Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கமும் தேசிய அரசாங்கமும் முடிவுக்கு வருகிறதா? MY VS MR VS RW – 2018 இலங்கையின் அரசியல் என்ன சொல்லப் போகிறது?

Featured Replies

நல்லிணக்கமும் தேசிய அரசாங்கமும் முடிவுக்கு வருகிறதா? MY VS MR VS RW – 2018 இலங்கையின் அரசியல் என்ன சொல்லப் போகிறது?

குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்…

MY-RW.jpg?resize=1024%2C642

நல்லிணக்க அரசாங்கம் என அழைக்கப்படும், தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா? ஐக்கியதேசியக் கட்சியுடனான ஆளும் உறவை 2020 வரை தொடர்வதா? என்பது குறித்து விரைவில் குறிப்பாக அடுத்தவாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அமைச்சர் பௌசி, கடந்த இரண்டு வருட கால, இணக்கப்பட்டு அரசியல் முன் நகர்வில், பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைவாக டிசம்பர் 31ம் திகதி வரை அரசாங்கத்தில் நீடிக்க, கட்சி தீர்மானித்திருந்தது எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் வாரத்தில் கூட்டப்படவுள்ள மத்திய குழுவில் இறுதித் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கியதேசிய கட்சியுடனான தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாகவும் கொழும்பின் முக்கிய அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maithripala-Mahinda.jpg?resize=1024%2C65

கடந்த 2014 நவம்பர் மாதம், முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் அரசாங்கத்திலிருந்து, வெளியேறிய துணிச்சலான அரசியல் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க தான் தயார் என மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

“இலஞ்சம் மற்றும் ஊழலின் பிடியிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கான ஓரேயொரு வழி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதே” என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இலங்கையில் அதற்குப் பொருத்தமான அரசியல் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே என்றும் வலியுறுத்தி உள்ளார்.

“2014 நவம்பர் 21 ம் திகதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திலிருந்து வெளியேறும் துணிச்சலான முடிவை நான் எடுத்தேன், தற்போதும் அத்தகையதொரு மற்றுமொரு பிரதான நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளேன் இது நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டதாகயிருக்கும், மக்களுக்கு ஊழல் அற்ற அரசியல் தலைமையை வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கும். நாட்டின் மீதும் மக்களின் மீதும் நான் கொண்டுள்ள பாசம் காரணமாக நான் எடுக்கவுள்ள இந்த நடவடிக்கையால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து நான் அஞ்சவில்லை. எனக்கு என்ன நடந்தாலும் நான் இதனை செய்வேன் இல்லாவிடில் எங்களால் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது யாராவது இதனை செய்தே ஆகவேண்டும் இதனை முன்னெடுப்பவருக்கு இந்த நாட்டின் இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவு இருக்கும்” எனவும் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் ஒரு கட்டமாகவே சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட இலங்கையின் முக்கிய அரசியல் சக்த்திகளுடன் ஐக்கியதேசியக் கட்சி முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது…

Ranil-Mahinda_0.png?resize=580%2C371Ranil_wife_hands_lg.jpg?resize=680%2C383Ranil-Chandrika-Maithripala.jpg?resize=9My-Mr-RW.jpg?resize=350%2C211MY-MR.jpg?resize=600%2C293MY-RW-CHA.jpg?resize=600%2C424

http://globaltamilnews.net/2017/57654/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.