Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் யார் பக்கம்?

Featured Replies

முதலமைச்சர் யார் பக்கம்?

IMG5064-f2526f3b47a6db5e2df59fcbd0ed5186fae3811e.jpg

 

வடக்கு, கிழக்கில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் பர­ப­ரப்பு அர­சியல் கட்­சி­க­ளி­டையே தொற்றிக் கொண்­டி­ருக்­கின்ற போதிலும், அவை எதற்­குள்­ளேயும் சிக்கிக் கொள்­ளாமல் இருக்­கிறார் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்ட பின்னர், அதிகம் மௌன­மாகிப் போனவர் அவர் தான்.

2015ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது, வீட்டை விட்டு வெளியே வந்து வாக்­க­ளி­யுங்கள் என்று முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இரட்டை அர்த்­தத்­துடன் வெளி­யிட்ட அறிக்­கையே, அவ­ருக்கும் தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் இடையில் இன்று வரை தொட­ரு­கின்ற முரண்­பா­டு­க­ளுக்குப் பிர­தான காரணம்.

அதற்குப் பின்னர் தான், அவரை வீழ்த்­து­கின்ற சூழ்ச்­சிகள் ஆரம்­ப­மா­கின. அதனை கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் பகி­ரங்­க­மா­கவே கூறி­யு­மி­ருந்தார்.

2015 நாடா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பின்னர், நடக்கப் போகின்ற முதல் தேர்தல் இது. இந்தத் தேர்­தலில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் எத்­த­கைய நிலைப்­பாட்டை எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற கேள்வி உள்­ளது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் நினைத்­தி­ருந்தால், உள்­ளூ­ராட்சித் தேர்தல் களத்தின் நிலையை முற்­றா­கவே மாற்­றி­ய­மைத்­தி­ருக்க முடியும் என்றே பலரும் கரு­து­கின்­றனர்.

அதா­வது, தமிழ் மக்கள் பேர­வையின் பங்­காளிக் கட்­சி­களை ஒருங்­கி­ணைத்து தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்குத் தயார்­ப­டுத்த அவர் இணங்­கி­யி­ருந்­தா­ரே­யானால், இப்­போது போன்­றில்­லாமல், தமிழ்த் தேசிய கோசத்­துடன் போட்­டி­யிடும் அர­சியல் கட்­சி­களின் எண்­ணிக்கை இரண்­டா­கவே இருந்­தி­ருக்கும் என்­பது பல­ரதும் கணிப்பு.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், தமிழ் மக்கள் பேர­வையின் ஆத­ரவு பெற்ற அணி­யுமே பிர­தான சக்­தி­க­ளாக மோதி­யி­ருக்கும். அது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வலு­வான போட்­டி­யா­கவும் அமைந்­தி­ருக்கும்.

தமிழ் மக்கள் பேரவை, தேர்­தலில் நேர­டி­யாக ஈடு­ப­டு­வதை – அல்­லது தேர்­தலில் போட்­டி­யிடும் தரப்­பு­களை ஆத­ரிப்­பதை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், விரும்­ப­வில்லை. அதனால் தான், கஜேந்­தி­ர­குமார்- சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் அணிகள் பிரிந்து போயின.

எவ்­வா­றா­யினும், சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் இந்த அணியில் இருந்து விலகி, ஆனந்­த­சங்­க­ரி­யுடன் இணைந்து கொண்­ட­மைக்கு, கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான பல­மான அணி­யொன்று உரு­வா­வதைத் தடுக்கும் இந்­தி­யாவின் சதியே என்றும் சிலரால் கூறப்­ப­டு­கி­றது.

இது­போன்ற கருத்­துக்கள் பர­வி­னாலும் கூட, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், மாற்று அணிக்குத் தலை­மை­யேற்கத் துணிந்­தி­ருந்­தா­ரே­யானால், தமிழ் மக்கள் பேர­வையின் அர­சியல் பிர­வே­சத்­துக்கு அவர் பச்­சைக்­கொடி காண்­பித்­தி­ருந்­தா­ரே­யானால்- நிச்­ச­ய­மாக, சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனால் ஆனந்­த­சங்­க­ரியின் பக்கம் நகர்ந்­தி­ருக்க முடி­யாது.

