Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் விடு­த­லைக்­காக கள­மா­டிய மாவீரர்­க­ளுக்கு அஞ்­சலி : சபையில் சிறி­தரன் எம்.பி.

Featured Replies

தமிழர் விடு­த­லைக்­காக கள­மா­டிய மாவீரர்­க­ளுக்கு அஞ்­சலி : சபையில் சிறி­தரன் எம்.பி.

 

ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்

தமிழர் விடு­த­லைக்­காக கள­மா­டிய மாவீ­ரர்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறீ­தரன் சபையில் அஞ்­சலி செலுத்­தி­ய­தோடு உணர்வு பூர்வ கருத்­துக்­க­ளையும் முன்­வைத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை வெளி­வி­வ­கார, போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள், அபி­வி­ருத்தி, பணிப்­பொ­றுப்பு ஆகிய அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான குழு நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தமிழர் தம் வாழ்­வோடு, அவர்தம் வர­லாற்­றோடு, ஆன்ம உணர்­வு­க­ளோடு ஊறி ஒரு­மித்து, நெஞ்­ச­மெங்கும் நிறைந்து நிற்கும் புனி­த­மான நாளே

மாவீரர் நாள். இந்த நாள் ஆயி­ர­மா­யிரம் சுதந்­திரச் சுடர்­க­ளாக, எமது விடு­த­லைக்­கோ­விலை அலங்­க­ரித்து நின்ற மாவீ­ரர்­களை போற்றி வணங்கும் புனி­தநாள்.

இது சாவுக்கு கலங்­கி­யழும் சோக நாளோ அன்றி துய­ரத்தில் உறைந்­து­போகும் துக்­க­நாளோ அல்ல. தியா­கி­களின் திருநாள். ஒரு சத்­திய இலட்­சி­யத்­திற்­காக தம் இன்­னு­யிரை ஈகம் செய்த எம்­மின வீரர்­களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்­வையும்;, ஒப்­பற்ற தியா­கங்­க­ளையும், அற்­பு­த­மான அர்ப்­ப­ணிப்­புக்­க­ளையும் நம் நெஞ்­சப்­ப­சு­மையில் நினை­வு­கூரும் உணர்­வெ­ழுச்சி நாள்.

அவர்­க­ளது வீரத்­திற்கும், அதி­யுன்­னத தியா­கத்­திற்கும் தமி­ழர்­க­ளா­கிய நாம் இன்றும், என்றும் தலை­வ­ணங்­குவோம். ஈடி­ணை­யற்ற ஈகங்கள் மூலம் தாயக விடு­த­லைக்காய் தமி­ழர்கள் கொடுத்த விலை தன்­னி­க­ரற்­றது. எமது மக்கள் இறைமை பெற்று பெரு­மை­யுடன் வாழ­வேண்­டு­மென்ற இலட்­சி­யத்­திற்­காக எமது மாவீ­ரர்கள் புரிந்த தியா­கங்கள் உலக வர­லாற்­றி­லேயே ஒப்­பற்­றவை. மூன்று தசாப்­த­மாக மூண்­டி­ருந்த விடு­த­லைப்­போரில் மாவீ­ரர்­களின் மாசற்ற தியா­கமே ஒப்­பற்ற சாத­னை­களை உரு­வாக்­கி­யி­ருந்­தது. தமி­ழீழ மக்­களின் தேச விடு­த­லைப்­போ­ராட்­டத்தை சர்­வ­தேச மயப்­ப­டுத்தி உல­கத்தின் கவ­னத்தை எங்கள் மீது திசை திருப்­பி­யதும் மாவீ­ரர்­களின் மகா­வீ­ரமே.

