Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன, மத­வா­த­மற்ற பிர­சா­ரங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சியம்

Featured Replies

இன, மத­வா­த­மற்ற பிர­சா­ரங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சியம்

 

நாடு­த­ழு­விய ரீதியில் 341 உள்­ளூ­ராட்­சி­ச­பை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டு­விட்­டன. வேட்­பு­ம­னுத்­தாக்­கலை அடுத்து பிர­தான அர­சியல் கட்­சிகள் உட்­பட பிராந்­தியக் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் என்­பன பிர­சா­ரப்­போரை ஆரம்­பிப்­ப­தற்­கான முன்­மு­யற்­சியில் ஈடு­பட்­டுள்­ளன. எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் இப்­போ­தி­ருந்தே பிர­சா­ரப்போர் ஆரம்­பித்­துள்­ளது.

தற்­போ­தைய நிலையில் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து புதிய அர­சியல் யாப்பின் மூல­மாக அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு வழி­ந­டத்தல் குழு அமைக்­கப்­பட்டு அர­சியல் தீர்வு தொடர்பில் ஆராயப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை அர­சியல் யாப்­பு­ச­பையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­திக்­கப்­பட்­டுள்­ளது.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சிகள் தற்­கா­லி­க­மாக தடைப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில் புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்­சி­யையும் அர­சியல் தீர்­வுக்­கான முன்­மு­யற்­சி­க­ளையும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் கடு­மை­யாக எதிர்த்து வரு­கின்­றனர். அதி­கா­ரப்­ப­கிர்வின் மூலம் அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்­பா­னது நாட்டை பிள­வு­ப­டுத்­தி­விடும் என்று பொது எதி­ர­ணி­யினர் குற்­றஞ்­சாட்­டி­ வ­ரு­கின்­றனர். புதிய அர­சியல் யாப்­புக்கு எதி­ராக மக்­களை அணி­தி­ரட்டும் வகையில் "எலிய" என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உரு­வாக்கி பொது எதி­ர­ணி­யினர் பிர­சா­ரங்­க­ளையும் செய்து வரு­கின்­றனர்.

புதிய அர­சி­யல்­யாப்பு முயற்­சிக்கு நான்கு பௌத்த பீடங்­களும் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன. அதி­கா­ரத்தைப் பகிர்ந்து அர­சியல் தீர்­வு­கா­ண­வேண்­டிய அவ­சியம் இல்லை என்ற நிலைப்­பாட்­டி­லேயே பௌத்த பீடங்கள் உள்­ளன. இத­னை­விட தென்­ப­கு­தியைச் சேர்ந்த இன­வாத சக்­தி­களும் புதிய அர­சி­யல்­யாப்பு முயற்­சிக்கு கடும் எதிர்ப்­பினை தெரி­வித்து வரு­கின்­றன.

இந்த நிலையில் உள்­ளூ­ராட்சி தேர்தல் பிர­சா­ரத்தின் போது அர­சியல் தீர்­வுக்­கான முன்­மு­யற்­சிக்கு எதி­ரா­கவும் புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான செயற்­பாட்டைக் கண்­டித்தும் பொது எதி­ர­ணி­யா­னது நிச்­ச­ய­மாக பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்கும் என்று எதிர்­பார்க்­கலாம். ஏனெனில் தேர்தல் வேட்­பு­மனு தாக்கல் செய்­வ­தற்கு முன்­னரே அர­சாங்கத் தரப்­பிற்கு எதி­ரான பிர­சா­ரத்தில் பொது எதி­ரணி ஈடு­பட ஆரம்­பித்­து­விட்­டது. அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய அர­சியல் யாப்­புக்கு எதி­ரான சர்­வ­தேச வாக்­கெ­டுப்­பாக இந்தத் தேர்­தலை மக்கள் அணு­க­வேண்­டு­மென்று பொது எதி­ர­ணி­யினர் ஏற்­க­னவே மக்கள் முன் கோரிக்கை முன்­வைத்­துள்­ளனர்.

எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் தேர்­தல்­களில் பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்­காக அர­சியல் கட்­சிகள், இன, மற்றும் மத­வாதப் பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டு­வது என்­பது வர­லாற்று நிகழ்­வா­கவே அமைந்­துள்­ளது. தற்­போது நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான பிர­சா­ரத்­திலும் தென்­ப­கு­தியைச் சேர்ந்த இன­வாத சக்­திகள் இன, மத­வா­தத்தை தூண்டும் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு தென்­ப­குதி மக்­களின் வாக்­குக்­களைப் பெறு­வ­தற்கு முயலும் என்­பது திண்ண­மாகும்.

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ரணி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு 62 இலட்சம் மக்கள் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தனர். அந்த தேர்தல் பிர­சா­ரத்தின் போது நாட்டின் நிறை­வேற்று அதி­கார முறைமை ஒழிக்­கப்­படும் என்றும் புதிய தேர்தல் முறை உரு­வாக்­கப்­படும் என்றும் அர­சி­யல்­தீர்வு காணப்­படும் என்றும் இதற்­காக புதிய அர­சி­யல்­யாப்பு உரு­வாக்­கப்­படும் என்றும் எதி­ர­ணியின் சார்பில் உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டது. அதற்­கி­ணங்­கவே 62 இலட்சம் மக்கள் தமது ஆணையை வழங்கி எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றி­ருந்தார்.

