Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மார்ச்சில் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள செயிட் ஹுசைன்

Featured Replies

மார்ச்சில் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள செயிட் ஹுசைன்

Al-Hussain-2-9f9e67faa1890a753477c814f7773c1d795f7071.jpg

 

(ரொபட் அன்­டனி)

ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்ர­வரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் மார்ச் மாதம் 21ஆம் ­தி­கதி  நடை­பெ­ற­வுள்ள இலங்கை தொடர்­பான விவா­தத்­தின்­போது ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை மீது கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.    

மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்­பான அறிக்­கையை வெ ளியி­ட­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை மீது தனது விமர்­சனம் கலந்த அதி­ருப்­தியை வெளி­யி­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அதா­வது பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்து விட்ட போதிலும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் இது­வரை சரி­யான முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்­தியை தனது அறிக்கை ஊடாக செயிட் அல் ஹூசைன் முன்­வைப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் காணாமல் போனோர் தொடர்­பாக ஆரா­ய­வுள்ள அலு­வ­லகம் குறித்தும் செய்ட் அல் ஹுசேன் இதன்­போது விட­யங்­களை முன்­வைப்பார். பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தாம­த­ம­டைந்தால் அடுத்த கட்­ட­மாக எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்­பது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் விளக்­க­ம­ளிப்பார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை இலங்கை சார்பில் இந்த விவா­தத்தில் உரை­யாற்­ற­வுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் விப­ர­மான ஒரு அறிக்­கையை பேர­வையில் தாக்கல் செய்­ய­வுள்­ள­துடன் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. பிரே­ரணை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­பது குறித்த விளக்­கங்­களை அளிப்பார்.

இலங்கை வெ ளிவி­வ­கார அமைச்­சரின் விபர அறிக்கை சமர்ப்­பிப்பை அடுத்து உறுப்பு நாடுகள் இலங்கை நிலைமை தொடர்பில் விவா­தத்தில் உரை­யாற்­ற­வுள்­ளன. இதன்­போது இலங்கை அர­சாங்கம் விரைந்து பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட வேண்­டு­மென்று வலி­யு­றுத்­த­வுள்­ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஐந்து நாடு­க­ளினால் இலங்கை குறித்த பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது.

இதில் வெளி­நாட்டு நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள், மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­களின் பங்­க­ளிப்­பு­க­ளுடன் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டது.

 அத்துடன் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடுவழங்குதல், மற்றும் மீள் நிகழாமை ஆகிய விடயங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அரசாங்கம் அறிவித்திருந்தது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-30#page-1

  • கருத்துக்கள உறவுகள்
ஜெனிவாவில் இலங்கைக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும்! 
[Friday 2017-12-29 19:00]
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள கூட்டங்களில் இலங்கை குறித்த நிலைமைகள் விவாதிக்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள கூட்டங்களில் இலங்கை குறித்த நிலைமைகள் விவாதிக்கப்படவுள்ளது.   

கடந்த ஒக்ரோபர் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்து கவலை வெளியிட்டிருந்தன. குறிப்பாக 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் ரணில் மைத்திரி நல்லாட்சி அரசாங்கம் உரிய முறையில் செயற்படவில்லை என்றும் தமிழ் மக்கள் அதிருப்பதியடைந்துள்ளனர் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கண்டனம் வெளியிட்டிருந்தன.

90 நாடுகள் பங்குபற்றிய அந்த மீளாய்வுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள பூகோள காலக்கிரக மீளாய்வு மாநாட்டில் வெனின்சுலா, மசிடோனியா (Macedonia) ஆகிய நாடுகள் வடக்கு கிழக்கு மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக கருத்து வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.

கடந்த ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மசிடோனியா தமிழ் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லையென சுட்டிக்காட்டியிருந்தது. அதேவேளை 13 அவது திருத்தச்சட்டத்திற்கும் மேலாக அதிகாரங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு பகிரப்பட வேண்டும் என 16 ஆம் திகதி நடைபெறவுள்ள மீளாய்வுக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தவுள்ளது.

ஓக்ரோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து ஜெனீவாவில் உள்ள இந்திய இராஜதந்திரி, பிரதிவெளிவிவகார அமைச்சர் ஹர்ஷா டி சில்வாவிடம் கேள்வி தொடுத்திருந்தார். அதேவேளை இனிமேல் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடிய நிலை இல்லையென்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மார்ச் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் கடுமையான நெருக்குவாரங்களை எதிர்நோக்கும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சரியான பதில் ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இராஜதந்தரி ஒருவர் கூறினார்.

அதேவேளை கடந்த எட்டு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் சரியான முறையில் பொறுப்புக் கூறவில்லை என்றும் இரகசிய முகாம்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் போன்ற விடயங்களில், ஜெனீவா மனித உரிமைச் சபையின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை எனவும் இலங்கை அரசாங்கத்துக்கு மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மீண்டும் எடுத்துக் கூறியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை நிரந்த அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்த தவறியுள்ளதாக ஜெனீவாவில் உள்ள அமெரிக்க தூதுவர், இலங்கைத் தூதுவருக்கு எடுத்துக் கூறியுள்ளதாகவும் அது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.