Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களுடன் ஒன்பது பேர் கைது

Featured Replies

தெல்லிப்பளையில் ஆயுதங்களுடன் மூவர் கைது

image_d570d282ca.jpgதெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்குப் பிரதேசத்தில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு(10) 7.05 மணியளவில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த வேளையிலேயே பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன்,இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 27 வயதானவர்கள் எனவும்,இவர்கள் இன்றைய தினம் (11) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தெல்லிப்பளையில்-ஆயுதங்களுடன்-மூவர்-கைது/71-208684

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாள்­க­ளு­டன் வந்­த­வர்­கள் சங்­கா­னை­யில் அட்­ட­கா­சம்

 
 

யாழ்ப்­பா­ணம், சங்­கா­னை­யில் வாள்­க­ளால் மக்­களை அச்­சு­றுத்­தி­ய­து­டன், கொள்­ளை­யில் ஈடு­பட்­ட­னர் என்ற சந்­தே­கத்­தில் நால்­வர் தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சங்­கானை மருத்­து­வ­ ம­னைக்­கும், தொட்­டி­ல­டிச் சந்­திக்­கும் இடையே நேற்று மாலை 5 மணி­ய­ள­ வில் 2 மோட்­டார் சைக்­கிள்­க­ளில் பய­ணித்த ஐவர் மக்­களை அச்­சு­றுத்­தி­யுள்­ள­னர்.

வாள்­களை வீசி, தகாத வார்த்­தைப் பிர­யோ­கங்களை மேற்­கொண்­ட­னர். மக்­கள் சிலர் அவர்­க­ளைப் ஒளிப்­ப­டம் எடுத்­த­போது அவர்­க­ளைத் துரத்­திச் சென்­ற­னர்.

சங்­கானை சிலம்­புப்­பு­ளி­யடி ஆல­யத்­துக்கு அரு­கில் இருந்த வேலி, இளை­ஞர் மன்­றக் கத­வை­யும் சேதப்­ப­டுத்­தி­னர். வீதி­யால் பய­ணித்த பெண் ஒரு­வ­ரின் கழுத்­தில் கத்தி வாள் வைத்து அவ­ரின் சங்­கி­லியை அறுத்­துச் சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது. சம்­ப­வம் அறிந்த மானிப்­பாய் அங்கு விரைந்­த­னர். ஒளிப்­ப­டங்­கள் மற்­றும் காணொ­லி­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­த­னர்.

சங்­கிலி அப­க­ரிப்­புத் தொடர்­பில் மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸார் மேற்­கொண்ட ரோந்து நட­வ­டிக்­கை­யில் மூவர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் இருந்து வாள், தாக்­கு­த­லுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் இருப்­புப் பைப்­கள் என்­பன கைப்­பற்­றப்­பட்­டன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

 

அவர்­க­ளி­டம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளின் அடிப்­ப­டை­யில் மேலும் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­க­ளி­டம் இருந்து மோட்­டார் சைக்­கிள்­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டன.

கைது செய்­யப்­பட்ட இரு­வர் 27 வய­து­டை­ய­வர்­கள் என்­றும், மற்­றை­ய­வர்­கள் 24 மற்­றும் 21 வய­து­டை­ய­வர்­கள் என்­றும் அச்­சு­வே­லி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

http://newuthayan.com/story/54420.html

  • தொடங்கியவர்
யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களுடன் ஒன்பது பேர் கைது
 

image_d570d282ca.jpgதெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்குப் பிரதேசத்தில் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு(10) 7.05 மணியளவில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில்களில் பயணித்த வேளையிலேயே பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன்,இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 27 வயதானவர்கள் எனவும்,இவர்கள் இன்றைய தினம் (11) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழ்-கொக்குவில் பகுதியில் ஆயுதங்களுடன் 6 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட குறித்த 6 பேரும் மோட்டார் சைக்கிள்களை வீதியின் குறுக்கே நிறுத்தி  கூரிய ஆயுதத்தால் நடுவீதியில் கேக் ஒன்றினை வெட்ட முயற்சித்ததாகவும்,இதன்போதே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும்,இவர்களுக்கும் ஆவா குழுவிற்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்ப்பாணத்தில்-ஆயுதங்களுடன்-ஒன்பது-பேர்-கைது/71-208684

  • தொடங்கியவர்
  • வாள்­க­ளு­டன் அட்­ட­கா­சம் மேலும் ஒருவா் கைது
வாள்­க­ளு­டன் அட்­ட­கா­சம் மேலும் ஒருவா் கைது
 
 

வாள்­க­ளு­டன் அட்­ட­கா­சம் மேலும் ஒருவா் கைது

 

மக்­களை அச்­சு­றுத்­தி­ய­து­டன், கொள்­ளை­யில் ஈடு­பட்­ட­னர் என்ற சந்­தே­கத்­தில் மேலும் ஒருவா் இன்று காலை தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சம்பவம் தொடா்பில் தெரிய வருவதாவது,

சங்­கானை மருத்­து­வ­ ம­னைக்­கும், தொட்­டி­ல­டிச் சந்­திக்­கும் இடையே நேற்று மாலை 5 மணி­ய­ள­ வில் 2 மோட்­டார் சைக்­கிள்­க­ளில் பய­ணித்த ஐவர் மக்­களை அச்­சு­றுத்­தி­யுள்­ள­னர்.

