Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர்தேசத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் 2017.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெருவெழுச்சியுடன் நடைபெற்ற சிட்னி மாவீரர் நாள் நிகழ்வு!

 

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. திங்கட்கிழமை 27 – 11 – 2017 அன்று நியுவிங்ரன் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுவெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.

   
சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கபட்ட மாவீரர் நினைவு மைதானத்தில், மாதிரி மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்புகள் செய்யப்படடு 200 வரையான மாவீரர்களின் கல்லறைகள் படங்களுடன் மாவீரர் குடும்பங்களின் வணக்க நிகழ்வுக்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

மாலை ஆறு மணிக்கு கப்டன் புவிராஜ் அவர்களின் தாயார் திருமதி விக்ரோரியா சண்முகம் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஆரம்பமான நிகழ்வில், அவுஸ்திரேலிய பூர்வகுடிமக்களின் கொடியை தமிழ்ச்செயற்பாட்டாளர் திருமதி சாம்பவி அவர்களும், அவுஸ்திரேலிய தேசியக்கொடியை மூத்த தமிழ்ச்செயற்பாட்டாளர் திரு. ஸ்கந்தகுமார் அவர்களும், தமிழீழ தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சிட்னி பணியக பொறுப்பாளர் திரு ஜனகன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து பிரதான ஈகச்சுடரை ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கைச் சமரின்போது வீரச்சாவடைந்த கப்டன் சந்தியா அவர்களின் சகோதரி திருமதி வாணி ஏற்றிவைக்க, சமநேரத்தில் அனைத்து மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கும் மாவீரர்குடும்பங்களைச் சேர்ந்தோர் மற்றும் உரித்துடையோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.

மொழியாகி மூச்சாகி என்ற துயிலுமில்ல பாடல் இசைக்கப்பட, அனைவரும் உணர்வெழுச்சியுடன் மாவீர்ர்களை நினைவுகூர்ந்தனர். அடுத்து நீண்ட வரிசையில் திரண்ட மக்கள் அனைவரும் மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து சிட்னி தமிழ் இளையோரால் மாவீர்களின் கனவுகளை பிரதிபலிக்ககூடிய வணக்க நடனம் ஒன்றை எழுச்சியுடன் படைத்தனர். இதில் மாவீர்களின் நினைவுகளை மீட்டியும் மாவீர்களின் கனவான தமிழீழ தாயகத்தை விடுதலையடையச் செய்வதே தமிழர்களின் தீர்வாகும் என்ற உறுதிமொழியுடன் அவ்வணக்க நடனம் நிறைவுபெற்றது.

நிகழ்வின் சிறப்புரையை பேர்த்தில் இருந்து வருகைதந்த தமிழ்ச் செயற்பாட்டாளர் திரு. அமல்ராஜ் வழங்கினார். மாவீரர்களின் நினைவுகளை சுமந்திருக்கின்ற இந்த நாளிலே, அவர்களின் கனவான தமிழர்களின் விடுதலைக்கான அடிப்படைகளான தமிழர்களின் தாயகம் தமிழர்களின் தேசியம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையிலான தீர்வை பெற்றுக்கொள்வதாகவே இருக்கவேண்டும் எனவும், எமது மாவீர்களின் விடுதலைப் போராட்டமானது தமிழர்களின் அரசியல் கோரிக்கையை வெளியுலகுக்கு கொண்டுவந்துள்ளது என்றும் அதனை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட பரிணாமத்தில் விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் தனதுரையில் அவர் குறிப்பிட்டார்.

அடுத்ததாக சிட்னி தமிழ் இளையோர்களின் இன்னொரு படைப்பான தமிழா இணைந்துகொள் என்ற நடனம் இடம்பெற்றது. அதில் தமிழர்கள் உலகெங்கும் பிரிந்து வாழ்ந்தாலும் அனைவரும் இணைந்தால் பலமாக தமிழர்களாக முன்னேறமுடியும் என்ற கருப்பொருளில் அந்நடனம் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியாக தேசிய கொடிகள் இறக்கப்பட்டதை தொடர்ந்து தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உறுதியேற்புடன் நிகழ்வு இரவு 8.30 மணிக்கு நிறைவுற்றது.

வேலைநாளாக இருந்தபோதும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டு மாவீரர்களின் நினைவுநாளில் கலந்துகொண்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.


sydney-maveeraar-271117-seithy%20(1).jpgsydney-maveeraar-271117-seithy%20(2).jpgsydney-maveeraar-271117-seithy%20(3).jpgsydney-maveeraar-271117-seithy%20(4).jpgsydney-maveeraar-271117-seithy%20(5).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=194616&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.