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்று தீர்மானத்துடன் இருக்கிறது வலதுசாரிக் கட்சியான ஏ.எஃப்.டி. கட்சி (ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சி). செப்டம்பரில் நடந்த தேர்தலில் ஏ.எஃப்.டி. கட்சிக்கு 12.6% வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இத்தனை ஆண்டுகளில் நடுநிலையான ஆட்சிக்கு வழிவகுத்த சமரச பாணி ஆட்சி முறையை மீண்டும் வலுப்படுத்துவதுதான் ஜெர்மனியின் இன்றைய முக்கியத் தேவை. இந்த ஆண்டு நெதர்லாந்திலும் பிரான்ஸிலும் நடந்த தேர்தல்களின் முடிவுகள் வெகுஜன ஈர்ப்பு அலைக்கு எதிரான போக்கைத்தான் வெளிப்படுத்தின. இந்தச் சூழலில் ஜெர்மனி எப்படி தனது நடுநிலையான, சமரச பாணி அரசியல் சூழலைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பது மிக முக்கியமான கேள்வி!

http://tamil.thehindu.com/opinion/editorial/article20672053.ece

  • தொடங்கியவர்

ஜெர்மனி: ஏங்கலா மெர்கல் ஆட்சி அமைப்பதில் தொடரும் இழுபறி

98903304f201a183-471e-4453-83d2-4f94d9a8

ஜெர்மனியில் நிலவி வரும் அரசியல் சிக்கலை தீர்ப்பதற்காகத் தமது கட்சியின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியுடன், அந்நாட்டு அதிபர் ஏங்கலா மெர்கல் பேச்சு நடத்த உள்ளார்.

இடது மையவாத கட்சியான சமூக ஜனநாயக கட்சி மெர்கலின் ஜெர்மன் கிறித்தவ ஜனநாயக ஒன்றியத்துடன் தனது கூட்டணியை நீட்டிக்க மறுத்திருந்தது. ஆனால், பிற கூட்டணிக் கட்சிகளின் வற்புறுத்தலால் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மெர்கலின் கட்சி தொடர்ந்து நான்காவது முறையாக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால் முதல் மூன்று முறைகளைப் போல் அல்லாமல் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை.

மொத்தமுள்ள 709 இடங்களில் அவரது கட்சி 246 இடங்களை மட்டுமே பெற்றது. ஆட்சி அமைக்க 355 இடங்கள் தேவை. அதனால், செப்டம்பர் முதல் மெர்கல் தலைமையிலான அமைச்சரவை தற்காலிக அமைச்சரவையாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இந்த வாரம் சுதந்திர ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சியுடன் மெர்கல் நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

9890330358367588-10aa-464f-8cc2-abd191c8

சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் மார்டின் ஸ்கல்ஸ் பிற கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தால் கூட்டணியை மறுபரிசீலனை செய்கிறார்.   -  Getty Images

ஜெர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டைன்மயர் முன்னிலையில் மெர்கல் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் மார்டின் ஸ்கல்ஸ் ஆகியோர் இடையே அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மெர்கல் தலைமையிலான சிறுபான்மை அரசு தொடர மார்டின் ஸ்கல்ஸ் ஆதரவு தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சி தோல்வி அடைந்தால் பசுமைக் கட்சியுடன் சிறுபான்மை அரசமைக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், ஒரு நிலையற்ற சிறுபான்மை அரசுக்குத் தலைமை தாங்குவதை விட, மீண்டும் தேர்தலை சந்திக்கவே விரும்புவதாக மெர்கல் கூறியிருந்தார்.

மீண்டும் தேர்தல் நடந்தாலும், இதே போன்று யாருக்கும் பெரும்பான்மையற்ற முடிவுகளே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏங்கலா மெர்கலின் அரசியல் வாழ்வில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அரசியல் நெருக்கடியாகப் பார்க்கப்படும் இந்த இழுபறி, மெர்கலை தங்கள் பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையை உண்டாக்கும் தலைவாராகப் பார்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பிற நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/bbc-tamil/article20871827.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.