Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் விடாப்­பி­டி­யான நிலைப்­பாடு

Featured Replies

முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் விடாப்­பி­டி­யான நிலைப்­பாடு

 

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி அதி­கா­ரப்­ப­கிர்வின் மூல­மான அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்ற நிலையில் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வா­னது அவர்­க­ளது அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யத்­தக்க வகையில் அமை­ய­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­தது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்றார்.

இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்­டியை உள்­ள­டக்­கிய சுய­நிர்­ணய உரி­மையை உறு­திப்­ப­டுத்தும் அர­சியல் தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதே தமிழ் மக்­க­ளது கோரிக்­கை­யாக உள்­ளது. கடந்த ஆறு தசாப்­த­கா­லத்­திற்கும் மேலாக தமிழ் மக்கள் தமது உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தற்­காக தொடர்ச்­சி­யான போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். மூன்று தசாப்­த­கா­லத்­திற்கும் மேலாக மித­வாத அர­சியல் தமிழ் தலை­வர்கள் ஜன­நா­யக ரீதியில் உரி­மை­களை நிலை­நாட்­டக்­கோரி போராட்­டங்­களை நடத்­தினர். அந்­தப்­போ­ராட்­டங்கள் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்­க­ளினால் தட்­டிக்­க­ழிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து 80களில் தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைமை உரு­வா­னது. மூன்று தசாப்­த­கா­ல­மாக ஆயு­தப்­போ­ராட்டம் இடம்­பெற்­றது. இந்த கொடூர யுத்­தத்­தினால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­துடன் பெரும் துன்ப துய­ரங்­க­ளுக்கும் உள்­ளா­கி­யி­ருந்­தனர்.

ஆனாலும் இன்­னமும் இந்த கொடூர யுத்­தத்­திற்கு அடிப்­படைக் கார­ண­மான இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை. இந்த நிலை­யில்தான் தற்­போது நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான முன்­மு­யற்­சியில் ஈடு­பட்­டுள்­ளது. புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான இடைக்­கால அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­திக்­கப்­பட்­டுள்­ளது. அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­யல்­யாப்பை இறுதி செய்­வது தொடர்பில் தொடர்ச்­சி­யான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டு ­வ­ரு­கின்­றது.

இந்த நிலை­யில்தான் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் அர­சியல் தீர்­வா­னது முழு­மை­ பெற்­ற­தாக அமை­ய­வேண்டும் என்று முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்றார். கடந்த 27ஆம் திகதி வடக்கு, கிழக்கில் மாவீரர் தின­மா­னது உணர்­வெழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்த முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கௌர­வ­மான அர­சியல் தீர்வின் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்தி உள்ளார்.

எமது தலை­வர்கள் விலை­போய்­வி­டு­வார்­களோ, அரை­கு­றை­தீர்வை தம்­மீது திணித்­து­வி­டு­வார்­களோ என்று மக்கள் அஞ்­சு­கின்­றனர். இத­னால்தான் விடு­தலை வீரர்­களின் நினை­வேந்­தலில் மன நிறை­வு­ காண மக்கள் எத்­த­னித்­துள்­ளனர். துயிலும் உள்­ளங்கள் எமது மக்­க­ளுக்கு துயர் வரு­வ­தற்கு விட­மாட்­டார்கள் என்ற நம்­பிக்கை எழுந்­துள்­ளது. மக்கள் தங்­களை உண­ரத்­தொ­டங்­கி­விட்­டார்கள். தங்கள் சக்­தியை அவர்கள் உணர்ந்­துள்­ளனர். தங்கள் உரித்­துக்கள் என்ன என்­ப­தையும் உணரத் தொடங்­கி­ விட்­டனர். எமது உணர்­வு­களை மக்கள் மாவீரர் தின­நாளில் வெளிக்­காட்­டி­யுள்­ளனர். மக்­க­ளி­டையே ஒரு­வித பயம் பிறந்­து­விட்­டது. விடு­தலை வீரர்கள் வலம்­வந்த காலத்தில் ஈழத்­தை­விட எல்லாம் தருவோம் என்ற சிங்­கள அர­சி­யல்­வா­திகள் இன்று சொற்­களால் எமக்கு சுகம் தரலாம் என்று எண்­ணு­வதைப் பார்த்து இவ்­வ­ள­வுதான் கிடைக்­குமா, எமது அபி­லா­ஷைகள், அடிப்­படை வேண்­டு­தல்கள் நிறை­வே­றாதா என்ற பயம் பீடித்­துள்­ள­மை­யினால் மக்கள் மாவீரர் துயிலும் இல்­லங்­களில் திரண்டு மன­நி­றை­வு­ காண எத்­த­னித்­துள்­ளனர் என்று முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் விளக்­க­ம­ளித்­துள்ளார்.