எந்த ஒரு நாட்­டிலும். எந்த ஒரு காலத்­திலும், எந்த ஒரு போராட்­டத்­திலும் நிக­ழாத அற்­பு­த­மான அர்ப்­ப­ணிப்­புக்கள் எமது மண்ணில், எமது போராட்­டத்தில் எமது மாவீ­ரர்­களால் நிகழ்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. எந்­த­வொரு மானிட வர­லாறும் இன்­ற­ளவும் கண்­டி­ராத வீர­கா­வியம் எமது மாவீ­ரர்­களால் எமது மண்ணில் படைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

நீண்­ட­கா­ல­மாக நெருப்­பாக எரிந்து கொண்­டி­ருந்த தமி­ழரின் விடு­தலை எழுச்­சிக்­காக, துரோ­கங்­க­ளுக்கும், துன்­பி­யல்­க­ளுக்கும் மத்­தியில் எந்­த­வித உத­வி­யு­மின்றி, எவ­ரது ஆத­ர­வு­மின்றி தமது பலத்­திற்கு மிஞ்­சிய பாரிய சக்­தி­க­ளுக்­கெ­தி­ராக தனித்து நின்று போராடும் நிலை ஏற்­பட்­ட­போதும், தள­ராத துணி­வோடு கள­மாடி தமது இன்­னு­யிர்­களை ஈந்து தேச விடு­த­லைத்­தீயை அணை­யாது காத்த அகல்­வி­ளக்­கு­க­ளா­கிய மாவீரச் செல்­வங்­களை தமி­ழர்கள் தங்கள் காவல்த் தெய்­வங்­க­ளா­கவே காலம் காலமாய் கௌர­வித்து வரு­கி­றார்கள்.

நீண்டு நிகழ்ந்த எம் விடு­த­லைப்­ப­ய­ணத்தில் பல்­வேறு நெருப்­பா­று­களை நீந்­திக்­க­டந்த நாம் அந்த அக்­கி­னிப்­பி­ர­வே­சங்­களில் அழிந்­து­போ­காமல் நிலைத்து நிற்­ப­தற்கு மாவீ­ரர்­களின் இலட்­சிய உறு­தியே கார­ண­மாகும். அடக்­கு­மு­றைக்கு ஆளாகி இன்று மாபெரும் இன அழிவை சந்­தித்து நிற்கும் எமக்­காக தன்­னாட்சி கோரி மாவீ­ரர்கள் வரித்­துக்­கொண்ட இலட்­சியம் நேரா­னது, நிலை­யா­னது, நியா­ய­மா­னது என்­ப­தா­லேயே மக்கள் மனங்­களில் மாவீ­ரர்கள் இன்­ற­ளவும் புனி­தர்­களாய் பூசிக்­கப்­ப­டு­கி­றார்கள்.

கொண்­ட­கொள்­கையே அவர்­க­ளது மலை­யான பலம். அந்த மலை­யான பலத்தில் நிலை­யாக நின்­ற­மையே விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­புக்­கென ஒரு தனித்­து­வத்­தையும், சிறப்­பான சரித்­தி­ரத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யது. உலக வல்­ல­ர­சொன்றின் இரா­ணுவ வல்­லா­திக்கம் பல­மாக நெருக்­கி­ய­போ­து­கூட இலட்­சி­யத்தை தள­ர­வி­டாது, நெஞ்­சு­று­தி­யோடு நிமிர்ந்து நின்று போராடி, ஆபத்­தான கட்­டத்­திலும் உறுதி ஒன்­றையே தமது இறுதி ஆயு­த­மாகக் கொண்டு உலகின் மிகப்­பெ­ரிய ஆயு­த­ப­லத்­தையே எதிர்­கொண்டு எழுந்­து­நின்ற வீர மற­வர்­களை நெஞ்­சி­ருத்தி அஞ்­ச­லிப்­பதை தமி­ழர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தமது தலை­யாய கட­மை­யா­கவே கரு­து­கி­றார்கள்.

மாவீ­ரர்கள் சமா­தா­னத்தின் விரோ­தி­களோ அன்றி சமா­தான வழியில் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு எதி­ரா­ன­வர்­களோ அல்ல. அவர்கள் வேண்­டி­யது உண்­மை­யான, உறு­தி­யான சமா­தா­னத்­தையே! எமது மக்கள் எமது மண்ணில் நிம்­ம­தி­யாக, சுதந்­தி­ர­மாக, அந்­நி­யத்­த­லை­யீ­டுகள் ஏது­மின்றி அமை­தி­யாக வாழ்ந்து, தமது அர­சியல் வாழ்வை தாமே தீர்­மா­னிக்­கக்­கூ­டிய நிரந்­த­ர­மான சமா­தா­னத்­தையே அவர்கள் வேண்டி நின்­றார்கள். ஆன­போதும் சிங்­கள, பௌத்த பேரி­ன­வா­தத்துள் ஆழ அமிழ்ந்­தி­ருந்த அர­சி­ய­ல­மைப்­புக்­களும், அவற்றின் தலை­மை­களும் தமி­ழீழ மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை ஒரு­போதும் புரிந்­து­கொள்­ள­வில்லை.

