Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே!

Featured Replies

  • புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே!
image_1499708548-90bf492166.jpg

புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே!

நாட்­டில் முன்­னைய கால­கட்­டம் போலன்றி, இன்று அரசியல் ரீதி யில் புதிய நிலைப்­பா­டொன்று உரு­வா­கி­யுள்­ளது. இன்று நாட்­டின் முக்­கிய அர­சி­யல் கட்­சி­கள் இரண்டு, தம்­மு­டையே ஒன்­றி­ணைந்து நாட்டை நிர்­வ­கித்து வரு­கின்­றன. நாட்­டின் தமிழ் மக்­க­ளைப் பிர­தி­நி­தித்­து­ வப்­ப­டுத்­தும் கட்­சி­க­ளும் இந்த அர­ச­மைப்பு மாற்­றத்தை விரும்­பு ­கின்­றன. ஜே.வி.பி போன்ற கட்­சி­க­ளும் இந்த விட­யம் தொடர்­பாக சாத­க­மான விதத்­தி­லேயே அணு­கு­க।ின்­றன. இத்­த­கைய பின்­னணி கார­ண­மா­கவே, நாடா­ளு­மன்­றத்­தில் ஏக­ம­ன­தா­கத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட முடிந்­தது.

அது அர­ச­மைப்பு உரு­வாக்­கச் சபை­யொன்றை நிறு­வு­வ­ தற்­கான ஒன்­றல்ல. உண்­மை­யில் உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பது அர­ச­மைப்­புச்­ச­பையே. இது சகல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கிய சபை­யா­கும். அது நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் மட்­டுமே கூடிக் க­லை­யும். அதற்கு அர­ச­மைப்பை உரு­வாக்­கும் அதி­கா­ரம் கிடை­யாது. அர­ச­மைப்­புத் தொடர்­பான பிரே­ர­ணை­ யொன்றை மட்­டுமே அத­னால் உரு­வாக்க இய­லும்.
இது அர­ச­மைப்பு விரோத நட­வ­டிக்­கை­யென நாடா­ளு­மன்ற உறுப்பினர் விஜே­தாச ராஜ­பக்ச தெரி­வித்­த­தாக அறிய வந்­துள்­ளது. அவர் முன்னர் நீதி அமைச்­ச­ரா­கப் பணி­பு­ரிந்­த­வர் என்­ப­து­டன் அவ­ரொரு அரச தலை­வர் சட்­டத்­த­ர­ணி­யு­மா­வார்.  நாடா­ளு­மன்­றத்­தில் அத்­த­கைய பிரே­ர­ணைய முன்­வைத்­த­வர்­க­ளில் விஜே­தாச ராஜ­பக்­ச­வும் ஒரு­வ­ரா­வார்.

கடந்த 2016 ஆம் ஆண்­டில் குறித்த அர­ச­மைப்­புச் சபை தொடர்­பான நிபு­ணர்­களை நிய­மித்­தமை, அதற்­கான உறுப்­பி­னர்­களை நிய­மித் தமை, என்ற சகல செயற்­பா­டு­க­ளை­யும் முன்­னின்று ஆற்றி முடித்­த­வர் இந்த விஜே­தாச ராஜ­பக்­சவே. உப குழுக்­க­ளது தலை­மைப்­ப­த­வி­கள் வெவ்­வேறு கட்­சி­க­ளுக்கு பிரித்து வழங்­கப்­பட்­டுள்­ளன. அரச நிதிச் செயற்­பா­டு­கள் தொடர்­பான தலை­மைப் பத­வியை வகிப்­ப­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பந்­துல குண­வர்த்­தனா ஆவார்.

ஆறு விடயங்கள்  தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்பட்டது

 

நட­வ­டிக்­கைக்­குழு ஆறு விட­யங்­கள் தொடர்­பில் முடி­வு­களை மேற்­கொண்­டது. ஒரு அர­சின் இயற்­கைத்­தன்மை, நிறை­வேற்று அதி­கா­ரத்­தின் இயற்­கைத்­தன்மை, அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்­த­ளிப்­பது தொடர்­பான இயற்­கைத்­தன்மை, தேர்­தல் நடை­முறை, மதங்­க­ளது பிரிவு மற்­றும் இடம் போன்ற விட­யம் என்­ப­வையே அந்த ஆறு விட­யங்­க­ளு­மா­கும். இவை தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது பல விட­யங்­க­ளில் இணக்­கம் எட்­டப்­பட்­டது. ஆனால் பல கட்­சி­கள் தத்­த­மது கருத்­துக்­களை வௌிப்­ப­டுத்த முயன்­றன. அதற்­கான வாய்ப்­புக் கிட்­டி­ ய­தா­லேயே அவை அவ்­வி­தம் முயற்­சித்­தன. இன்று அமை­தி­யான வழி­யில் எவ்­வித அழுத்­தங்­க­ளை­யும் மேற்­கொள்­ளாது இணக்­கப்­பாட்டை எட்­டு­வ­தற்கு வாய்ப்­புக் கிட்­டி­யுள்­ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பான ஆலோசனைகளில் பெரும்பாலானவை முதலமைச்சர்களினதே