புதிய அர­சி­யல்­யாப்பின் மூலம் அரை­குறை அர­சி­யல்­தீர்வு திணிக்­கப்­பட்­டு­வி­டுமோ என்ற அச்சம் அவ­ரிடம் காணப்­ப­டு­கின்­ற­மை­யி­னா­லேயே மாவீரர் தின எழுச்சி தொடர்பில் இத்­த­கைய கருத்­தினை முத­ல­மைச்சர் கூறி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட நேற்று முன்­தினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்த அவுஸ்­தி­ரே­லி­யாவின் தூதுவர் பிரைஸ் கச்­சஸ்­ஸனை முத­ல­மைச்சர் சந்­தித்து பேசி­யி­ருந்தார். இந்த சந்­திப்­பின்­போதும் அதி­கா­ரப்­ப­கிர்வின் அவ­சியம் குறித்து அவர் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார். அதி­கா­ரப்­ப­கிர்­வினை தர­மு­டி­யாமல் போகும் பட்­சத்தில் தனி­நாட்டுக் கோரிக்­கைக்­கான அவ­சியம் எமக்கு ஏற்­படும். அதி­கா­ரப்­ப­கிர்­வினை எமக்கு உச்­ச­பட்­ச­மாக வழங்­கு­மாறுதான் நாம் அர­சிடம் கோரி­ வ­ரு­கின்றோம். அதற்கு அர­சாங்கம் இணங்­கி­னாலும் தென்­பகு­தி­யி­லுள்ள சில பேரி­ன­வா­திகள் நாம் ஏதோ தனி­நாடு கேட்­ப­தாக குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

நாம் கோரும் அதி­கா­ரப்­ப­கிர்­வினை தர­ மு­டி­யாது போகும் பட்­சத்தில் தனி­நாடு கோரிக்­கைக்­கான அவ­சியம் எமக்கு ஏற்­படும் என்று முத­ல­மைச்சர் இந்த சந்­திப்­பின்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இதே­போன்றே யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த இலங்­கைக்­கான கனடா தூதுவர் மற்றும் நோர்வே தூதுவர் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்­புக்­க­ளின்­போதும் முழு­மை­யான அதி­கா­ரப்­ப­கிர்வின் அவ­சியம் குறித்து முத­ல­மைச்சர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

தற்­போ­தைய நிலையில் புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை ­மீ­தா­ன ­விவாதம் நடை­பெற்­றுள்­ளது. எதிர்­வரும் 2ஆம் திக­தியும் அர­சி­யல்­யாப்­பு­ ச­பையில் இது குறித்­தான இறு­திநாள் விவாதம் நடை­பெ­ற­விருக்­கின்­றது. இந்த இடைக்­கால அறிக்­கையின் ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரப் ­பகிர்­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஆனாலும் ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே சமஷ்­டி­­யற்ற தீர்வு வழங்­கப்­படும் என்று அர­சாங்­கத்­த­ரப்பில் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. புதிய அர­சி­யல் ­யாப்­புக்­கான அர­சி­ய­ல­மைப்பின் வழி­ந­டத்தல் குழுவின் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் சார்பில் எதிர்க்­கட்சித் தலை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் மற்றும் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் அங்கம் வகிக்­கின்­றனர். அர­சியல் தீர்வு தொடர்­பான பேச்­சு­வார்த்­தையின் போது பல்­வேறு விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுடன் இவர்கள் தீர்வைக் காண்­ப­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்டும் வரு­கின்­றனர்.

