Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவுதி அரேபியாவில் முதல் சினிமா தியேட்டர்! - 35 ஆண்டுக்கால தடை நீங்கியது

Featured Replies

சவுதி அரேபியாவில் முதல் சினிமா தியேட்டர்! - 35 ஆண்டுக்கால தடை நீங்கியது

 
 

சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு தொடக்கம் முதல் திரைப்படங்கள் திரையிட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சவுதி பட்டத்து இளவரசர் சல்மான்

 
 

இந்த முடிவு சவுதியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அவ்வாட் அலாவட் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது. நாட்டில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்க புதிதாக ஓர் அமைப்பை உருவாக்கவும் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வாட் அலாவட், ‘சவுதியில் முதல் சினிமா தியேட்டர் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்படும். பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை ஆகிய காரணிகளின் அடிப்படையில் சினிமாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்றார். 

 

சவுதி அரேபியாவில் கடந்த 1980-ம் ஆண்டு முதல் சினிமா தியேட்டர்களுக்குத் தடை இருந்துவருகிறது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக சினிமாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சவுதி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் 300 சினிமா தியேட்டர்களைத் திறக்கவும், அதன்மூலம் 2,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக சல்மான் அறிவிக்கப்பட்ட பின்னர் தொடர்ச்சியாகப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடையை அண்மையில் நீக்கிய சவுதி அரசு, 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஊழல் புகாரில் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்த சம்பவமும் சவுதியில் நடந்தது. 

https://www.vikatan.com/news/world/110428-saudi-arabia-to-reopen-cinemas-after-35year-ban.html

 

 

 

செளதி அரேபியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகளில் படம் பார்க்கலாம்!

செளதி அரேபியாபடத்தின் காப்புரிமைAFP Image captionகடந்த மாதம் ரியாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புகழ்பெற்ற திரைப்படக் கதாபாத்திரங்களாக வேடம் அணிந்த ரசிகர்கள்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்க செளதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், கடந்த முப்பது ஆண்டுகளாக அமலில் இருக்கும் இந்தத் தடை முடிவுக்கு வருகிறது.

அந்த திரைப்படங்களுக்கு உடனடியாக உரிமங்கள் வழங்கத் துவங்கப்போவதாகவும் முதல் திரையரங்கம் மார்ச் 2018-இல் செயல்படத் தொடங்கும் என்றும் கலாசாரம் மற்றும் தகவல் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நடவடிக்கை, இளவரசர் முகம்மது பின் சல்மானின் 2030-ஆம் ஆண்டுக்கான சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.

பழமைவாத இஸ்லாமிய ராஜ்ஜியம், 1970 களில் திரையரங்குகளைக் கொண்டிருந்தது, ஆனால் அவற்றை மூடுமாறு மதகுருக்கள் அதிகாரிகளை வற்புறுத்தி மூடவைத்தனர்.

கடந்த ஜனவரியில், மூத்த மதகுரு ஷேக் அப்துல் அஸீஸ் அல் அல்-ஷேக், திரையரங்குகளை அனுமதித்தால், அவை ஒழுக்கநெறிகளை சீர்குலைக்கும் என்று எச்சரித்திருந்தார்.

சௌதி அரேபியாவின் அரச குடும்பம் மற்றும் மத ஸ்தாபனம் சுன்னி இஸ்லாத்தின் ஒரு கடினமான வடிவமான வஹாபிசத்தையும் இஸ்லாத்தின் கொள்கைகள் மற்றும் உடை கட்டுப்பாட்டையும் தீவிரமாகக் கடைபிடிக்கின்றன.

சினிமாவிற்கு உரிமங்கள் வழங்குவதற்கான முடிவு, சௌதிகளுக்கான வெளிப்படையான மற்றும் வளமான கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் திட்டம் என கலாசார அமைச்சகம் திங்கட்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது ஒரு திருப்புமுனை என கலாசார அமைச்சர் அவாத் அலாவத் வர்ணித்துள்ளார்.

"திரையரங்குகளைத் திறப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் வழிவகுக்கும். விரிவான கலாசார துறையை மேம்படுத்துவதன் மூலம் புதிய வேலை மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை உருவாக்க வழிவகுக்கும். மேலும், செளதி ராஜியத்தின் கேளிக்கை வாய்ப்புக்களையும் விரிவாக்கச் செய்யும்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 300 திரையரங்குகளில் 2 ஆயிரம் திரைகளில் திரைப்படங்கள் திரையிட நடவடிக்கை எடுக்கப்படும் என அது தெரிவித்துள்ளது.

அதாவது, 203-ஆண் ஆண்டில், கலாசாரம் மற்றும் கேளிக்கை மீதான மக்களின் செலவினங்கள் 2.9 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரிக்க வைக்கும் திட்ட இலக்கை 32 வயது பட்டத்து இளவரசர் நிர்ணயித்திருக்கிறார்.

http://www.bbc.com/tamil/global-42311118

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.