இரண்டு விடயங்­கள் குறித்து நான் இந்த வேளை­யில் குறிப்­பிட்­டாக வேண்­டும். அவற்­றில் முத­லா­வது, அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பான விட­ய­மா­கும். அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பான ஆலோ­ச­னை­க­ளில் பெரும்­பா­லா­னவை தென்­ப­குதியின் ஏழு மாகாண சபை­க­ளது முத­ல­மைச்­சர்­களால் முன்­வைக்­கப் பட்ட கருத்­துக்­களை உள்­ள­டக்­கித் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அந்த ஏழு­பே­ருமே சுதந்­தி­ ரக்­கட்­சி­ யைச் சேர்ந்­த­வர்­க­ளா­வார்.
இந்த நாட்­டில் அதி­கா­ரப்­ப­கிர்வு நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்டு இது­வரை 30 ஆண்­டு­கள் காலம் கழிந்­துள்­ளது.

இந்த 30 ஆண்­டு­கள் கால அனு­ப­வங்­க­ளை­யும் கருத்­தில் எடுத்தே, இந்­த­ந­ட­வ­டிக்கை முன்­னெ­ டுக்­கப்­பட்­டுள்­ளது. நாட்­டின் தேசி­யப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக மட்­டும் அவர்­கள் இத­னைக் கரு­திக் க­ருத்­துக்­களை முன்­வைத்­தி­ருக்­க­வில்லை. தத்­த­மது நிர்­வா­கத்­தின் கீழ் வரும் மாகாண சபை­களை எவ்­வாறு பயன்­ப­டுத்­திக் கொள்­வது என்­பது குறித்தே அவர்­கள் கவ­னம் செலுத்­தி­யுள்­ள­னர்.

சகல அர­சுக­ளும் ஏற்­க­னவே வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீளப் பெற்­றுக் கொள்­வ­தற்கே ஆர்­வம் காட்­டிச்­செ­யற்­பட்­டுள்­ளன. அவ்­வி­தம் அதி­கா­ரங்­களை மீளப் பெற வேண்­டு­மா­னால் அர­மைப்­பில் மாற்­றம் மேற்­கொண்­டாக வேண்­டும். ஆனால் எமக்கு அத்­த­கைய அனு­ப­வம் எது­வும் வாய்த்­தி­ருக்­க­வில்லை. தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழுச்­சட்­டம் என சட்­ட­மொன்று இருப்­பது குறித்து நாம் அறிந்­துள்­ளோம். மாகா­ண­ச­பை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் தத்­த­மது பகு­தி­க­ளின் பஸ்­சே­வை­களை நடத்த இய­லு­மென அர­ச­மைப்பு விதி­கள் தெரி­விக்­கின்­றன. அது அர­ச­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்­தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ளதொரு விட­யம். ஆனால் தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழுச்­சட்­டத்­தில் அத்­த­கைய எற்­பாடு எது­வும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

பிரச்சினைகளுக்கு  முதலமைச்சர்களும்  முகம் கொடுக்க நேர்கிறது

தேசிய கொள்­கைத் தி்ட்டமொன்றை வகுப்­ப­தற்கு அர­ச­மைப்பு உரு­வாக்­கற் சபை அதி­கா­ரம் கொண்­டுள்­ளது. அதற்­க­மை­யவே மாகாண சபை­க­ளது செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னச் சட்­டம் உள்­ளது. ஆனால் தேசிய கொள்­கைத்­திட்­டம் என்ற ரீதி­யில் மாகாண முத­ல­மைச்­சர்­க­ளை­யும் மீறி மேற்­சென்று அதி­கா­ரி­கள் அத்­த­கைய அறி­வு­றுத்­தல்­களை அனு­ம­திக்­கும் நிலைப்­பாடு நில­வு­வது அனு­பவ ரீதி­யாக இடம்­பெ­று­மொன்று, இத்­த­கைய பிரச்­சி­னை­க­ளுக்கு முத­ல­மைச்­சர்­க­ளும் முகம் கொடுக்க நேர்­கி­றது. அதா­வது அவர்­க­ளுக்­கான அதி­கா­ரங்­கள் உரிய வகை­யில் வரை­ய­றுத்து வழங்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்து அவர்­கள் மத்­தி­யில் நிலவி வரு­கின்­றது.