இடைக்­கால அறிக்­கையில் ஒற்­றை­யாட்­சிக்கு அப்பால் சென்று ஒரு­மித்த நாட்­டுக்குள் தீர்வை காண­மு­டியும் என்றும் மத்­தி­யி­லுள்ள அதி­கா­ரங்கள் மாகா­ணத்­திற்கு பகி­ரப்­படும் அடிப்­ப­டை­யிலும் வழங்­கப்­படும் அதி­கா­ரங்­களை மத்­திய அரசு மீளப்­பெ­றா­த­வ­கை­யிலும் இடைக்­கால அறிக்­கையில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சமஷ்டி என்ற பெயர் குறிப்­பி­டப்­ப­டா­வி­டினும் சமஷ்­டிக்கு ஒத்த விட­யங்கள் இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்­பினர் தெரி­வித்து வரு­கின்­றனர். இடைக்­கால அறிக்கை தொடர்பில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா. சம்­பந்தன் தலை­மையில் கிழக்கில் பொது­மக்­களை அறி­வு­றுத்தும் கூட்­டங்­களும் கடந்­த ­வாரம் நடத்­தப்­பட்­டுள்­ளன. இந்தக் கூட்­டங்­களின் போது இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் கூட்­ட­மைப்பின் தலைமை விளக்­கிக்­கூ­றி­ வ­ரு­கின்­றது.

ஆனாலும் இடைக்­கால அறிக்­கை­யி­லுள்ள விட­யங்கள் அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­ப­டுமா? அதற்­கான அனு­ம­தி­யினை பேரி­ன­வாத கட்­சிகள் வழங்­குமா என்ற கேள்­விகள் தற்­போது எழுந்­துள்­ளன. அர­சி­யல்­யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ரணி கடு­மை­யாக எதிர்த்து வரு­கின்­றது. இந்த இடைக்­கால அறிக்­கை­யினை கைவிட வேண்­டு­மென்று பொது எதி­ரணி உட்­பட இன­வாத சக்­திகள் கோரிக்கை விடுத்து வரு­கின்­றன.

நான்கு பெளத்த பீடங்­களும் புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சியை கடு­மை­யாக எதிர்த்­துள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தென்­கொ­ரி­யாவில் இலங்­கை­யர்கள் மத்­தியில் பேசும் போது சமஷ்­டியை ஒத்த தீர்வை ஒரு­போதும் வழங்­கப்­போ­வ­தில்லை என்று கூறி­யி­ருக்­கின்றார். இவ்­வா­றான நிலையில் இடைக்­கால அறிக்­கை­யி­லுள்ள விட­யங்கள் இறுதி செய்­யப்­ப­டுமா என்ற பெரும் சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. ஆனாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையானது இடைக்கால அறிக்கையினை விட முன்னோக்கி செல்ல முடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் அது எந்தளவு சாத்தியம் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இத்தகைய நிலையில்தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வானது அரைகுறையானதாக இருக்கக்கூடாது என்றும் அத்தகைய அரைகுறை அரசியல் தீர்வை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை ஏற்று விடக்கூடாது எனவும் முதலமைச்சர் வலியுறுத்தி வருகின்றார். தற்போதைய நிலையில் முதலமைச்சரின் இத்தகைய அழுத்தங்களும் அவசியமானதொன்றாகவே காணப்படுகின்றது.

தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வில் உறுதியாக இருக்கின்றனர். ஆனாலும் நாம் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு தீர்வைக்காண முனை­கின்றோம். அதற்கு தென்பகுதி தலைமைகள் சாதகமான சமிக்ஞையை காண்பிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைமை கோரக்கூடிய சூழலை முதலமைச்சரின் அழுத்தங்கள் உருவாக்கி வருகின்றன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-01#page-4

  • தொடங்கியவர்
 
 

மீண்டும் தொடங்கிய இடத்திற்கேயா?

