Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர்

Featured Replies

பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர்

 

 

இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

 

british.jpg

பிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன குழுவின் தலைவராக செயற்படுவதுடன், அவர் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றதன் பின்னர் பொதுநலவாய நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன.

 

பொதுநலவாய நாடு என்ற வகையில் இலங்கையிடன் காணப்படும் தொடர்புகளை பலப்படுத்துதல் மற்றும் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக முதலீட்டுத் துறையை

மேம்படுத்தும் நோக்குடன் இந்த தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

 

ஜனநாயகத்தை பலப்படுத்துதல், பொருளாதார அபிவிருத்தி, விசேட அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் விசேட வர்த்தக துறைகளில் இலங்கை கடந்த காலத்தில்

முன்னெடுத்த செயற்திட்டங்களில் அதிக முன்னேற்றத்தினை அவதானிக்க முடிந்துள்ளதாக அக்குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

 

புதிய தொழில்நுட்பம், வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் கல்வி வாய்ப்புக்களை மேலும் பயனுள்ளதாக்குவதற்கு இரு நாடுகளுக்கிடையேயும் காணப்படும் தொடர்புகளை

பலப்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ளதுடன் அதனுடன் இணைந்ததாக இரு நாட்டு உறவுகளை மேலும் உறுதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரித்தானிய தூதுக்குழுவினர் ஜனாதிபதியிடம்

தெரிவித்தனர்.

 

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, பிரித்தானிய பாராளுமன்ற குழு சார்பில் மிச்செல் டொன்லன், கிரிஸ் கிறீன், ஜோன் லம்ஒன்ட் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

http://www.virakesari.lk/article/28984

  • தொடங்கியவர்

சுமந்திரனை சந்தித்தது பிரிட்டன் நாடாளுமன்றக் குழு

 

சுமந்திரனை சந்தித்தது பிரிட்டன் நாடாளுமன்றக் குழு 

ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள், நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள், நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

பிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன குழுவின் தலைவராக செயற்படுவதுடன், அவர் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதேவேளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்திப்பதற்கு முன்னதாக இந்தக் குழுவினர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/British-Delegation-met-Sumanthiren

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் தவறான செய்தி  ஆகும்.

இது சிங்களவருக்கான அனைத்து-கட்சி பிரித்தானிய பாராளுமன்ற குழு ஆகும்.

https://publications.parliament.uk/pa/cm/cmallparty/register/sri-lanka.htm

இதன் அதிபர்  Lord Naseby.

இவரை ஏனைய பிரபுக்கள் (லார்ட்ஸ்) கூட மதின்பது இல்லை.

இவரை ஏனைய பிரபுக்கள் (லார்ட்ஸ்) கூட மதின்பது இல்லை.

அது மட்டுமன்று, இவர் சிங்கள பௌத்த பேரினவாதமான தமிழர்கள் இலங்கையின் பூர்வீக்க குடிகள் இல்லை என்பதை பிரபுக்கள் சபையில் வாதாடியவர்.  சிங்களத்தின் வன்முறை சார்ந்த மற்றும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு, மனித குலத்துக்கு எதிரான பாரிய குற்றங்கள், யுத்த குற்றம், தமிழ் பெண்களின் கற்ப்பழிப்பு என்பவற்றை முற்றாக மறுப்பவர்.

அண்மையில் கூட, பிபிரபுக்கள் சபையில் Lord Naseby கூறிய (யுத்த காலத்தில் பிரித்தானிய தூதரகத்தில் உள்ள பிரித்தானிய பாதுகாப்பு பிரதிநிதியின் சிங்கள தமிழின அழிப்பு படை தளபதிகளின் உரையாடலை ஆதாரமாக கொண்டு) 7000 தமிழர்களே கொள்ளை செய்யப்பட்டனர் என்பதை கூட பிரித்தானிய அரசங்கம் மறுத்திருந்தது.
 
சிங்களம் இவர்களுக்கான வழமையான கவனிப்புக்களை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

முக்கியமாக, பிரித்தானிய பழமை வாத கட்சியுடன் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

பிரித்தானிய ஈஸ்ட்மளிஷ்மென்ட் உடன் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். உண்மையில், புலிகள் இன்வழிப்பின் மூலமாக அழிப்பட்டது பிரித்தானிய ஈஸ்ட்மளிஷ்மென்ட் மற்றும் பழமை வாத கட்சிகு மிகவும் இன்பம் அளிக்கும் விடயமாகும்.

பிரித்தானிய ஈஸ்ட்மளிஷ்மென்ட் ஈழத்து தமிழர்களின் பூர்விகத்தை குழிதோண்டி புதைத்ததே கலாநிதி ஆட்சியில் சொறி சிங்கள லங்காவை ஆக்கினார்கள்.

உதாரணமாக, வில்லியம்  ஹூஜ், அங்கீலீனா ஜோலியுடன் சேர்ந்து நடத்திய போராட்டம், மோதல்கள் மற்றும் முரண்பாடுகளில்  இழைக்கப்படும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைககு எதிரான உச்சிமாநாட்டில் , சிங்கள இனவழிப்பு பேரினவாத படையால் தமிழ் பெண்களுக்கு  இழைக்கப்படும், இழைக்கப்பட்ட பாலியல் குற்றங்களை குறிப்பாக தவிர்க்கப்பட்டிருந்தது என்பது உங்கள் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

https://www.tamilnet.com/art.html?catid=79&artid=37254
https://www.theguardian.com/global-development/2014/jun/10/william-hague-tamil-rape-sri-lankan-asylum-seekers

 

Edited by Kadancha
add info.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.