Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயகாந் உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகள்; நீதிமன்றம் உறுதி!

Featured Replies

விஜயகாந் உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகள்; நீதிமன்றம் உறுதி!

 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந் உள்ளிட்ட நால்வர் மீது முன்வைக்கப்பட்ட 119 பவுண் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக இனங்கண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகை சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டது. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விஜயகாந் உள்ளிட்ட நான்கு பேரும் மீது 119 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸாரால் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டது.

"சந்தேகநபர்கள் நால்வர் மீதான திருட்டுக் குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை. சந்தேகநபர்கள் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. நான்கு குற்றவாளிகளுக்குமான தண்டனைத் தீர்ப்பு வரும் பெப்ரவரி முதலாம் திகதி வழங்கப்படும்" என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

விஜயகாந்தின் இந்த நடவடிக்கையால் அவரை தமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஈ.பி.டி.பி கட்சி நீக்கியது. அதனால் அவர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்தார். தற்போது அவரது கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Four-criminals-including-Sudarsing-Vijayakanth

 

முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந், திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை தொடர்பாக குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய ராஜபக்ஷவின் கையாளும், 116 பவுண் நகைக் கொள்ளையருமான விஜயகாந்த் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டி!

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவுடன் சேர்ந்தியங்கியவரும், வீடு புகுந்து 116 பவுண் நகையைக் கொள்ளையடித்தவருமான விஜயகாந்த் என்பவர் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுகின்றார்.

2013 யூலை மாதம் வங்கியில் 116 பவுண் நகை அடகு வைக்க விஜயகாந்த் சென்றபோது வங்கி ஊழியர் ஒருவரின் திருட்டு போன நகையும் அதில் இருந்தது. இதையடுத்து கோப்பாய் காவல்துறையினருக்கு விடயம் அறிவிக்கப்பட, விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கைதாகி, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, 116 பவுண் நகையை திருடியது, அடகு வைக்க முயன்றது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள்  நடைபெற்று வருகின்றது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லையாயினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நடந்தபோது விஜயகாந்த் ஈ.பி.டி.பியில் இருந்தார். சம்பவத்தையடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விஜயகாந்த், மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததும், மைத்திரிக்கு குடைபிடித்த விஜயகாந்த் இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து மாநகர முதல்வராகப் போட்டியிடவுள்ளார்.

http://inioru.com/கோத்தபாய-ராஜபக்ஷவின்-கைய/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.