Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு?

Featured Replies

ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும்

முயற்சிகளுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவும் இந்தியாவும் இந்த தருணத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுவதுடன், இந்த இரு நாடுகளும் ஆதரவளிக்காத பட்சத்தில் குறிப்பிட்ட தீர்மானம் கொண்டுவரப்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கைக்கு ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவும் கிடைக்கலாம்.

ஜெனீவாவில் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான தீர்மானத்தை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தான் அறியவில்லை என இலங்கை வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டால், இலங்கை பொறுப்புணர்வு வாய்ந்தது, ஜனநாயக நாடு என்பதை நிரூபிப்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கூறவுள்ளதாக கோஹண குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் பலனளிப்பதற்கு சில காலம் எடுக்கும். இலங்கை சர்வதேச தரத்தினை அடைவதற்கு போராடும் நெருக்கடிக்குள்ளான ஜனநாயகம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச நாடுகள் இதற்கு உதவ வேண்டும் விமர்சனம் செய்யக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து இந்தியா கவலை கொண்டிருந்தால் கூட அது இலங்கையை தனிமைப்படுத்த விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

நமக்கு நன்றாகப் புரிந்த விடயம், இலங்கை பிரச்சனையில் முட்டுக்கட்டையாக இந்தியா இருப்பதால்தான் எங்கள் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவை பகைத்துக் கொண்டால் தனி ஈழம் அமைப்பது முடியாத காரியம்.

அவர்களாகவும் உதவிசெய்ய மாட்டார்கள், நாங்களாக தலைநிமிரவும் விடமாட்டார்கள். எப்போது எப்படி எமக்கு விடிவு ஏற்படும் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு நன்றாகப் புரிந்த விடயம், இலங்கை பிரச்சனையில் முட்டுக்கட்டையாக இந்தியா இருப்பதால்தான் எங்கள் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவை பகைத்துக் கொண்டால் தனி ஈழம் அமைப்பது முடியாத காரியம்.

அவர்களாகவும் உதவிசெய்ய மாட்டார்கள், நாங்களாக தலைநிமிரவும் விடமாட்டார்கள். எப்போது எப்படி எமக்கு விடிவு ஏற்படும் ?

இப்பொழுது எமது ஈழ உறவுகளுக்கு மெல்ல மெல்ல அரசியல் , களநிலவரம் தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

Inthiya Ezath thamizar uRavu paRRiya vidayangkaL kadanthakaalaththu iru tharapputh thavaRukaLuL puthaiNthupooy mAddik koNduLLathu. ivvidayam paRRiya thezivAna aNukumuRai eththarapilum kANap padavillai enpathu vEthanai tharukiRathu.

என்று நாமேல்லோரும் ஒன்று சேர்ந்து எம் கால்களில் நிற்கின்றோமோ அன்று தான் எமக்கு விடுதலை. அந்நியரை நம்பாமல் எம் கைகளை நாமே பலப்படுத்துகின்றோமோ அன்று விடுதலைக் காற்று எம் மண்ணில் வீசும்.

ஈழத்திலிருந்து

ஜானா

இந்தியரும் அமரிக்கரும் இலங்கை அரசின் அண்மைக்கால போரியல் வெற்றி தோற்றப்பாட்டையும் இலங்கை அரசின் வீர பிரச்சாரங்களையும் நங்கி தமிழினம் அழிக்கப்படும் வரை இருந்து விட்டு அரைகுறை தீர்வை தமிழர் தரப்பில் திணிக்கும் நப்பாசையில் இருக்கீனம்.புலிகள் பதில் சொல்லப்போகும் போது வாலை சுருட்டிகொன்டு ஆப்பிழுத்த குரங்கின் கதைபோல இருக்கப்போகுது இவர்களின் கதை

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியரும் அமரிக்கரும் இலங்கை அரசின் அண்மைக்கால போரியல் வெற்றி தோற்றப்பாட்டையும் இலங்கை அரசின் வீர பிரச்சாரங்களையும் நங்கி தமிழினம் அழிக்கப்படும் வரை இருந்து விட்டு அரைகுறை தீர்வை தமிழர் தரப்பில் திணிக்கும் நப்பாசையில் இருக்கீனம்.புலிகள் பதில் சொல்லப்போகும் போது வாலை சுருட்டிகொன்டு ஆப்பிழுத்த குரங்கின் கதைபோல இருக்கப்போகுது இவர்களின் கதை

ஆனால் இன்றும் எம்மிடையே இந்தியா எமக்கு உதவி செய்யும் என்று பல்இளிக்கிறவ இருக்கினம் தம்பிமார்.

இந்தியரும் அமரிக்கரும் இலங்கை அரசின் அண்மைக்கால போரியல் வெற்றி தோற்றப்பாட்டையும் இலங்கை அரசின் வீர பிரச்சாரங்களையும் நங்கி தமிழினம் அழிக்கப்படும் வரை இருந்து விட்டு அரைகுறை தீர்வை தமிழர் தரப்பில் திணிக்கும் நப்பாசையில் இருக்கீனம்.புலிகள் பதில் சொல்லப்போகும் போது வாலை சுருட்டிகொன்டு ஆப்பிழுத்த குரங்கின் கதைபோல இருக்கப்போகுது இவர்களின் கதை

ஆனால் இன்றும் எம்மிடையே இந்தியா எமக்கு உதவி செய்யும் என்று பல்இளிக்கிறவ இருக்கினம் தம்பிமார்.

இருக்கீனம் ஆனால் புலிகளிடம் அதை பர்றிய தெளிவான புரிதல் இருக்குது என நான் நம்புகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.