வாள்­களை வீசி, தகாத வார்த்­தைப் பிர­யோ­கங்களை மேற்­கொண்­ட­னர். மக்­கள் சிலர் அவர்­க­ளைப் ஒளிப்­ப­டம் எடுத்­த­போது அவர்­க­ளைத் துரத்­திச் சென்­ற­னர்.

சங்­கானை சிலம்­புப்­பு­ளி­யடி ஆல­யத்­துக்கு அரு­கில் இருந்த வேலி, இளை­ஞர் மன்­றக் கத­வை­யும் சேதப்­ப­டுத்­தி­னர். வீதி­யால் பய­ணித்த பெண் ஒரு­வ­ரின் கழுத்­தில் கத்தி வாள் வைத்து அவ­ரின் சங்­கி­லியை அறுத்­துச் சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது. சம்­ப­வம் அறிந்த மானிப்­பாய் பொலிஸாா் அங்கு விரைந்­த­னர்.

ஒளிப்­ப­டங்­கள் மற்­றும் காணொ­லி­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­த­னர்.

சங்­கிலி அப­க­ரிப்­புத் தொடர்­பில் மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

 

தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸார் மேற்­கொண்ட ரோந்து நட­வ­டிக்­கை­யில் மூவர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் இருந்து வாள், தாக்­கு­த­லுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் இருப்­புப் பைப்­கள் என்­பன கைப்­பற்­றப்­பட்­டன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அவர்­க­ளி­டம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளின் அடிப்­ப­டை­யில் மேலும் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.அவர்­க­ளி­டம் இருந்து மோட்­டார் சைக்­கிள்­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டன.

கைது செய்­யப்­பட்ட இரு­வர் 27 வய­து­டை­ய­வர்­கள் என்­றும், மற்­றை­ய­வர்­கள் 24 மற்­றும் 21 வய­து­டை­ய­வர்­கள் என்­றும் அளவெட்டி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு வரும் நிலையில் இன்று காலை மேலும் ஒரு சந்தேக நபா் கைது செய்யப்பட்டாா்.

IMG-3c1554f1af887eecb8b33eac9f81b857-V.jIMG-40fe0f0cf3fb5f2760fe545a4613479a-V.jIMG-dae8353c6ac42a7ae080dcd4d51931fe-V.j

http://newuthayan.com/story/54420.html

  • தொடங்கியவர்

யாழ். ஆனைக்கோட்டையில் வீடுபுகுந்து கொள்ளை. – வாள் வெட்டுக்குழு அட்டகாசம்

Vall-Vettu4.jpg
யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் இலக்கதகடுகளை மறைத்தவாறு மோட்டார் சைக்கிள் வந்த கும்பல் ஒன்று வீடொன்றுக்குள் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்று உள்ளனர்.

யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 09 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

மோட்டார் சைக்கிளில் இலக்க தகடுகளை மறைத்து கட்டியவாறு வந்த கும்பல் குறித்த வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தி விட்டு, வீட்டில் இருந்த தளபாடங்களை தாம் கொண்டு வந்து இருந்த கைக்கோடரியால் கொத்தி சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த அலுமாரியை கோடரியால் கொத்தி பிளந்து அதனுள் இருந்த 40ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 5 பவுண் நகை என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவற்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மானிப்பாய் காவற்துறையினர் குறித்த வீடு யாழ்ப்பாண காவற்துறை பிரிவுக்குள் அமைந்து உள்ளது என கூறி முறைப்பாட்டை ஏற்காது சென்றனர். அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறைக்கு  அறிவிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://globaltamilnews.net/archives/54409

  • தொடங்கியவர்

யாழில் வீதிக்குக் குறுக்காக இளைஞர்கள் செய்த செயல்; போலிஸார் எடுத்த நடவடிக்கை!

 

யாழில் வீதிக்குக் குறுக்காக இளைஞர்கள் செய்த செயல்; போலிஸார் எடுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் வித்தியாசமான முறையில் பிறந்த நாளினைக் கொண்டாட முயன்ற இளைஞர்கள் பொலிஸாரினார் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது, குறித்த இளைஞர்கள் வீதியை இடைமறித்து நடுவீதியில் தமது உந்துருளி ஒன்றினை குறுக்கு நிலையில் வைத்துள்ளனர். பின்னர் அதன் ஆசனத்தில் குதப்பி (கேக்) ஒன்றினை வைத்து கூர்மையான கத்தி ஒன்றினால் வெட்ட முயற்சித்துள்ளனர்.

இதன்போது குறித்த வழியால் வந்த கோப்பாய் பொலிஸார் சம்மந்தபட்ட இளைஞர்களை விசாரித்ததுடன் பொதுமக்களுக்கு இடைஞ்சலினை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வெறும் பதினேழு மற்றும் பதினெட்டு வயதினை உடையவர்கள் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கூர்மையான கத்தியினை வைத்திருந்ததனால் வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/police-arrested-the-young-men-in-kokkuvil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.