 

கூட்டாட்சி (சமஷ்டி) அடிப்­ப­டை­யில் ஓர் அர­சி­யல் தீர் வைக் கொழும்பு தரத் தவ­றி­னால் தமி­ழர்­கள் தனி­நாடு கோர­வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். தன்­னைச் சந்­தித்­துப் பேசிய ஆஸ்­தி­ரே­லி­யத் தூது­வர் பைரஸ் ஹட்­ச­னி­டம் அவர் இதனை நேரில் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

முத­ல­மைச்­ச­ரின் கருத்­தைப் படித்­த­தும் உட­ன­டி­யா­கவே தமி­ழர்­க­ளின் மன­தில் ஓடிய எண்ண ஓட்­டம், ‘‘மறு­ப­டி­யும் முதல்லே இருந்தா?’’ என்­ப­தா­கத்­தான் இருக்­கும்.

30 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் 1976 வைகாசி மாதம் 14ஆம் நாளி­லும் தமிழ்த் தலை­வர்­கள் வட்­டுக்­கோட்­டை­யில் கூடி இப்­ப­டித்­தான் சொன்­னார்­கள்.

அதற்கு முன்­னர் கூட்­டாட்சி கேட்­டுக்­கேட்டு, இணக்கப் பேச்சுக்­க­ளில் ஈடு­பட்டு ஈடு­பட்டு களைத்­துப் போன தந்தை செல்வா உள்­ளிட்ட தலை­வர்­கள் எல்­லோ­ரு­மா­கக்­கூடி, கூட்­டாட்சி தர­வில்­லை­யா­னால் தனி­நாடு என்று பெரும் அறி­விப்பை விடுத்­தார்­கள். அத­னையே தமது பரப்­பு­ரை­யாக 1977ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் முன்­வைத்து அமோக வெற்­றி­யை­யும் பெற்­றுக் கொண்­டார்­கள்.

அதன் பின்­னர் நடந்­ததை ஒட்­டு­மொத்த உல­க­மும் அறி­யும். தலை­வர்­கள் ஆரம்­பித்து வைத்த கனவை நன­வாக்க இளை­ஞர்­கள் பேர­வாக் கொண்­டார்­கள். தின­வெ­டுத்த தோள்­க­ளோடு தலை­வர்­க­ளுக்­குத் தம் குரு­தி­யால் பொட்டு வைத்­தார்­கள். வீரம் விளை நிலம் கொண்­டது.

 

அது­வ­ரை­யில் அமைதி வழி­யில் சென்று கொண்­டி­ருந்த அர­சி­யல் போராட்­டம் வன்­மு­றைப் பாதைக்­குத் திசை­மா­றி­யது. இளை­ஞர்­கள் ஆயு­தங்­க­ளைத் தூக்­கி­னார்­கள். தலை­வர்­கள் அத­னைப் புன்­சி­ரிப்­போடு வர­வேற்­றார்­கள். பிடரி மயி­ரைத் தட­விக் கொடுத்­தார்­கள்.

ஆரம்­பத்­தில் எல்­லா­மும் நல்­ல­வி­த­மா­கத்­தான் சென்று கொண்­டி­ருந்­தன. ஆனால், இளை­ஞர்­கள் தங்­கள் பாதை­யில் திட­மாக நடக்­கத் தொடங்­கி­ய­போது, ஆரம்­பித்த வேகத்­தைக் காண­வில்­லையே என்று தலை­வர் களைப் பார்த்­துக் கேட்­டார்­கள்.

கேள்­விக்­குப் பதில் சொல்ல முடி­யா­த­போது, தங்­கள் செயல்­களை இரா­ஜதந்­தி­ரம் என்­றார்­கள் தலை­வர்­கள். ஆனால் இளை­ஞர்­கள் தாம் நடக்க ஆரம்­பித்த பாதை­யி­ லி­ருந்து வில­கத் தயா­ராக இருக்­க­வில்லை.

