Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு அரசு தவறு செய்கிறது

Featured Replies

  •  

கொழும்பு அரசு தவறு செய்கிறது

 
 

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வழங்­கும் பெயர்ப் பட்­டி­ய­லுக்­கும் இனி அரச வேலை வாய்ப்பு வழங்­கப்­ப­டும் என்று கொழும்பு அரசு அறி­வித்­துள்­ளது.

சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல நாடா­ளு­மன்­றத்­தில் இத­னைத் தெரி­வித்­துள்­ளார். இது தவறு.

தன்னை நல்­லாட்சி அரசு என்று கூறிக்­கொள்­ளும் ஒரு அரசு அர­சி­யல் நிய­ம­னங்­களை வழங்­கு­வது எந்­த­வ­கை­யில் சரி­யா­னது? இது அர­ச­மைப்­பின் கீழ் இலங்­கை­யின் குடி­மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வழங்­கப்­பட்­டுள்ள சம உரி­மை­யைக் கேள்­விக்­குள்­ளாக்­கும் மிக மோச­மான செயல். அது உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும்.

அரச வேலை­க­ளுக்கு ஆள்­சேர்ப்­புச் செய்­யும்­போது அனை­வ­ருக்­கும் சம வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வேண்­டும். அது ஒவ்­வொ­ரு­வ­ர­தும் அடிப்­படை உரிமை.

இந்த அடிப்­ப­டை­யி­லேயே பட்­ட­தா­ரி­கள் நிய­ம­னம் உள்­ளிட்ட பல அரச வேலை­க­ளுக்­குப் போட்­டிப் பரீட்­சை­கள் நடத்­தப்­பட்டு நேர்­மு­கத் தேர்­வும் நடத்­தப்­பட்டு வெற்­றி­பெற்­ற­வர்­க­ளுக்கு மட்­டுமே வேலை வாய்ப்பு வழங்­கப்­ப­டு­கின்­றது.

அப்­ப­டி­யி­ருக்­கும்­போது அர­சின் ஒரு­ தொ­குதி வேலை­க­ளுக்கு மட்­டும் போட்­டிப் பரீட்­சையோ நேர்­மு­கப் பரீட்­சையோ இன்றி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பட்­டி­ய­லின்­படி வேலை வழங்­கு­வது என்­பது கேவ­ல­மான ஆட்­சி­யின் வெளிப்­பாடு.

 
இத்­த­கைய செயற்­பா­டு­கள் ஊழல், மோசடி என்­ப­வற்­றுக்கே வழி­வ­குக்­கும். பணத்­தைப் பெற்­றுக்­கொண்டு வேலை வழங்­கும் நில­மையை இது தோற்­று­விக்­கும்.

பணம் கொடுத்து வேலை­யைப் பெற்­றுக்­கொண்ட ஒரு தகு­தி­யற்ற நபர் தனது பணி­யைத் திறம்­ப­டச் செய்­ய­மு­டி­யா­மல் தனக்கு மட்­டு­மன்றி அந்­தத் துறைக்கே சாபக்­கே­டாக மாறு­வ­தும் நடக்­கும்.

இது­போன்ற அர­சி­யல் நிய­ம­னங்­க­ளால் அரச நிர்­வாக இயந் தி­ரத்­தின் பல பகு­தி­கள் இப்­படி முடங்கி, நைந்­து­போய்க் கிடக்­கின்­றன.

இவர்­க­ளைப் போன்­ற­வர்­க­ளா­லேயே அரச நிர்­வா­கம் வினைத்­தி­றன் அற்­ற­தா­க­வும் உள்­ளது.

அமைச்­சர் கிரி­யெல்ல இந்த விட­யத்தை நாடா­ளு­மன்­றத்­தில் அறி­வித்த சூழ்­நி­லை­யைக் கருத்­தில் எடுப்­ப­தும் மிக முக்­கி­ய­ மா­னது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் உள்ள அரச திணைக்­க­ளங்­க­ளில் பணி­க­ளுக்கு அதி­லும் சிற்­றூ­ழி­யர் தரங்­க­ளுக்கு சிங்­க­ள­வர்­களே நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்று வடக்கு, கிழக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் குற்­றச்­சாட்­டுக்­களை எழுப்­பி­ யி­ருந்­த­னர்.