தேசிய கொள்­கைத்­திட்­ட­மொன்றை வகுப்­பது குறித்து எவ­ருக்­கும் ஆட்­சே­பனை இருக்க இய­லாது. தங்­க­ளது கருத்­துக்­க­ளை­யும் உள்­வாங்கி அத்­த­கைய திட்­டங்­களை வகுக்­கு­மாறே அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். நாடா­ளு­மன்­றத்­தால் சட்­டங்­களை உரு­வாக்க இய­லும். அவற்றை மாகாண சபை­கள் விரும்­ப­வில்­லை யா­யி­னும், அதற்­கான மூன்­றில் இரு மடங்கு ஆத­ரவு இருக்­கு­மா­னால் மட்­டுமே நாடா­ளு­மன்­றத்­தால் அவற்றைச் சட்­ட­மாக நிறை­வேற்­றிட இய­லும். அத்­த­கைய சட்­டங்­கள் மூலம் உரு­வாக்­கும் அதி­கா­ரங்­களை மீண்­டும் திரும்­பப் பெற்­றுக்­கொள்ள வேண்­டாம்; அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறே மாகாண முத­ல­மைச்­சர்­கள் கோரு­கின்­ற­னர்.

ஆளுநரை நியமிக்கவென அரச சேவை ஆணைக்குழு அமைக்க யோசனை முன்வைப்பு

இ்ன்றைய கால­கட்­டத்­தில் ஆளு­நர் பதவி தொடர்­பாக பல­த­ரப்­பட்ட விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. அர­ச­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்­தின் கீழ் தற்­போது கூட ஆளு­நர் பதவ।ி ஒரு அதி­கா­ரம் குறைந்த பத­வி­யா­கும். இத­னா­லேயே அதி­கா­ரத்­தில் மாற்­றம் செய்­வ­தா­கக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. மாகாண அரச சேவை ஆணைக்­கு­ழு­வின் தீர்ப்­புக்­களை மேன்­மு­றை­யீட்­டின் மூலம் மாற்­றம் செய்­யும் அதி­கா­ரம் ஆளு­ந­ருக்கு இருந்து வந்­தது. அந்த அதி­கா­ரத்தை கட்­டுப்­பா­டற்­ற­தாக்­கும் யோச­னையே முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.
அர­ச­மைப்­புச் சபை­யின் பரிந்­து­ரைக்­க­மைய, ஆளு­ந­ரொ­ரு­வரை நிய­ம­னம் செய்­யும் அர­ச­சேவை ஆணைக்­கு­ழு­வொன்றை உரு­வாக்­கும்­யோ­ச­னை­யொன்று என­வும் இதனை அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யும். இதனை எவ­ரா­வது 13 பிளஸ் எனக் கூறு­வா­ரா­னால் அதில் பிளஸ் இருப்­ப­தா­கக் கொள்­ள­மு­டி­யும். ஆயி­னும் அது பரந்­து­பட்ட பெரி­ய­தொரு ‘பிளஸ்’ ஆக­மாட்­டாது.

ஆனால் அர­ச­மைப்­பின் 13 ஆவது திருத்­தத்­தில் தலை­தூக்­கும் சிக்­கல்­க­ளைத் தீர்த்­துக் கொள்­வ­தற்­கான யோச­னையே இதன் மூலம் முன் வைக்­கப்­பட்­டுள்­ளது. நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை முற்று முழு­தாக ஒழிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றே யோச­னைக்கு நான் ஆத­ர­வான நபர். அது நாடா­ளு­மன்­றத்­துக்­குப் பொறுப்­புக் கூறத்­தக்கதொன்­றாக அமைய வேண்­டும். அது தொடர்­பாக மூன்று யோச­னை­கள் உள்­ளன. அரச தலை­வர் பதவி எந்த விதத்­தில் நிரப்பப்படவேண்­டும் என்­பது அவற்­றில் முத­லா­வ­தா­னது. அதா­வது தேர்­த­லின் பின்­னர் அதி ஆத­ரவு பெற்­றுள்­ள­வர் யார் என்­பது தொடர்­பா­னது. மற்­றை­யது, கட்சி மூல­மாக தேர்­த­லுக்கு முன்­ப­தா­கவே ஒரு­வ­ரது பெயரை நிர்­ண­யித்­த­லா­கும். மூன்­றா­வது நடை­முறை நாடா­ளு­மன்­றத்­துக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் உறுப்­பி­னர்­கள் மூலம் பிர­தம அமைச்­சரை நேர­டி­யா­கத் தெரி­வு­செய்­த­லா­கும்.
இத்­த­கைய யோச­னை­கள் முன்­வைக்­கப் பட்­ட­தன் கார­ண­மா­கவே நிறை­வேற்று அரச அதி­பர் நடை­முறை குறித்­துச் சிலர் விமர்­சித்து வரு­கின்­ற­னர்.

