Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் – சாவகச்சேரியில் UNP – கிளிநொச்சியில் மகிந்த தரப்பு – கட்டுப் பணம் செலுத்தின…

Featured Replies

முல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் – சாவகச்சேரியில் UNP – கிளிநொச்சியில் மகிந்த தரப்பு – கட்டுப் பணம் செலுத்தின…

 

Munnani.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் 11.12.2017 நேற்று நண்பகல் செலுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் முல்லை மாவட்ட முகவர் திலகநாதன் கிந்துஜன் ஊடாக  முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் மு.வரதராஜா ஆகியோரினால் நேற்று நண்பகல் அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை ஐக்கிய தேசிய கட்சி இன்று செலுத்தியுள்ளது




unp.jpg

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்துஇன்று கட்டுப்பணத்தினை செலுத்தினார்


.

இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலனிடம் இவர்கள் தமது கட்சி சார்பில் கட்டுப்பணத்தினை செலுத்தி வேட்பாளர் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொண்டனர்.

மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனி கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது

Mahi-party-3.jpgMahi-party-4920.jpg

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னனியானது இன்று 12.12.2017 செவ்வாய்கிழமை,  முற்கபகல் கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனா். கிளிநொச்சி மாவட்ட தேர்தல்  செயலகத்தில்  வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ் எம் ரஞ்சித் சமரகோண் தலைமையில் கரைச்சி பிரதேச சபைக்கான  கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபைக்கான கட்டுப் பணம்  செலுத்தப்பட்டுள்ளதகாவும், ஏனைய இரண்டு பிரதேச சபைகளுக்கும் செலுப்படும் எனவும்  அவா்  தெரிவித்தார்

http://globaltamilnews.net/archives/54607

  • தொடங்கியவர்

சாவகச்சேரி நகரசபைக்கு முதலாவது வேட்புமனுத் தாக்கல்- முந்தியது ஈபிடிபி

 

Douglas_Devanandaசாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. முதற்கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்றுத் தொடக்கம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

சாவகச்சேரி நகர சபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை மறுநாள் நண்பகல் வரை வேட்பமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

இந்த நிலையில், சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனு இன்று ஈபிடிபியினால் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில், ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முதலாவது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஐதேகவும் கட்டுப்பணம்

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.

மகிந்த அணி கிளிநொச்சி, மன்னாரில்  கட்டுப்பணம் 

கிளிநொச்சி மாவட்டத்தில்  உள்ள கரைச்சிப் பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக, மகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இந்தக் கட்சியின் சார்பில் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தினார்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில் எஸ்எம்.ரஞ்சித் நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

முல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் கட்டுப்பணம்

அதேவேளை, அகில இலங்கை தமிழ்  காங்கிரஸ் முல்லைத்தீவு, அம்பாறை மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக கட்சியின் முகவர் திலகநாதன் கிந்துஜன் நேற்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தினார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய பிரதேச சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக தமிழ் காங்கிரசின் சார்பில், கட்சியின் செயலர் செல்வராசா கஜேந்திரன் நேற்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தினார்.

http://www.puthinappalakai.net/2017/12/12/news/27919

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.