அவ்­வாறு நகர்ந்­தி­ருந்­தாலும், அதற்கு தகுந்த நியா­யத்தை அவரால் கூற முடி­யாமல் இருந்­தி­ருக்கும்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், தமிழ் மக்கள் பேர­வையை அர­சி­யலில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்று எடுத்த முடிவு, மாற்று அணி ஒன்­றுக்­கான களத்­தையும் தற்­கா­லி­க­மாக மூடி­யி­ருப்­ப­துடன், இந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் பர­ப­ரப்­பு­களில் இருந்தும் அவரை விலக்கி வைத்­தி­ருக்­கி­றது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் குறித்து தமி­ழ­ரசுக் கட்சி ஆத­ர­வா­ளர்கள் என்ன தான் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தாலும், வடக்கில் அவ­ருக்­கான ஆத­ரவுத் தளம் ஒன்று இருப்­பதை யாரும் மறுப்­ப­தற்­கில்லை.

அவ்­வா­றான ஒருவர் இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மக்­களை எவ்­வாறு வழி­ந­டத்தப் போகிறார் என்ற எதிர்­பார்ப்பும் இருக்­கவே செய்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யுடன்- தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் முரண்­பாட்டு நிலையில் இருந்து வந்த விக்­னேஸ்­வரன் இப்­போது, அந்த நிலையில் இருந்து சற்று பின்­வாங்­கி­யி­ருக்­கிறார். அவ்­வப்­போது சில மறை­முக சாடல்­களை வெளிப்­ப­டுத்­தி­னாலும், வெளிப்­ப­டை­யாக அவர் மோத­லுக்குத் தயா­ராக இருப்­பது போல காட்டிக் கொள்­வில்லை.

அவ­ரது இந்த அணு­கு­மு­றையே, அவரை மாற்றுத் தலை­மை­யாக முன்­னி­றுத்த முயன்ற தரப்­பி­ன­ருக்கு ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

இப்­போது, மாற்றுத் தலை­மையை உரு­வாக்கும் கனவில் இருப்­ப­வர்­க­ளுக்கு முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஒரு தெரி­வாக இல்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

எவ்­வா­றா­யினும், உள்­ளூ­ராட்சித் தேர்தல் ஆச­னப்­பங்­கீடு தொடர்­பாக, முத­ல­மைச்சர் சில கருத்­துக்­க­ளையும் முன்­வைத்­தி­ருந்தார். ரெலோ பிரிந்து சென்று தனித்துப் போட்­டி­யிடப் போவ­தாக அறி­வித்­தி­ருந்த சூழலில், அது­பற்றி செய்­தி­யா­ளர்கள் அவ­ரிடம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

அதற்கு அவர் வேண்டா வெறுப்­பாக, பிரிந்து போன­வர்கள் திரும்ப வரு­வார்கள், ஒன்­றாக போட்­டி­யி­டு­வார்கள் என்று மாத்­திரம் கூறி­விட்டு நழு­வினார்.

ஆனாலும், பின்னர் அன்று மாலையே செய்­தி­யா­ளர்­க­ளிடம் தனது நிலைப்­பாட்டை அறி­வித்தார்.

அதன் போது அவர், பிள­வுக்­கான கார­ணத்தை சூச­க­மாக வெளிப்­ப­டுத்­தி­ய­துடன், அது சரி செய்­யப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­க­ளையும் மறை­மு­க­மா­கவே கூறி­யி­ருந்தார். அத்­துடன், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தனது கொள்­கை­களை எமது மக்­களின் நெடுங்­கால பாது­காப்­புக்கும்,

அபி­வி­ருத்­திக்கும், வளர்ச்­சிக்கும் ஏற்­ற­வாறு மாற்றி, யாவ­ரையும் உள்­ள­டக்கி ஒற்­று­மை­யுடன் பல­மான அர­சியல் கட்­சி­யாகப் பரி­ண­மிக்க வேண்டும் என்­பதே தனது நிலைப்­பாடு என்றும் கூறி­யி­ருந்தார். 

சுய­நலம் மேலோங்கும் போதே பிள­வுகள் ஏற்­படும் என்று அவர் சுட்­டிக்­காட்­டி­ய­துடன், அத்­த­கைய பிள­வுக்கு இரண்டு முன்­னு­தா­ர­ணங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

முத­லா­வ­தாக, கொள்­கைக்­காக தந்தை செல்வா, தமிழ் காங்­கி­ரஸில் இருந்து பிரிந்து, சென்று புதிய கட்­சியை உரு­வாக்­கிய உதா­ர­ணத்தைக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இரண்­டா­வ­தாக, போர் நிறை­வ­டையும் தறு­வாயில் சுய­நலக் கார­ணங்­க­ளுக்­காக விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை விட்டு சிலர் வெளி­யே­றினர் என்று மற்­றொரு கார­ணத்­தையும் கூறி­யி­ருந்தார்.