எனவே இந்த ஆணை­யின்­படி புதிய அர­சாங்­க­மா­னது அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­க­வேண்­டிய கடப்­பாட்டில் உள்­ளது. ஆனாலும் அந்த முயற்­சியை தோற்­க­டிக்கும் வகையில் பொது எதி­ரணி செயற்­பட்டு வரு­வ­தா­னது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க நட­வ­டிக்கை அல்ல. தற்­போதைய உள்­ளூ­ராட்சி தேர்தல் பிர­சா­ரத்தில் இந்த விவ­கா­ரத்தை பெரி­து­ப­டுத்தி அர­சியல் சுய­ந­லத்­திற்­காக பொது எதி­ரணி பிர­சா­ரப்­ப­டுத்­து­வதோ, அல்­லது இன, மத­வாதத்தைத் தூண்டும் வகை­யி­லான பிர­சா­ரத்தில் ஈடு­ப­டு­வதோ ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க நட­வ­டிக்கை அல்ல.

தென்­ப­கு­தியில் இத்­த­கைய நிலை காணப்­ப­டு­கையில் வடக்கு, கிழக்­கிலும் புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யி­லுள்ள அர­சியல் தீர்­வுக்­கான அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தில் அதி­ருப்தி தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையில் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய அர­சியல் தீர்­வுக்­கான யோச­னைகள் இடம்­பெ­ற­வில்லை என்ற எதிர்ப்பு உரு­வா­கி­யுள்­ளது.

அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்து வரு­கின்­றது. வழி­ந­டத்தல் குழுவில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் கலந்­து­கொண்டு அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். இந்த விட­யத்தில் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை அவர்கள் மேற்­கொண்­டுள்­ளனர். கடந்த வட­மா­காண சபைத் தேர்­த­லின்­போதும் பாரா­ளு­மன்ற தேர்­த­லின்­போதும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினால் விடுக்­கப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இணந்த வடக்கு, கிழக்கில் சுய­நிர்­ணய உரி­மையை உள்­ள­டக்­கிய சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வைப் பெறு­வ­தற்கு முழு­மு­யற்­சி­யுடன் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனாலும் தற்­போ­தைய நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு அற்ற சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய சமஷ்டித் தீர்வை நேர­டி­யாக உள்­ள­டக்­காத வகை­யி­லேயே அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது. ஆனாலும் மத்­தி­யிலும் மாகா­ணங்­க­ளிலும் அதி­கா­ரங்கள் பகி­ரப்­படும் வகை­யிலும் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீள மத்­திய அர­சாங்கம் எடுக்­கா­த­வ­கை­யிலும் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சமஷ்டி என்ற சொல் பாவிக்­கப்­ப­டா­விட்­டாலும் சமஷ்­டியை ஒத்­த­தா­கவே அதி­கா­ரப்­ப­கிர்வு இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்பின் தலைமை விளக்­க­ம­ளித்து வரு­கின்­றது.

 ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்த ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யா­னது இடைக்­கால அறிக்­கையில் தமி­ழர்­க­ளுக்­கான உரிய அதி­கா­ரப்­ப­கிர்வு இல்லை என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்­ள­துடன் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணி­யுடன் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­கின்­றது.

இதே­போன்றே கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் தனி கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­கின்­றது. இந்த கட்­சியும் இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அதி­கா­ரப்­ப­கிர்வு தமிழ் மக்­களை ஏமாற்­றும்­வ­கையில் அமைந்­துள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

எனவே இந்த இரு கூட்­ட­ணி­களும் தற்­போ­தைய இடைக்­கால அறிக்­கையில் உள்ள அர­சியல் தீர்­வுக்­கான அதி­கா­ரப்­ப­கிர்வு போதி­ய­தாக இல்லை என்று குற்­றஞ்­சாட்டி நிச்சயமாக பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளன.

ஏற்னவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அரைகுறை அதிகாரப்பகிர்வை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக இந்தத் தேர்தலை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதேபோன்ற பிரசாரங்களில் இந்த இரு அணியினரும் தீவிரமாக ஈடுபடவுள்ளனர்.

தென்பகுதியிலும் புதிய அரசியல் யாப்புக்கான முயற்சியானது நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் அமைந்துவிடும் என்று பொது எதிரணி பிரசாரம் செய்கின்றது. இதேபோன்றே அரைகுறை அரசியல் தீர்வுக்கு எதிராக வடக்கிலும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. எது எவ்வாறாக இருந்தபோதிலும் நாட்டில் தோன்றியுள்ள நல்லிணக்க சூழ்நிலையை கெடுத்துவிடாதவகையில் சகல கட்சிகளும் தமது பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டும்.

இல்லையேல் மீண்டும் இனவிரிசல்கள் ஏற்பட்டு நாடு அதலபாதாளத்திற்குள் செல்லும் நிலை உருவாகிவிடும். எனவே இன,மதவாதமற்ற பிரசாரங்களை அரசியல்கட்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-23#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.