Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலி எரிமலை: எச்சரிக்கையை மீறி வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம்

Featured Replies

பாலி எரிமலை: எச்சரிக்கையை மீறி வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம்

98961962gettyimages-880571696jpg

இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலையின் சீற்றம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, இன்னும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என இந்தோனீசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. எரிமலைக்கு தொலைவில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மற்றவர்கள் தங்களது கால்நடைகளை விட்டுவர விரும்பவில்லை.

இரண்டாம் நாளாக பாலி விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பகுதியான இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர். ரத்து செய்யப்பட்ட 445 விமானங்களால் 59 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாம்பல் விழுந்துள்ள பகுதிகளில், அதிகாரிகள் முகமுடிகளை விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், மலையை சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

98961961gettyimages-880257540jpg

எரியும் பாறைகளின் தீக்குழம்பு மலையில் மேலிருந்து கீழே பாய்ந்து வருவது காணப்பட்டது. இதனால் இதனை சுற்றுயுள்ள பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், திங்கட்கிழமையன்று 40,000 பேர் மட்டுமே வெளியேறினர்.

மலை உச்சியின் மேலிருந்து 3,400 மீட்டர் வரை கரும்புகை சூழ்ந்துள்ளது.

எரிமலையில் இருந்து தொடர்ந்து சாம்பல் துகள்கள் வெளிப்படுவதை காண முடிகிறது. வெடிப்பின் சத்தம், மலை உச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் வரை கேட்கப்படுகிறது

தண்ணீரோடு கலந்துள்ள குளிர்ந்த தீக் குழம்புகளை எரிமலைக்கு அருகில் உள்ள வயல்கள் மற்றும் ஆறுகளில் காண முடிகிறது.

98961959gettyimages-880257554jpg

கனமழை காரணமாக இந்த குளிர்ந்த தீக்குழம்புகள் அதிகரிக்கக்கூடும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பிரதிநிதி சுடோபோ பூர்வோ நூக்ரோஹோ எச்சரித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதமே எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், மக்களை கூட்டமாக வெளியேற்றினர். எச்சரிக்கை நிலை குறைந்ததையடுத்து அக்டோபரில் மக்கள் வீடு திரும்பினர்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article21014253.ece

  • தொடங்கியவர்

இந்தோனேசியாவில் தொடர்ந்து வெடிக்கும் மவுண்ட் அகுங்: 2-வது நாளாக விமானங்கள் நிலையங்கள் மூடல்

 
opPNG

இந்தோனேசியாவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால், பாலி தீவின் விமான நிலையம் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.

பாலி தீவில் மவுண்ட் அகுங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 21-ம் தேதி லேசாக சீறத் தொடங்கியது. கடந்த 25-ம் தேதி முதல் எரிமலை சீற்றம் அதிகரித்தது. இதன்காரணமாக 10 கி.மீ. சுற்றளவுக்கு எரிமலை சாம்பல் பரவியுள்ளது.

எரிமலை அவ்வப்போது வெடித்துச் சிதறுவது சுமார் 12 கி.மீ. தொலைவு வரை கேட்க்கிறது. மலை உச்சியில் சுமார் 11,150 அடி வரை கரும்புகை சூழ்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாலி தீவு விமான நிலையம், அருகில் உள்ள லொம் போங் தீவு விமான நிலையம் ஆகியவை மூடப்பட்டுள்ளன. 450-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் திங்கட்கிழமை ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்றும் எரிமலை வெடிப்பு தொடர்ந்து வருவதால் இரண்டாவது நாளாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எரிமலை வெடிப்பால், அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இதுவரை 10,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இந்தியர்களுக்கு உதவ ஏற்பாடு

மவுண்ட் அகுங் எரிமலை வெடிப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் இந்திய குழுக்கள் உதவ தயாராக உள்ளன என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டர் பக்கத்தில், "கவலைப்பட வேண்டாம். இந்தோனேசியாவிலுள்ள இந்தியத் தூதர் பிரதிப் ராவத்தின் குழுவினர் பணியில் உள்ளனர். நான் தொடர்ந்து நிலைமையை காண்காணித்து வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/world/article21030543.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.