Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியது வடகொரியா

Featured Replies

மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியது வடகொரியா

வடகொரியா ஏவுகணைபடத்தின் காப்புரிமைPRESS EYE Image captionவடகொரியா இந்த ஆண்டு ஜூலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் முதல் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியது

வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தியை அமெரிக்க அரச வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

தென் பியாங்யாங் பிராந்தியத்தில் பியாங்யாங்கில் இருந்து கிழக்கு நோக்கி அந்த பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென்கொரிய செய்தி முகமையான யான்ஹப் தெரிவிக்கிறது.

ஏற்கெனவே ஏவப்பட்ட ஏவுகணைகளைப் போல, இந்த ஏவுகணையும் ஜப்பான் மீது பறந்து சென்றதா அல்லது வேறு எந்த திசையில் செலுத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வடகொரிய தலைவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவடகொரிய தலைவர் கிம்-ஜோங் உன்

வடகொரியாவின் அணு ஆயுதத்திட்ட முன்னெடுப்பு தொடர்பாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வடகொரியா இந்த ஆண்டு பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. அதில், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் அடங்கும்.

தற்போது ஏவப்பட்டுள்ள ஏவுகணை தொடர்பாக தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என தென்கொரிய ராணுவத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

புதிய ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லக்கூடிய வல்லமை படைத்தது என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

http://www.bbc.com/tamil/global-42160502

  • தொடங்கியவர்

''வடகொரியாவின் ஏவுகணை உலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளது'': அமெரிக்கா

வடகொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வட கொரியா முன்பு ஏவிய ஏவுகணைகளை விட மிகவும் உயரமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியதுடன், உலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார்.

ஜப்பான் கடலில் விழுவதற்கு முன்பு, வட கொரியாவின் இந்த ஏவுகணை 4,500 கிலோ மீட்டர் உயரத்தில், 960 கிலோ மீட்டருக்கு பறந்ததாக தென் கொரியா ராணுவம் கூறியுள்ளது.

வட கொரியாவின் தொடர் ஏவுகணைத் திட்டத்தின் சமீபத்திய ஒன்றான இந்த ஏவுகணையால், உலகளவிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளது.

சமீபத்திய ஏவுகணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் ஜேம்ஸ் மாட்டிஸ் விளக்கினார்.

வட கொரியா கடைசியாக செப்டம்பர் மாதம் தனது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது.

அந்த மாதமே ஆறு ஆணு சோதனைகளையும் வட கொரியா நடத்தியது. உலக நாடுகளின் கண்டனம் மற்றும் ஐ.நாவின் தடைகளுக்கு மத்தியிலும் வட கொரியா தனது ஏவுகணை திட்டத்தை அபிவிருத்தி செய்துக்கொண்டிருக்கிறது.

சமீபத்திய ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் அவரச அமர்வாக கூட உள்ளது.

'' முன்பு ஏவிய ஏவுகணைகளை விட, இது உயரமாக பறந்தது'' என ஜேம்ஸ் மட்டிஸ் கூறுகிறார்.

வடகொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தென் பியாங்யாங் பிராந்தியத்தில் உள்ள பியாங்சாங்கில் இருந்து கிழக்கு நோக்கி அந்த பாலிஸ்டிக் ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென்கொரிய செய்தி முகமையான யான்ஹப் தெரிவிக்கிறது.

இந்த ஏவுகணை 50 நிமிடம் பயணித்தாகவும், வட கொரியாவால் ஏற்கெனவே ஏவப்பட்ட ஏவுகணைகளைப் போல இந்த ஏவுகணை ஜப்பானுக்கு மேலே பறக்கவில்லை என்றும் ஜப்பான் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏவுகணை வானத்தில் பறந்துகொண்டிருக்கும்போதே, இது குறித்து டிரம்பிடம் விளக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறுகின்றது. ''நாம் அதைக் கவனித்துக்கொள்வோம்'' என பிறகு டிரம்ப் கூறியிருக்கிறார்.

வடகொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தென் கொரிய அதிபர் மூன், டிரம்புடன் தொலைப்பேசியில் பேசியதாகவும், ''வட கொரியாவின் பொறுப்பற்ற செயல்பாடு குறித்து கடும் கண்டனத்தை'' இரு தலைவர்களும் தெரிவித்ததாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குக் கடுமையான அச்சறுத்தலை விடுத்துள்ளது என இரு தலைவர்களும் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/global-42162002

  • தொடங்கியவர்

அமெரிக்க கண்டத்தையே அழிக்கவல்லதாம் ; மிரட்டுகிறது வடகொரியா

Published by Priyatharshan on 2017-11-29 13:30:55

 
 

தாம் ஏவிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது முழு அமெரிக்க கண்டத்தையும் அழிக்கக்கூடியதென வடகொரியா தெரிவித்துள்ளது.

north.jpg

இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணையானது இன்று புதன்கிழமை அதிகாலை ஏவப்பட்டுள்ளது.

46C7440D00000578-5123911-image-a-3_15119

குறித்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ள நிலையில், ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

469A836500000578-5123911-image-a-3_15118

ஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை, வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட அதிக உயரம் சென்றுள்ளதாகவும் 4,475 கிலோ மீற்றர் உயரத்தில், 960 கிலோ மீற்றருக்கு 53 நிமிடங்கள் இந்த ஏவுகணை பறந்ததாகவும் அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27661

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.