Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 235 பேர் பலி

Featured Replies

எகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 184 பேர் பலி

 

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 184 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடந்த மசூதிபடத்தின் காப்புரிமைEPA

அல் ஆரிஷ் அருகில் உள்ள பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இச்சம்பவம் நடந்துள்ளது என இதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக இப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டங்கள் 2013-ம் ஆண்டு முதல் தீவிரமடைந்தன.

இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரால் சினாய் தீபகற்பத்தில் அடிக்கடி தாக்குதல் நடப்பதுண்டு. ஆனால், இதுவரை நடந்ததிலேயே அதிக உயிர்ப் பலி கொண்ட தாக்குதல் இதுதான்.

மசூதியில் பிரார்த்தனையில் இருந்த பாதுகாப்புப் படையின் ஆதரவாளர்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வரைபடம்

அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி, பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து இச்சம்பவம் குறித்து விவாதிக்க உள்ளதாக எகிப்தின் தனியார் செய்தி தொலைக்காட்சி எக்ஸ்ட்ரா நியூஸ் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று இன்னும் தெரியிவில்லை.

கடந்த ஜூலை 2013-ல் எகிப்திய ராணுவம் இஸ்லாமிய ஜனாதிபதியான மொஹமத் மோர்சியை வீழ்த்தியதையடுத்து, சமீப காலங்களில் ஜிகாதி போராளிகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போதிலிருந்து, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்பவர்களுடன் இணைந்த சினாய் மாகாண குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-42112172

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எகிப்தில் மசூதியை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல்: 235 பேர் பலி


எகிப்தில் மசூதியை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல்: 235 பேர் பலி
 

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள மசூதியை இலக்கு வைத்து தீவிரவாதிகள் இன்று நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 235 பேர் பலியாகியுள்ளனர்.

மசூதியில் பிரார்த்தனைக்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் இதன்போது காயங்களுக்குள்ளாகினர்.

வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே இன்று வாகனத்தில் சென்ற 4 தீவிரவாதிகள் சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களைக் குறிவைத்து சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

http://newsfirst.lk/tamil/2017/11/எகிப்தில்-மசூதியை-இலக்கு/

  • தொடங்கியவர்

எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது யார்? சம்பவம் நடந்தது எப்படி?

எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 235 பேர் கொல்லப்பட்ட நிலையில், 'முழு பலத்தை' பயன்படுத்தி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி உறுதியாகக் கூறியுள்ளார்.

பிர் அல்-அபெட் நகரில் உள்ள அல்-ரவுடா மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

எதிராளிகளை இலக்கு வைத்து அருகில் உள்ள மலைகளில் ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சமீபத்தில் நடந்த மிக மோசமான இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

p05p4fx7.jpg

சினாய் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய கிளர்ச்சி குழுவுடன் பல ஆண்டுகளாக எதிப்தின் பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் நடந்துள்ள மோசமான தாக்குதலுக்கு இக்குழுவினரே பின்னணியில் இருந்துள்ளனர்.

இக்குழுவினர் வழக்கமாக கிருஸ்தவ தேவாலயங்களையும், பாதுகாப்பு படையினரையும் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவார்கள். ஆனால், தற்போது மசூதியில் நடத்தப்பட்டுள்ள மோசமான தாக்குதல் எகிப்து நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

''தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடும் நமது நடவடிக்கைகளை நிறுத்தும் முயற்சியாகவே இது நடந்துள்ளது'' என தாக்குதலுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேசிய அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி கூறினார்.

மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்

என்ன நடந்தது?

டஜன் கணக்கான துப்பாகிதாரிகள், வாகனத்தில் மசூதியைச் சூழ்ந்து நின்று வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் தப்பித்து சென்றவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.

மசூதிக்குச் செல்லும் வழியை முடக்க, மசூதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிக்க வந்த ஆம்புலன்ஸை நோக்கியும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

எகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅல்-ரவுடா மசூதி

குறைந்தது 100 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

நவீன எகிப்து வரலாற்றில், இது மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது. பிர் அல்-அபெட், கெய்ரோவில் இருந்து 211 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

http://www.bbc.com/tamil/global-42120600

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.