நிறை­வேற்று அரச அதி­பர் பத­வி­யென ஒரு பதவி உல­கத்­தில் வேறெங்­கு­தா­னும் இல்லை. 1947 ஆம் ஆண்­டின் மற்­றும் 1972 ஆம் ஆண்­டின் அர­ச­மைப்­புக்­கள் நடை­மு­றை­யில் இருந்தபோதோ இது­பற்றி எவ­ரா­வது கருத்து வௌியிட்­ட­னரா? இந்­தப் புதிய அர­ச­மைப்­பின் மூலம் தலை­தூக்­கும் மற்­றொரு விட­யம் தான், தனிப்­பட்ட நபர்­க­ளது நல­னைக்­க­ணக்­கில் எடுத்து இந்த அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தா­கும். சிலர் இதன் மூலம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேல­திக அதி­கா­ரங்­களை வழங்க முயல்­வ­தாக விமர்­சிக்­கின்­ற­னர். ஆனால் தற்­போ­தைய அரச தலை­வ­ரது பத­விக்­கா­லத்­துள் அவ­ருக்­கு­ரிய அதி­கா­ரங்­க­ளில் – இடை­யில் புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட் டா­லும் கூட, – 2020 ஆம் ஆண்­டு­வரை எந்­த­வித மாற்­ற­மும் மேற்­கொள்­ளப்­பட மாட்­டாது என்­ப­தா­கும்.

அர­ச­மைப்பு, என்­பது மேற்­கு­றிப்­பிட்ட அம்­சங்­கள் கொண்­டது என்­பது மட்­டு­மல்­லாது மேலும் பல அம்­சங்­கள் அதில் அடங்­கி­யுள்­ளன. குடி­சார் மற்­றும் அர­சி­யல் உரி­மை­கள் மட்­டுப்­பத்­தப்­ப­டாது, சமூக உரி­மை­கள் தொடர்­பான விட­யங்­களே அவை. இன்­றைய உலக நடப்­பில் காணப்­ப­டும் முக்­கிய அம்­சங்­களே அவை.

பெண்­கள் உரி­மை­கள், சிறு­வர்­க­ளுக் கான உரி­மை­கள், நாட்­டின் குடி­மக்­க ­ளுக்­கான உரி­மை­கள், சுற்­றுச் சுழல் பாது­காப்­பு।த் தொடர்­பான உரி­மை­கள் என்­ப­ன­வும் அத।ில் அடங்­கி­யுள்­ளன. எமக்­குத் தேவை­யான பரி­பூ­ர­ண­மான அர­ச­மைப்­பொன்றை எம்­மால் உரு­வாக்க இய­லாது போக­லாம். ஆனால் இன்று எம்­மால் செய்­யக்­கூ­டி­யதை நாம் செய்தே ஆக வேண்­டும். இன்று அர­ச­ த­ரப்­பில் போன்றே, எதிர்த்­த­ரப்­பி­னர் மத்­தி­யி­லும் புதிய அர­ச­மைப்­புக்­கான ஆத­ர­வுண்டு. தென்­ப­குதி மற்­றும் வட­ப­கு­தி­யைச் சேர்ந்த கடுங்­கோட்­பா­ளர்­கள் தரப்புக்களே புதிய அர­ச­மைப்­புக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து வரு­கின்­றன. எம்­மால் பு­திய அர­ச­மைப்பை உரு­வாக்க இய­லாது போகு­மா­னால், மேற்­கு­றித்த கடுங்­கோட்­பாட்டுத்­த­ரப்­பி­னரே பல­ம­டை­வர்.

http://newuthayan.com/story/60940.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.