கொள்­கைக்­காக, சுய­ந­லக்­கா­ர­ணங்­க­ளுக்­காக பிள­வுகள் ஏற்­ப­டு­வது வழக்கம் என்றும் கூட்­ட­மைப்பில் ஏற்­பட்ட பிள­வு­க­ளுக்­கான கார­ணத்தை நீங்­களே கண்­ட­றி­யுங்கள் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதே­வேளை, அவர் சுய­நலக் கார­ணங்­க­ளுக்­காக ஏற்­படும் பிள­வு­களை, அதே சுய­ந­லன்­களே சரி செய்­வ­தற்கும் உதவக் கூடும் என்றும் கூறி­யி­ருந்தார்.

பிள­வு­ப­டுத்­த­லினால் இருப்பை இழக்கும் ஆபத்­துகள் இருப்­பதால், ஒன்­று­ப­டு­வார்கள் என்­ப­தையே அவர் அவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் அதனை விப­ரிக்கப் போய் சர்ச்­சை­களில் சிக்கிக் கொள்­வதை தவிர்த்­தி­ருந்தார்.

கூட்­ட­மைப்­புக்­கான தனது ஆத­ரவு நிபந்­த­னைக்­குட்­பட்­டது என்­பதை இந்தக் கருத்தின் ஊடாக அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தமிழ்த் தேசி­யத்தை முன்­னி­றுத்தும் அர­சியல் கட்­சிகள் மூன்று அணி­க­ளாகப் பிரிந்து நிற்கும் நிலையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் யாருக்­கா­கவும் பரிந்து பேச முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே அவரை முத­ல­மைச்சர் பத­விக்குக் கொண்டு வந்­தது. எஞ்­சி­யுள்ள பத­விக்­கா­லத்தை முரண்­பா­டு­களைக் கடந்து கூட்­ட­மைப்­புடன் பய­ணிக்கும் முடிவில் முத­ல­மைச்சர் இருப்­ப­தாகத் தெரி­கி­றது. எனவே அவரால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக அர­சியல் செய்ய முடி­யாது.

அது­போ­லவே, ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான கூட்­ட­ணியில் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் இருந்­தாலும், அந்தக் கூட்­ட­மைப்பின் கொள்­கைகள், முத­ல­மைச்­சரின் கொள்­கை­க­ளுடன் ஒத்துப் போகக் கூடி­ய­தல்ல.

ஒன்­றாக இருந்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லமும் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனும், உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­காக கள­மி­றங்­கிய பின்னர் அக்­கப்­போரில் ஈடு­பட்­டதும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு ஏமாற்­றத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது.

ஆக, இந்தத் தேர்­தலில் யாருக்கும் ஆத­ரவை வெளிப்­ப­டுத்த முடி­யாத நிலையில் ஒரு நடு­நிலைத் தரப்பைப் போல இருக்­கவே முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் விரும்­பு­வ­தாகத் தெரி­கி­றது.

ஏறச் சொன்னால் ஒரு­வ­ருக்குக் கோபம், இறங்கச் சொன்னால் இன்னொருவருக்குக் கோபம் ஏற்படும். எனவே, இந்தக் கட்டத்தில் அமைதியாக- ஒதுங்கியிருப்பதே மேல் என்று அவர் அமைதி காக்க முனையலாம்

ஆனாலும், தன்னைச் சுற்றி ஓர் ஆதரவாளர் படையை வைத்துக் கொண்டிருக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை வழிப்படுத்தாமலும் இருக்க முடியாது.

2015இல் வீட்டை விட்டு வெளியில் வாருங்கள் என்று அறிக்கை வெளியிட்டது போல எதையாவது ஓர் அறிக்கையை அவர் கடைசி நேரத்தில் வெளியிடலாம். ஆனாலும், அது, 2015 இல் வெளியிடப்பட்டது போல, இருப்பதற்கு வாய்ப்பில்லை.

ஏனென்றால், 2015ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியே வருமாறு வெளியிடப்பட்ட அறிக்கை, அந்த தேர்தலில் தாக்கத்தை செலுத்தவில்லை. எனவே அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்.

அத்துடன் தன்னை யாரும் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ளாமலும் பாதுகாத்துக் கொள்ளவும் முனைவார் போலவே தெரிகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-12-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.