அவர்­கள் தொடர்ந்து முன்­னே­றத் தொடங்­கி­ய­போது வன்­முறை அந்­தத் தலை­வர்­க­ளில் சில­ரை­யே­கூ­டப் பலி வாங்­கிக்­கொண்­டது. பின்­னாள்­க­ளில் ஆயு­தங்­கள் வைத்­ததே சட்­டம் ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­த­வர்­களே அதி­கா­ரத் தலை­மை­கள் என்ற நிலை வந்­தது. புலி­கள் தலை­யெ­டுக்­கும் வரை இந்த நிலை நீடித்­தது.

புலி­ க­ளின் காலத்­தில் ஆயு­தப் போராட்­டம் ஒன்றே விடு­த­லையை வென்­றெ­டுக்­கும் என்று ஆணித்­த­ர­மாக நம்­பப்­பட்­டது.

கடை­சி­யில் முள்­ளி­வாய்க்­கால் கரை­யோ­ரம் அந்­தக் கனவு மூழ்­க­டிக்­கப்­பட்டு மூச்­ச­டைக்­கப்­பட்­டது. அதி­லி­ருந்து மெல்ல மெல்ல எழுந்து நிற்­கத் தலைப்­பட்­டது தமிழ் இனம்.

 

ஆட்சி மாற்­றம் ஒன்றை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் கிடைத்த இடை­வெ­ளி­யைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு தன்னை அது ஆசு­வா­சப்­ப­டுத்­திக் கொள்ள முயற்­சிக்­கை­யில் மீண்­டும் தனி­நாடு என்­கிற முழக்­கத்­தைக் கேட்க முடி­கி­றது.

ஆரம்­பித்த இடத்­தி­லேயே மீண்­டும் தமிழ் இனம் வந்து நிற்­பதை உணர முடி­கி­றது. தலை­வர்­கள் தாங்­கள் என்ன சொல்­கி­றோம் என்­ப­தை­யும் அதனை அடை­யும் செய­லு­று­தி­யோ­டு­தான் சொல்­கி­றார்­களா என்­ப­தை­யும் ஆய்ந்­து­ணர்ந்து சொல்ல வேண்­டி­யது அவ­சி­யம்.

இளை­ஞர்­களை உசுப்­பேற்­றி­விட்­டால் அது எப்­படி காட்­டுத் தீயாய் பற்றி எரி­யும் என்­பதை ஏற்­க­னவே ஒரு தடவை பார்த்­தி­ருந்­தும் மீண்­டும் மீண்­டும் அது போன்ற உசுப்­பேற்­றல்­க­ளைச் செய்­வ­தும் பேசு­வ­தும் சரி­யா­னதா என்­ப­தைத் தலை­வர்­கள் சிந்­திக்­க­வேண்­டும்.

தாம் பேசு­வ­தன் விளை­வு­க­ளை­யும் எதிர்­வி­ளை­வு­க­ளை­யும் சிந்­தித்­துப் பேச­வேண்­டும். பேச்­சுக்­கும் செய­லுக்­கும் இடையே திரு­கு­தா­ளம் விட முனைந்­த­வர்­க­ளுக்கு நடந்­த­வற்றை வர­லாற்­றில் இருந்து அறிந்­து­கொண்டு செயற்­ப­ட­வேண்­டும். அது முத­ல­மைச்­ச­ருக்­கும் பொருந்­தும்.

http://newuthayan.com/story/51651.html

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நவீனன் said:

நாம் கோரும் அதி­கா­ரப்­ப­கிர்­வினை தர­ மு­டி­யாது போகும் பட்­சத்தில் தனி­நாடு கோரிக்­கைக்­கான அவ­சியம் எமக்கு ஏற்­படும் என்று முத­ல­மைச்சர் இந்த சந்­திப்­பின்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்

ஆயுதம் தூக்கி போராடுவோம் என்று எங்கேயாவது முதலமைச்சர் இங்கு  குறிப்பிட்டாரா? பொறுமையை இழந்து விட்டோம் என்கிறார்கள், போராட்டம் வெடிக்கும் என்றெல்லாம் மிரட்டல்  நாடகமாடினார்கள். அப்பவெல்லாம் அமைதி காத்தவர்கள் முதல்வர் வாய் திறந்தவுடன் அவர் சொல்லாததுக்கெல்லாம் விளக்கம் சொல்ல வந்து விட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.