சிங்­க­ள­தேச பிர­தான அர­சியல் கட்­சிகள் எவையும் தமி­ழரின் தேசிய இனப்­பி­ரச்­ச­னையின் அடிப்­ப­டை­க­ளைக்­கூட அங்­கீ­க­ரிக்க தயா­ராக இருக்­க­வில்லை. வட­கி­ழக்கு மாநிலம் தமி­ழர்­களின் வர­லாற்­றுத்­தா­யகம் என்­ப­தையோ, தமி­ழர்கள் ஒரு தனித்­து­வ­மான இனக்­கட்­ட­மைப்பைக் கொண்ட மக்கள் சமூகம் என்­ப­தையோ, தமி­ழீழ மக்­க­ளுக்கு பிரிந்து செல்லும் உரி­மை­யு­ட­னான சுய­நிர்­ணய உரிமை உண்டு என்­ப­தையோ எந்­த­வொரு சிங்­கள அர­சியல் இயக்­கமும் ஏற்­றுக்­கொள்­ள­வு­மில்லை. ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக இருக்­க­வு­மில்லை.

இந்த நிலை­யி­லேயே எமக்­கான உரி­மைகள் கிடைப்­ப­தற்­கான ஏதுக்கள் ஏது­மில்லை என்­பதால் நாமே எமது உரி­மை­களைப் போராடி வென்­றெ­டுக்க வேண்டும் என்றும் போரா­டாது, இரத்தம் சிந்­தாது, சாவையும் அழி­வையும் சந்­திக்­காது, தியா­கங்கள் புரி­யாது எந்­த­வொரு தேசமும் விடு­தலை பெற்­றதாய் வர­லாறு இல்லை என்­ப­தையும் புரிந்­து­கொண்டு ஆக்­கி­ர­மிப்­பா­ளரின் அடக்­கு­மு­றைக்கு ஆளாகி அவ­லக்­குரல் எழுப்­பி­நின்ற தமது மக்­களின் துய­ரக்­கண்­ணீரைத் துடைத்­தெ­றிய உறு­தி­யெ­டுத்து, பணிந்து போகாது, தமது இரத்­தத்தை இரை­யாக்­கி­யேனும் இலட்­சி­யத்­திற்­காக போரா­டுவோம் என துணிந்து போரா­டிய தூய வீரர்­களை என்றென்றும் எம் நெஞ்சிருத்துவோம்.

அவர்தம் இலட்சியக்கனவுகள் எவையும் எட்டப்படவில்லை எனினும் ,மூன்று தசாப்தங்கள் முடிவின்றித் தொடர்ந்த ஆயுதப்போருக்கு ஓய்வுகொடுத்து, ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், போருமின்றி, நிலையான சமாதானமுமின்றி, இயல்பு நிலையுமின்றி, இடைக்காலத் தீர்வுமின்றி, இனப்பிரச்சனைக்கு முடிவுமின்றி, விடிவு, விடுதலை, எதிர்கால சுபீட்சம் எதுவுமின்றி சூனியமான அரசியல் வெறுமைக்குள்ளேயே நாம் இன்றளவும் வாழ்ந்துவரும் இந்த வேளையிலும், மண்ணின் விடிவுக்காய், மக்களின் விடுதலைக்காய் களமாடி வீழ்ந்த மறத்தமிழ் மாவீரர்களை எம் நெஞ்சிருத்தி அஞ்சலிப்பதில் அவர்தம் வீரப்பரம்பரையில் வந்துதித்த தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஆத்ம திருப்தி அடைகிறோம் என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-11-26#page-1

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.