அதற்­குப் பதி­ல­ளிக்­கும்­போதே தமிழ்­பே­சும் நாடா­ளு­ மன்ற உறப்­பி­னர்­க­ளைச் சமா­ளிக்­கும் விதத்­தில் அமைச்­சர் இந்­தப் பதிலை வழங்­கி­யுள்­ளார்.

அதன் மூலம் அவர், ஏற்­க­னவே வடக்கு கிழக்­கில் சிங்­க­ள­வர் க­ளுக்கு வழங்­கப்­பட்ட நிய­ம­னங்­க­ளில் எந்­த­வித இன விகி­தா­சா­ர­மும் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்­பதை ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்.

 

அத்­தோடு அப்­படி வழங்­கப்­பட்ட நிய­ம­னங்­கள் எல்­லாம் அர­சி­யல் நிய­ம­னங்­கள்­தான் என்­ப­தை­யும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்.

இது நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு தமக்கு வாக்­க­ளித்த மக்­கள் அனை­வ­ரை­யும் ஏமாற்­றும் செயல்.

நேர்­மை­யாக நடப்­போம் ஊழல், மோச­டி­கள் அற்ற ஆட்­சியை வழங்­கு­வோம் என்று கூறி­விட்டு அதற்கு நேர் எதிர்­மா­றாக, தலை­கீ­ழாக நடக்­கும் இந்த அரசு உண்­மை­யில் ஆட்­சி­யைத் தொட­ரும் அரு­க­தை­யற்­றது.

இந்த விட­யத்­தில் வடக்கு மாகாண சபை வெகு­வா­கப் பாராட்­டப்­ப­ட­வேண்­டி­யது. முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னும் மிக மிகப் பாராட்­டப்­ப­ட­வேண்­டி­ய­வர்.

வடக்கு மாகாண சபை பத­வி­யேற்­றது முதல் இது­போன்ற அர­சி­யல் நிய­ம­னங்­கள் அனைத்­தை­யும் நிறுத்­தி­விட்­டது.

சிற்­றூ­ழி­யர்­க­ளாக இருந்­தால் என்ன எந்­தப் பணி நிய­ம­ன­மாக இருந்­தால் என்ன போட்­டிப் பரீட்­சை­யின் ஊடாக அனை­வ­ருக்­கும் சம வாய்ப்பு வழங்­கியே பணி நிய­ம­னங்­களை வழங்­கி­வ­ரு­கின்­றது.

இந்த முறையை மாற்றி அர­சி­யல் நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ள­வர்­கள் சிலர் தலை­கீ­ழாக நின்­ற­போ­தும் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் உறு­தி­யான நிலைப்­பாட்­டால் அது நடை­ பெ­ற­ம­லேயே போய்­விட்­டது.

 

இப்­போ­தும் வடக்கு மாகாண சபை­யின் கீழான நிய­ம­னங்­கள் ஒப்­பீட்­ட­ள­வில் மிக நேர்­மை­யா­கவே நடக்­கின்­றன. கட்­சி­சார் அர­சி­யல் நிய­ம­னங்­கள் எவை­யும் வழங்­கப்­ப­ட­வில்லை.

கொழும்பு அரசு இந்த முன்­னு­தா­ர­ணத்­தைக் காண­வேண்­டும், பின்­பற்றி நடக்­க­வேண்­டும். வடக்கு மாகாண சபை­யின் மீது பல்­வேறு விமர்­ச­னங்­கள் இருந்­தா­லும் இந்த விட­யத்­தில் அதன் நேர்­மையை கொழும்பு பின்­பற்றி நடக்­க­வேண்­டும்.

அர­சி­யல் ரீதி­யான அரச பணி நிய­ம­னங்­கள் அனைத்­தை­யும் நிறுத்­தி­விட்டு நேர்­மை­யான, அனை­வ­ருக்­கும் சம வாய்ப்பு வழங்­கக்­கூ­டிய நிய­ம­னங்­களை வழங்­க­வேண்­டும்.

http://newuthayan.com/story/54437.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.